December 2016

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையில் கிடத்தப்பட்டிருந்தார். மனநலன் குறித்த விழிப்புணர்வும், மனித நேயமும் நம்மிடம் இல்லாமல் போனதை உணர்த்தியது இந்த சம்பவம்.

கோவை, சிவானந்தா காலனி அருகே மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் நடுவே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடத்தப்பட்டிருந்தார் அந்த இளம்பெண். கயிறை அவிழ்த்து விடுமாறு கதறி அழுதார் அந்த பெண்.

அருகில் இன்னொரு பெண்ணும் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். எதற்காக? யாரால் கட்டப்பட்டார்? எதற்கு இன்னொரு பெண் அழுகிறார் என யாராலும் யூகிக்க முடியவில்லை.

கட்டப்பட்ட பெண் தொடர்ச்சியாக கதறிக்கொண்டிருக்க… அருகில் அமர்ந்திருந்த பெண் அழுது கொண்டே இருந்தார். இதைப்பார்த்த சிலர், காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கை, கால்கள் கட்டப்பட்ட அந்த பெண்ணை கட்டுகளில் இருந்து விடுவித்தனர். அருகில் இருந்த பெண்ணிடம் விசாரித்த போது, அவர் கட்டப்பட்டிருந்த பெண்ணின் தாயார் தனலட்சுமி என்பது தெரியவந்தது.

கோவை கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமியின் மகளான பியூலா, கணவரால் கைவிடப்பட்டதாலும், பிறந்த குழந்தை இறந்து பிறந்ததாலும் மனச்சிதைவு ஏற்பட்டதாகவும், பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து பியூலா ஆக்ரோஷமாய் எல்லோரையும் கல்லை கொண்டு அடிப்பதால் இப்படி கட்டி போட்டு வைத்திருப்பதாக சொன்னார் தனலட்சுமி.
தனது மகளை காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக பியூலாவின் தாயார் தனலட்சுமியிடம் பேசினோம். “மூணு வருஷத்துக்கு முன்னாடி என் பொண்ணுக்கு கல்யாணம் நடந்துச்சு. கர்ப்பமா இருக்கும் போது பொண்ணை விட்டுட்டு அவன் போயிட்டான். கொஞ்ச நாள்ல குழந்தையும் பொறந்துச்சு. ஆனா பிறந்த குழந்த இறந்து தான் பிறந்துச்சு. இந்த 2 சம்பவங்களால ரொம்பவே உடைஞ்சு போயிட்டா. பைத்தியம் மாதிரி கத்துவா. அப்படியே மனநலம் பாதிக்கப்பட்டவளாவே ஆயிட்டா.


கடந்த 2 மாசமா ரொம்ப மோசமா நடந்துக்க ஆரம்பிச்சா. திடீர் திடீர்னு ஆக்ரோஷமா நடந்துக்குவா. அக்கம்பக்கதுல யாரையாவது பார்த்தா கல் எடுத்து வீசுவா. நான் வாடகை வீட்டுல இருக்கே. இவ இப்படி பண்றதால வீட்டை காலி பண்ணச் சொல்றாங்க. வீட்டை காலி பண்ணீட்டு நான் என்ன பண்ணுவேன்?. வீட்டுலயும் வைச்சுக்க முடியலை.

கவர்மென்ட் ஆஸ்பிட்டல் கூட்டீட்டு போனாலும், மாத்திரை கொடுத்து துரத்தி விட்டுடுறாங்க. தனியார் காப்பகத்துல வைச்சு பராமரிக்க எங்கிட்ட வசதியும் இல்லை. மகளை வெளியே கூட்டீட்டு போயிடுங்கனு வீட்டு ஓனர் சொன்னதால வெளியில கூட்டீட்டு வந்துட்டேன். ரொம்ப ஆக்ரோஷமா நடந்துக்கறா என்ன செய்யறதுன்னே தெரியலை.

அதான் கட்டி போட்டு வைச்சுட்டேன். எப்படியாவது என் மகளை காப்பகத்துல சேத்து காப்பாத்துங்கப்பா,” என்றார் கண்ணீர் மல்க.
இதையடுத்து அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி பியூலாவை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மனநல பிரிவில் சேர்த்து, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்ளும் நாம் மனநல பாதிக்கப்பட்டவர் என்றால் விலகியே நிற்கிறோம். மனநல பாதிப்பு குறித்த விழிப்புணர்வும், மனித நேயமும் நம்மிடம் இல்லாமல் இருப்பதை வெளிப்படையாக உணர்த்தி விட்டது இந்த நிகழ்வு.

பெங்களூர் அருகே ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றுபவர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வேலையின் காரணமாக அத்திப்பள்ளியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார்.சுரேஷ் விடுமுறையின் போது தனது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அப்படி வந்து செல்லும்போது இவரது வீட்டிற்கு அருகே வசித்து வந்த வள்ளி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

வள்ளிக்கு கணவர் மற்றும் எட்டு வயதில் ஒரு மகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சுரேஷ்க்கும், வள்ளிக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. இதனால் வள்ளியை பார்ப்பதற்காகவே சுரேஷ் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். இருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சுரேஷ்க்கு அவரது பெற்றோர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ததாக தெரிகிறது. இதனையறிந்த வள்ளி, சுரேஷிடம் போன் மூலம் விசாரித்திருக்கிறாள். வள்ளிக்கு விஷயம் தெரிந்ததையடுத்து சுரேஷ் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறார். சுரேஷின் திருமணத்திற்கு வள்ளி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

வள்ளியையும், அவரது மகளையும் அத்திப்பள்ளியில் உள்ள தனது ரூமிற்கு கூட்டிவந்து சமரசம் செய்ய முயன்றிருக்கிறார். அப்போது வள்ளியிடம் உனக்கு திருமணமாகி மகள் இருக்கிறாள். எனக்கு இனிமேல் தான் திருமணமாக போகிறது. எனக்கு திருமணம் ஆனாலும் உன்னையும் வைச்சுக்கிறேன் என்றும் சுரேஷ் கூறியிருக்கிறார்.

ஆனால், சுரேஷின் எந்த பேச்சுக்கும் வள்ளி இணங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் எனக்கு இடையூறு செய்தால் உன்னைக் கொன்றுவிட்டு உனது மகளையும் பலாத்காரம் செய்துவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.
இதனால், ஆவேசமடைந்த வள்ளி, சமையல் செய்யும் குக்கரால் சுரேஷின் தலையில் அடித்திருக்கிறார். பின் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தனது மகளுடன் வீட்டிற்கு வந்திருக்கிறார். சுரேஷை கொலை செய்த வள்ளியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒரு பெண்ணால் இப்படியும் கொலை செய்ய முடியுமா என்று போலீசாரே பதறிப்போனதாக கூறுகின்றனர்.

மறுபிறவி அல்லது மறுபிறப்பு என்றாலே அதனைப் பற்றிய சில கவர்ச்சியான கருத்தமைவுகள் எப்போதும் நிலவும். ஒரு மனிதன் இந்த உலகத்தில் மீண்டும் மீண்டும் பிறப்பதைப் பற்றி இந்து மதத்தை போலவே புகழ்பெற்ற மற்ற சில கலாச்சாரங்களும் பேசுகிறது. உதாரணத்திற்கு, மறுபிறவியை புத்த மதமும் நம்புகிறது. பழங்கால எகிப்தியர்கள் மரணத்திற்கான பின்பான வாழ்க்கையையும் மறுபிறவியையும் மிக தீவிரமாக நம்பினார்கள்.
அதனால் தான் இறந்த உடல்களைப் பாதுகாக்க அவர்கள் பல நினைவுச் சின்னங்களையும், மம்மிக்களையும் உருவாக்கினார்கள். இந்து மத தத்துவத்தின் படி, புனர்ஜென்மம் என அழைக்கப்படும் மறுபிறப்பு என்றால், மீண்டும் தசையுடனான வாழ்க்கைக்கு திரும்புவதே. இந்து மதத்தில் மறுபிறவிக்கான புகழ் பெற்ற உதாரணம் ஒன்றை கூற வேண்டுமானால், அது தான் விஷ்ணு பகவானின் அவதாரங்களாகும். இந்த உலகத்தில், அதனை சுற்றியுள்ள தீய சக்தியிடம் இருந்து காக்க, மனித வடிவில் மீண்டும் மீண்டும் அவதாரம் எடுத்தார் அவர் என நம்பப்படுகிறது.

அதேப்போல், பல்வேறு பிற கடவுள்களைப் பற்றிய அவதார கதைகளையும் நாம் கேட்டிருப்போம். ஆனால் மறுபிறப்பு என்கிற இந்த கருத்தமைவு எப்படி வேலை செய்கிறது? மறுபிறவி பற்றிய நீங்கள் அறிந்திராத சில சுவாரசியமான மற்றும் அருமையான தகவல்கள்.

ஆன்மா என்றால் என்ன?

இந்து தத்துவப்படி, ஆத்மா என அழைக்கப்படும் ஆன்மாவை அழிக்க முடியாது. ஒருவரின் உடல் இறந்தாலும் கூட, அவரின் ஆன்மா எப்போதும் உயிருடன் இருக்கும். எப்படி நாம் புதிய ஆடைகளை மாற்றுகிறோமோ அதே போல் தான் ஆன்மா உடல்களை மாற்றிக் கொள்ளும். நம் முன்வினைப் பயன், அதாவது, சென்ற ஜென்மத்தில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் தான் புதிய உடல் அந்த ஆன்மாவிற்கு கிட்டும்.

ஒருவர் பல புண்ணியங்களை சேர்த்திருந்தால், அவர் மீண்டும் மனிதனாக பிறப்பார். மறுபுறம், அவர் பல பாவங்களை செய்திருந்தால், முன்வினைப் பயனின் அடிப்படையில் அவர் பிறப்பார்.

அறிந்திராத வேறு சில அருமையான தகவல்கள்:

1) மனிதர்கள் பெரும்பாலும் மனிதர்களாகவே மீண்டும் பிறப்பார்கள். சில நேரங்களில் தன் முன்வினைப் பயனின் அடிப்படையில் அவர்கள் மிருகங்களாக பிறப்பார்கள்.

2) நிறைவேறாத ஆசைகளுடன் ஒருவர் திடீரென இறந்து விட்டால், அவர் பேயாக அலைவார். அப்படிப்பட்ட ஆன்மாக்கள் நிஜத்திற்கும் ஆன்மீக உலகத்திற்கும் இடையே சிக்கி கொள்ளும். இதிலிருந்து விடுபடுவதற்கும், மீண்டும் பிறப்பதற்கும் சாதகமான நிலையை தேடிக் கொண்டிருக்கும்.

3) தங்களின் உடல் மட்டுமே அழியக்கூடியவை என இந்து மக்கள் ஆழமாக நம்புகின்றனர். சொல்லப்போனால், இந்து மதத்தில் உள்ள சாவு சடங்கில், இறந்த உடலின் தலையில் அடிக்கும் காரணம் அது தான்; இந்த ஜென்மத்தில் தான் வாழ்ந்த வாழ்க்கையை மறக்க வேண்டும். அடுத்த ஜென்மத்திலும் அந்த ஞாபகம் பின் தொடர கூடாது என்பதே அதற்கான காரணம். மனிதர்கள் எட்ட முடியாத உயரத்திற்கு இந்த ஆன்மாக்கள் சென்று, புதிய உடலுக்குள் நுழைந்து விடும் என நம்பப்படுகிறது.
w: hidden;" width="120">

4) இந்த உலகத்தில் மனிதனாக பிறக்க ஒவ்வொரு மனிதனுக்கும் மீண்டும் மறுபிறவி எடுக்க 7 வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. அதன் படி, புண்ணியங்களை செய்யவும், பாவங்களை செய்யவும் சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. அதன் படி, அவனின் மறு ஜென்மம் தீர்மானிக்கப்படுகிறது.

5) ஒரு உடல் இறந்தவுடன் மறு பிறப்பை தேடி அந்த ஆன்மா உடனே செல்லாது என்ற மற்றொரு சுவாரசியமான விஷயத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சில வருடங்களுக்கு பிறகு, தங்களுக்கு சாதகமான நிலை அமையும் போது தான், புதிய உடலை ஒரு ஆன்மா கைப்பற்றி, மீண்டும் பிறக்கும்.

6) பிக்-பேங் நடைபெற்ற காலம் முதல், அனைத்துமே விஷயங்களுமே நம் புத்தியில் சேமிக்கப்பட்டு உள்ளது என சில முனிவர்கள் கூறியுள்ளனர். ஆனால் வெகு சிலராலேயே அவைகளை நினைவு கூற முடியும். அப்படியானால் நம் முந்தைய பிறப்புகள் பற்றிய ஞாபகங்களும் நம் ஆழ் மனதில் பதிந்திருக்கும். இது நம்மால் நினைவு கூறப்படாமலேயே போகலாம்.

7) நம் நெற்றில் மூன்றாவது கண் உள்ளது என இந்துக்கள் நம்புகின்றனர். ஒருவர் தான் ஆன்மாவை கடவுளுடன் இணைக்கும் போதோ, அல்லது பிரம்மனாக மாறும் போதோ, இந்த கண்கள் திறக்குமாம். மனிதர்கள் தங்களின் மூன்றாவது கண்ணை திறக்கும் நிலை வரும் வரை, ஆன்மா இந்த உலகத்தில் இருந்து விடுபடாது.


வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து ள்ளனர். பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் அடிக்கடி வந்து செல்கின்றார்கள், பூமி முழுவதும் அவர்கள் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றவாறு பல செய்திகள் அன்றாடம் வெளி வந்த வண்ணமே இருக்கின்றது.

   
இருந்தாலும் உண்மையில் பூமி வாசிகளுக்கு அவ்வாறான பிரபஞ்சங்களுக்கு இடையே ஓர் விண்வெளி பயணத்தினை மேற்கொள்ள முடியவில்லை என்ற கேள்விக்கு இன்று வரை விளக்கம் கிடைக்கவில்லை வேற்றுக்கிரகவாசிகள் பூமியைத் தாக்கவும் ஆயத்தமாகி வருவதாக மேற்குலக ஊடகங்களில் அதிக செய்திகள் வெளிவருகின்றன.ஆனாலும் அது சாத்தியம் எனவும் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு எவ்வாறு வந்து செல்கின்றார்கள் என்ற கேள்விக்கும் கருந்துளை என்பதை வழியாக காட்டுகின்றார்கள் விஞ்ஞானிகள்.

கருந்துளை எனப்படுவது தனது எல்லைக்குள்ளே செல்லும் ஒளி உட்பட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியில் இருக்கும் ஒரு பகுதியாகும். குறிப்பாக ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் இதில் இருந்து தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பது எதனையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. அதே சமயம் நட்சத்திரங்களின் இறுதிக்கட்டத்திலேயே கருந்துளை உருவாகி வருகின்றதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான மர்மமான கருந்துளைகள் மூலமாகவே ஓர் உலகில் இருந்து மற்றொரு உலகிற்கு வேற்றுக்கிரக வாசிகள் பயணிக்கின்றார்கள் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் இதனை ஒப்பு கொண்டுள்ளார். அத்தோடு பூமி முழுவதும் இவ்வாறான கருந்துளைகள் நிறைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதோடு, அவ்வாறான கருந்துளைகள் அளவில் மிகச் சிறியதாக இருக்கும் காரணத்தினால் அவற்றை எம்மால் கண்டு பிடிப்பது இலகுவானது இல்லை.

மேலும் குறிப்பிட்ட நேரத்தில் இவை உருவாகி மறைந்து விடுவதால் அதனை எம்மால் பயன்படுத்திக் கொள்ள முடிவது இல்லை. என்றாலும் அவ்வாறான கருந்துளைகளை செயற்கையாகவும் உருவாக்க முடியும். அதனை கண்டு பிடித்து விட்டால் வேரு பிரபஞ்சத்திற்கு எம்மால் பயணிப்பது இலகு எனவும் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.

இதே வகை கருத்து வேற்றுக்கிரக வாசிகள் பூமியை வந்து செல்வதிலும் ஒத்துப்போகின்றது. அதாவது குறிப்பிட்ட நேரப்பகுதியில் மட்டுமே வேற்றுக்கிரகவாசிகளின் கலங்கள் பூமியில் காணப்படுகின்றது. எங்கே வருகின்றார்கள்? எப்படி வருகின்றார்கள்? என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கின்றது. ஆக அவர்களின் பாதை இவ்வாறான கருந்துளைகளே எனவும் அடித்துக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்து போனது எமது சூரியனில் இருந்து வேற்றுக்கிரகவாசிகள் சக்தியை உறுஞ்சுவதாக அண்மையில் நாசா வெளியிட்ட காணொளி. இதன் மூலம் வேற்றுக்கிரக வாசிகள் எத்தகைய கதிர் தாக்கத்தையும், வெப்பத்தினையும் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பத்தில் பயணிக்கின்றார்கள் எனவும் கூறப்படுகின்றது.

அவர்கள் நட்சத்திரங்களின் சக்திகளைப் பயன்படுத்தி அதன் மூலமாகவே வேரு உலகங்களுக்கு பயணம் செய்கின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. எப்படி எனினும் அந்த அளவிற்கு தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடைந்த வேற்றுக்கிரக வாசிகளின் தொழில் நுட்பத்தை நாம் நெருங்க இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கும் என்பது தெரிய வில்லை.

ஆனாலும் அவர்கள் திடீரென்று பூமியைத் தாக்குவார்கள் எனில் நரகத்தை கண்முன்னே காட்டிவிட்டு சென்று விடுவார்கள் என்ற அச்சம் தற்போது மேற்குலகத்தில் அதிகமாக நிலவி வருகின்றது. ஆனாலும் எப்போதும் அதற்கு தயாராக எமது பூமின் சக்திக்கு ஏற்ப அதி பயங்கர ஆயுதங்களும் உருவாக்கப்பட்டும் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் வரலாற்றை கொஞ்சம் பின்சென்று அதாவது இருபது ஆயிரம் வருடங்களுக்கு முன் சென்று கடலில் மூழ்கிய ஓர் தனி உலகிற்கு சென்று பார்க்கலாம். பயப்பட வேண்டாம் நீண்ட தூரப் பயணம் என்ற அச்சமும் வேண்டாம் நான்கு அல்லது 5 நிமிடத்தில் முடிந்து விடும். ஆனாலும் அவசியமான தொன்று என்பது இறுதியில் புரியும். தனக்கே உரிய சிறப்பினால் உலகுக்கே எச்சரிக்கை விடுத்தான் அன்றைய வீரத் தமிழன் அவன் சேர்த்து வைத்த பெருமையை இப்போது நாம் காத்துக் கொண்டு வருகின்றோமா என்பது கேள்விக் குறிதான். நாவலன் தீவு அல்லது குமரிக்கண்டம் என்றும் இப்போது லொமூரியா எனவும் வரலாற்றில் பதிவான ஓர் இடத்தை நோக்கிய பயணமே அது. நம்மில் பலருக்கு தெரிந்த கதைதான் இது ஆனாலும் நவீன காலத்திற்கு தொடர்புண்டு.

   
இந்த கண்டம் முழ்கிப்போனாலும் கூட அழியவில்லை இன்றும் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. அது உயிர் இயக்கமல்ல சிறப்பு. அந்த வரலாற்று இயக்கமே இன்று தமிழர் தனித்துவத்தையும் பெருமையையும் உலகுக்கு பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றது.

அந்த குமரிக்கண்டத்திலேயே தமிழர் கலாச்சாரம் தோன்றியது, அதே இடத்தில் தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த குமரிக்கண்டமே தமிழரின் மூதாதையர் பிறப்பிடம், அதனையும் தாண்டி இப்போது நான் எழுதி நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் தமிழ் அங்கே தான்பிறந்தது என்பது ஆய்வாளர் கூற்று மட்டுமல்ல உண்மையும் கூட.

பல மர்மங்களின் பிறப்பிடமும் இதுவே, வரலாற்றில் இன்று வரை விளக்க முடியாத அதிசயங்களை கொண்ட இந்த குமரிக்கண்டம் இன்று கடலுக்கடியில் மௌனமாக உறங்கிக் கொண்டு இருக்கின்றது.

மௌனமும் எழுச்சியும் தமிழருக்கே உரிய திமிர், வீரம் என்பன போன்றதே என்பது இங்கு நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

அப்போது பிரம்மாண்ட சிறப்புடன் திகழ்ந்த ஓர் நாடாக இருந்த தனித் தமிழ்க் கண்டத்தின் இன்றைய நிலை தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை உட்பட பல சிறு சிறு தீவுகளாக சிதறிப்போய் உள்ளது.

சிதறுவதும் இணைவதும் கூட தமிழரிடம் உள்ள இன்னுமோர் அம்சம் அல்லது பிரச்சினை என்றும் கூறலாம்.

உலகின் மிகத் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் கூட 4000 வருடங்கள் முந்தையதே. நக்கீரர் தனது இறையனார் அகப்பொருள் என்ற நூலில் முத்தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் இடை விடாது தொடர்ச்சியாக நடைபெற்று வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

முதற் சங்கத்தில் இந்த கடலடியில் உள்ள தென் மதுரையில் கி.மு 4440களில் 4449 புலவர்களுடனும் சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் ஆகிய நூல்களை இயற்றப்பட்டுள்ளது.

இயற்றப்பட்டு என்ன பயன், இப்போது அதனைக் காக்க முடியாமல் போய் விட்டோமே அதனால் இவை அனைத்துமே அழிந்து விட்டது என்பது வேதனை.

இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம் நகரத்தில் கி.மு 3700களில் 3700புலவர்களுடன் அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டு இப்போது அதில் எஞ்சியது தொல்காப்பியம் மட்டுமே.

அடுத்த தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு 1850 களில் 449 புலவர்களுடன் அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

இதன் மூலம் தெளிவாகின்றது என்னவென்றால் தமிழ் வரலாறு படிப்படியாக அழிந்து வந்தது என்பதே. இப்போதும் இது தொடர்கதையாக இருப்பது யார் செய்த குற்றம் என்பது தெரியாது.

இந்த வரலாறு பலருக்கும் தெரிந்த கதைதான் ஆனாலும் இதில் இருந்து ஒன்று தெளிவாகின்றது ஆண்டாண்டு காலமாக தமிழர் என்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அருகி வரத் தொடங்கியுள்ளனர்.

இந்த குமரிக்கண்ட வரலாற்றினை தொல் பொருள் ஆய்வாளர்களும் கூட ஏற்றுக் கொண்ட போதும் இன்று வரை இருக்கு ஆனால் இல்லை என்ற வகையில் தான் தொடருகின்றது.

எப்போதே புதைந்து போனதை இப்போது தோண்டி எடுத்தால் மட்டும் போதாது அது நாளைய வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும் இல்லாவிடின் அதனால் எந்த வித பெருமையும் இல்லை தேவையும் இல்லை.

இப்படி வரலாறு அழிந்ததற்கு காரணம் ஆவணங்கள் முறையாக பாதுகாக்கப்படாமையே, உதாரணமாக இப்போது யாழ் நூலகங்கள் எரிக்கப்பட்டமைக்கு மன்னிப்பு கோருவதால் எதுவுமே மாறாது.

உடைந்த கண்ணாடியை மறுபடியும் ஒட்டினாலும் கூட அதன் பிம்பம் மாறியே தெரியும் என்பதே நிதர்சனம். இங்கு மறுபடியும் ஆரம்பத்திற்கு சென்று பார்த்தால்.,

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்னது எம் மரபுதான் ஆனாலும் தண்டிப்புகள் எதனையும் திருத்தி விடாது மன்னிப்பும் கூட தமிழருக்கு உரித்தானது தான்.

அந்த மன்னிப்போடு அடுத்த தலைமுறைக்கு புதிய வரலாற்றை படிப்பிக்காமல் திருத்தப்பட்ட வரலாற்றை புகுத்தாமல் தனித்துவத்தை சொல்லுங்கள் தமிழ் 2000 வருடங்கள் அல்ல 20000 ஆயிரத்திற்கும் பழமையானது எம் தமிழ் என்று.

சில அப்பா மார்களின் துணிச்சலை பாராட்டாமல் இருக்கவே முடியாது. இங்கே பாருங்கள் தனது மகளை மட்டும் அல்ல, அவரது நண்பியையும் அப்பா காப்பாற்றியுள்ளார். குறித்த தந்தை ஒரு நிஞ்சா பாதுகாப்பு கலை நிபுணர் என்று கூறப்படுகிறது. தனது பிள்ளை இருக்கும் பக்கம் அவர் திரும்பும் வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் வருவதை அவதானித்த அவர். உடனே இரண்டு பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு பின் நோக்கி நகர்ந்துள்ளார். 

இன்ரர் நெட் பாவனையாளர்கள் பலரை கண்ணீரில் மூழ்கடித்த புகைப்படமாக இது உள்ளது. சுமார் 1 வருடங்களுக்கு முன்னர் திருமணமான தம்பதிகள் இவர்கள்.

அவர் கர்பிணியாக இருக்கும் வேளை தான் அந்த அதிர்ச்சி சம்பவத்தை கேள்வியுற்றார். தனது கணவருக்கு மூளையில் புற்று நோய் ஏற்பட்டுள்ளது என்று.

மூளையில் ஏற்படும் இந்த புற்று நோய் கட்டியை அகற்றினால், அவர் இறந்துவிடுவார். அகற்றாவிட்டாலும் இறந்துவிடுவார் என்ற நிலை தோன்றியது. இதனால் மருத்துவர்கள் அவர் வாழும் நாள் வரை வாழட்டும் என்று கூறிவிட்டார்கள்.

மூளை புற்று நோய் முற்றிய கட்டத்திலேயே கண்டறியப்பட்டதால் மருத்துவர்களால் எதனையும் செய்ய முடியவில்லை. கணவர் இறக்க முன்னரே பிள்ளை பிறந்துவிட்டது.

ஆனால் சில நாட்களில் கணவர் இறந்து போக , கைகளில் பிள்ளையோடு கதறும் ஒரு உண்மையான மனைவி: பாசம் என்பது இது தான் . அதற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை. இதற்காக தான் பூமி இன்னும் சுற்றுகிறது.


பிரபல தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜெசிக்கா. இவர் பல்வேறு ஆல்பங்களுக்காக பாடல்களை இதுவரை பாடியுள்ளார்.

இவரது குரலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த அளவிற்கு தனது குரலினாலும், குணத்தினாலும் அனைவரது மனதிலும் குடிகொண்டுள்ளார் இவர்.

இவர் தற்போது றெக்க படத்தில் வரும் 'கண்ண காட்டு போதும்' பாடலை பாடி வெளியிடுள்ளார். அந்த பாடல் இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடியது. அவரின் குரலுக்கு இணையாக பாடி அசத்தியுள்ளார் ஜெசிக்கா.

நேற்று முன் தினம் துருக்கிக்கான ரஷ்ய உயர்ஸ்தானிகர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பான பல வீடியோக்கள் வெளியாகிய போதும் குறித்த இந்த வீடியோவை முன்னால் உள்ள ஒரு நபர் தனது மோபைல் போனில் எடுத்து தற்போது வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரே உயர்ஸ்தானிகரை சுட்டுக் கொன்றுள்ளார். இதில் 3க்கும் அதிகமான நபர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்.



நீதா மற்றும் முகேஷ்… ஆனந்த் அம்பானி இளைய மகன், அவர் மேடையில் முதன் முறையாக தோன்றிய போது அனைவருக்கும் அதிர்ச்சி.

காரணம் குட்டி யானை போல நடந்து வந்தார். வயது 21 மட்டுமே 110 கிலோ. அள்ள அள்ள குறையாத பணம் கொட்டிக் கிடக்க உலகிலேயே மிக அதிக விலை கொண்ட மெகலன் விஸ்கி தான் சாப்பிடுவார்.

அதன் விலை ஒன்பது கோடி ரூபாய்க்கும் மேலே.! ஒரே வாரத்தில் அந்த விஸ்கி காலி ஆகி விடும். மீண்டும் வாங்குவார். ஆனால், உடலில் நிறைய பிரச்னை ஏற்பட்டது.

நூற்றி எட்டு கிலோ என்பதால் மூச்சிறைப்பு,ஆஸ்துமா, சைனஸ், என பல கோளாறுகள். பார்த்தார் அப்பா முகேஷ் அம்பானி.

வெளிநாட்டில் இருந்து மருத்துவரை வர வைத்தார். மூன்று மாத காலம் பல கோடிகள் அந்த டயட்டீசியனுக்கு. ஆனந்த் அம்பானியை பிழிந்து எடுத்து விட்டார்.

விஸ்கி பாட்டிலை உடைத்தெறிந்தார் அந்த பயிற்சியாளர். வெறும் க்ரீன் டீ தான். பகல் பூராவும் ஏதாவது பயிற்சிகள். கடுமையான ஜிம் பயிற்சி. நாக்கு தள்ளி விட்டது.

மூன்று மாதம் கழித்து ஆனந்த் வெளியே வந்த போது ஆடிப் போய் விட்டார் அப்பா அம்பானி. ஐம்பது கிலோ குறைந்து சிறுவன் போல தோன்றினார் ஆனந்த்.

இப்போது ஆனந்த் வெறும் க்ரீன் டீ மட்டுமே குடிக்கிறார்.

மூன்று நாட்களாக உணவின்றி சுவரின் இடுக்குக்குள் சிக்கி தவித்த சிறுவன் ஒருவன் பிரதேச வாசிகளால் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவமொன்று நைஜிரியாவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

நைஜிரியாவின் ஒன்டோ பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒடுடூவா பகுதியில் வசித்து வந்த அதுர்காபெமி சகா என்ற 12 வயதுடைய ஏழைச் சிறுவன் தனது வீட்டின் மதிலில் ஏறி விளையாடியுள்ளான்.

இந்நிலையில் குறித்த சிறுவன் மதிலின் 12 அங்குலமான இடுக்கு பகுதியில் விழுந்துள்ளான்.

குறித்த சிறுவன் முடுக்கு பகுதியிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு கூக்குரல் எழுப்பிய போதும் பிரதேசவாசிகள் ஏதோ அமானுஷ்சிய குரல் என நினைத்து கேட்டும் கேட்காமல் சென்றுள்ளனர்.

மூன்று நாட்கள் கடந்தும் தொடர்ச்சியாக அபாய குரல் கேட்கப்படுதை
சந்தேகித்த பிரதேச வாசிகள் அபாய குரல் கேட்கப்படும் இடத்தை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

இதன்போது குறித்த சுவரின் இடுக்கு பகுதியில் பிரதேசத்தின் சிறுவன் சிக்கியிருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக சுவரை இடித்து சிறுவனை காப்பாற்றியுள்ளனர்.

சிறுவன் மூன்று நாட்களாக உணவின்றி ஒரே நிலையில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டமை தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதல் மதிப்பெண்ணையும், 100 சதவீத தேர்ச்சியையும் பெறும பள்ளி ஆகும்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ள இந்த பள்ளயில் இடம் கிடைப்பது என்பது பெரும் அரிதான செயல்.

இப்படி பேரும் புகழும் பெற்ற இந்த பள்ளியில் அன்று ஒருநாள் தலைமை ஆசிரியர் மயங்கி விழுந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். தலைமை ஆசிரியை மயங்கி விழுந்ததற்கான காரணம் அதிர்ச்சி ரகம்.

பள்ளியில் படிக்கும் அனைவரும் வளர்இளம் பருவத்தினர் என்பதால் இந்த பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் ஆகியவற்றை எடுத்துக் கூற மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

அரசு மருத்துவர்கள் இவர்களின் ரத்தம் மற்றும் அனைத்து சோதனைகளையும் செய்தனர். அப்போது தான் மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 மாணவிகளில் 10 மாணவிகள் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

தலைமை ஆசிரியையை தனியாக அழைத்து சென்ற மருத்துவர் அந்த 10 மாணவிகளின் பெயர் பட்டியலை கொடுத்துள்ளார்.

என்ன செய்வது என்று தெரியாத தலைமை ஆசிரியை மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பின்னர் அந்த மாணவிகளின் பெற்றோர் அழைக்கப்பட்டு சம்பவத்தை கூறினர்.

அவர்களும் அதிர்ச்சியடைந்த நிலையில் மாணவிகளை பள்ளியில் இருந்து அழைத்து சென்றனர். செல்போன் வைத்து இருக்கும் மாணவிகள் அவர்களது ஆண் தோழர்கள் மூலம் செக்ஸ் காட்சிகளை பார்க்கின்றனர்.

அவர்கள் உணர்ச்சிக்கு அடிமையாகி அதே ஆண் நணர்களுக்கு இரையாகி விடுகின்றனர்.

இந்த பள்ளி இருக்கும் இடம், நகரமும் கிடையாது. கிராமமும் கிடையாது. இதனால் மாணவிகள் அதிக அளவு ஏமாந்து விடுகின்றனர். அரசு இந்த பள்ளி மாணவிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க முடிவு செய்து பள்ளி நேரங்களில் ரகசிய கண்காணிப்பில் போலீசாரை ஈடுப்படுத்தி உள்ளது.

பள்ளி செல்லும் மாணவிகளை பெற்றோரும் அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும்.

(மாணவிகள் மற்றும் பள்ளியின் நலன் கருதி ஊர் மற்றும் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.)

இஸ்தான்புல் நகரின் மையப்பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 29 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தாக்குதலில் 166 பேர் காயமடைந்ததாகவும் துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார்.

காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.




கோலிவுட்டில் உள்ள பல நடிகர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும் அஜித் ரசிகர்கள் காட்டும் மாஸ்-க்கு அளவே இல்லை

அஜித் பெயரில் ஓட்டல் ஆரம்பிப்பது, அஜித் போட்டோவை பஸ்ஸில் ஒட்டுவது, என தமிழகத்தில்தான் அஜித் பெயர் மாஸ் ஆகி வருவதை அவ்வப்போது பார்த்துள்ளோம்.

ஆனால் மலேசியாவில் அஜித் நடித்த படங்களின் பெயரால் கிளப்புகள் திறக்கப்பட்டுள்ளது. ஆம், 'மங்காத்தா', பெயரிலும் 'வேதாளம்' பெயரில் புதிய கிளப்புகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

இந்த கிளப்புகளில் மற்ற கிளப்புகளை விட மிக அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கின்றது என்பதை சொல்லவும் வேண்டுமா?>

கொச்சி பகுதியில் உபேர் கால் டாக்ஸியை புக் செய்த பெண்ணை அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சி ரயில் நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு பயணிப்பதற்காக வித்யா என்ற பெண் உபேர் கால் டாக்ஸியை புக் செய்துள்ளார்.

அவர் டாக்சியில் ஏறியதை கண்ட ரயில்நிலைய ஆட்டோ டிரைவர்கள், அவர் புக் செய்த டாக்ஸியை மறித்து, அதில் பயணிக்க கூடாது, ஆட்டோ அல்லது, ரயில் நிலையத்தில் உள்ல டாக்ஸியில் பயணிக்குமாறு மிரட்டுயுள்ளனர்.

இதை வீடியோவாக பதிவு செய்த வித்யா, தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ , பலர் இந்த வீடியோவை ஷேர் செய்தும், இதேபோன்ற அவர்களுடைய அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டும் வித்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.