Articles by "world"

Showing posts with label world. Show all posts

திபெத், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு வழங்கப்படுவது போலவே எல்லாச் சலுகைகளும் ஈழ உறவுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

மண்டபம் முகாமிலுள்ள ஈழத்தமிழ் சொந்தங்கள் தாக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீமான் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,

இராமேஸ்வரம், மண்டபம் முகாமில் வாழும் ஈழ உறவுகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மனவேதனையையும், அளவிட முடியா பெருங்கோபத்தையும் தருகிறது.

போரில் உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, தாய்நிலத்தைப் பிரிந்து நிராதரவற்றவர்களாய் தமிழகத்திற்கு வந்திருக்கும் ஈழ உறவுகள் மீதான தாக்குதலை மனசாட்சியுள்ள எவராலும் ஏற்க முடியாது.

வந்தாரையெல்லாம் வாழ வைக்கும் நிலத்தில் சொந்த இனத்தவர் அடித்து உதைத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது சகித்துக்கொள்ள முடியாத பெருங்கொடுமை. அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களும், எளிய மக்கள் மீதான கோரத்தாக்குதல்களும் வன்மையானக் கண்டனத்திற்குரியவையாகும்.

நீதியின்பால் பற்றுகொண்டு, சனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு மானுடநேயத்தைப் பின்பற்றிக் கடைபிடிக்கும் எவராலும் இதனை அனுமதிக்க முடியாது.

கடந்த 7ஆம் தேதி அங்கு நடைபெற்ற சகாயமாத கோயில் திருவிழாவின்போது நிறைந்த மதுபோதையில் பெண்களிடம் அத்துமீற முயன்ற காவல்துறையினரின் போக்கை முகாம் வாழ் இளைஞர்கள் கண்டித்ததையொட்டி இவ்வகைத் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு, அவர்கள் மீது வழக்குகள் புனையப்பட்டிருக்கிறது.

காவல்துறையினரின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலைக் கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆளும் வர்க்கம் கண்டும் காணாதிருப்பது காவல்துறையினருக்கு அவர்கள் அளிக்கும் மறைமுக ஆதரவினை தெரிவிப்பதாகவே உள்ளது.

தமிழகத்திற்குத் தஞ்சம் தேடிவரும் ஈழத்தமிழ் சொந்தங்கள் இங்குச் சந்திக்கும் துன்பத்துயரங்கள் எண்ணிலடங்காதவை. ஈழத் தமிழில் பேசினாலே பயங்கரவாதி என்று முத்திரை குத்துவது, அவர்களை எத்தகைய பணிகளிலும் ஈடுபடவிடாமல் தொந்தரவு செய்வது, எப்பொழுதும் கண்காணிப்பிலேயே வைத்திருப்பது, நாள் முழுக்க உழைத்து அவர்கள் பெறும் ஊதியத்தை அபகரித்துக் கொள்வது, அவர்களது உடைமைகளைச் சேதப்படுத்துவது.

ஆபாச வார்த்தைகளால் வசைபாடுவது, பெண்களிடமும், குழந்தைகளிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தல்களைத் தருவது, காரணமில்லாமல் அகதி முகாமுக்குள் அடைத்து சித்திரவதை செய்வது, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்துதராது இழுத்தடிப்பது, பொய்யாக வழக்குகளைப் புனைந்து சிறையிலடைப்பது என அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் சொல்லி மாளாதவையாகும்.

கடந்தாண்டு மதுரை உச்சம்பட்டி முகாமில் இரவீந்திரன் எனும் இளைஞர் உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்டது ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக விளைந்தவையே!

இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் முதலான நாட்டினைச் சேர்ந்த அகதிகளுக்கெல்லாம் குடியுரிமை வழங்கும் இந்திய அரசானது, 20 ஆண்டுகளுக்கு மேலாக இம்மண்ணில் வாழும் ஈழ உறவுகளுக்கு அடிப்படை உரிமைகளையும், அடிப்படை வசதிகளையுமே தர மறுத்து மூன்றாம் தர மக்களை நடத்தி வரும் போக்கினை மாற்றிக்கொண்டு திபெத், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்

அகதிகளுக்கு வழங்கப்படுவது போலவே எல்லாச் சலுகைகளும் ஈழ உறவுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

இத்தோடு, ஈழ உறவுகள் தாங்கள் கல்வி கற்பதற்கும், விரும்பிய பணிகளைச் செய்வதற்கும் எவ்வித இடையூறு இல்லாமையை உறுதிசெய்ய வேண்டும் எனவும், சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமை மூடி

அவர்களின் மறுவாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

மேலும், மண்டபம் ஈழ முகாமிலுள்ள இளைஞர்கள் மீது தாக்குதல் தொடுத்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன். இதனைச் செய்ய மறுத்து, ஈழ உறவுகளை ‘அகதிகள்’, ‘அந்நியர்கள்’ என்றெண்ணி படுபாதகச்செயல்களை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தொடர்ந்து மேற்கொள்வார்களேயானால் மிகப்பெரிய எதிர்விளைவுகளை ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் பரபரப்பாக நடந்துமுடிந்திருக்கிறது. பிரான்ஸின் மிகவும் இளைய வயதில் அதிபராக இருக்கிறார் இமானுவேல் மக்ரான்.அவருக்கு வயது 39! அவரின் பொதுவாழ்வு மட்டுமல்ல, அவரின் தனிப்பட்ட வாழ்வும் சுவாரஸ்யங்கள் கொண்ட திருப்பங்கள் கொண்டன. அதற்கு காரணம் அவரின் மனைவி பிரிஜ்ஜெட் மக்ரான்!

பிரான்ஸ் நாட்டின் முதல் பெண்மணியாகவிருக்கும் பிரிஜ்ஜெட் ட்ரானெக்ஸ், அப்போது பள்ளி ஒன்றில் நாடக ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரின் கணவர் ஒரு வங்கி ஊழியர். அழகானமூன்று குழந்தைகளும் இருந்தன.அதே பள்ளியில் பிரிஜ்ஜெட்டின் மகள் ஆசிர்ரே(Auziere) படித்துக்கொண்டிருந்தாள்.

ஆசிர்ரே வகுப்பில் படித்த மற்றொரு மாணவர்தான் தற்போது பிரான்ஸ் அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரான். 15 வயதே நிரம்பிய மக்ரானுக்கு, பிரிஜ்ஜெட்டைக் கண்டதும் காதல் வயப்பட்டார்.

மக்ரானின் நடவடிக்கைகளில் தெரிந்த மாற்றங்களால் பெற்றோருக்கு தன் மகன் காதல் வயப்பட்டிருக்கிறான் எனப் புரிந்துகொண்டனர். ஆனாலும் அவன் யாரைக் காதலிக்கிறான் என்பது தெரியவில்லை.ஒருவேளை, பிரிஜ்ஜெட்டின் மகள் ஆசிர்ரே மீது காதல் இருக்கலாம் என்று யூகித்தனர். ஆனால், அதற்கு பிறகுதான், அவன் தன் ஆசிரியரான பிரிஜ்ஜெட்டைக் காதலிக்கிறான் என்பது தெரிந்து. கடும் அதிர்ச்சி அடைத்தனர்.தன் மகன் 18 வயது நிரம்பும் வரை, அவனை விட்டு விலகியிருக்குமாறு, பிரிஜ்ஜெட்டிடம் கேட்டனர்.

மக்ரானின் பெற்றோர். ஆனால், அதற்கு பிரிஜ்ஜெட், “என்னால் அதை உறுதியாக கூற முடியாது” என்றார்.பள்ளிக் காலத்தில், பிரிஜ்ஜெட் எழுதிய நாடகங்களின் நடித்துவந்திருக்கிறார் மக்ரான். அதன்பிறகு, இருவரும் சேர்ந்து நாடகங்கள் எழுதி நடித்தனர். மக்ரானைப் பற்றி பிரிஜ்ஜெட் பேட்டி ஒன்றில் கூறுகையில், "15 வயதுள்ள மக்ரான், வயதுக்கு மிஞ்சிய புத்திசாலித்தனத்துடன் நடந்துகொண்டான்.ஓர் இளைஞரைப் போல நடந்துக்கொள்வதைவிட, முதிர்ச்சியான மனிதனாகவே மக்ரான் நடந்துகொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக அவனின் அறிவுதிறன் என்னை ஆட்கொண்டது” என்கிறார்.

பிரிஜ்ஜெட் தனது முதல் கணவரை கடந்த 2006ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.ஒரு கட்டத்தில், ஏதோ காரணத்தால் மக்ரானைவிட்டு விலகியிருக்கிறார் பிரிஜ்ஜெட். ஆனால், “என்னை விட்டு நீ எங்கும் விலகிசெல்ல முடியாது. நான் உன்னை மீண்டும் சந்திப்பேன். அப்போது நிச்சயம் நாம் திருமணம் செய்துகொள்வோம்" என்று கூறியிருக்கிறார் மக்ரான்.அப்போது மக்ரானுக்கு வயது 17! சரியாக பத்து ஆண்டுகள் கழித்து, கடந்த 2007-ம் ஆண்டு, பிரிஜ்ஜெட்டைக் கரம்பிடித்திருக்கிறார் மக்ரான். இருவருக்கும் கிட்டதட்ட 25 வயது வித்தியாசம்!

இவர்களின் திருமணத்தின்போதே மக்ரான் ஒரு விஷயத்தைக் கூறியிருக்கிறார். ”எங்களின் திருமணம் சாதாரணமானதல்ல என்றோ, அசாதாரணமானது என்றோ குறிப்பிடப்படுவதை நான் விரும்பவில்லை.இதுபோன்ற ஒரு தம்பதியர் வாழ்கிறார்கள் என்பதை மட்டுமே கேட்க விரும்புகிறேன்” என்று கூறினார். இப்போது மக்ரானின் தாய், 'பிரிஜ்ஜெட்டை மருமகளாக பார்ப்பதைவிட ஒரு தோழியாக பார்க்கிறேன்' என்று நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

ஆனால், பிரான்ஸ் ஊடகங்கள் இவர்களின் திருமணம் குறித்துசர்ச்சை எழுப்பாமல் இல்லை. அதற்கு பிரிஜ்ஜெட், “அமெரிக்கஅதிபர் டோனால்ட் டிரம்பிற்கு70 வயது; அவரது மனைவிக்கு மெலானியா டிரம்பிற்கு வயது 46.இவர்களின் திருமண உறவைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லையே. எங்களுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி மட்டும் ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள்?”, என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.கடந்த மாதம், மக்ரானும், ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நான் அதிபராக தேர்வுசெய்யப்பட்டால், இல்லை.. இல்லை... நாங்கள் அதிபர்தேர்தலில் தேர்வுசெய்யப்பட்டால், பிரிஜ்ஜெட்டிற்கு தனித்துவமான கடமைகளும் பொறுப்புகளும் வழங்கப்படும்”என்று கூறினார்.

எந்தச் சூழலில் பிரிஜ்ஜெட்டைபிரித்துப்பார்க்காத மக்ரானுக்கு உள்ள அன்பின் சாட்சியே இந்த வரிகள்!

கள்ளக்காதல் விவகாரத்தில் கோவையை சேர்ந்த ஒரு பெண் ஆசிரியை, சென்னை அண்ணாநகரில் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்தவர் நிவேதா(47). இவர் அங்கு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று தன்னுடைய மகளுடன் வசித்து வந்தார். தற்போது அவரின் மகள் சென்னை மகேந்திரா சிட்டியில் பணிபுரிந்து வருகிறார்.

அந்நிலையில், கோவையில் தீயணைப்பு துறையில் பணிபுரியும் இளையராஜா(29) என்பவருக்கும் நிவேதாவிற்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இளையராஜா ஏற்கனவே திருமணமானவர். இந்நிலையில், நிவேதாவிற்கு பேஸ்புக் மூலம், சென்னை கொளத்தூரை சேர்ந்த கணபதி என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதில் கணபதியும் திருமணமானவர். ஒரு கட்டத்தில் கணபதியுடன் ஏற்பட்ட நட்பால், நிவேதா, இளையராஜவை மறக்கும் அளவுக்குசென்றுள்ளார். இது இளையராஜாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவருடனான் நட்பை கை விடுமாறு நிவேதாவை எச்சரித்தார். ஆனால், நிவேதா, கணபதியுடன் தொடர்ந்து பேஸ்புக்கில் உரையாடி வந்தார். எனவே, இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என முடிவெடுத்த இளையராஜா, நேற்று முன்தினம் நிவேதாவைக்கூட்டிக் கொண்டு காரில் சென்னை வந்தார்.

அண்ணாநகரில் இருந்து கணபதியை அழைத்தார். அவர் அங்கு வந்த பின் மூவரும் அங்கு சில நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அதன்பின், நிவேதாவுடனான நட்பை முறித்துக்கொள்வதாக கணபதி கூறினார். இருந்தாலும், நிவேதாவுடன் சில நிமிடங்கள் தனியாக பேசி விட்டு வருகிறேன் எனக் கூறி, நிவேதாவை அழைத்து சென்றார். அதன்பின் நிவேதாவை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

அதைக் கண்ட இளையராஜவிற்கு கோபம் தலைக்கேறியது. எனவே, தனது காரை எடுத்து அவர்களின் பின்னால் சென்று வேகமாக மோட்டார் சைக்கிளில் இடித்துள்ளார். இதில் கணபதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் நிவேதா பலத்த காயமைடந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். லேசான காயத்துடன் தப்பினார் கணபதி.

அங்கிருந்து இளையராஜா தப்பி சென்றுவிட்டார். அதன்பின் போலீசார் அவரை தேடிக் கண்டுபிடித்து, இன்று அதிகாலை கைது செய்தனர். இது தொடர்பாக நிவேதா, இளையராஜா, கணபதி ஆகியோரின் குடும்பத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இளையராஜா மற்றும் கணபதியிடம் போலீசார் விசாரணைநடத்தி வருகிறார்கள்.

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் தலான் நகரின் கோகன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண். இவர் தனது கணவருடன் ஜெய்ப்பூர் சென்று விட்டு சொந்த ஊருக்கு ரெயிலில் திரும்பிக் கொண்டு இருந்தார். அவுரையா என்ற இடத்தில் ரெயில் நள்ளிரவில் நின்றது. அங்கிருந்து பஸ் மூலம் கணவன்- மனைவி சொந்த ஊர் செல்ல வேண்டும்.

பஸ்சுக்கு காத்திருந்த போது லோடு வேனில் வந்த டிரைவர் அவர்களை சொந்த ஊரில் இறக்கி விடுவதாக ‘லிப்ட்’ கொடுத்தார். இதை நம்பி தம்பதி அந்த வேனில் ஏறிக் கொண்டனர்.

வழியில் நெடுஞ்சாலையில் சாராயக்கடை அருகே வந்தபோது மேலும் சிலர் அந்த வேனில் ஏறிக் கொண்டனர்.சில அடி தூரம் சென்றதும் வேனை டிரைவர் திடீர் என்றுஒதுக்குப்புறமாக நிறுத்தினார்.
அங்கு பெண்ணை டிரைவரும் வேனில் வந்த 7 பேரும் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதற்கு பெண்ணின் கணவர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் போராடினார்.உடனே அந்த 8 பேர் கும்பல் கணவரை கயிற்றால் கட்டிப்போட்டு விட்டு மனைவியை கற்பழித்தனர்.

அதன்பிறகு கணவன்- மனைவியிடம் இருந்த நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர். இருவரையும் வழியில் நடுரோட்டில் இறக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

பின்னர் இருவரும் தட்டுத் தடுமாறிச் சென்று அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் நடந்த விவரங்களை கூறி புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கற்பழிப்பு குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

புகைப்படத்தை அப்பெண்ணின் காதலன் சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருப்பது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டஸ்டன் எனும் வாலிபர் இரவு வீடு திரும்பும் போது தனது காதலி வேறு ஒரு இளைஞருடன் படுத்திருப்பதை கண்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடையாத அவர் இருவரையும் புகைப்படம் எடுத்து, அவர்களுடன் செல்பியும் எடுத்துள்ளார். எடுத்த புகைப்படங்களை பேஸ் புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

வேறு ஒரு ஆணுடன் வீட்டிற்கு வந்து படுக்கையில் உறங்கி கொண்டிருந்த போது உன் காதலனுடன் என்று போட்டோவுக்கு ஸ்டேட்டஸ் தட்டியிருந்தார். மேலும் நல்ல ஆண்களுக்கு நல்ல பெண்கள் கிடைப்பார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

சென்னை: சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள பிரம்மபுத்ரா மாணவர் விடுதியின் பின்புறம் உள்ள முட்புதரில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பெண்ணின் உடலைக்கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பாதுகாப்பு நிறைந்த ஐ.ஐ.டி. வளாகத்தில் இந்த மர்ம மரணம் நிகழ்ந்திருப்பது மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அந்த பெண் யார் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை.

காவல்துறையினர் 24 மணிநேரமும் ரோந்து சென்று வரும் பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

வகங்கை மாவட்டம் தாயமங்கலத்தைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 30), சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் அடிக்கடி திருவாடானை சந்தைக்கு சரக்குகளை ஏற்றி வருவது வழக்கம். இங்கு வரும்போது திருவாடானை அருகே உள்ள சப்பாணியேந்தலை சேர்ந்த 17 வயது சிறுமி ஒரு வருடன் பழக்கம் ஏற்பட்டது. 

இதனை பயன்படுத்தி சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி மோகனசுந்தரம் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதுபற்றி தெரியவந்ததும் மோகனசுந்தரத்திடம் திருமணம் செய்யும்படி சிறுமியின் உறவினர்கள் வற்புறுத்தினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அவர் திடீரென தலைமறைவாகி விட்டார். 

அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை. எனவே திருவாடானை அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தந்தை புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி மோகனசுந்தரத்தை கைது செய்தார்.

சமூக வலைதளமான பேஸ்புக்கில் லைவ் வீடியோ ஒளிபரப்பு செய்யும் வசதி வந்ததில் இருந்து பல்வேறு அதிர்ச்சி வன்முறை சம்பவங்கள் அதன்வாயிலாக வெளியிடப்பட்டு வருகிறது. கொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் தற்கொலை போன்ற சம்பவங்கள் லைவாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது, இவ்விவகாரத்தில் பேஸ்புக் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. 

இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுவிடனில் பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ லைவாக வெளியிடப்பட்டது, இது தொடர்பாக விசாரணை செய்த அந்நாட்டு நீதிமன்றம் நேற்று குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதித்தது. 

இந்நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோவானது வெளியாகி உள்ளது தாய்லாந்து நாட்டில் இருந்து. தாய்லாந்து நாட்டை சேர்ந்த இளம் தந்தை தன்னுடைய 11 வயது மகளை தூக்கிட்டு கொலை செய்து உள்ளான், அதனை வீடியோவாக பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ளான். தாய்லாந்து நாட்டை சேர்ந்த 21 வயது இளைஞர் வுட்டிசன் வோங்டாலே இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளான். 

வுட்டிசன் வோங்டாலேவிற்கும், திரிராத்னா என்ற பெண்ணிற்கும் திருமணம் ஆகிய பெண் குழந்தை பிறந்து உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் திரிராத்னாவின் முன்னாள் கணவனுக்கு பிறந்த குழந்தையை வுட்டிசன் தொடர்ந்து தாக்கி உள்ளார், இதனால் கோபம் அடைந்த திரிராத்னா வீட்டைவிட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து மனைவிய பிரிந்து வுட்டிசன் வாழ்ந்து வந்து உள்ளார். 

மகளை வளர்ப்பதாக கூறி தன்னுடன் வைத்து உள்ளார். திரிராத்னா திரும்ப வராத காணத்தினால் அமைதியை இழந்து உள்ளார். மனைவி பிரிந்து சென்றதிலிருந்து வுட்டிசன் கடும் மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் உள்ள தாய்லாந்தின் முக்கிய சுற்றுலாத்தளமான புக்கெட் தீவிற்கு தனது மகளுடன் சென்ற வுட்டிசன் சென்று ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று 11 மாத பச்சிளம் குழந்தை என்று கூட பார்க்காமல், தனது மகளை தூக்கிட்டு கொன்று உள்ளான். இதுமட்டுமல்லாமல் இந்த கொடூர செயலை இரு வீடியோவாக பேஸ்புக் லைவ் மூலமாக ஒளிபரப்பு செய்து உள்ளான். 

இந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த வுட்டிசனின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். சுமார் 24 மணி நேரங்கள் வீடியோவானது பேஸ்புக்கில் ஒளிபரப்பு ஆகி கொண்டே இருந்து உள்ளது. போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்த போது வுட்டிசனும் தற்கொலை செய்துக் கொண்டான் என்பது தெரியவந்து உள்ளது. வுட்டிசன் ஒளிபரப்பு செய்த கொலை காட்சிகளை, 24 மணி நேரத்திற்கு பிறகு அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்த பின்னரே பேஸ்புக் பகுதியில் இருந்து நீக்கப்பட்டது. அதற்குள் இந்த வீடியோ காட்சிகளை சுமார் 3 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 

கொடூரமான சம்பவம் தொடர்பாக தகவல்கள் பரவியும் நடவடிக்கை எடுக்காத பேஸ்புக் நிறுவனத்திற்கு பலரது தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் காதல் பிரச்சனையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தன்னுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வைத்து காதலன் மிரட்டியதால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மேற்படிப்பிற்காக டெல்லி சென்றுள்ளார்.

அங்கு அவர் பிரகாஷ் என்பவரை காதலித்துள்ளார். மூன்று வருடங்களாக கதலித்து வந்த விவகாரம் அந்த பெண்ணின் வீட்டிற்கு தெரிந்ததால் பிரச்சனையாகியுள்ளது. இதனையடுத்து பெண்ணின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வருமாறு பிரகாஷ் அழைத்துள்ளார்.

ஆனால் வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தலால் அந்த பெண் பிரகாஷின் கோரிக்கைக்கு உடன்படவில்லை. இதனையடுத்து தன்னுடன் வரவில்லை என்றால் இருவரும் படுக்கையறையில் இருக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாக பிரகாஷ் அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி அந்த பெண் பிரகாஷ் மீது பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

ஆனால் காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து அந்த பெண் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் ஆரம்பித்த ஈராக்கின் மசூல் நகர முற்றுகையானது ISIS அமைப்பை மிகவும் பலவீனமாக்கி நகரின் மேற்குப் பகுதியில் ஒதுங்க வைத்துள்ளது.

மசூல் நகரின் மேற்குப் பகுதியை மீட்கும் நடவடிக்கை பல மாதங்களாக இடம்பெறலாம் என்ற நிலையிலிருந்த போது, சிரியாவின் இரசாயனத் தாக்குதலும், அதற்கான அமெரிக்காவின் பதிலடித் தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.

இதனால் களநிலைமைகளில் மாற்றமேற்பட வாய்ப்புண்டு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை ISIS அமைப்பிற்கு எதிராக போராடி வந்த அமெரிக்கத் தரப்பு,

சிரியா, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தம்மிடையேயான போட்டி பொறாமைகளின் காரணமாக, ISIS அமைப்பிற்கு எதிரான போரில் பாதிப்புக்களை ஏற்படுத்தினாலும், சிரியா மீதான அமெரிக்காவின் நேரடித் தாக்குதல் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியது என நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் சுரேஸ் தர்மா கூறியுள்ளார்.

தற்கால குழந்தைகள் உடல் மற்றும் அறிவு ரீதியாக 12 வயதிலேயே பக்குவமடைந்து விடுவதால், குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமல்ல என புதிய சட்டமொன்றை மலேசியா அரசு இயற்றியுள்ளது.

12 வயதிலேயே பக்குவம் அடைந்து விடுவதால் குழந்தை திருமணம் குற்றமல்ல: மலேசியா அரசு புதிய சட்டம் கோலாலம்பூர்: மலேசியா பாராளுமன்றத்தில் குழந்தைத்திருமணம் குற்றமல்ல என புதிய சட்டம் இன்று இயற்றப்பட்டது.இதுகுறித்த விவாதம் மலேசியா பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. விவாதத்தின்போது மலேசிய எம்.பி ஒருவர் கூறுகையில் “ தற்போதைய காலத்தில் சிறுமிகள் 9 அல்லது 12 வயதிலேயே பருவமடைந்து விடுகின்றனர். இந்த காலகட்டத்தில் உடல் மற்றும் மனோரீதியாக அவர்கள் திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.

இந்த காலகட்டத்தில் அவர்கள் 18 வயது பெண் போலவே காட்சியளிக்கின்றனர். இதனால் திருமணத்திற்கு வயது ஒரு தடையாக இல்லை. குடிமையியல் மற்றும் முஸ்லீம் சட்டங்களின்படி ஆண், பெண் இருவரும் 18 வயதுக்குக் குறைவாகவே திருமணம் செய்து கொள்கின்றனர்.

குடிமையியல் சட்டத்தின்படி திருமண வயது 18 ஆக இருந்தாலும், மாநில முதல்வர்களின் அனுமதி பெற்று 16 வயதிலேயே திருமணம் செய்து கொள்கின்றனர்” என்றார். இந்த புதிய சட்டத்திற்கு பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

மகள் காதலித்ததால் ஆத்திரமடைந்த தந்தை மகளுடன் சேர்த்து அவளது காதலனையும் கோடாரியால் வெட்டிக்கொலை செய்தார். இந்த சம்பவம் உ.பி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

காதலித்ததால் ஆத்திரம்: மகள்-காதலன் இருவரையும் கோடாரியால் வெட்டிக்கொன்ற தந்தை லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டம் பாம்காரி குர்மின் கிராமத்தை சேர்ந்தவர் மூல்சந்த். இவரின் மகள் கீதாவும்(வயது 19), அதே பகுதியை சேர்ந்த சுனில் அகர்வாரும் (வயது 19) ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலித்து வந்தனர். 3 ஆண்டுகளாக நீண்ட இவர்களது காதல் கீதாவின் தந்தை மூல்சந்துக்கு தெரியவந்தது. அவர் தன் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று கீதாவை சந்திப்பதற்காக சுனில் சென்றுள்ளார். அப்போது, கீதாவின் தந்தை மூல்சந்த் கோடாரியால் சுனிலைத் தாக்கியிருக்கிறார். சுனிலைக் காப்பாற்ற முயன்ற கீதாவையும் மூல்சந்த் கோடாரியால் தாக்க, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக சுனிலின் தாத்தா போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய, புகாரைத் தொடர்ந்து மூல்சந்தை போலீசார் கைது செய்துள்ளனர். 

கீதா-சுனில் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொட்டி வாக்கத்தை சேர்ந்த ஜெனிபர் புஷ்பா மற்றும் செம்மஞ்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த ஜான்மேத்தீசும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜெனிபர் காதலை முறித்துக் கொள்வோம் என்று கூறினார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெனிபரின் பிறந்தநாள் வந்தது. அப்போது கடைசியாக மாமல்லபுரத்தில் இருவரும் சந்தித்து விட்டு பின்னர் பிரிந்து விடுவோம் என்று ஜான்மேத்தீஷ் கூறினார்.

அப்போது உனக்கு நான் பரிசு ஒன்று கொடுக்கிறேன் என்றும் கூறியுள்ளார். காதலனை ஜெனிபர் மாமல்லபுரத்திற்கு சென்றார். இருவரும் புலிக்குகை அருகே பேசி கொண்டிருந்தனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி ஜெனிபரை வற்புறுத்தினார்.

ஆனால் ஜெனிபர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து பரிசு பொருளையாவது வாங்கி கொள் என்று கூறி அட்டை சுத்தியல் ஒன்றை எடுத்த ஜெனிபர் தலையில் ஓங்கி அடித்தார். இதனை சற்றும் எதிர்பாராத ஜெனிபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் காதலியின் துப்பட்டாவை எடுத்து சவுக்கு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ஜான்மேத்தீஷ். மாமல்லபுரம் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலியல் தொல்லை கொடுத்ததால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 2-வது செக்டர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு மகேஸ்வரி தம்பதி. இவர்களது மகள் மணிமாலா(வயது 15). 10ம் வகுப்பு தேர்வு எழுதிவரும் இவர் நேற்று முந்தினம்  திடீரென மண்ணெண்னை ஊற்றி தீ  வைத்துக்கொண்டார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டும்  கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி மணிமாலா உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸார் மாணவி வீட்டில் விசாரணை நடத்தினர். அப்போது மணிமாலா எழுதிவைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தனது மரணத்திற்கு சரவணன்தான் காரணம் என்று எழுதிவைத்திருந்தார். மாணவி குறிப்பிட்டிருந்த சரவணன் என்பவர் பழனிவேலுவின் தங்கை கணவர். விருகம்பாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் விசாரணையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மணிமாலாவை சந்திக்க வந்த சரவணன் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்தார். மேலும் அதனை செல்போனில் படம் பிடித்தார். இதைத்தொடர்ந்து செல்போனில் படம்பிடித்த காட்சிகளை காட்டி, வெளியே சொன்னால் புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்றும் மாணவியை மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் மணிமாலாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மணிமாலாவை பரிசோதித்த மருத்துவர், மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார். தனது தங்கையின் கணவரை எப்படி புகார் கொடுப்பது என்ற வேதனையில் பழனிவேல் இருந்துள்ளார். இந்த சூழ் நிலையில் மாணவி திடீரென தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சரவணனை போலீஸார் கைது செய்தனர்.

கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் பள்ளியில் சோதனை செய்ய வேண்டுமென 70 மாணவிகளின் உடையை களைத்த வாடனின் மேல் பெற்றோர் மற்றும் மாணவிகள் கோபத்தில் உள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளியின் கழிவறையில் இரத்த கறை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அது எவ்வாறு வந்தது என கண்டுபிடிக்க மாணவிகள் ஆடையை களையுமாறு வற்புறுத்தி உள்ளார். அவ்வாறு செய்யாவிடில் அடித்து துன்புறுத்த படுவீர் என மிரட்டி உள்ளார். இதனால் வேறு வழியின்றி மாணவிகள் அவ்வாறு செய்துள்ளனர். இச்சம்பவம் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. பள்ளி வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆனால், இவை அனைத்தையும் அந்த வார்டன் மறுத்துள்ளார். படிப்பு விஷயத்தில் நான் கண்டிப்பாக இருப்பேன். எனவே மாணவிகளுக்கு என்னை பிடிக்காது. என்னை பிடிக்காத சிலரின் தூண்டுதலின் பெயரில் இவ்வாறு செய்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

இளம் வயதில் ஏற்பட்ட காதல் காரணமாக 20 வயதில் தாய்மையடைந்த பெண்ணொருவரை, 16 வருடங்களாக இருட்டறையில் நிர்வாணமாக சிறைப்படுத்திய கொடிய சம்பவமொன்று பிரேசிலில் பதிவாகியுள்ளது.

பிரேசிலின் புறநகர் பகுதியான உருபிரேடமா எனும் பகுதியில், ஒதுக்கு புறமாக இருந்த வீடொன்றில் 36 வயதான பெண்ணொருவர் சுமார் 16 வருடங்களாக சிறைப்படுத்தப்பட்டு, கொடூரமான முறையில் வஞ்சிக்கப்பட்டுள்ள குற்றத்திற்காக குறித்த பெண்ணின் சகோதரருக்கு 8 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் மரியா லூசியா எனும் பெண்ணின் சகோதரர் மற்றும் தந்தை என்போர் இணைந்து,

குறித்த பெண் 20 வயதில் ஏற்பட்ட காதல் காரணமாக தாய்மை அடைந்தமையினால், அவரை தண்டிப்பதற்காக, 3x3 மீற்றர் அளவான அறையில், மின்சார வசதி, மலசலக்கூட வசதிகள் இல்லாமல், கயிற்று கட்டிலொன்றுடன் சுமார் 16 வருடங்களாக அடைத்து வைத்து, விலங்குகளுக்கு போல் இரண்டுவேளை உணவு மாத்திரம் கொடுத்துள்ளனர். மரியா லூசியாவிற்கு பிறந்த ஆண் குழந்தையை வேறொருவருக்கு தத்து கொடுத்துள்ளதோடு, குறித்த பெண் வெளியில் வருவதற்காக சத்தமிட்டுள்ள நிலையில் அவரது ஆடைகளையும் பறித்து சுமார் 16 வருடங்கள் அவரை நிர்வாணமாகவே வைத்துள்ளனர். இந்நிலையில் மரியா லூசியா தொடர்பான தகவல் அயலவர்கள் மூலம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெறவே,

குறித்த பெண்ணை மீட்டுள்ளதுடன், அவரின் நிலைமைக்கு காரணமான சகோதரருக்கு 8 வருட சிறை தண்டனை விதித்துள்ளதோடு, அவரின் தந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரை கைது செய்ய முடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு மரியா லூசியாவின் 15 வயதான மகன் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் ஆரெகான் மாநிலத்தில் சீக்கிய கோயிலுக்குள் குடி போதையில் பெண்ணை கற்பழிக்க முயன்று தாக்குதல் நடத்தியவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்கா: சீக்கிய கோயிலுக்குள் பெண் மீது தாக்குதல், கற்பழிப்பு முயற்சி- போதை ஆசாமி கைது நியூயார்க்: அமெரிக்காவில் ஆரெகான் மாநிலத்தின் கிரேஷாம் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற சீக்கிய குருத்வாரா ஆலயம் ஒன்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த குருத்வாரா வழியாக வந்த ஒருவர் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்திகொள்ள நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டார்.

அவர்களும் அதற்கு சம்மதித்தனர். குடி போதையில் இருந்த டிமோத்தி வால்ட்டர் ஸ்மித் என்னும் அந்நபர், நேராக கழிப்பறைக்கு சென்றுவிட்டு தள்ளாடியபடி வெளியே வந்தார். அப்போது, அங்கு இருந்த 26 வயது இளம்பெண்ணை பெண்ணை பலவந்தப்படுத்தியதுடன் அவரை தாக்கினார். இதை கண்ட ஒரு சீக்கியர் அந்த போதை ஆசாமியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். அவர்மீது கற்பழிப்பு முயற்சி, பயங்கரமான ஆயுதங்களால் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இங்குள்ள முல்ட்னோமா கவுன்ட்டி சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

அமெரிக்க கரையோர காவற்படை நடத்திய ஒரு மாத கால தேடுதல் வேட்டையின்போது, சுமார் பதினாறு தொன் கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.


இதன் மொத்த மதிப்பு சுமார் 420 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இலங்கை மதிப்பில் சுமார் அறுபத்து நான்காயிரம் கோடி ரூபா! பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமைந்துள்ள ஃப்ளோரிடா மாகாண துறைமுகப் பகுதியிலேயே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதினாறு தொன் என்று அளவிடப்பட்டுள்ள இந்த போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் - அதாவது,


இலங்கை மதிப்பில் சுமார் ஒன்றரை இலட்சம் கோடி ரூபா பெறுமதியானது என்று கணக்கிடப்பட்டுள்ளது. பசுபிக் சமுத்திரத்தின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த ஒரு மாத கால தேடுதல் வேட்டையில் அமெரிக்கா, கனடா மற்றும் உள்முக முகவர் அமைப்புகளும் ஈடுபட்டன. இதில் மறைவில் இருந்து விரைவாகச் செல்லக்கூடிய படகுகள் மற்றும் ஹெலிகொப்டர்கள் என்பனவும் பயன்படுத்தப்பட்டன. தேடுதல் நடவடிக்கையில் ஏழு கப்பல்கள் சோதனையிடப்பட்டதாகவும், அதில் போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியை சேர்ந்த பாதணி தயாரிப்பவர் ஒருவர் உலகின் முதலாவது 24 கரட் தங்கத்தலான செருப்பை உருவாக்கி தயாரித்துள்ளார். துரின் நகரைச் சேர்ந்த அந்தோனியோ வியட்றி என்ற மேற்படி நபர் முப்பரிமாண ஊடுகாட்டும் கருவியின் உதவியுடன் அளவீடுகளை மேற்கொண்டு 230 கிராம் தங்கத்தைப் பயன்படுத்தி இந்த செருப்பை உருவாக்கியுள்ளார். இதன் பெறுமதி 21,000 ஸ்ரேலிங் பவுணாகும்.

இதனை எண்ணெய் வளம் மிக்க செல்வந்த பிராந்தியமான வளைகுடா பிராந்திய சந்தையில் விற்பனை செய்ய அவர் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.