October 2015

ஒவ்வொருவருக்குமே தாம் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு இந்த ஆசை நிச்சயம் இருக்கும். இந்த ஆசையின் காரணமாக பல்வேறு க்ரீம்களைப் பயன்படுத்துவோம். ஆனால் அப்படி பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம் மூலம் சருமத்தின் நிறம் அதிகரிக்கிறதோ இல்லையோ, சருமத்தின் ஆரோக்கியம் கெட்டு, ஒருநாள் அந்த க்ரீம்மைப் பயன்படுத்த தவறினாலும், சருமம் ஆரோக்கியமின்றி ஒருவித வறட்சியுடன் பொலிவிழந்து காணப்படும். எனவே எப்போதுமே நம் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைக்கு கெமிக்கல் கலந்த க்ரீம்களின் மூலம் தீர்வு காண நினைக்காமல், நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டேப் பெற முயலுங்கள். இதனால் சரும பிரச்சனை நீங்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும். இங்கு சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் இயற்கைப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், உங்கள் சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்

வாழைப்பழம் 

சருமத்தின் நிறத்தை அதிகரிக்க வாழைப்பழம் மிகவும் உதவியாக இருக்கும். அதுவும் வாழைப்பழம் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பு வழங்கி, முதுமையைத் தடுக்கும். அதற்கு வாழைப்பழத்தை மசித்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வேண்டுமானால் இறுதியில் ஐஸ் கட்டியால் முகத்தை மசாஜ் செய்யலாம். இதனால் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதைத் தடுக்கலாம்.

ஆரஞ்சு ஜூஸ் 
ஆரஞ்சு ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக நிறைந்துள்ளதால், அதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமம் பாதிப்படைவதைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி, ஆரஞ்சு ஜூஸ் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவும். அதற்கு ஆரஞ்சு ஜூஸ் 4 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.


வெள்ளரிக்காய் 
1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றில் 2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவலாம் அல்லது வெள்ளரிக்காய் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து, முகத்தல் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவவும் செய்யலாம். இவற்றின் மூலமும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.

தயிர் 
தயிரை தினமும் முகத்தில் தடவி வருவதன் மூலமும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக நீக்கி சரும நிறத்தை மேம்படுத்தலாம். மேலும் தயிரில் லாக்டிக் ஆசிட் நிறைந்துள்ளதால், அவை சருமத்தின் பொலிவை அதிகரிப்பதோடு, மென்மையையும் மேம்படுத்தும்.

உருளைக்கிழங்கு 
உருளைக்கிழங்கு மிகவும் சிறப்பான ப்ளீச்சிங் ஏஜென்ட் எனலாம். எனவே உருளைக்கிழங்கை அரைத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகள், முகப்பருக்கள், இறந்த செல்கள் போன்றவை நீங்கி, முகத்தின் பொலிவு மற்றும் நிறம் மேம்படும்.

எப்போதும் இளமையுடன் இருப்பதற்கு பலருக்கும் ஆசையாக இருக்கும். இருந்தாலும் வயது அதிகரிப்பதை நிறுத்த முடியாது. ஆனால் ஒருவரின் இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க முடியும். தற்போது மோசமான சுற்றுச்சூழலால் பல இளம் தலைமுறையினரும் முதுமை தோற்றத்துடன் காணப்படுகின்றனர். இதற்கு காரணம் சுற்றுச்சூழல் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் தான் காரணம். இளமையை பாதுகாக்க வார இறுதியில் தவறாமல் மேற்கொள்ள வேண்டியவைகள்!!! எனவே பலரும் கடைகளில் விற்கப்படும் ஆன்டி-ஏஜிங் க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தும் ஆன்டி-ஏஜிங் க்ரீம்களில் உள்ள கெமிக்கல்கள் சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தி, சரும அழகை மேன்மேலும் கெடுத்துவிடும். எனவே எப்போதும் இளமையைத் தோற்றத்துடன் காட்சியளிக்க கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தாமல், இயற்கை வழிகளைப் பின்பற்றினால், இளமை தக்க வைக்கப்படுவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும். இளமையை தக்க வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!!! இங்கு ஒருவரின் இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கும் ஜூஸ்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த ஜூஸ்களில் உங்களுக்கு பிடித்ததை அன்றாடம் குடித்து வந்தாலே, இளமையுடன் காட்சியளிக்கலாம்.

கேரட் ஜூஸ் 
கேரட்டில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளது. மேலும் கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. எனவே இத்தகைய கேரட்டைக் கொண்டு ஜூஸ் போட்டு தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உங்கள் சருமத்தின் இளமை தக்க வைக்கப்படுவதோடு, உங்கள் உடல் எடையையும் குறைக்கலாம்.

பசலைக்கீரை ஜூஸ் 
காலையில் காபிக்கு பதிலாக பசலைக்கீரை ஜூஸ் குடித்து வந்தால், உங்கள் சருமத்தின் இளமை தக்க வைக்கப்படும். எப்படியெனில் பசலைக்கீரையானது ப்ரீ-ராடிக்கல்களின் தாக்குதல்களில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதோடு, சருமத்தின் பொலிவையும் அதிகரிக்கும்.

தக்காளி ஜூஸ் 
தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால், சருமத்தின் இளமை தக்க வைக்கப்படும். எனவே தக்காளி ஜூஸை அன்றாடம் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.

வெள்ளரிக்காய் ஜூஸ் 

வெள்ளரிக்காய் ஜூஸ் குடிப்பதனால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் வெள்ளரிக்காய் ஜூஸ் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடுவதால், சருமத்தின் அழகு பாதுகாக்கப்படும்.

ப்ராக்கோலி ஜூஸ் 

ப்ராக்கோலியில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் சி அதிகம் உள்ளது. எனவே இந்த காய்கறியை ஜூஸ் போட்டு அன்றாடம் குடித்து வருவது நல்லது.

முட்டைக்கோஸ் ஜூஸ் 

முட்டைக்கோஸை பச்சையாக சாப்பிடுவதே கடினமான விஷமாக இருக்கும் போது, அதனை ஜூஸ் போட்டுக் குடிக்கத் தோன்றாது. இருந்தாலும், இதில் வைட்டமின் சி மற்றும் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளதால், இதனை ஜூஸ் போட்டுக் குடித்து வந்தால், சருமத்தின் பொலிவு மேம்படுவதோடு, சரும சுருக்கங்களும் தடுக்கப்படும்.

காலையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சனையில் ஒன்று தங்களின் முடியை சரிசெய்வது. சிலருக்கு தூங்கி எழுந்ததனால், முடி அடங்காமல், அங்கும் இங்குமாக தூக்கி வளைந்துக் கொண்டிருக்கும். இன்னும் சிலருக்கோ தலையில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும். இந்த நிலையில் தலைக்கு குளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் அதற்கு நேரம் இருக்காது. நீங்கள் இப்பிரச்சனைகளை சந்தித்தால், இதோ சில அற்புதமான வழிகளை தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை செய்தால், பிரச்சனைகளைப் போக்கலாம். குறிப்பாக இவை அவசரத்திற்கு உதவும் ஓர் அற்புத டிப்ஸ். தலைக்கு குளிக்க சோம்பேறித்தனப்பட்டு, இதையே வாரம் முழுக்க செய்யாதீர்கள்.

ஹாட் ஹேர் 
ஸ்டைல் பெண்களே உங்கள் கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாகவோ அல்லது நீங்கள் விரும்பிய ஹேர் ஸ்டைல் போட முடியாத அளவில் இருந்தாலோ, வித்தியாசமாக மெஸ்ஸி கொண்டை, ஃபிஷ் டெயில் போன்றவற்றைப் பின்பற்றலாம்.


பேபி பவுடர் 

உங்கள் தலைமுடி அதிக எண்ணெய் பசையுடன் இருந்தால், பேபி பவுடரை கையில் எடுத்து, முடியில் தேய்த்துவிடுங்கள். இதனால் பேபி பவுடரானது தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கிவிடும்.


ஆல்கஹால் 

ஆல்கஹால் கூட உங்கள் தலைமுடியை சிறப்பாக வெளிக்காட்ட உதவும். அதற்கு ஆல்கஹாலை நீரில் கலந்து. விரல்களில் நனைத்து, ஸ்கால்ப்பில் படாதவாறு வெறும் கூந்தலில் மட்டும் படுமாறு தடவுங்கள். ஸ்கால்ப்பில் பட்டால், ஸ்கால்ப் எரிய ஆரம்பிக்கும். எனவே கவனமாக இருங்கள்.


ஆப்பிள் சீடர் வினிகர் 
ஆப்பள் சீடர் வினிகர் பல விஷயங்களைச் செய்ய உதவுகிறது. அதில் ஒன்று உங்கள் முடியை சிறப்பாக வெளிக்காட்ட உதவுவது. அதற்கு இதனை விரல்களில் நனைத்து, கூந்தலில் தடவ வேண்டும். இதனால் முடி சிறப்பாக காணப்படுவதோடு, நல்ல நறுமணத்துடனும் இருக்கும்.

எலுமிச்சை சாறு 

எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அந்த கலவையை விரல்களில் நனைத்து முடியில் மட்டும் தடவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முடி நல்ல நறுமணத்துடன் சிறப்பாக இருக்கும்.

சீப்பை பயன்படுத்தாதீர் 

முக்கியமாக உங்கள் முடி காலையில் சிறப்பாக இல்லாவிட்டால், சீப்பு பயன்படுத்தாதீர்கள். இதனால் ஸ்கால்ப்பில் உள்ள எண்ணெய் முடியில் பட்டு, முடிகளும் எண்ணெய் பசையுடன் திரித் திரியாக காட்சியளிக்கும்.


கண்டிப்பாக ஒவ்வொருவரும் பருக்களால் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்திருப்போம். இதற்காக எத்தனையோ க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தியிருப்போம். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தபாடில்லை. ஆனால் நம் பாரம்பரிய இயற்கை மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் பருக்கள் வராமல் இருக்கவும், வந்த பருக்கள் விரைவில் நீங்கவும் ஒருசில குறிப்புக்கள் உள்ளன. முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்!!! பொதுவாக ஆயுர்வேத மருத்துவத்தினால் பலன் சற்று தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும். எனவே பொறுமையுடன், ஆயுர்வேத முறையைக் கடைப்பிடித்தால், நிச்சயம் பருக்களைப் போக்கலாம். சரி, இப்போது பருக்கள் வராமல் இருக்க ஆயுர்வேதம் சொல்லும் முக்கிய குறிப்புகள் என்னவென்று பார்ப்போம். முகப்பரு வர ஆரம்பிச்சுடுச்சா? உடனே சமையலறைக்கு போங்க... 
முகத்தைக் கழுவவும் 
பலரும் குளிர்ந்த நீரில் தான் முகத்தைக் கழுவுவோம். ஆனால் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால், சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பு அதிகரித்து, அதனால் பருக்கள் வரும் என்று தெரியுமா? எனவே தினமும் 3-4 முறை வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

கசப்பான உணவுகள் அவசியம் 
ஆயுர்வேத மருத்துவமானது, உணவில் கசப்பான உணவுப் பொருட்களை அதிகம் சேர்க்கச் சொல்லும். ஏனெனில் கசப்பான உணவுப் பொருட்கள் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்தில் எண்ணெய் சுரப்பையும் கட்டுப்படுத்தும். எனவே கசப்பான உணவுப் பொருட்களான பாகற்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்ப்பதோடு, தினமும் சிறிது வேப்பிலையை உட்கொள்வது, பருக்கள் வருவதைத் தடுத்துவிடுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

துளசி பேஸ்ட் 
நீங்கள் பருக்களால் கஷ்டப்பட்டால், துளசி இலையை அரைத்து பேஸ்ட் செய்து, பருக்களின் மீது வைத்து உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வேண்டுமானால், துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை டோனர் போன்று பயன்படுத்தலாம்.

யோகா 
யோகா உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்துவதோடு, பல சரும பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவும். அதற்கு வாயில் காற்றினை நிரப்பி சிறிது நேரம் கழித்து மெதுவாக காற்றினை வெளிவிட வேண்டும். இப்படி தினமும் 10-12 நிமிடம் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

மஞ்சள் சிகிச்சை 

பருக்களைப் போக்க ஆயுர்வேதம் என்று வரும் போது, அதில் நிச்சயம் மஞ்சளும் இடம் பெறும். அதற்கு மஞ்சள் மற்றும் இஞ்சியை சரிசமமாக எடுத்துக் கொண்டு அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் குணமாகும்.

தக்காளி ஜூஸ் 
தக்காளியை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவிக் கொண்டு தூங்க செல்ல வேண்டும். இப்படி அன்றாடம் பின்பற்றி வந்தால், முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும்.

சந்தன பேஸ்ட் 
சந்தனப் பொடியை வேப்பிலை தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உல வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், சருமத்தில் உள்ள எந்த ஒரு பிரச்சனையும் நீங்கி, சருமம் பிரகாசமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

வெள்ளைத் தோலின் மீது யாருக்கு தான் ஆசை இல்லாமல் இருக்கும். அதன் காரணமாக பலரும் தங்களின் நிறத்தை அதிகரிப்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுவார்கள். பல ஆண்கள் மற்றும் பெண்களின் அக்குள் மட்டும் கருமையாக இருக்கும். இந்த கருமையைப் போக்க முடியாதா என்று பலர் நினைப்பார்கள். அதுமட்டுமின்றி, சிலர் அந்த கருமையைப் போக்குவதற்கு கடைகளில் விற்கப்படும் க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினால், அதனால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே கண்டதை உபயோகிக்காமல், உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே போக்க முயற்சி செய்யுங்கள். இங்கு தமிழ் போல்ட்ஸ்கை அக்குளில் உள்ள கருமையைப் போக்க உதவும் சமையலறைப் பொருட்கள் என்னவென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து முயற்சித்து நல்ல பலனைப் பெறுங்கள்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் மிதமான அமிலம் உள்ளதோடு, இது மிகச்சிறந்த ப்ளீச்சிங் தன்மை கொண்டதும் கூட. எனவே அந்த உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, அவற்றை அக்குளில் தேய்த்து 5-10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், அக்குள் கருமையைப் போக்கலாம். முக்கியமாக சென்சிடிவ் சருமத்தினருக்கு இது நல்லது.

எலுமிச்சை சாற்றின் அழகு நன்மைகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் இது மிகச்சிறந்த ப்ளீச்சிங் பொருள். அத்தகைய எலுமிசை சாற்றினை அக்குளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கை, கால்களில் உள்ள முடியை எப்படி வேக்சிங் முறையின் மூலம் நீக்குகிறீர்களோ, அதேப் போல் அக்குளில் உள்ள முடியையும் வேக்சிங் செய்து நீக்கினால், முடி வேரோடு வெளிவருவதோடு, கருமையாக காணப்படுவதும் நீங்கும்.

பப்பாளியில் பாப்பைன் அதிகம் உள்ளது. இது சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் நீக்கும். எனவே தினமும் பப்பாளியை அரைத்து அதனை அக்குளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, கழுவி வந்தால், அக்குளில் உள்ள கருமை நீங்கும்.

வெள்ளரிக்காயும் சரும கருமையைப் போக்கும் சக்தியைக் கொண்டது. எனவே வெள்ளரிக்காயை அக்குளில் தினமும் இரண்டு முறை தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வாருங்கள்.

பேக்கிங் சோடா 
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அக்குளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ, அக்குள் கருமை நீங்கும்.

ஆரஞ்சு தோல் 
ஆரஞ்சு தோலை உலர்த்தி, பொடி பொடி செய்து, அதில் பால் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவி வந்தால், அக்குளில் இருக்கும் கருமை மறையும்.

இன்றைய தலைமுறையினர் அதிகம் கவலைக் கொள்ளும் விஷயங்களில் ஒன்றாக முடி உதிர்வது மற்றும் முடியின் அடர்த்தி குறைந்து மெலிதாவது தான். இதனைத் தடுப்பதற்காக பலர் ஹேர் சிகிச்சைகளை மேற்கொள்வது, வைட்டமின் மாத்திரைகளை எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இப்படி செய்வதற்கு பதிலாக முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொண்டு வந்தாலே போதும். குறிப்பாக முடியின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் என்னவென்று ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு, அச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தாலே, முடி உதிர்வதைத் தடுக்கலாம். இங்கு முடியின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் என்னவென்று தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்து, முடி உதிர்ந்து மெலிதாவதைத் தடுங்கள்.
புரோட்டீன் 
முடியின் வளர்ச்சிக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. புரோட்டீன் உடலில் குறைவாக இருந்தால் தான் முடி கொட்டி மெலிதாகும். இந்த புரோட்டீன் முட்டை, பீன்ஸ், நட்ஸ், மீன், சிக்கன் மற்றும் சீஸ் போன்றவற்றில் வளமாக நிறைந்துள்ளது. எனவே உங்களுக்கு முடி அதிகம் கொட்டினால், இச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து வாருங்கள்.

ஜிங்க் 
முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை ஏற்படுவதற்கு உடலில் ஜிங்க் குறைபாடும் ஓர் காரணம். ஜிங்க் மயிர் கால்களின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்யும். மேலும் ஜிங்க் தலைச்சருமத்தில் எண்ணெய் பசையை சீராக வைத்து, வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும். இந்த ஜிங்க் சத்தானது இறைச்சி, பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் தானியங்கள் போன்றவற்றை ஏராளமாக நிறைந்துள்ளது.

காம்ப்ளக்ஸ் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர் கால்களின் வளர்ச்சிக்கு உதவும். இச்சத்து குறைவாக இருந்தால், முடி வலிமையின்றி இருக்கும். இந்த சத்து டூனா, சிக்கன், சால்மன் போன்றவற்றில் அதிகம் இருக்கும்



காப்பர் 
காப்பர் தான் புதிய ஹீமோகுளோபினை உருவாக்கி, தலையில் ஹீமோகுளோபின் மூலம் ஆக்ஸினை வழங்கி, முடியின் வளர்ச்சிக்கு உதவும். இந்த காப்பர் சத்தானது சோயா, எள், நட்ஸ், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் இறைச்சியில் அதிகம் உள்ளது.

வைட்டமின் சி 
வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொண்டால், முடி வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். அதற்கு வைட்டமின் சி உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரிப் பழங்கள், தர்பூசணி மற்றும் தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

இரும்புச்சத்து 
இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், முடி ஆரோக்கியத்தை இழந்து உதிரும். எனவே உடலில் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்க, கீரை, சிக்கன், இறைச்சி, முட்டை, மீன், பசலைக்கீரை மற்றும் சோயா பீன்ஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள்.


தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும். வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு  உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.
உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி  அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும்.

மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.இப்போது மேட் பினிஷ்  லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.தினமும் நெய் அல்லது வெண்ணெயை  உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம்  பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும்.

இரண்டு டீஸ்பூன் ஆலிவ் என்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும்,  மென்மையாகவும் மாறும்.கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.


நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி ஆகியவை தலா 10 கிராம்- இவை அனைத்தையும் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்கவைக்கவும். இந்தக் கலவையை நான்கு நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சூரியக் கதிர்கள் பட்டு எண்ணெயில் சாரம் இறங்கும். பின்பு வெள்ளைத் துணியில் அதை வடிகட்டவும். குளிக்கும் முன் தலையில் தேய்த்து வந்தால் நரை குறையும். செம்பட்டை முடி கருமையாகும். 

செம்பருத்தி பூ, அவுரி விதை, நெல்லி முள்ளி (காயவைத்த நெல்லிக்காய்) மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். நரைமுடிக்குத் தேவையான அளவு அந்தக் கலவையைத் தண்ணீரில் கலந்து ஒரு இரும்பு பாத்திரத்தில் நான்கு மணி நேரங்கள் வைக்கவும். வெள்ளை முடி உள்ள இடங்களில் அதைத் தடவி அரை மணி நேரத்தில் அலசிவிடவும். இது முடியைக் கருப்பாக்கும். வெள்ளை முடி அதிகமாகாமல் தடுக்கும்.

பூந்திக்காய், வெந்தயம், வேப்பிலை, ரோஜா இதழ், ஆரஞ்சுப் பழத்தோல், மல்லிகைப் பூ, வெட்டிவேர், செண்பக மொட்டு, நெல்லிக்காய் எல்லாம் சேர்த்து  100 கிராம் எடுத்துக் கொள்ளவும். எல்லாப் பொருட்களையும் காய வைத்து, அரைக்கவும். 100 கிராம் பொடியை 200 மி.லி. தயிரில் கலந்து கொள்ளவும். முதலில் தலையில் சிறிது நல்லெண்ணெய் தடவவும். பிறகு இந்த ஹேர் பேக்கை தடவி, 45 நிமிடங்கள் ஊற வைத்து அலசவும். இந்த பேக், இளநரை வராமல் தடுப்பதோடு, முடி உதிர்வையும் கட்டுப்படுத்தி, கூந்தலுக்கு நல்ல பளபளப்பையும் ஆரோக்கியத்தையும் தரும்.

50 கிராம் அளவுக்கு மருதாணிப் பொடியில் ஒரு முட்டை, 5 மி.லி. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், 2 டேபிள்ஸ்பூன் தயிர், 2 டேபிள்ஸ்பூன் காபி (சிக்கரி கலக்காதது) அல்லது  டீ டிகாக்‌ஷன், எலுமிச்சைச்சாறு 5 முதல் 8 சொட்டு, தேவைக்கேற்ப வெதுவெதுப்பான நீர் சேர்க்கவும். இவற்றை ஒரு இரும்பு பாத்திரத்தில் 4 மணி நேரம் ஊற வைக்கவும். தலையில் ஆயில் மசாஜ் செய்த பின் கொஞ்சம் கொஞ்சமாக முடியை எடுத்து எல்லா பக்கமும் பரவும்படி இதைத் தடவிக் கொண்டை போடவும். வெறும் பளபளப்பு மட்டும் வேண்டுமானால், அரை மணி நேரத்தில் குளிக்கவும். கலர் வேண்டுமானால் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைத்துக் குளிக்கவும். சுருட்டை முடி உள்ளவர்கள் ஹென்னா போடுவதை தவிர்க்கலாம்.

கோடீஸ்வரரை மணப்பது எப்படி? எனும் இளம்பெண் ஒருவரின் கேள்விக்கு நயமாக, ஆனால் நெத்தியடி ரகமாக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி அளித்தாக சொல்லப்படும் பதில் இணையத்தில் உலாவரத் துவங்கி கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த கேள்விக்கு பதில் அளித்தவர் உண்மையில் முகேஷ் அம்பானி தானா என்று பார்ப்பதற்கு முன், அந்த இளம்பெண்ணின் கேள்வியை பார்த்து விடலாம்.
கோடீஸ்வரரை திருமணம் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? எனும் தலைப்பிலான அந்த கேள்வியில், இங்கு சொல்ல இருப்பதை நேர்மையாக சொல்கிறேன். எனக்கு 25 வயது ஆகப்போகிறது. நான் அழகாக, ஸ்டைலாக இருக்கிறேன். ஆண்டுக்கு 100 கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் ஒருவரை நான் மணந்து கொள்ள விரும்புகிறேன். இது போன்ற ஒருவரை மணந்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?.
இப்படி கேட்டிருந்தவர், பணக்கார பேச்சுலர்களை எங்கே சந்திக்கலாம், பணக்காரர்களின் மனைவிகள் பெரும்பாலும் அழகாக இல்லாமல் இருப்பது ஏன்? கோடீஸ்வரர்கள் காதலியையும், மனைவியையும் எப்படி தீர்மானிக்கின்றனர்? என்றெல்லாமும் கேட்டிருந்தார். கேள்வி கேட்டவர் பூஜா சோகன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கேள்வியின் கீழ், முகேஷ் அம்பானியின் தத்துவார்த்தமான பதில் எனும் தலைப்பில், நீளமான பதில் விளக்கம் அமைந்திருந்தது. உங்கள் கேள்வியை ஆர்வத்துடன் படித்தேன் என துவங்கும் அந்த விளக்கத்தில் ஒரு முதலீட்டாளர் பார்வையில் இதற்கு பதில் அளிக்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு, உங்கள் நிபந்தனையை நான் பூர்த்தி செய்தாலும் என்னால் உங்களை மணந்து கொள்ள முடியாது. அது மோசமான வர்த்தக முடிவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக, நீங்கள் அழகுக்கு பணத்தை மாற்றிக்கொள்ள நினைத்தாலும் அதில் உள்ள சிக்கல் என்ன என்றால் உங்கள் அழகு தேய்மான ரகத்தை சேர்ந்தது.
ஆனால், எனது சொத்து வளரக்கூடியது. அதிலும் உங்கள் அழகு ஆண்டுக்கு ஆண்டு குறையும் என்றால், எனது சொத்து வளர்ந்து கொண்டே இருக்கும். மேலும் 10 ஆண்டுகளில் உங்கள் அழகுக்கு மோசமான மதிப்பே இருக்கும், என தொடரும் அந்த பதிலில், 100 கோடி வருமானம் உள்ள யாரும் உங்களை மணந்து கொள்ளும் அளவுக்கு முட்டாள் அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதைவிட ஏன் நீங்கள் ஆண்டுக்கு 100 கோடி சம்பாதிக்க கூடிவராக மாறக்கூடாது, கோடீஸ்வரரை மணப்பதை விட அது சாத்தியம் என முடிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிலுக்கு கீழே முகேஷ் அம்பானி என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கேள்வி பதில் சுவாரஸ்யமாக இருந்தாலும், இந்த கேள்வி நிஜமாக கேட்கப்பட்டதா? இதற்கு பதில் சொன்னவர் முகேஷ் தானா என்பதற்கு எந்த நம்பகமான தகவலும் இல்லை.
திடீரென இந்த கேள்வி பதில் இணையத்தில் உலாவத் துவங்கியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த கேள்வி எந்த இடத்தில் கேட்கப்பட்டது என்ற தகவலும் இல்லை; எப்போது கேட்கப்பட்டது என்ற விவரமும் இல்லை. ஒரு இணைய குழுவில் கேட்கப்பட்டது என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் ஒரு சில இணையதளங்களில் இந்த கேள்வி பதில் வெளியானது. ஆனால், உண்மையில் இந்த கேள்வி பதில் 2 ஆண்டுகளுக்கு முன்னரே ஃபேஸ்புக் மற்றும் லிங்க்டு இன் தளங்களில் பகிரப்பட்டுள்ளது. சமீபத்தில் மீண்டும் ஒருவர் இதை லிங்க்டு ஒன் தளத்தில் எடுத்து போட்டிருக்கிறார்.
அது மட்டுமல்ல, இணையத்தில் தேடினால் இதே கேள்வி அமெரிக்க பெண்ணால் கேட்கப்பட்டு, அந்நாட்டு கோடீஸ்வரர் ஒருவர் அளித்த பதிலையும் பார்க்க முடிகிறது. இதில் எது அசல், எது நகல் என்று தெரியவில்லை. இதற்கு முன்னரே கூட இணையத்தில் இதுபோன்ற கேள்வி பதில் உலா வந்திருக்கலாம். லிங்க்டு இன் விவாத்ததிலேயே பலரும் இது முகேஷ் அம்பானியின் பதில் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளனர். அமெரிக்காவின் ஜேபி மோர்கன் நிறுவன தலைவரின் பதில் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆக, தேவையில்லாமல் முகேஷை இழுத்து விட்டிருக்கினர் போலும். இணையத்தில் வெளியாகும் தகவல்களில் எப்போதும் எச்சரிக்கை தேவை என்பதை தான் இந்த செய்தி உறுதிபடுத்துகிறது. அது மட்டுமல்லாமல் பெண்கள் பணத்திற்காக ஆசைப்படுபவர்கள் போன்ற தோற்றத்தை முன்வைத்து அவர்களை இழிவுபடுத்தவும் செய்கிறது.


தன்னம்பிக்கை தரும் அழகு.....

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஒருவரின் உள்ளத்தின் எண்ணங்களை பிரதி பலிப்பதாக முகத் தோற்றம் உள்ளது. ஆனால் ஒருவரது முகத்தோற்றத்தை வைத்து அவர்களின் திறமையை எடை போட முடியாது என்றாலும் பெரும்பாலான பெண்களுக்கு தங்களது பிரகாசமான முகத் தோற்றமே தன்னம்பிக்கை தரும் விஷயமாகவும் உள்ளது ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் வீட்டு வேலைகளை முடித்து அலுவலகம் செல்கின்றனர். 

பின்னர் பணி முடித்து இரவு வீடு திரும்புகின்றனர். இவர்களால் வெளியில் சென்று பேஷியல் போன்ற அழகு தொடர்பான விஷயங்களில் ஈடுபட முடிவதில்லை. இதனால் முகம் களையிழந்து, உற்சாகமின்றி காணப்படுகின்றனர். இதனை தவிர்க்க வீட்டிலேயே பயன்படுத்தும் பொருட்களை கொண்டு எளிய முறையில் செய்து கொள்ளும் சில அழகு குறிப்புகள்.

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து , பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் ஊறவைத்து குளித்தால், வேர்க்குரு வராத தோடு, வெயிலில் கருத்துப் போகாமல் இருக்கும்.

இரவு உறங்க செல்லு முன், இரண்டு தேக்கரண்டி புதினா சாறு, அரைமூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயித்தம் பருப்புமாவை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஐஸ் கட்டி எடுத்து ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பு மறையும். பப்பாளிப்பழத்தை அரைத்து சிறிதளவு தேன், பால் சேர்த்து முகத்தில் பூசி  சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சென இருக்கும்.

திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை அரைத்து முகத்தில் ஒரு மாஸ்க் போன்றுபூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது சருமத்தை சுத்திகரித்து ரத்தத்தில் உள்ள பேலட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் மாற்றுகின்றது. ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சமஅளவு எடுத்து, கலந்து முகத்தில் தேய்த்து சற்று நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். 

இதன் மூலம் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லி பவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். புதினா சாறு-1 டீ ஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம் பொடி-1 டீஸ்பூன், சந்தனம்- கால் டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பருக்களின் மேல் இந்த பேஸ்ட்டைப் பூசி, உலர்ந்ததும் கழுவ வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்கு போல் ஆகிவிடும்.


சின்ன வெங்காயம் 1, பூண்டு 4 பற்கள், அதிமதுரம் ஒரு சிறிய துண்டு மூன்றையும் மூழ்கும் அளவு கொதிக்கும் தண்ணீரில் அல்லது பாலில் சிறிது நேரம் ஊற வைத்து அம்மியில் நைசாக அரைக்கவும். அதை முடி உதிர்ந்த பகுதிகளில் தடவி, 1 மணி நேரம் ஊறி, வெறும் தண்ணீரில் அலசவும்.

செம்பருத்திப் பூக்களின் மகரந்தப் பகுதியை நிறைய சேர்த்துக் கொள்ளவும். அதை அப்படியே முடி உதிர்வுள்ள பகுதிகளில் அவ்வப்போது தேய்த்துக் கொண்டே இருக்கலாம். முடி இல்லாத பகுதியில் எப்போதும் இந்தத் தூள் இருக்கும்படி  பார்த்துக் கொள்ளலாம். தடவிய பிறகு தலையை அலசத் தேவையில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை செய்யலாம்.

2 டீஸ்பூன் கசகசா, 2 டீஸ்பூன் மிளகு இரண்டையும் சிறிது பால் விட்டு நைசாக அரைக்கவும். அதை லேசாக சூடாக்கி, முடி உதிர்ந்த இடங்களில் தடவி, 1 மணி நேரம் ஊறிக் குளிக்கவும்.1 டீஸ்பூன் செம்பருத்தி  தூள், 1 டீஸ்பூன் நெல்லிக்காய் தூள், 1 டீஸ்பூன் கறிவேப்பிலைத் தூள் மூன்றையும் பேஸ்ட் போலக் குழைத்து முடி உதிர்ந்த இடங்களில் தடவி, ஊறிக் குளிக்கலாம். இந்த மூன்றையும் முழுதாக வாங்கி, அரைப்பது சிறந்தது. இந்தக் கலவை முடிக்கு ஊட்டம் அளித்து, வேர்ப்பகுதிகளைத் தூண்டி, வளரச் செய்யும்.

மேலே கூறிய சிகிச்சைகளைச் செய்யும் போது ஷாம்புவை  தவிர்க்கவும். வெந்தயம் மற்றும் பாசிப் பருப்பு தலா 100 கிராம்,  வெட்டிவேர் 50 கிராம் மூன்றையும் மெஷினில் அரைத்து அதை தலையை அலசப் பயன்படுத்தலாம். ஷாம்பு உபயோகித்ததால் மண்டைப்பகுதியில் சேர்ந்திருக்கிற  ரசாயனச் சேர்க்கையை இது நீக்கும்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

அழகான கண்களை பெறுவதற்கு கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். இவையி ரண்டும் கண்களுக்கான மேக்-அப்பில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. தடிமனாகவும் கருமை யாகவும் இருந்தால் கண் இமை ரோமங்கள் அழகாக காட்சியளிக் கும். பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடிமனாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள சில அழகு டிப்ஸ்கள் இருக் கிறது. அழகு சாதனங் களை கொண்டு உங்கள் கண் இமை ரோமங்களை தடிமனாக மாற்றலாம். அதேபோல் அதற்கு சில இயற்கையான வழி முறைகளும் இருக்கத் தான் செய்கிறது.

கண்இமை ரோமங்களை தடிமனாக மாற்றுவதற்கு பல அழு டிப்ஸ்கள் இருக்கிறது. ஆனால் அவற்றில் சில சிறப்பாக செ யல்படுவதில்லை. மேலும் அது உங்கள் சருமத்திற்கும் கூந் தல் வகைக்கும் ஒத்துப் போவதில்லை. ஆனால் அவற்றில் சிறப்பாக செயல்படும் டிப்ஸ்களை பின்பற்றினால் அழகான தடியா ன கண் இமை ரோமங்களை பெ றலாம். அப்படிப்பட்ட சில டிப்ஸ் களை இப்போது பார்க்கலாமா? நல்ல அடர்த்தியான கண் இமைகள் வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க…

மஸ்காரா பயன்படுத்துங்கள்


வெளியே டேட்டிங் அல்லது ஏதாவது பார்ட்டிக்கு செல்வதா ல் உடனடியாக தடிமனான கண் இமை ரோமங்களை பெற வேண்டுமா? அப்படியா னால் நல்ல மஸ்காராவை பயன்படுத்த வேண்டும். பெ ண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடியாக காட்ட பயன்படுத்தும் அழகு டிப்ஸ் களில் ஒன்றாக விளங்குகிறது மஸ்காரா. திறம்பட செயலாற்றும் இது புகழ்பெற்ற வழி முறையாக விளங்குகிறது. நீளமான மற்றும் குட்டையான கண் இமை ரோமங்கள் என இரண்டு வகைகளுக்கும் பல வகையான மஸ்காராக்கள் கிடை க்கிறது. மேலும் அது பல வண்ணத்திலும் கிடைக்கிறது. ஆகவே கண் இமை ரோமங்களை உடன டியாக தடிமனாக்கி, அது நீண்ட நேரம் நிலைத்து நிற்க மஸ்காரா வை பயன்படுத்துங்கள்.

செயற்கை இமை ரோமங்கள்


நீளமான தடிமனான கண் இமை ரோமங்களின் மீது ஆவ லாக உள்ளதா? அப்படியானால் கண்களுக்கு கொஞ்சம் நீட் சியை பயன்படுத்தலாம்; அது தான் செயற்கை இமை ரோம ங்கள். இவைகள் பார்ப்பதற்கு செய ற்கையானது தான் என்பதை சுலப மாக கண்டுபிடித்துவிடலாம். ஆனால் நீண்ட தடிமனான கண் இமை ரோமங்களின் மீது அதீத காதல் கொண்டிருந்தால் இதனை நீங்கள் பயன்படுத்தலாம். கண் இமை ரோமங்களை உடனடியாக தடியாக்க இதுவும் சிறந்த வழியாக விளங்குகிறது. இந்த செயற்கை இமை ரோமங்கள் அனைத்து அழகு சாதன கடைகளில் கிடைக்கும். மேலும் பல வகைகளிலும் கிடைக்கும். பெண்கள் பரவலாக பயன் படுத்தும் முறை இது.

மாய்ஸ்சுரைஸ்


கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களை ஈரப்பதத்துட ன் வைக்க வாஸ்லின் பயன்படுத்து ங்கள். இதனால் அவைக ள் இயற்கையாகவே தடிமனாகவும், கருமையாகவும் காட்சி அளிக்கும். ஆனால் மேக்அப் செய்து கண் இமை ரோமங்களை தடிமனாக் குவதை விட, இது அதிக காலம் எடுக்கும். ஆனால் இது நிரந்தர தீர்வாக அமைந்து, உங்கள் கண் இ மை ரோமங்களை தடியாக்கும்.

எண்ணெய்கள்


ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண் ணெய் போன்ற பல எண் ணெய்களை பயன்படுத்தி கண் இமை ரோமன்களுக்கு மசா ஜ் செய்து கொள்ளலாம். இந்த எண்ணெய்கள் உங்கள் கண் இமை ரோமங்களில்உள்ள மயிரடி நரம்பிழைகளை தூண் டிவிடும் இந்த எண்ணெய்கள். அதனால் அதன் வளர்ச்சி மேம்படும். அதே போல் இந்த எண்ணெய்களை கொண்டு உங்கள் கண் இமைகளையும் சீரான முறையில் மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் கண் இமை ரோமங்களின் வேராக விளங்குவது உங்கள் கண் இமைகளே. அதனால் கண் இமை ரோமங்களின் வளர்ச்சி தானாகவே மேம்படும். கண் இமை ரோமங்களை தடியாக்க இதுவும் ஒரு இயற்கையான வழிமு றையாகும். இந்த வழி முறை செயல்பட நீண்ட காலமாகும். அதனால் உங்களுக்கு பொறுமை தேவைப்படும். ஆனால் அழகு சாதனங்கள் இல் லாமல் இயற்கையாகவே தீர்வு கிடைக்கும் போது காத்திருப்பதில் ஒன்றும் தவறில்லையே.

கண்களை கசக்குவதை நிறுத்துங்கள்


நம் அனைவருக்கும் கண் இமைகளை கசக்கும் பழக்கம் இரு க்குமல்லவா? அப்படி செய்யும் போது உங்கள் கண் இமை ரோமங்கள் உடைந்து உதிரவும் செ ய்யும். இது கண் இமை ரோமங்களி ன் தடிமானத்தை குறைத்து விடும். அதனால் எப்போதும்இருப்பதைவிட இன்னமும் மெலிதாக போய் விடும். இதனை தவிர்க்க கண் இமைகளை அடிக்கடி கசக்காதீர்கள். தடியான கண் இமை ரோமங்களை பெறுவத ற்கு நீங்கள் செய்ய கூடாத அழகு டிப்ஸ்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

தடிமனான அழகிய கண் இமை ரோ மங்களை பெறுவதற்கு மேற்கூறிய வைகள் தான் சில முக்கிய டிப்ஸ். இந்த அழகு டிப்ஸ் அனை த்தும் பெண்களுக்கு உபயோகமாக இருக் கும். கண்களுக் கான மேக்அப் மற்றும் கண்களின் அழகு என்பது நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டே தான் வருகிறது. தடியான கண் இமை ரோமங்கள் உங்களின் ஒட்டு மொத்த தோற்றத்தையே மாற்றி விடும். மேலும் உங்கள் கண்களையும் முகத்தையும் ஜொலிக்க வைக்கும்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.