February 2018

நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று கூறப்படுகிறது. 

நமது கனவில் அடிக்கடி நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், நமக்கு பிடித்தவர்கள் அல்லது தாத்தா, பாட்டி என சில நேரங்களில் நமது கனவில் வருவதுண்டு. அவ்வாறு அவர்கள் வந்தால் வீண் பயம் நம்மைத் தொற்றிக் கொள்வதும் அதுகுறித்த சிந்தனையும் அடிக்கடி தோன்றி நம்மை ஒருவித பயம் கொள்ள செய்யும்.  எனவே இதுகுறித்து ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.

ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம்.

வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.

தற்போது செய்திகளிலும், பிறர் மூலமாகவும் நாம் அதிகமாக கள்ளக்காதல் பற்றிய தகவல்களை படிக்கிறோம். இந்த கள்ளக்காதல் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறதே தவிர குறையவில்லை.

கள்ளக்காதலால் பல குடும்பங்கள் சீரழிந்துவிட்டன. குடும்ப உறவுகள் சிதைக்கப்படுகின்றன. சில சமையங்களில் உயிர்களை கூட கொல்லும் அளவுக்கு செல்கிறது இந்த கள்ளக்காதல் வெறி.

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற தாய், கணவனை கொன்ற மனைவி, மனைவியை கொன்ற கணவன். இப்படியான வன்முறை மிகுந்த செய்திகள் தினம்தோறும் நிகழ்ந்தவாறே உள்ளது.

இது இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இப்படி கள்ளக்காதல் தொடர்பான ஆய்வில் தங்கள் கணவனுக்கு தெரியாமல் 40 முதல் 55 சதவீத பெண்கள் 40 வயதுக்கு முன்னரே கள்ளக்காதலில் ஈடுபடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் படி உலகில் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களில் இந்தியா முதல் 10 இடத்துக்குள் வந்துள்ளது. நைஜிரியா, தாய்லாந்து, பிரிட்டிஷ், மலேசியா, பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவில் பெண்கள் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டா?, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது? என்ற கேள்வியைப்போல் சிக்கலான கேள்வி வேறொன்றுமில்லை.

மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. காலங்காலமாக, நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவுமேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள். ஆனால், மனித தத்துவங்களிலிருந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்தும் எண்ணிலடங்கா கோட்பாடுகளும் கட்டுக்கதைகளும்தான் மிஞ்சியிருக்கின்றன.

மரணம்தான் இறுதியானது. மறுபிறவி என்பதோ சொர்க்கம்-நரகம் என்பதோ கிடையாது. மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை. மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையான கட்டுக்கதைகள். மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் என்று பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜெர்மன் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் மருத்துவ டாக்டர்கள் இணைந்த குழு மருத்துவ பரிசோதனை மூலம் மரணத்திற்கு பின்னரும் வாழ்க்கை உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மரணத்திற்கு பின் வாழ்க்கை வேறு வடிவில் உள்ளது எனவும் இவர்கள் கண்டறிந்து உள்ளனர்.

இந்த வியப்பூட்டும் அறிவிப்பு என்பது மரணம் அடைந்தவரின் அருகில் இருந்து மரண அனுபவங்களை ஒரு புதிய வகை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ கண்காணிப்பு மூலம் எடுத்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாக கொண்டவையாகும்.

2012 மற்றும் 2016-க்கு இடையில் கடந்த 4 ஆண்டுகளாக இறக்கும் தருவாயில் இருந்த 944 பேரிடம் முக்கிய மருந்து கலவைகள் கொண்டு இந்த சர்சைக்குரிய ஆய்வு நடத்தப்பட்டது. எபிநெப்ரின் மற்றும் டைமெத்தில்டிரிப்டமைன் உள்ளிட்ட மருந்துகளின் கலவை கொண்டு மரணித்த உடலினை எந்தவித சேதமும் இன்றி உயிர்ப்பிக்க செய்யும் ‘ரீ அனிமேசன்’ முறை (உயிர்ப்பிக்கும் முறை) தொடங்குகிறது.

அதனைத்தொடர்ந்து 18 நிமிடங்கள் கழித்து அந்த உடல் தற்காலிக நினைவு இழந்த நிலையில் வைக்கப்படுகிறது. இதற்குள், அந்த உடலின் ரத்தத்தில் இருந்து மருந்து கலவைகளின் தூண்டுதலால் ஓசோன் பிரித்தெடுக்கப்படுகிறது. டாக்டர் பெர்தோல்டு ஆக்கர்மேன் மற்றும் அவரது குழுவினர் அதன்பிறகான நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க தொடங்குகின்றனர்.

அவற்றின் வாக்குமூலங்களையும் தொகுத்து வைத்துள்ளனர். இந்த பரிசோதனையின் நீண்ட அனுபவத்தின் முடிவுகளை அறிவதற்காக கார்டியோபல்மோனரி ரிசைடேசன் (சி.பி.ஆர்). என்ற புதிய நவீன கருவி பயன்படுத்தப்பட்டது. அந்த கருவியின் உதவியுடன் இது சாத்தியப்படுத்தப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில், இந்த வகையிலான கருவி மரணித்த சிலரை உயிர்ப்பிக்க செய்யும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஆட்டோ பல்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

அந்த ஆய்வில், அனைத்து வாக்குமூலங்களிலும் மரண நிலையில் உள்ள நினைவுகள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் பொதுவாக, உடலில் இருந்து பிரிவது போன்ற உணர்வு கொண்ட நினைவுகள், தெய்வீக ஆற்றலால் மிதத்தல் உணர்வு, முழுவதும் அமைதி நிலை, பாதுகாப்பு, வெப்பமுடன் இருத்தல், மரண நிலையிலான முழு அனுபவம் மற்றும் அதிக அளவிலான ஒளி காணப்படுவது போன்றவை பெருமளவில் உள்ளன. பல்வேறு வாக்குமூலங்களில் மத நம்பிக்கைகள் சார்ந்த விஷயங்கள் எதுவும் இல்லை.

எதிர்காலத்தில் தங்களது முடிவுகள் பலரை அதிர்ச்சி அடையச் செய்யும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் ஆய்வுக்கு எடுத்து கொண்ட மனிதர்கள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் பிற மதநம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர்.

மனிதகுல வரலாற்றின் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்றிற்கு நாங்கள் பதிலளித்துள்ளோம். அதனால் மத நம்பிக்கை கொண்டவர்கள் எங்களை மன்னித்து விடுவார்கள் என நாங்கள் நம்புகிறோம். மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது. இது ஒவ்வொருவருக்கும் உள்ளது என கருதுகிறோம் என இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற டாக்டர் பெர்தோல்டு ஆக்கர்மேன் கூறுகிறார்.-

அமெரிக்காவில் மேஜிக் செய்யும் ஒருவர் தனது குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஜஸ்டின் ஃபோலோம் என்பவர் ஒரு மேஜிக்மேன். இவர் தனது பெண் குழந்தையை மேஜிக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூங்கிக் கொண்டிருக்கும் அவரது குழந்தையை புத்தகத்தை கொண்டு இரண்டாக பிளந்து, மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுகிறார். இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் கடந்த மாதம் தீ மேஜிக் ஷோ என்ற பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த வீடியோவை 143 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 628 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர்.

உடலுறவில் ஈடுபடுதல், கொஞ்சி குலாவுதல் தான் உணர்ச்சி நிலை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும். ஆனால், இதை தவிர்த்து, பொதுவான சில காரியங்கள் மற்றும் சில தருணங்களில் கூட ஆண்களுக்கு உணர்ச்சி நிலை மேலோங்க வாய்ப்புகள் உண்டு. அவை என்னென்று பார்க்கலாம்.

மற்ற வண்ணங்களை விட சிவப்பு நிற உடை ஆண்களின் உணர்சிகளை தூண்டுகிறதாம். சிவப்பு நிறம் இயற்கையாகவே ஆண், பெண் மத்தியில் உணர்ச்சிகளை தூண்டும் தன்மை கொண்டுள்ளது என ஆய்வுகள் மூலமாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

அடர்த்தியான தன்மை கொண்ட வாசனை திரவியம் பயன்படுத்தும் பெண்கள் அருகில் வருகையில், அதை சுவாசிக்கும் போது ஆண்களுக்கு உணர்ச்சி மேலோங்குகிறது.

சில ஆண்களுக்கு கண்ணாடியில் தங்கள் உடலையே பார்த்து ரசிக்கும் போது உணர்ச்சி அதிகரிக்கிறது.

தனது துணை, தன் முதுகை தேய்த்து குளிப்பாட்டும் போதுமட்டுமல்ல, அரிக்கும் போது முதுகை சொறிந்துவிட்டால் கூட ஆண்களுக்கு உணர்ச்சி அதிகரிக்குமாம்.

துவைத்த சுத்தமான படுக்கை விரிப்புகள் கொண்ட படுக்கையில் படுக்கும் போது ஆண்களுக்கு உணர்ச்சி அலை சுனாமி போல பொங்குகிறது. அந்த நேரத்தில் மனைவி அருகில் இருந்தால் சொல்லவே வேண்டாம்.

மனைவி, வீட்டில் தங்களது உடையை உடுத்தி வேலை செய்கையில் ஆண்களுக்கு உணர்ச்சி அதிகரிக்கிறது. இதை பற்றி நசுக்காக தெரிந்து தான் பெண்கள் கணவரின் உடையை அணிந்து கணவரின் உணர்ச்சியை தூண்டி விடுகின்றனர்.

காலை எழுந்தவுடன், துணை முத்தமிட்டு நாளை துவக்கும் போது ஆண்கள் அந்த நாள் முழுவதுமே உணர்ச்சி நிலை மோலோங்கி தான் காணப்படுவார்களாம். தன் துணை மகிழ்ச்சித்து, சிரிக்க சிரிக்க பேசும் தருணங்களில் ஆணுக்கு உணர்ச்சி அலைகள் மேலோங்குகிறது. அதுவும் மனைவி தன்னை தொட்டு தொட்டு பேசி சிரிக்கும் போது கணவரால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது.

அந்தக் காலத்தில் காளைய அடக்குவது, இளவட்டக் கல்லைத் தூக்குவது மாதிரி மக்களோட வீரம், கம்பீரத்தை வெளிகாட்டுகின்ற ஒரு விஷயமாக புல்லட் இருந்தது நிதர்சனமான உண்மை. ஆயிரம் வாகனங்கள் ரோட்டுல போனாலும் புல்லட் அந்த “தட தட தட”ங்கற சத்ததோட போறது தனியா தெரியும். பார்க்கறதுக்கு தாங்க அது முரட்டுத்தனமான வண்டியா தெரியும், ஒட்டிப்பார்த்தா சூதுகவ்வும் படத்துல ஒரு டைலாக் வருமே “நான் காரா ஓட்டுறேன், கடவுளையே ஓட்டறேன்”னு அது அப்படியே புல்லட்டிற்கும்  பொருந்தும். சுருக்கமா சொல்லப்  போனா யானைய ஓட்டற மாதிரி. ஏறி உக்கார்ந்துட்டா அப்புறம் நாம சொல்றபடி கேட்கும். அந்த காலத்து புல்லட்டில் ஸெல்ப் ஸ்டார்ட் எல்லாம் கிடையாது. ஆம்ப்ஸ்  மீட்டர் ஜீரோ வந்திருச்சா’னு பார்த்து “சலக்” னு ஒரே ஒரு உதை, உதைச்சா போதும். சிங்கம் கெளம்பீருச்சு. சண்டியர் கணக்கா போய்ட்டே இருக்கலாம். எத்தனை நூரம் போனாலும் அலுப்பே தெரியாமல் போகக் கூடிய வாகனம் இது மட்டுமே. மைனர் என்றால் நம் நினைவிற்கு வருவது தங்கச் சங்கிலியும், புல்லட் வண்டியும் ஆகிய   இரண்டுதான். புல்லட் வைத்திருக்கும் மைனர் மாப்பிள்ளைகளுக்கு கிராமத்தில் இன்றளவும் மவுசு கூடத்தான். ஆக அப்படிப்பட்ட இந்த வண்டியோட கதை தான் என்ன ?அதுக்கு ஏன் “புல்லட்” டுனு பெயர் வந்தது ?

இங்கிலாந்தைச்  சேர்ந்த ராயல் என்பீல்ட் நிறுவனம் 1893 ஆம் ஆண்டு தொடங்கி மோட்டார் சைக்கிள், பை சைக்கிள், புல் வெட்டும் இயந்திரங்கள், மற்றும் நகரும் இயந்திரங்கள்’னு பலவற்றை தயாரித்து விற்பனை செய்தனர். இவர்களுடைய முதல் என்பீல்ட் புல்லட் 19௦1 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. அது ராயல் என்பீல்ட்’ங்கற பெயருடன் வெளிவந்தது. இவர்களுடைய தயாரிப்பில் “என்பீல்ட் ரைபிள்” என்ற துப்பாக்கியும் அடக்கம். அதனால் அவர்களுடைய லோகோ-வில் “மேடு லைக் எ கன்” (Made Like a Gun) என்ற வாக்கியத்துடன் வரும். அவர்களுடைய வாகனத்தையும் புல்லட் என்ற பெயரிட்டனர், Royal Enfield Bullet என்றே வெளிவந்தது. இந்த வாகனம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. எல்லை பாதுகாப்பு பணிக்கு அது சரியானதொரு வாகனமாக இந்திய அரசு கருதியது.

இதன் வரவேற்பு அதிகரிக்கவே இந்த வாகனத்தை இந்தியாவில் தயாரிக்க 1949 ஆம் ஆண்டு என்பீல்ட் நிறுவனம் இந்தியாவின் மெட்ராஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து சென்னையில் “என்பீல்ட் ஆப் இந்தியா” என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்திய அரசாங்கம் காவல்துறை மற்றும் ராணுவ பாதுகாப்புக்கு இவைகளுக்காக பயன்படுத்தத்  தொடங்கினர். 1955 ஆம் ஆண்டு ஒரே முறையில் 800, 350-cc புல்லட் வண்டிகளுக்கு இந்திய அரசு ஆர்டர் கொடுத்தது. இது அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய ஆர்டராகும். 1957 ஆம் ஆண்டில் இருந்து வாகனத்திற்கான உதிரி பாகங்கள் இந்தியாவில் தயார் செய்யப்பட்டது. சுமார் 197௦ ஆம் ஆண்டு இங்கிலாந்துக் கம்பெனி ஒரு சில காரணங்களால் மூடப்பட்டது. எனினும் இந்தியாவில் ராயல் என்பீல்ட் பாக்டரி தங்கு தடையின்றி இந்தியாவில் தயாரிப்புகளை தயார் செய்தும் விற்பனை செய்தும், மற்றும் யூரோப், அமேரிக்கா, தென்னாப்பிரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வந்தது குறிப்பிடத்தக்கது. இடையில் நவீன ரக பைக்குகளின் வரவுகள் சில காலம் ராயல் என்பீல்ட்’டின் விற்பனை சந்தையை மந்தமாகியது. இதனால் தங்களின் மாடல்களை எப்பொழுதும் நவீனப்படுத்திக் கொண்டு வந்த நிறுவனம் புது படைப்புகளுடன் இப்பொழுது மீண்டும் விற்பனை களத்தில் முன்னணியில் உள்ளது. இன்றைய இளைய தலைமுறை புல்லட்களை பெரிதும் விரும்பி வாங்க துவங்கியுள்ளனர். இப்பொழுது சந்தையில் உள்ள ஒரு ரகங்கள் பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்.

ராயல் என்பீல்ட் புல்லட் ஸ்டாண்டர்ட் 350 cc என்பது ஆரம்ப மாடலாகும். இதில் கிக் ஸ்டார்ட் மட்டுமே உள்ளது. பரமாரிப்பு சரியாக இருந்தால் லிட்டருக்கு 5௦ கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைத்தாலும் நிறுவனம் நமக்கு தரும் உத்தரவாதம் நாற்பது தான். இதன் மற்றொரு மாடல் எலெக்ட்ரா கிக் ஸ்டார்ட் உடன் வருகிறது.

ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 cc மற்றும் கிளாசிக் 5௦0 cc – என்பீல்ட் நிறுவனம் பழைய மாடல் புல்லட்களை போல் மீண்டும் தயாரிக்க முற்பட்டதில் பிறந்தது தான் இவ்விரண்டு மாடல்கள். பழைய ரக ஒற்றை ஸ்பீடாமீட்டர், அதன் கீழ் சாவி மற்றும் ஆம்ப்’க்கான வசதிகள். ஹெட்லைட்டிற்கு மேல் இருபுறமும் சிறய நைட் விளக்குகள், நவீன ஹாலோஜன் ஹெட்லைட். இதன் நவீன என்ஜின் கிராமப்புறம் மற்றும் நகர்புறம், ஹைவே அனைத்திலும் எளிதாக பயணம் செய்வதற்கான தரத்தில் உள்ளது. நமக்கான தினசரி பயன்பாட்டிற்கு 35௦ cc மாடலும், அடிக்கடி நீண்ட தூரம் செய்பவர்களுக்கு 50௦ cc மாடல்களும் பொருந்தும். இதன் மைலேஜ் உத்தரவாதம் நாற்பது. சுமார் 9 கலர்களில் இவ்வகை வாகனங்கள் கிடைக்கிறது.

தண்டர்பேட் 350 மற்றும் 5௦0 வகைகள் –சுமார் 5௦ ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வகை உருவத்தில் வாகனங்கள் தயாரிப்பதானால் ஒரு சில மாடல்களுக்கு உருவத்தை மாற்றி அமைத்தால் மட்டுமே அடுத்த தலைமுறையை கவர முடியும் என்று உருவாக்கப்பட்டதே தண்டர்பேட் மாடல்கள். நீண்ட தூர சொகுசு பயணத்திற்கு ஏற்ற உயர ஹாண்டல்பார்கள், 20 லிட்டர் பெட்ரோல் டேங், பெரிய இருக்கைகள் என்று அதிர்வில்லாத நீண்ட தூர பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டது. இது போக பிற மாடல்களும் ரேஸ் பைக் உட்பட என்பீல்ட் கம்பெனி தயாரிப்புகளில் வருகிறது. அதோடு டீசல் என்ஜினில் வந்த ஒரே இரு சக்கர வாகனம் புல்லட் மட்டுமே

புல்லட் அல்லது உயர் ரக பைக்’குகள் வாங்குவது நம்மில் ஒரு சாராருக்கு அன்றாட தேவைக்கான விஷயமாக இருந்தாலும் மற்றொரு சாராருக்கு அது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. இவ்வகை மாடல்கள் வாங்கி அதை பெரிய பொருட்செலவில் தங்களுக்கு ஏற்றார் போல் எஞ்சின் ஆல்டர் செய்துகொள்ளவும், சைலன்சர்கள், ஹெட் லாம்ப்கள், மக்கட், போன்ற பாகங்களை மாற்றிக்கொள்ளவும் ஒரு தனி சந்தை, தனி பணிமனைகள் செயல்படுகிறது.

பெரு நகரங்களில் ராயல் என்பீல்ட் ஒநெர்ஸ் க்ளப், தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளின் ரைடர்ஸ் க்ளப், போன்ற பல க்ளப்கள் உள்ளன. இவர்கள் வார அல்லது மாத இறுதி என்று முடிவு செய்து மாநிலங்களை கடந்து நீண்ட தூர பயணம் சென்று வருகிறார்கள். கோவா போன்ற நகரங்களில் ராயல் என்பீல்ட்காக பிரத்யேக ரேஸ்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவின் மோட்டார் வாகன வரலாற்று பட்டியலில் ராயல் என்பீல்ட்க்கு ஒரு சிறப்பிடம் நிலையாக உள்ளது. பல துறைகளில் உள்ள நிறுவனங்களில் 1949 முதல் இயங்கும் பழங்கால பிராண்டுகளில் இதுவும் ஒன்று. இரு சக்கர வாகனத்திலும் சொகுசாக செல்ல முடியும் என்று மக்கள் உணர்ந்தது இவ்வகை வாகனங்கள் வந்த பிறகே. முறுக்கு மீசை, வேஷ்டி சட்டை போட்டவர்கள் மட்டுமே புல்லட் பயன்படுத்தி வந்த கலாசாரம் இப்பொழுது மாறி, நவீன உடையில் அலுவலகம் செல்லும் இன்றைய தலைமுறையும் புல்லட்டில் செல்கிறது.

புல்லட் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் உடனே முன்பதிவு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது சென்னையில் இரண்டு இடங்களில் இதன் தயாரிப்பை விஸ்தரிப்பு செய்தாலும் வாடிக்கையாளர்கள் ஆறு மாதத்திற்கு முன்பில் இருந்தே முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உங்களுக்கு வேண்டுகின்ற நிறம், மாடல், அனைத்தையும் முடிவு செய்து ஒரு முன்பதிவு தொகையை மட்டும் செலுத்திக்  காத்திருந்தால் குறித்த நேரத்தில் உங்கள் வாகனம் உங்களை வந்தடையும்.

ஒருவருடைய உதட்டின் வடிவம் மற்றும் அளவை வைத்து அவர்களின் குணங்களை கூறிவிடலாம் உங்களுக்கு தெரியுமா?

இதய வடிவ உதடுகள்
ஒருவருக்கு இதய வடிவ உதடுகள் இருந்தால், அவர்கள் எப்போதும் புதிய ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்த விரும்புவார்கள். எதையும் மிகவும் வேகமாக யோசித்து செயல்பட்டு அனைவரையும் வசீகரிப்பார்கள். இந்த வகையினர் எதற்கும் அஞ்சாமல் செயல்படுவார்கள். மேலும் இவர்கள் மிகவும் ரொமான்டிக்காக இருப்பார்கள்.

பருத்த உதடுகள்
பருத்த உதடுகளைக் கொண்டவர்கள் மிகவும் தைரியமானவர்கள். இவர்கள் மற்றவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து கவனிப்பார்கள். தாராள மனம் படைத்தவர்கள் மற்றும் எளிதாக பல நல்ல நண்பர்களின் பழக்கத்தைப் பெறுவார்கள்.

பரந்த உதடுகள்
சிலருக்கு வாய் மிகவும் பெரிதாக இருப்பதால், அவர்களிக்கு பரந்த உதடாக இருக்கும். இத்தகையவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். எதையும் பரிபூரணமாக செய்ய முயல்வார்கள். மேலும் இந்த வகையினர் மற்றவர்களுக்கு வளைந்து கொடுக்கும் தன்மையினராக இருப்பதால், இவர்களுக்கு மிகப்பெரிய நண்பர் கூட்டம் இருக்கும்.

மெல்லிய உதடுகள்
உதடுகள் சிலருக்கு மெல்லியதாக உதடு இருப்பதே தெரியாமல் இருக்கும். இத்தகையவர்கள் வெளிப்படையாக பேசமாட்டார்கள், தனிமையை அதிகமாக விரும்புவார்கள், வாழ்க்கையில் தனது இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பார்கள். மேலும் இவர்கள் எப்போதும் உஷாராக இருப்பார்கள்.

வட்டமான உதடுகள்
வட்டமான உதடுகளைக் கொண்டவர்கள் மிகவும் அழகான இதயத்தைப் படைத்தவர்கள் மற்றும் துணிச்சலானவர்கள். மேலும் இத்தகையவர்கள் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்கள். இவர்களுக்கு ரிஸ்க் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டதால், நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும்.

பருத்த கீழ் உதடுகள்
கீழ் உதடு மட்டும் சிலருக்கு பருத்து இருக்கும். இத்தகையவர்கள் சிறந்த செயல்திறனாளராக இருப்பதால், இவர்கள் மிகவும் பிரபலமாக இருப்பார்கள். மேலும் இவர்கள் எந்த ஒரு இடத்திலும் அனைவரையும் கவரும் வண்ணம் இருக்க விரும்புவார்கள். இந்த வகையினர் நல்ல நகைச்சுவை குணம் படைத்த இனிமையானவர்களாக இருப்பார்கள்.

சமச்சீரான உதடுகள்
சமச்சீரான உதடுகள் என்பது உதடுகள் சரியான வடிவத்தில் அழகாக இருப்பதைக் குறிக்கும். இந்த மாதிரியான உதடுகளைக் கொண்டவர்களைக் காண்பது மிகவும் அரிது. ஆனால் இவர்கள் மற்றவர்களுடன் அவ்வளவு எளிதில் பழகமாட்டார்கள். இதனால் இவர்களுக்கு நண்பர்கள் கூட்டம் குறைவாக இருக்கும்.


பிப்ரவரி மாதமே காதல் மாதம் தான். ஆனாலும் பிப்ரவரி 14 ஆம் தேதியே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதோடு பிப்ரவரி 7 ஆம் தொடங்கி 14 ஆம் தேதி வரையிலான ஏழு நாட்கள் காதல் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் காதலோடு தொடர்புடைய ஏதேனும் ஒரு நாளை குறியீடாகக் கொண்டாடி, இறுதியில் ஏழாவது நாள் காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த காதல் வாரத்தின் ஏழு நாட்கள் பற்றிய விவரங்கள்

பிப்ரவரி 7 – rose day

இந்த தினத்தில் காதலிக்கு, காதலர்கள் ரோஸ் கொடுத்து அன்பை வெளிப்படுத்தலாம்.


பிப்ரவரி 8 – propose day

காதலர்கள் இன்று தங்கள் அன்புக்குரியவர்களிடம் காதலை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துவார்கள். இதற்கான தினமாக கொண்டாடப்படுகிறது.


பிப்ரவரி 9 – chocolate day

காதலை வெளிப்படுத்த இனிப்பை சிறந்த வழி ஏதும் உண்டா என்ன? அதுவும் குறிப்பாக சாக்லேட்டை விட … எனவே உங்கள் காதலை விதவிதமான வண்ணமயமான சாக்லேட்களை வழங்கி காதலை வெளிப்படுத்தலாம்.


பிப்ரவரி 10 – teddy day

உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கு டெடிபேர் உள்ளிட்ட செல்ல பொம்மைகளை வழங்கி மகிழ்விக்கலாம்.

பிப்ரவரி 11 – promise day

ஒருவொருக்கு ஒருவர் நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டு, மனம் ஒத்த தம்பதிகளாக இறுதிவரை பிரியமால் இருப்போம் என்று காதலர்கள் உறுதி செய்ய வேண்டிய நாள் இன்று .


பிப்ரவரி 12 – hug day

அன்புக்குரியவர்களை அரவணைத்து மனதில் உள்ள காதல் உணர்வை உருக உருக வெளிப்படுத்துங்கள். காதலின் மனதை ஐஸ் போல உருகும் அளவுக்கு வெளிப்படுத்தினால். சுவராஸ்மான, சுவையான நாளாக இருக்கும்.

பிப்ரவரி 13 – kiss day

காதலர்கள் முத்த மழைபொழிந்து ரொமாண்டிக்காக இருக்கலாம் . இந்த முத்தங்கள் உங்கள் காதல் உணர்வை இன்னும் அதிகரிக்கும்.


பிப்ரவரி 14 – valentine day

காதலர்களுக்கு இன்றைய நாள் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். காதலை உங்கள் அன்புக்கு உரியவர்களிடம் இன்று வெளிப்படுத்தி ஒகே வாங்க சிறந்த தினம் இன்று. ஏற்கனவே காதலர்கள் என்றால் பல்வேறு பரிசுகள் வழங்கி , சுற்றுலா சென்று, வாழ்வில் மறக்க முடியாத அளவுக்கு இனிமையாக கொண்டாடலாம்.

காதலிக்காமல் நேரடியா திருமணத்தை சந்தித்தவர்களும், மனைவியிடம் அல்லது, கணவனிடம் இந்த ஒரு வாரம் உருக உருக காதல் மழையை பொழிந்து பரிசுகள் கொடுத்து மகிழுங்கள்.

தம்பதியர்கள், ஒளிவு மறைவு இல்லாமல் மனம் விட்டு பேசி, தினசரி போதும் போதும் என்ற அளவுக்கு முத்தமழை பொழிந்து, உருகி உருகி காதலித்தால் அவர்களுக்கு தினசரி காதலர் தினம் தான்.


இந்தியாவுக்கு தெற்கே இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவு இன்று அரசியல் சுழலில் சிக்கி தவிக்கிறது.

மாலத்தீவு தனி நாடாக இருந்தாலும் இந்திய கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த பகுதி ஆகும். குறிப்பாக, தமிழ் மற்றும் மலையாள கலாச்சாரம் கொண்ட நாடாக மாலத்தீவு திகழ்கிறது. அங்கு மலையாளம் முக்கிய மொழியாகவும் இருக்கிறது.

மாலத்தீவு மொத்தம் 26 தீவு கூட்டத்தை கொண்டது. அதில், சுமார் 1192 குட்டி தீவுகள் இருக்கின்றன. இந்த தீவு கூட்டங்கள் மாலை போன்ற வடிவத்தில் அமைந்துள்ளன. எனவே, அது மாலை தீவு என அழைக்கப்பட்டு பின்னர் மாலத்தீவாக பெயர் மாறியது. இத்தனை தீவுகள் இருந்தாலும் 200 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள்.

மாலத்தீவின் மொத்த மக்கள் தொகை 4 லட்சத்து 27 ஆயிரத்து 756. இதன் தலைநகரமாக மாலி உள்ளது. இது, 5.8 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 412 பேர் வசிக்கிறார்கள். உலகிலேயே மக்கள் அடர்த்தியாக வாழும் நகரங்களில் ஒன்றாகவும் மாலி நகரம் உள்ளது.

மாலி தீவில் கி.மு. 200-ம் ஆண்டிலேயே மக்கள் வசித்ததற்கான தடயங்கள் உள்ளன. கி.மு. 2000-ம் ஆண்டுக்கு முன்பில் இருந்தே இங்கு மக்கள் வசித்து இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் கேரளா, தமிழகம் பகுதியை சேர்ந்த மக்கள் பெருமளவில் இந்த தீவுக்கு சென்று குடியேறி இருக்கிறார்கள்.

பின்னர், இலங்கை, மலேசியா மற்றும் அரபு நாடுகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து குடியேறி இருக்கிறர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து அதன் மூலம் கலப்பின சந்ததியினரும் உருவாகி உள்ளனர்.

ஆரம்பத்தில் கிராவரு என்ற தமிழர்கள் அங்கு ஆட்சி செலுத்தி இருக்கிறார்கள். பின்னர் சோழர் காலத்தில் அவர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலமாக மாலத்தீவு இருந்துள்ளது. இதன் பிறகு சிங்களவர்கள் மாலத்தீவை கைப்பற்றி ஆட்சி செய்துள்ளனர். சிங்கள இளவரசன் கொயிமலா நீண்ட காலமாக ஆட்சி செய்துள்ளான். அப்போதெல்லாம் அங்கு புத்த மதம் தழைத்தோங்கி இருந்துள்ளது.

இடையில் 1153-ம் ஆண்டு அங்குள்ள மக்கள் அனைவரும் முஸ்லிம்களாக மாறி விட்டனர். அதை தொடர்ந்து சுல்தான் ஆட்சி முறை வந்தது. 1558-ல் போர்சுக்கீசியர்கள் மாலத்தீவை கைப்பற்றி கொண்டனர். 1654-ல் டச்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள்.

1887-ல் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் மாலத்தீவு வந்தது. 1965-ல் மாலத்தீவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் சுல்தான் ஆட்சி முறை வந்து 1968-ம் ஆண்டுவரை நீடித்தது.

பின்னர், மாலத்தீவு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. முதல் அதிபராக இப்ராகிம் நசீர் தேர்வு செய்யப்பட்டார். 1978-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப்துல் கயூம் அதிபராக தேர்வு செய்யப்பட்டு 30 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருந்தார்.

அதன் பிறகு முகமது நசீத், முகமது வாகித் உசேன், அப்துல்லா யாமீன் ஆகியோர் அதிபராக பதவி ஏற்றனர். தற்போது அப்துல்லா யாமீன் அதிபராக இருக்கிறார். இந்த நாட்டின் முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. மீனை பதப்படுத்தி பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி சம்பாதித்து வருகின்றனர்.

மேலும், உலகின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகவும் மாலத்தீவு திகழ்கிறது. சுற்றுலாவின் மூலம் ஏராளமான வருமானம் கிடைக்கிறது. மாலத்தீவின் அதிகாரப்பூர்வ மொழியாக திவெயி மொழி உள்ளது. இது சிங்கள மொழியை ஒட்டியே அமைந்துள்ளது.

1988-ல் இலங்கை தமிழ் போராளி குழு ஒன்று மாலத்தீவை கைப்பற்றி கொண்டது. அப்போது, இந்திய பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இந்திய ராணுவத்தை அனுப்பி சில மணி நேரங்களில் மாலத்தீவை மீட்டு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது


ராண்டி லூயிஸ் என்பவர் அமெரிக்காவை சேர்ந்த கிராபிக் டிசைனர் மற்றும் கிரியேட்டிவ் டைரக்டர் ஆவார். இவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.


இவர் போட்டோஷாப் மூலமாக அளவிலாத கற்பனை திறனையை உலகில் அள்ளித்தெளித்து வருகிறார். SurReal ArtWorks என்ற பெயரில் ராண்டி லூயிஸ் பல கிரியேட்டிவ் கிராபிக் டிசைன்கள் செய்து வருகிறார்.

இவரது பல கலைகள், அட இப்படி கூட யோசிக்கலாமோ என சிந்திக்க வைக்கிறது. இவர் தேர்வு செய்யும் பொருள்களும், அதன் வெளிப்பாடும் வேறு வகையில் இருக்கிறது.

உதாரணமாக இவர் டிசைன் செய்திருந்த வாட்டர்மெலன், ஜெல்லி ஃபிஷ் மற்றும் பட்டர்ஃப்ளை போன்றவை எல்லாம் கற்பனையின் உச்சம் என கூறலாம்.

பேருக்கு எற்றப்படியும், உருவ தோற்றத்திற்கு எற்றப்படியும் கிராபிக் டிசைனில் புகுந்து விளையாடும் வல்லுநர் தான் ராண்டி லூயிஸ். இனி! ராண்டி லூயிஸின் சிலிர்ப்பூட்டும் டிசைன்கள் சிலவன....

பிகினி!
நான் ஈயில் நடித்த ஈக்கு ஜோடி இருந்தால் எப்படி இருக்கும்? இதோ ஒருவேளை இப்படி இருக்கலாம். உடன ராஜ மௌலிக்கு கால் செய்து இந்த படத்தை காண்பிக்கலாம். இதற்கும் ஒரு ஸ்கிர்ப்ட் எழுதி நான் ஈ 2 எடுத்து கோடிகளாக மாற்ற அவருக்கு ஒரு கதை கிடைக்கும்.


எதுக்கு?
அனைத்திலும் அழகை, மெருகேற்றி காண்பித்த ராண்டி லூயிஸ் இதில் தனது விஷமத்தனத்தை காட்டியுள்ளார். தவளையை பிடிக்கும் என கூறுவோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏனெனில், பெரும்பலம் யாருக்கும் தவளை என்றால் பிடிக்காது. அதன் மேல் சருமம் மட்டும் காண நன்றாக இருந்தாலும், அதன் உடலை தொட்டு பார்க்க முடியாது.

ஆனால், பெண்களின் இதழ்களை யாராலும் தொட்டுப் பாராமல் இருக்க முடியாது. இப்படி எல்லாமா கற்பனை திறனை காண்பிக்க வேண்டும் ராண்டி?


சிக்கன் பர்கர்
பர்கர் பிரியர்கள் அனைவரும் வகை வகையான சிக்கன் பர்கர் ருசித்திருப்பார்கள். ஆனால், இப்படி ஒரு சிக்கன் பர்கரை தங்கள் வாழ்வில் கண்டிருக்க மாட்டர்கள்.

இதை ருசிக்க முடியாது ஆனால் நன்கு ரசிக்க முடியும். முடிந்த வரை ரசித்துக் கொள்ளுங்கள்..


வவ்வால்
வவ்வாலும் Bat தான், பேஸ்பால் பேட்டும் Bat தான். பெரும்பாலான ராண்டியின் இந்த பெயர் சார்ந்த கிரியேட்டிவ் கிராபிக் டிசைன்கள் அனைத்தும் அடடே! போட வைக்கின்றன. அதில் இந்த வவ்வால் டிசைனும் இணைந்துள்ளது.


ஜெல்லி
பட்டாம்பூச்சிக்கு பிறகு அதிகமாக கவர்ந்த ராண்டியின் டிஸைன் இது. ஜெல்லி ஃபிஷ் நாம் அறிந்திருப்போம், [பார்த்திருப்போம். ஏன், நம்மில் பலர் வளர்த்திருப்போம். ஆனால், இப்படி ஒரு ஜெல்லி ஃபிஷ் நாம் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டோம்.


ஆமை
தர்பூசணி, பட்டாம்பூச்சியில் பெயரை வைத்து விளையாடிய ராண்டி லூயிஸ், இந்த பர்கரில் தோற்றத்தை வைத்து விளையாடியுள்ளார்.

பார்கரின் மேல் பகுதியின், ஆமையின் ஓடு பகுதியும் ஒரே வண்ணத்தில் இருந்தால் ஒருவேளை இப்படியாக தான் இருக்கும் என நாம் ஒருபோதும் யோசித்திருக்க மாட்டோம். ஆனால், ராண்டி அதை யோசித்து டிசைன் செய்து அசத்தியுள்ளார்


ஜீனியஸ்
மிக சிலரால் மட்டும் தான் ராண்டி போல யோசிக்க முடியும் Butterflyயில் இருக்கும் Butterஐ கொண்டு இந்த கிராபிக் டிசைன் செய்துள்ளார் ராண்டி லூயிஸ். ராண்டியின் கிரியேடிவ் வர்க்கில் இது மிகவும் சிறந்ததாக திகழ்கிறது.


நீங்க வெஜ்டேரியனா?
இது வெஜ்டேரியன்களுக்கான ஆடு. சாப்பிட முடியாது என்றாலும் படமாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை உங்கள் வீட்டில் இன்று அம்மா விரதம் இருந்தால் இந்த காலிபிளவர் வாங்கிக் கொடுத்து சமைத்து தர கூறுங்கள்.


உவேக்!
நத்தையை இதற்கு முன்னர் இவ்வளவு க்ளோஸ் அப்பில் நாம் கண்டிருக்க வாய்ப்பில்லை. மேக்ரோ கேமரா லென்சில் பார்த்தால் மட்டுமே நத்தையின் இந்த தோற்றம் தென்படும். நத்தையின் உடல் சருமமும் பேஸ்ட் போல தான் இருக்குமோ?

அது கொஞ்சம் வழவழ கொழகொழன்னு தான் இருக்கும். ஆனால், இத்துடன் சேர்த்து டிசைன் செய்ய ராண்டிக்கு எப்படி தோன்றியதோ?


சாப்பிட்டு தான் பாருங்களேன்...
பார்த்தும் கேண்டி என்பது தெரிகிறதா...? கொஞ்சம் உற்றுப் பாருங்கள் இது விஷமான கேண்டி என்பதும், இதை நீங்கள் கடித்தாலோ, அல்லது அது உங்களை கடித்தலோ மரணம் என்பது நமக்கு தான் என்பது புரியும். பச்சை, மஞ்சள் பாம்பை கேண்டியில் சேர்த்துள்ளது ராண்டியின் கலை.


இனி அள்ளி கொஞ்சலாம்...
முள்ளம்பன்றியை கண்டு நாம் அஞ்சுவதற்கு ஒரே காரணம் அதன் முள் போன்ற தோற்றம் தான். அப்படி முற்கள் இல்லை எனில், மனிதர்கள் எப்போதோ அதையும் உண்ணும் பட்டியலில் சேர்த்திருப்பார்கள். நம்மில் பெரும்பாலானோர் முள்ளம்பன்றியை படத்தில் மட்டும் தான் பார்த்திருப்போம்.

இப்படி ஒரு முள்ளம்பன்றி இருந்தால் முயல், பூனை, நாயை காட்டிலும் இது தான் பெருவாரியாக செல்லப் பிராணியாக இருக்கும்.


தர்பூசணி
தர்பூசணி என்பதை ஆங்கிலத்தில் Water Melon என்று கூறுகிறோம். வாட்டர் என்பதை தர்பூசணியில் நாம் பெயராக மட்டுமே கண்டிருப்போம்.

ஆனால், ராண்டி லூயிஸ் கண்முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார். நெசம்தானே... வாட்டர் மெலன்ல இதுக்கு முன்ன இப்படி வாட்டர் பாத்திருக்கீங்களா?

ஆணுக்குப் பெண்ணுடல் மீதும் பெண்ணுக்கு ஆணுடல் மீதும் ஈர்ப்பு உண்டாவது இயற்கை. பொதுவாக ஆண்களுக்குப் பெண்களின் அந்தரங்க உறுப்புகளின் மீதும் பெண்களுக்கு ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளின் மீதும் தான் அதிக அளவில் ஈர்ப்பு இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அந்த இடங்கள் மட்டுமல்லாது, இருவரது உடலிலும் இன்னும் என்னென்ன இடங்களின் மீது ஈர்ப்பும் கவனமும் அதிகமாக இருக்கிறது என ஆண்களிடமும் பெண்களிடமும் சர்வே எடுக்கப்பட்டது. அப்போது கிடைத்த முடிவுகள் கீழே தரப்படுகின்றன.

ஆணுடலில் கவர்ச்சியான இடங்கள் என பெண்கள் கூறுபவை

  • முகம் – 2 சதவீதம்
  • கால்கள் – 1 சதவீதம்
  • மார்புக்குக் கீழ் இடுப்புப்பகுதியின் v போன்ற அமைப்பு – 9 சதவீதம்
  • ABS – 13 சதவீதம்
  • மார்பு – 24 சதவீதம்
  • தலைமுடி – 22 சதவீதம்
  • புஜங்கள் (ஆர்ம்ஸ்) – 19 சதவீதம்
  • மற்றவை – 1 சதவீதம்

பெண்ணுடலில் கவர்ச்சியான இடங்கள் என ஆண்கள் கூறுபவை
  • இடுப்புப்பகுதி – 4 சதவீதம்
  • வயிறு மற்றும் இடுப்புப்பகுதி – 4 சதவீதம்
  • கண் – 1 சதவீதம்
  • முகம் – 46 சதவீதம்
  • மார்பு – 8 சதவீதம்
  • கால் – 9 சதவீதம்
  • தலைமுடி – 11 சதவீதம்
  • பிட்டம் – 18 சதவீதம்

எல்லோருக்குமே மச்சங்கள் இருக்கும். அது எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொருத்து தான் அதற்கான அதிர்ஷ்டத்தைத் தீர்மானிக்க முடியும்.

ரேகையைப் போலவே மச்சத்தை வைத்து பலன் சொல்லுவது ஆண்களுக்கும் பெண்களுக்கு சற்று வேறுபட்டு தான் இருக்கும்.

பிறக்கும்போதே மச்சம் இருக்கும். இடையில் தோன்றுவதும் உண்டு. ஆனால் அது அரிதாகவே நிகழும். புள்ளி, சிறு கோடு, பொட்டு வடிவம், மிளகளவு என பல விதங்களில் இருக்கும். மச்சங்கள் மறையாது என்பதால் தான், நாம் அவற்றை அடையாளமாகக் குறிப்பிடுகிறோம். ஆனால் மிக மெல்லியதாய் இருக்கும் சில மச்சங்கள் மறைந்து போவதும் உண்டு.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்ச பலன்கள் சற்று வேறுபட்டிருக்கும். இதில் ஆண்களுக்கான மச்ச பலன்களை மட்டும் இப்போது காண்போம்.

இரு புருவங்களுக்கு இடையே மிச்சமிருந்தால் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள்.

நெற்றியின் வலதுபுறம் இருந்தால் தனயோகமும் மனைவியால் யோகமும் கிட்டும் உண்டாகும்.

வலது நெற்றிப்பொட்டில் இருக்கும் மச்சத்தால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

வலது கண்ணில் மச்சம் உள்ளவர்களுக்கு, நண்பர்களால் உயர்வும் புகழும் உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும்.

இடதுபுருவத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வரும். அதிகம் செலவு செய்யக்கூடிய ஆளாக இருப்பீர்கள்.

மூக்கின் மேல் மச்சமிருந்தால் சுகபோக வாழ்க்கை வாழ்வீர்கள்.

மூக்கின் வலதுபுறம் இருக்கும் மச்சம் நீங்கள் நினைத்ததை அடையும் அம்சத்தை உங்களுக்குத் தரும்.

மூக்கின் இடதுபுறம் மச்சமிருந்தால் கூடா நட்பில் கூடித் திளைப்பீர்கள். பெண்களால் அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

மூக்கின் நுனியில் மச்சம் இருப்பவர்கள் ஆணவம் கொண்டவர்களாகவும் கர்வமும் பொறாமை குணமும் உடையவர்களாக இருப்பர்.

மேல் மற்றும் கீழ் உதடுகளில் மச்சம் இருந்தால் எளிதில் காதல் வயப்பட்டுவிடுவார்கள்.

கன்னங்களில், இடது கன்னம் – ஏற்றத்தாழ்வைத் தரும்.

வலது கழுத்து மச்சம் – சொத்து சேர்க்கை , ஆடம்பர வாழ்க்கை

தொண்டடையில் மச்சம் இருந்தால் திருமணத்துக்குப் பின் யோகம்

அடிவயிற்றில் இருக்கம் மச்சம் வாழ்க்கையின் உச்சத்துக்கே கூட்டிச் செல்லும். பெண்களால் யோகம் கிட்டும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

இடது மார்பில் மச்சம் இருப்பவர்கள் பெண்களை எளிதில் கவரும் ஆணழகர்களாக இருப்பார்கள்.

வலது மார்பில் மச்சம் இருந்தால் உங்கள் அன்பால் எல்லோரையும் சொக்க வைப்பீர்கள்.

பொதுவாக உடலுறவு என்றால் இரவிலோ அல்லது இருட்டு அறையிலோ தானட நடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, அந்த நேரங்களில் மட்டும் உறவில் ஈடுபடுவதுண்டு.

ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு அதிகாலையில் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதுண்டு. ஆனால் பெண்கள் அந்த நேரங்களில் அன்றைய நாளின் வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.

ஆனால் அதிகாலையில் உடலுறவு கொள்வதால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டு அதன்பின், நீங்கள் அதை முயற்சி செய்யுங்கள்.

அதிகாலையில் உடலுறவில் ஈடுபடும்போது நம்முடைய உடலில் ஆக்சிடோசின் என்னும் வேதிப்பொருள் சுரக்கிறது. இது அன்றைய நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

மன அமைதியும் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்கவும் இந்த அதிகாலை உடலுறவு துணைபுரிகிறது.

சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் நெருங்காது.

அதிகாலை உறவில் ஈடுபடுவதால் நகங்களும் தலைமுடியும் நன்றாக வளரும். சருமம் பளிச்சிடும்.

இரவில் நன்றாகத் தூங்குவதால் பகலில் உடல் புத்துணர்ச்சியோடு இருப்பதால் உடலில் உள்ள வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படட்டு உடல் வலுவுடன் இருப்பதால் அந்த நேரத்தில் சிறப்பாக செயல்படவும் முடியும்.

உலகில் அனைவரும் அனுபவிக்கும் ஒரு விஷயம் காதல். நிறம், மதம், பணம் என எதையும் பார்த்து காதல் வருவதில்லை. அதில் காதலர்கள் செய்யும் தவறு என்னவென்றால் காதலிப்பவர்களின் குணங்களையும் பார்க்காமல் போவதுதான்.

இதனால் ஆண்களும் சரி பெண்களும் சரி இப்போதெல்லாம் அடிக்கடி பிரேக் அப் செய்கிறார்கள். என்னதான் பசங்க விழுந்து விழுந்து லவ் பண்ணாலும், சில பொண்ணுங்க கடைசியில போகிற போக்கில் பிரேக்அப் அப்படினு சொல்லிட்டு போய்க்கிட்டு இருக்காங்க. பசங்களை இந்த பரிதாப நிலைக்கு ஆளாக்கும் பெண்களை இங்கு பட்டியலிடுகிறோம். இந்த குணங்கள் இருக்கும் பெண்களை தயவு செஞ்சி டேட்டிங் பண்ணிறாதீங்க. அப்படி பண்ணுன அப்புறம் ரொம்ப கஷ்டபடுவீங்க!

இவங்களுக்கு நீங்க எப்பயும் ஏதாவது கிப்ட் கொடுத்துக்கிட்டே இருக்கணும். உங்க பாக்கெட்ல காசு இருக்குற வரைக்கும் தான் நீங்க அவங்களுக்கு கிங், காசு காலியாச்சு அப்புறம் உங்களுக்கு சங்குதான்!

சில பொண்ணுங்க பார்க்க சினிமா ஹீரோயின் மாதிரி இருப்பாங்க, ஆனா மண்டையில களிமண்ண தவிர வேறு எதுவும் இருக்காது. என்னதான் லவ்வர் அழகா இருந்தாலும் அறிவுனு கொஞ்சம் இருக்கணும்ல?

இவங்கள் பத்தி சொல்ல தேவையில்லை போனும் கையுமா சுத்துவாங்க, இவங்ககூட சேர்ந்து போட்டோ வேணா எடுத்துக்கோங்க, டேட்டிங் போகணும் நினைச்சீங்க, அப்புறம் உங்க போன் மெமரி புல்லா அவங்க போட்டோ மட்டும் தான் இருக்கும். நைட்டு தூங்கும்போது செல்பி எடுக்குறது கனவுல வரும் பாத்துக்கோங்க!

செல்பி எடுக்கிறவங்கள கூட சமாளிச்சிடலாம். ஆனா இந்த ஒத்த செல்பி எடுக்க ஒன்றரை மணிநேரம் மேக்கப் போடுறவங்கள மட்டும் டேட்டிங் பண்ணீங்க அப்புறம் லைஃப் புல்லா நீங்க மேக்கப் மேனா மட்டும் தான் இருப்பீங்க!

நாய்க்குட்டி செத்ததுக்கு எல்லாம் ஓவர் ரியாக்ஷன் வரும். கண்டதுக்கெல்லாம் கண்ணீர் வடிப்பாங்க! அவுங்க எமோஷனலானவங்களா இல்ல லூசானு கண்டுபிடிக்கிறதுக்குள்ள நீங்க லூசாகிடுவீங்க!

பசங்கள எப்படி பிளேபாய்ஸ் இருக்காங்களோ, அதே மாதிரிதான் இந்த பிளேகேர்ள்ஸ், இருக்குற எல்லா பிட்சுலயும் மேட்ச் விளையாடும் ஆல்ரவுண்டர்தான் இவுங்க. கொஞ்சம் உஷார் பாய்ஸ்!

பொதுவாகவே சில பொண்ணுங்களுக்கு அடுத்தவங்கள பத்தி பேசுறது ரொம்ப பிடிக்கும். ஆனா, இவங்க ஒரு படி மேல, இருக்குற எல்லா பிரச்சனையைப் பத்தியும் உங்கக் கிட்ட வந்து கொட்டிக்கிட்டு இருப்பாங்க. கொஞ்ச நேரத்துல நீங்களே எப்படா வாய மூடுவானு யோசிக்க ஆரம்பிச்சிடுவீங்க.

இவங்க கிட்ட மாட்டுனீங்க நீங்க கடைசி வரைக்கும் அவுங்களுக்கு அடிமையாத்தான் இருக்கணும். எல்லாமே அவுங்க டிசிசன் படிதான் நடந்தாகணும். கொஞ்சம் மாத்தி எதனா பண்ணீங்க, அப்புறம் உங்க உசுருக்கு நாங்க பொறுப்பில்ல...

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.