2016

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையில் கிடத்தப்பட்டிருந்தார். மனநலன் குறித்த விழிப்புணர்வும், மனித நேயமும் நம்மிடம் இல்லாமல் போனதை உணர்த்தியது இந்த சம்பவம்.

கோவை, சிவானந்தா காலனி அருகே மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் நடுவே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடத்தப்பட்டிருந்தார் அந்த இளம்பெண். கயிறை அவிழ்த்து விடுமாறு கதறி அழுதார் அந்த பெண்.

அருகில் இன்னொரு பெண்ணும் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். எதற்காக? யாரால் கட்டப்பட்டார்? எதற்கு இன்னொரு பெண் அழுகிறார் என யாராலும் யூகிக்க முடியவில்லை.

கட்டப்பட்ட பெண் தொடர்ச்சியாக கதறிக்கொண்டிருக்க… அருகில் அமர்ந்திருந்த பெண் அழுது கொண்டே இருந்தார். இதைப்பார்த்த சிலர், காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கை, கால்கள் கட்டப்பட்ட அந்த பெண்ணை கட்டுகளில் இருந்து விடுவித்தனர். அருகில் இருந்த பெண்ணிடம் விசாரித்த போது, அவர் கட்டப்பட்டிருந்த பெண்ணின் தாயார் தனலட்சுமி என்பது தெரியவந்தது.

கோவை கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமியின் மகளான பியூலா, கணவரால் கைவிடப்பட்டதாலும், பிறந்த குழந்தை இறந்து பிறந்ததாலும் மனச்சிதைவு ஏற்பட்டதாகவும், பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து பியூலா ஆக்ரோஷமாய் எல்லோரையும் கல்லை கொண்டு அடிப்பதால் இப்படி கட்டி போட்டு வைத்திருப்பதாக சொன்னார் தனலட்சுமி.
தனது மகளை காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக பியூலாவின் தாயார் தனலட்சுமியிடம் பேசினோம். “மூணு வருஷத்துக்கு முன்னாடி என் பொண்ணுக்கு கல்யாணம் நடந்துச்சு. கர்ப்பமா இருக்கும் போது பொண்ணை விட்டுட்டு அவன் போயிட்டான். கொஞ்ச நாள்ல குழந்தையும் பொறந்துச்சு. ஆனா பிறந்த குழந்த இறந்து தான் பிறந்துச்சு. இந்த 2 சம்பவங்களால ரொம்பவே உடைஞ்சு போயிட்டா. பைத்தியம் மாதிரி கத்துவா. அப்படியே மனநலம் பாதிக்கப்பட்டவளாவே ஆயிட்டா.


கடந்த 2 மாசமா ரொம்ப மோசமா நடந்துக்க ஆரம்பிச்சா. திடீர் திடீர்னு ஆக்ரோஷமா நடந்துக்குவா. அக்கம்பக்கதுல யாரையாவது பார்த்தா கல் எடுத்து வீசுவா. நான் வாடகை வீட்டுல இருக்கே. இவ இப்படி பண்றதால வீட்டை காலி பண்ணச் சொல்றாங்க. வீட்டை காலி பண்ணீட்டு நான் என்ன பண்ணுவேன்?. வீட்டுலயும் வைச்சுக்க முடியலை.

கவர்மென்ட் ஆஸ்பிட்டல் கூட்டீட்டு போனாலும், மாத்திரை கொடுத்து துரத்தி விட்டுடுறாங்க. தனியார் காப்பகத்துல வைச்சு பராமரிக்க எங்கிட்ட வசதியும் இல்லை. மகளை வெளியே கூட்டீட்டு போயிடுங்கனு வீட்டு ஓனர் சொன்னதால வெளியில கூட்டீட்டு வந்துட்டேன். ரொம்ப ஆக்ரோஷமா நடந்துக்கறா என்ன செய்யறதுன்னே தெரியலை.

அதான் கட்டி போட்டு வைச்சுட்டேன். எப்படியாவது என் மகளை காப்பகத்துல சேத்து காப்பாத்துங்கப்பா,” என்றார் கண்ணீர் மல்க.
இதையடுத்து அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி பியூலாவை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மனநல பிரிவில் சேர்த்து, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்ளும் நாம் மனநல பாதிக்கப்பட்டவர் என்றால் விலகியே நிற்கிறோம். மனநல பாதிப்பு குறித்த விழிப்புணர்வும், மனித நேயமும் நம்மிடம் இல்லாமல் இருப்பதை வெளிப்படையாக உணர்த்தி விட்டது இந்த நிகழ்வு.

பெங்களூர் அருகே ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றுபவர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வேலையின் காரணமாக அத்திப்பள்ளியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார்.சுரேஷ் விடுமுறையின் போது தனது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அப்படி வந்து செல்லும்போது இவரது வீட்டிற்கு அருகே வசித்து வந்த வள்ளி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

வள்ளிக்கு கணவர் மற்றும் எட்டு வயதில் ஒரு மகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சுரேஷ்க்கும், வள்ளிக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. இதனால் வள்ளியை பார்ப்பதற்காகவே சுரேஷ் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். இருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சுரேஷ்க்கு அவரது பெற்றோர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ததாக தெரிகிறது. இதனையறிந்த வள்ளி, சுரேஷிடம் போன் மூலம் விசாரித்திருக்கிறாள். வள்ளிக்கு விஷயம் தெரிந்ததையடுத்து சுரேஷ் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறார். சுரேஷின் திருமணத்திற்கு வள்ளி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

வள்ளியையும், அவரது மகளையும் அத்திப்பள்ளியில் உள்ள தனது ரூமிற்கு கூட்டிவந்து சமரசம் செய்ய முயன்றிருக்கிறார். அப்போது வள்ளியிடம் உனக்கு திருமணமாகி மகள் இருக்கிறாள். எனக்கு இனிமேல் தான் திருமணமாக போகிறது. எனக்கு திருமணம் ஆனாலும் உன்னையும் வைச்சுக்கிறேன் என்றும் சுரேஷ் கூறியிருக்கிறார்.

ஆனால், சுரேஷின் எந்த பேச்சுக்கும் வள்ளி இணங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் எனக்கு இடையூறு செய்தால் உன்னைக் கொன்றுவிட்டு உனது மகளையும் பலாத்காரம் செய்துவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.
இதனால், ஆவேசமடைந்த வள்ளி, சமையல் செய்யும் குக்கரால் சுரேஷின் தலையில் அடித்திருக்கிறார். பின் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தனது மகளுடன் வீட்டிற்கு வந்திருக்கிறார். சுரேஷை கொலை செய்த வள்ளியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒரு பெண்ணால் இப்படியும் கொலை செய்ய முடியுமா என்று போலீசாரே பதறிப்போனதாக கூறுகின்றனர்.

மறுபிறவி அல்லது மறுபிறப்பு என்றாலே அதனைப் பற்றிய சில கவர்ச்சியான கருத்தமைவுகள் எப்போதும் நிலவும். ஒரு மனிதன் இந்த உலகத்தில் மீண்டும் மீண்டும் பிறப்பதைப் பற்றி இந்து மதத்தை போலவே புகழ்பெற்ற மற்ற சில கலாச்சாரங்களும் பேசுகிறது. உதாரணத்திற்கு, மறுபிறவியை புத்த மதமும் நம்புகிறது. பழங்கால எகிப்தியர்கள் மரணத்திற்கான பின்பான வாழ்க்கையையும் மறுபிறவியையும் மிக தீவிரமாக நம்பினார்கள்.
அதனால் தான் இறந்த உடல்களைப் பாதுகாக்க அவர்கள் பல நினைவுச் சின்னங்களையும், மம்மிக்களையும் உருவாக்கினார்கள். இந்து மத தத்துவத்தின் படி, புனர்ஜென்மம் என அழைக்கப்படும் மறுபிறப்பு என்றால், மீண்டும் தசையுடனான வாழ்க்கைக்கு திரும்புவதே. இந்து மதத்தில் மறுபிறவிக்கான புகழ் பெற்ற உதாரணம் ஒன்றை கூற வேண்டுமானால், அது தான் விஷ்ணு பகவானின் அவதாரங்களாகும். இந்த உலகத்தில், அதனை சுற்றியுள்ள தீய சக்தியிடம் இருந்து காக்க, மனித வடிவில் மீண்டும் மீண்டும் அவதாரம் எடுத்தார் அவர் என நம்பப்படுகிறது.

அதேப்போல், பல்வேறு பிற கடவுள்களைப் பற்றிய அவதார கதைகளையும் நாம் கேட்டிருப்போம். ஆனால் மறுபிறப்பு என்கிற இந்த கருத்தமைவு எப்படி வேலை செய்கிறது? மறுபிறவி பற்றிய நீங்கள் அறிந்திராத சில சுவாரசியமான மற்றும் அருமையான தகவல்கள்.

ஆன்மா என்றால் என்ன?

இந்து தத்துவப்படி, ஆத்மா என அழைக்கப்படும் ஆன்மாவை அழிக்க முடியாது. ஒருவரின் உடல் இறந்தாலும் கூட, அவரின் ஆன்மா எப்போதும் உயிருடன் இருக்கும். எப்படி நாம் புதிய ஆடைகளை மாற்றுகிறோமோ அதே போல் தான் ஆன்மா உடல்களை மாற்றிக் கொள்ளும். நம் முன்வினைப் பயன், அதாவது, சென்ற ஜென்மத்தில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் தான் புதிய உடல் அந்த ஆன்மாவிற்கு கிட்டும்.

ஒருவர் பல புண்ணியங்களை சேர்த்திருந்தால், அவர் மீண்டும் மனிதனாக பிறப்பார். மறுபுறம், அவர் பல பாவங்களை செய்திருந்தால், முன்வினைப் பயனின் அடிப்படையில் அவர் பிறப்பார்.

அறிந்திராத வேறு சில அருமையான தகவல்கள்:

1) மனிதர்கள் பெரும்பாலும் மனிதர்களாகவே மீண்டும் பிறப்பார்கள். சில நேரங்களில் தன் முன்வினைப் பயனின் அடிப்படையில் அவர்கள் மிருகங்களாக பிறப்பார்கள்.

2) நிறைவேறாத ஆசைகளுடன் ஒருவர் திடீரென இறந்து விட்டால், அவர் பேயாக அலைவார். அப்படிப்பட்ட ஆன்மாக்கள் நிஜத்திற்கும் ஆன்மீக உலகத்திற்கும் இடையே சிக்கி கொள்ளும். இதிலிருந்து விடுபடுவதற்கும், மீண்டும் பிறப்பதற்கும் சாதகமான நிலையை தேடிக் கொண்டிருக்கும்.

3) தங்களின் உடல் மட்டுமே அழியக்கூடியவை என இந்து மக்கள் ஆழமாக நம்புகின்றனர். சொல்லப்போனால், இந்து மதத்தில் உள்ள சாவு சடங்கில், இறந்த உடலின் தலையில் அடிக்கும் காரணம் அது தான்; இந்த ஜென்மத்தில் தான் வாழ்ந்த வாழ்க்கையை மறக்க வேண்டும். அடுத்த ஜென்மத்திலும் அந்த ஞாபகம் பின் தொடர கூடாது என்பதே அதற்கான காரணம். மனிதர்கள் எட்ட முடியாத உயரத்திற்கு இந்த ஆன்மாக்கள் சென்று, புதிய உடலுக்குள் நுழைந்து விடும் என நம்பப்படுகிறது.
w: hidden;" width="120">

4) இந்த உலகத்தில் மனிதனாக பிறக்க ஒவ்வொரு மனிதனுக்கும் மீண்டும் மறுபிறவி எடுக்க 7 வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. அதன் படி, புண்ணியங்களை செய்யவும், பாவங்களை செய்யவும் சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. அதன் படி, அவனின் மறு ஜென்மம் தீர்மானிக்கப்படுகிறது.

5) ஒரு உடல் இறந்தவுடன் மறு பிறப்பை தேடி அந்த ஆன்மா உடனே செல்லாது என்ற மற்றொரு சுவாரசியமான விஷயத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சில வருடங்களுக்கு பிறகு, தங்களுக்கு சாதகமான நிலை அமையும் போது தான், புதிய உடலை ஒரு ஆன்மா கைப்பற்றி, மீண்டும் பிறக்கும்.

6) பிக்-பேங் நடைபெற்ற காலம் முதல், அனைத்துமே விஷயங்களுமே நம் புத்தியில் சேமிக்கப்பட்டு உள்ளது என சில முனிவர்கள் கூறியுள்ளனர். ஆனால் வெகு சிலராலேயே அவைகளை நினைவு கூற முடியும். அப்படியானால் நம் முந்தைய பிறப்புகள் பற்றிய ஞாபகங்களும் நம் ஆழ் மனதில் பதிந்திருக்கும். இது நம்மால் நினைவு கூறப்படாமலேயே போகலாம்.

7) நம் நெற்றில் மூன்றாவது கண் உள்ளது என இந்துக்கள் நம்புகின்றனர். ஒருவர் தான் ஆன்மாவை கடவுளுடன் இணைக்கும் போதோ, அல்லது பிரம்மனாக மாறும் போதோ, இந்த கண்கள் திறக்குமாம். மனிதர்கள் தங்களின் மூன்றாவது கண்ணை திறக்கும் நிலை வரும் வரை, ஆன்மா இந்த உலகத்தில் இருந்து விடுபடாது.


வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து ள்ளனர். பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் அடிக்கடி வந்து செல்கின்றார்கள், பூமி முழுவதும் அவர்கள் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றவாறு பல செய்திகள் அன்றாடம் வெளி வந்த வண்ணமே இருக்கின்றது.

   
இருந்தாலும் உண்மையில் பூமி வாசிகளுக்கு அவ்வாறான பிரபஞ்சங்களுக்கு இடையே ஓர் விண்வெளி பயணத்தினை மேற்கொள்ள முடியவில்லை என்ற கேள்விக்கு இன்று வரை விளக்கம் கிடைக்கவில்லை வேற்றுக்கிரகவாசிகள் பூமியைத் தாக்கவும் ஆயத்தமாகி வருவதாக மேற்குலக ஊடகங்களில் அதிக செய்திகள் வெளிவருகின்றன.ஆனாலும் அது சாத்தியம் எனவும் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு எவ்வாறு வந்து செல்கின்றார்கள் என்ற கேள்விக்கும் கருந்துளை என்பதை வழியாக காட்டுகின்றார்கள் விஞ்ஞானிகள்.

கருந்துளை எனப்படுவது தனது எல்லைக்குள்ளே செல்லும் ஒளி உட்பட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியில் இருக்கும் ஒரு பகுதியாகும். குறிப்பாக ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் இதில் இருந்து தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பது எதனையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. அதே சமயம் நட்சத்திரங்களின் இறுதிக்கட்டத்திலேயே கருந்துளை உருவாகி வருகின்றதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான மர்மமான கருந்துளைகள் மூலமாகவே ஓர் உலகில் இருந்து மற்றொரு உலகிற்கு வேற்றுக்கிரக வாசிகள் பயணிக்கின்றார்கள் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் இதனை ஒப்பு கொண்டுள்ளார். அத்தோடு பூமி முழுவதும் இவ்வாறான கருந்துளைகள் நிறைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதோடு, அவ்வாறான கருந்துளைகள் அளவில் மிகச் சிறியதாக இருக்கும் காரணத்தினால் அவற்றை எம்மால் கண்டு பிடிப்பது இலகுவானது இல்லை.

மேலும் குறிப்பிட்ட நேரத்தில் இவை உருவாகி மறைந்து விடுவதால் அதனை எம்மால் பயன்படுத்திக் கொள்ள முடிவது இல்லை. என்றாலும் அவ்வாறான கருந்துளைகளை செயற்கையாகவும் உருவாக்க முடியும். அதனை கண்டு பிடித்து விட்டால் வேரு பிரபஞ்சத்திற்கு எம்மால் பயணிப்பது இலகு எனவும் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.

இதே வகை கருத்து வேற்றுக்கிரக வாசிகள் பூமியை வந்து செல்வதிலும் ஒத்துப்போகின்றது. அதாவது குறிப்பிட்ட நேரப்பகுதியில் மட்டுமே வேற்றுக்கிரகவாசிகளின் கலங்கள் பூமியில் காணப்படுகின்றது. எங்கே வருகின்றார்கள்? எப்படி வருகின்றார்கள்? என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கின்றது. ஆக அவர்களின் பாதை இவ்வாறான கருந்துளைகளே எனவும் அடித்துக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்து போனது எமது சூரியனில் இருந்து வேற்றுக்கிரகவாசிகள் சக்தியை உறுஞ்சுவதாக அண்மையில் நாசா வெளியிட்ட காணொளி. இதன் மூலம் வேற்றுக்கிரக வாசிகள் எத்தகைய கதிர் தாக்கத்தையும், வெப்பத்தினையும் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பத்தில் பயணிக்கின்றார்கள் எனவும் கூறப்படுகின்றது.

அவர்கள் நட்சத்திரங்களின் சக்திகளைப் பயன்படுத்தி அதன் மூலமாகவே வேரு உலகங்களுக்கு பயணம் செய்கின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. எப்படி எனினும் அந்த அளவிற்கு தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடைந்த வேற்றுக்கிரக வாசிகளின் தொழில் நுட்பத்தை நாம் நெருங்க இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கும் என்பது தெரிய வில்லை.

ஆனாலும் அவர்கள் திடீரென்று பூமியைத் தாக்குவார்கள் எனில் நரகத்தை கண்முன்னே காட்டிவிட்டு சென்று விடுவார்கள் என்ற அச்சம் தற்போது மேற்குலகத்தில் அதிகமாக நிலவி வருகின்றது. ஆனாலும் எப்போதும் அதற்கு தயாராக எமது பூமின் சக்திக்கு ஏற்ப அதி பயங்கர ஆயுதங்களும் உருவாக்கப்பட்டும் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் வரலாற்றை கொஞ்சம் பின்சென்று அதாவது இருபது ஆயிரம் வருடங்களுக்கு முன் சென்று கடலில் மூழ்கிய ஓர் தனி உலகிற்கு சென்று பார்க்கலாம். பயப்பட வேண்டாம் நீண்ட தூரப் பயணம் என்ற அச்சமும் வேண்டாம் நான்கு அல்லது 5 நிமிடத்தில் முடிந்து விடும். ஆனாலும் அவசியமான தொன்று என்பது இறுதியில் புரியும். தனக்கே உரிய சிறப்பினால் உலகுக்கே எச்சரிக்கை விடுத்தான் அன்றைய வீரத் தமிழன் அவன் சேர்த்து வைத்த பெருமையை இப்போது நாம் காத்துக் கொண்டு வருகின்றோமா என்பது கேள்விக் குறிதான். நாவலன் தீவு அல்லது குமரிக்கண்டம் என்றும் இப்போது லொமூரியா எனவும் வரலாற்றில் பதிவான ஓர் இடத்தை நோக்கிய பயணமே அது. நம்மில் பலருக்கு தெரிந்த கதைதான் இது ஆனாலும் நவீன காலத்திற்கு தொடர்புண்டு.

   
இந்த கண்டம் முழ்கிப்போனாலும் கூட அழியவில்லை இன்றும் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. அது உயிர் இயக்கமல்ல சிறப்பு. அந்த வரலாற்று இயக்கமே இன்று தமிழர் தனித்துவத்தையும் பெருமையையும் உலகுக்கு பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றது.

அந்த குமரிக்கண்டத்திலேயே தமிழர் கலாச்சாரம் தோன்றியது, அதே இடத்தில் தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த குமரிக்கண்டமே தமிழரின் மூதாதையர் பிறப்பிடம், அதனையும் தாண்டி இப்போது நான் எழுதி நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் தமிழ் அங்கே தான்பிறந்தது என்பது ஆய்வாளர் கூற்று மட்டுமல்ல உண்மையும் கூட.

பல மர்மங்களின் பிறப்பிடமும் இதுவே, வரலாற்றில் இன்று வரை விளக்க முடியாத அதிசயங்களை கொண்ட இந்த குமரிக்கண்டம் இன்று கடலுக்கடியில் மௌனமாக உறங்கிக் கொண்டு இருக்கின்றது.

மௌனமும் எழுச்சியும் தமிழருக்கே உரிய திமிர், வீரம் என்பன போன்றதே என்பது இங்கு நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

அப்போது பிரம்மாண்ட சிறப்புடன் திகழ்ந்த ஓர் நாடாக இருந்த தனித் தமிழ்க் கண்டத்தின் இன்றைய நிலை தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை உட்பட பல சிறு சிறு தீவுகளாக சிதறிப்போய் உள்ளது.

சிதறுவதும் இணைவதும் கூட தமிழரிடம் உள்ள இன்னுமோர் அம்சம் அல்லது பிரச்சினை என்றும் கூறலாம்.

உலகின் மிகத் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் கூட 4000 வருடங்கள் முந்தையதே. நக்கீரர் தனது இறையனார் அகப்பொருள் என்ற நூலில் முத்தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் இடை விடாது தொடர்ச்சியாக நடைபெற்று வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

முதற் சங்கத்தில் இந்த கடலடியில் உள்ள தென் மதுரையில் கி.மு 4440களில் 4449 புலவர்களுடனும் சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் ஆகிய நூல்களை இயற்றப்பட்டுள்ளது.

இயற்றப்பட்டு என்ன பயன், இப்போது அதனைக் காக்க முடியாமல் போய் விட்டோமே அதனால் இவை அனைத்துமே அழிந்து விட்டது என்பது வேதனை.

இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம் நகரத்தில் கி.மு 3700களில் 3700புலவர்களுடன் அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டு இப்போது அதில் எஞ்சியது தொல்காப்பியம் மட்டுமே.

அடுத்த தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு 1850 களில் 449 புலவர்களுடன் அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

இதன் மூலம் தெளிவாகின்றது என்னவென்றால் தமிழ் வரலாறு படிப்படியாக அழிந்து வந்தது என்பதே. இப்போதும் இது தொடர்கதையாக இருப்பது யார் செய்த குற்றம் என்பது தெரியாது.

இந்த வரலாறு பலருக்கும் தெரிந்த கதைதான் ஆனாலும் இதில் இருந்து ஒன்று தெளிவாகின்றது ஆண்டாண்டு காலமாக தமிழர் என்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அருகி வரத் தொடங்கியுள்ளனர்.

இந்த குமரிக்கண்ட வரலாற்றினை தொல் பொருள் ஆய்வாளர்களும் கூட ஏற்றுக் கொண்ட போதும் இன்று வரை இருக்கு ஆனால் இல்லை என்ற வகையில் தான் தொடருகின்றது.

எப்போதே புதைந்து போனதை இப்போது தோண்டி எடுத்தால் மட்டும் போதாது அது நாளைய வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும் இல்லாவிடின் அதனால் எந்த வித பெருமையும் இல்லை தேவையும் இல்லை.

இப்படி வரலாறு அழிந்ததற்கு காரணம் ஆவணங்கள் முறையாக பாதுகாக்கப்படாமையே, உதாரணமாக இப்போது யாழ் நூலகங்கள் எரிக்கப்பட்டமைக்கு மன்னிப்பு கோருவதால் எதுவுமே மாறாது.

உடைந்த கண்ணாடியை மறுபடியும் ஒட்டினாலும் கூட அதன் பிம்பம் மாறியே தெரியும் என்பதே நிதர்சனம். இங்கு மறுபடியும் ஆரம்பத்திற்கு சென்று பார்த்தால்.,

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்னது எம் மரபுதான் ஆனாலும் தண்டிப்புகள் எதனையும் திருத்தி விடாது மன்னிப்பும் கூட தமிழருக்கு உரித்தானது தான்.

அந்த மன்னிப்போடு அடுத்த தலைமுறைக்கு புதிய வரலாற்றை படிப்பிக்காமல் திருத்தப்பட்ட வரலாற்றை புகுத்தாமல் தனித்துவத்தை சொல்லுங்கள் தமிழ் 2000 வருடங்கள் அல்ல 20000 ஆயிரத்திற்கும் பழமையானது எம் தமிழ் என்று.

சில அப்பா மார்களின் துணிச்சலை பாராட்டாமல் இருக்கவே முடியாது. இங்கே பாருங்கள் தனது மகளை மட்டும் அல்ல, அவரது நண்பியையும் அப்பா காப்பாற்றியுள்ளார். குறித்த தந்தை ஒரு நிஞ்சா பாதுகாப்பு கலை நிபுணர் என்று கூறப்படுகிறது. தனது பிள்ளை இருக்கும் பக்கம் அவர் திரும்பும் வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் வருவதை அவதானித்த அவர். உடனே இரண்டு பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு பின் நோக்கி நகர்ந்துள்ளார். 

இன்ரர் நெட் பாவனையாளர்கள் பலரை கண்ணீரில் மூழ்கடித்த புகைப்படமாக இது உள்ளது. சுமார் 1 வருடங்களுக்கு முன்னர் திருமணமான தம்பதிகள் இவர்கள்.

அவர் கர்பிணியாக இருக்கும் வேளை தான் அந்த அதிர்ச்சி சம்பவத்தை கேள்வியுற்றார். தனது கணவருக்கு மூளையில் புற்று நோய் ஏற்பட்டுள்ளது என்று.

மூளையில் ஏற்படும் இந்த புற்று நோய் கட்டியை அகற்றினால், அவர் இறந்துவிடுவார். அகற்றாவிட்டாலும் இறந்துவிடுவார் என்ற நிலை தோன்றியது. இதனால் மருத்துவர்கள் அவர் வாழும் நாள் வரை வாழட்டும் என்று கூறிவிட்டார்கள்.

மூளை புற்று நோய் முற்றிய கட்டத்திலேயே கண்டறியப்பட்டதால் மருத்துவர்களால் எதனையும் செய்ய முடியவில்லை. கணவர் இறக்க முன்னரே பிள்ளை பிறந்துவிட்டது.

ஆனால் சில நாட்களில் கணவர் இறந்து போக , கைகளில் பிள்ளையோடு கதறும் ஒரு உண்மையான மனைவி: பாசம் என்பது இது தான் . அதற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை. இதற்காக தான் பூமி இன்னும் சுற்றுகிறது.


பிரபல தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜெசிக்கா. இவர் பல்வேறு ஆல்பங்களுக்காக பாடல்களை இதுவரை பாடியுள்ளார்.

இவரது குரலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த அளவிற்கு தனது குரலினாலும், குணத்தினாலும் அனைவரது மனதிலும் குடிகொண்டுள்ளார் இவர்.

இவர் தற்போது றெக்க படத்தில் வரும் 'கண்ண காட்டு போதும்' பாடலை பாடி வெளியிடுள்ளார். அந்த பாடல் இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடியது. அவரின் குரலுக்கு இணையாக பாடி அசத்தியுள்ளார் ஜெசிக்கா.

நேற்று முன் தினம் துருக்கிக்கான ரஷ்ய உயர்ஸ்தானிகர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பான பல வீடியோக்கள் வெளியாகிய போதும் குறித்த இந்த வீடியோவை முன்னால் உள்ள ஒரு நபர் தனது மோபைல் போனில் எடுத்து தற்போது வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரே உயர்ஸ்தானிகரை சுட்டுக் கொன்றுள்ளார். இதில் 3க்கும் அதிகமான நபர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்.



நீதா மற்றும் முகேஷ்… ஆனந்த் அம்பானி இளைய மகன், அவர் மேடையில் முதன் முறையாக தோன்றிய போது அனைவருக்கும் அதிர்ச்சி.

காரணம் குட்டி யானை போல நடந்து வந்தார். வயது 21 மட்டுமே 110 கிலோ. அள்ள அள்ள குறையாத பணம் கொட்டிக் கிடக்க உலகிலேயே மிக அதிக விலை கொண்ட மெகலன் விஸ்கி தான் சாப்பிடுவார்.

அதன் விலை ஒன்பது கோடி ரூபாய்க்கும் மேலே.! ஒரே வாரத்தில் அந்த விஸ்கி காலி ஆகி விடும். மீண்டும் வாங்குவார். ஆனால், உடலில் நிறைய பிரச்னை ஏற்பட்டது.

நூற்றி எட்டு கிலோ என்பதால் மூச்சிறைப்பு,ஆஸ்துமா, சைனஸ், என பல கோளாறுகள். பார்த்தார் அப்பா முகேஷ் அம்பானி.

வெளிநாட்டில் இருந்து மருத்துவரை வர வைத்தார். மூன்று மாத காலம் பல கோடிகள் அந்த டயட்டீசியனுக்கு. ஆனந்த் அம்பானியை பிழிந்து எடுத்து விட்டார்.

விஸ்கி பாட்டிலை உடைத்தெறிந்தார் அந்த பயிற்சியாளர். வெறும் க்ரீன் டீ தான். பகல் பூராவும் ஏதாவது பயிற்சிகள். கடுமையான ஜிம் பயிற்சி. நாக்கு தள்ளி விட்டது.

மூன்று மாதம் கழித்து ஆனந்த் வெளியே வந்த போது ஆடிப் போய் விட்டார் அப்பா அம்பானி. ஐம்பது கிலோ குறைந்து சிறுவன் போல தோன்றினார் ஆனந்த்.

இப்போது ஆனந்த் வெறும் க்ரீன் டீ மட்டுமே குடிக்கிறார்.

மூன்று நாட்களாக உணவின்றி சுவரின் இடுக்குக்குள் சிக்கி தவித்த சிறுவன் ஒருவன் பிரதேச வாசிகளால் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவமொன்று நைஜிரியாவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

நைஜிரியாவின் ஒன்டோ பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒடுடூவா பகுதியில் வசித்து வந்த அதுர்காபெமி சகா என்ற 12 வயதுடைய ஏழைச் சிறுவன் தனது வீட்டின் மதிலில் ஏறி விளையாடியுள்ளான்.

இந்நிலையில் குறித்த சிறுவன் மதிலின் 12 அங்குலமான இடுக்கு பகுதியில் விழுந்துள்ளான்.

குறித்த சிறுவன் முடுக்கு பகுதியிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு கூக்குரல் எழுப்பிய போதும் பிரதேசவாசிகள் ஏதோ அமானுஷ்சிய குரல் என நினைத்து கேட்டும் கேட்காமல் சென்றுள்ளனர்.

மூன்று நாட்கள் கடந்தும் தொடர்ச்சியாக அபாய குரல் கேட்கப்படுதை
சந்தேகித்த பிரதேச வாசிகள் அபாய குரல் கேட்கப்படும் இடத்தை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

இதன்போது குறித்த சுவரின் இடுக்கு பகுதியில் பிரதேசத்தின் சிறுவன் சிக்கியிருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக சுவரை இடித்து சிறுவனை காப்பாற்றியுள்ளனர்.

சிறுவன் மூன்று நாட்களாக உணவின்றி ஒரே நிலையில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டமை தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதல் மதிப்பெண்ணையும், 100 சதவீத தேர்ச்சியையும் பெறும பள்ளி ஆகும்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ள இந்த பள்ளயில் இடம் கிடைப்பது என்பது பெரும் அரிதான செயல்.

இப்படி பேரும் புகழும் பெற்ற இந்த பள்ளியில் அன்று ஒருநாள் தலைமை ஆசிரியர் மயங்கி விழுந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். தலைமை ஆசிரியை மயங்கி விழுந்ததற்கான காரணம் அதிர்ச்சி ரகம்.

பள்ளியில் படிக்கும் அனைவரும் வளர்இளம் பருவத்தினர் என்பதால் இந்த பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் ஆகியவற்றை எடுத்துக் கூற மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

அரசு மருத்துவர்கள் இவர்களின் ரத்தம் மற்றும் அனைத்து சோதனைகளையும் செய்தனர். அப்போது தான் மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 மாணவிகளில் 10 மாணவிகள் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

தலைமை ஆசிரியையை தனியாக அழைத்து சென்ற மருத்துவர் அந்த 10 மாணவிகளின் பெயர் பட்டியலை கொடுத்துள்ளார்.

என்ன செய்வது என்று தெரியாத தலைமை ஆசிரியை மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பின்னர் அந்த மாணவிகளின் பெற்றோர் அழைக்கப்பட்டு சம்பவத்தை கூறினர்.

அவர்களும் அதிர்ச்சியடைந்த நிலையில் மாணவிகளை பள்ளியில் இருந்து அழைத்து சென்றனர். செல்போன் வைத்து இருக்கும் மாணவிகள் அவர்களது ஆண் தோழர்கள் மூலம் செக்ஸ் காட்சிகளை பார்க்கின்றனர்.

அவர்கள் உணர்ச்சிக்கு அடிமையாகி அதே ஆண் நணர்களுக்கு இரையாகி விடுகின்றனர்.

இந்த பள்ளி இருக்கும் இடம், நகரமும் கிடையாது. கிராமமும் கிடையாது. இதனால் மாணவிகள் அதிக அளவு ஏமாந்து விடுகின்றனர். அரசு இந்த பள்ளி மாணவிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க முடிவு செய்து பள்ளி நேரங்களில் ரகசிய கண்காணிப்பில் போலீசாரை ஈடுப்படுத்தி உள்ளது.

பள்ளி செல்லும் மாணவிகளை பெற்றோரும் அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும்.

(மாணவிகள் மற்றும் பள்ளியின் நலன் கருதி ஊர் மற்றும் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.)

இஸ்தான்புல் நகரின் மையப்பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 29 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தாக்குதலில் 166 பேர் காயமடைந்ததாகவும் துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார்.

காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.




கோலிவுட்டில் உள்ள பல நடிகர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும் அஜித் ரசிகர்கள் காட்டும் மாஸ்-க்கு அளவே இல்லை

அஜித் பெயரில் ஓட்டல் ஆரம்பிப்பது, அஜித் போட்டோவை பஸ்ஸில் ஒட்டுவது, என தமிழகத்தில்தான் அஜித் பெயர் மாஸ் ஆகி வருவதை அவ்வப்போது பார்த்துள்ளோம்.

ஆனால் மலேசியாவில் அஜித் நடித்த படங்களின் பெயரால் கிளப்புகள் திறக்கப்பட்டுள்ளது. ஆம், 'மங்காத்தா', பெயரிலும் 'வேதாளம்' பெயரில் புதிய கிளப்புகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

இந்த கிளப்புகளில் மற்ற கிளப்புகளை விட மிக அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கின்றது என்பதை சொல்லவும் வேண்டுமா?>

கொச்சி பகுதியில் உபேர் கால் டாக்ஸியை புக் செய்த பெண்ணை அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சி ரயில் நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு பயணிப்பதற்காக வித்யா என்ற பெண் உபேர் கால் டாக்ஸியை புக் செய்துள்ளார்.

அவர் டாக்சியில் ஏறியதை கண்ட ரயில்நிலைய ஆட்டோ டிரைவர்கள், அவர் புக் செய்த டாக்ஸியை மறித்து, அதில் பயணிக்க கூடாது, ஆட்டோ அல்லது, ரயில் நிலையத்தில் உள்ல டாக்ஸியில் பயணிக்குமாறு மிரட்டுயுள்ளனர்.

இதை வீடியோவாக பதிவு செய்த வித்யா, தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ , பலர் இந்த வீடியோவை ஷேர் செய்தும், இதேபோன்ற அவர்களுடைய அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டும் வித்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண், கல்லூரி மாணவனை இழுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் நெல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் – நெல்லை மாவட்டம் பேட்டை செந்தமிழ் நகரை சேர்ந்த தம்பதியினரின் மகன், ஒரு நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. சிவில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். வீட்டில் இருந்த படி அவர் தினமும் அவர் கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், கடந்த திங்கட் கிழமையன்று கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவே இல்லை. நண்பர்கள், உறவினர்கள் என எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் பதட்டமடைந்த மாணவரின் பெற்றோர் நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவற்துறையினரின் விசாரணையில், பேட்டை, எம்.ஜி.டி நகரைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் அவர் சென்றுவிட்டார் என்பது தெரிய வந்தது.

அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 3 பேருடன் திருமணம் நடந்துள்ளது. ஒவ்வொருவரிடம் சில ஆண்டுகள் மட்டுமே குடும்பம் நடத்தும் அவர், அவ்வப்போது கணவரை மாற்றி வந்தார். அவருக்கு 2 குழந்தைகளும் இருக்கிறது.

தற்போது 4-வதாக பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவரின் பராமரிப்பில் அவர் இருந்து வந்துள்ளார்.

அந்த ஆணும் ஏற்கனவே திருமணமானவர். எனவே, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல், அவருடன் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

அந்த நிலையில்தான், அந்த பெண், கல்லூரி மாணவரை தன்னுடைய வலையில் அவர் சிக்க வைத்துள்ளார்.

கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு, அந்த பெண்ணின் விட்டிற்கு சென்று தங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார் அந்த மாணவர்.

தற்போது அந்த மாணவனை இழுத்துக் கொண்டு அந்த பெண் தலைமறைவாகி விட்டார்.

அவரின் 2 குழந்தைகளையும் அவருடனேயே அழைத்துச் சென்றுள்ளார்.

அடிக்கடி தங்கள் இருப்பிடத்தை அவர்கள் மாற்றிக் கொண்டே இருப்பதால் அவர்களை பிடிக்க காவற்துறையினர் போராடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் நெல்லை பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க வழிகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதத்தில், குழந்தையின் எடையானது 1.5 – 1.8 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறக்கும் போது, அதன் எடை ஆரோக்கியமான அளவில் இருக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் மருத்துவர் வயிற்றில் வளரும் குழந்தை எடை குறைவாக உள்ளதாக கூறினால், குழந்தையின் எடையை அதிகரிக்க கர்ப்பிணிகள் முயல வேண்டும்.

• கர்ப்பத்தின் கடைசி மூன்று மாத காலத்தில் தினமும் உட்கொள்ளும் கலோரிகளை விட கூடுதலாக 300 கலோரிகளை எடுக்க வேண்டும். அதற்கு பழங்கள், புரோட்டீன் உணவுகள், முழு தானியங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை சற்று அதிகமாக சாப்பிட வேண்டும்.

• அன்-சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த உணவுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், தொப்புள் கொடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். ஆகவே ஆலிவ் ஆயில், நட்ஸ், அவகேடோ, விதைகள், சால்மன் மீன் போன்றவற்றை சற்று அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும்.

• மன அழுத்தம் அல்லது பதற்றத்துடன் இருந்தால், அது உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்து, குழந்தையின் எடையைப் பாதிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க, யோகா, தியானம் போன்ற மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

• பொதுவாக மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். அந்த வைட்டமின் மாத்திரைகளை எடுத்து வருவதன் மூலம், குழந்தைக்கு கூடுதலாக சத்துக்கள் கிடைத்து, குழந்தையின் எடை ஆரோக்கியமாக இருக்கும்.

ஒருவரின் எதிர்காலம், அதிர்ஷ்டம் போன்றவை எப்படி இருக்கும் என்பதை பழங்காலத்தில் கைரேகைகளைக் கொண்டு ஜோதிடர்கள் கணித்து வந்தனர். கைரேகைகளானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். கையில் உள்ள 4 முக்கிய ரேகைகளைத் தவிர, சிலருக்கு நடுவிரல் மற்றும் மோதிர விரல்களுக்கு அடியில் வளைந்த நிலையில் ஒரு ரேகை செல்லும். இப்படி நடுவிரல் மற்றும் மோதிர விரல்களுக்கு அடியே வளைந்தவாறு செல்லும் ரேகை ஒரு வட்ட வளையத்தை உருவாக்கும்.

இது தான் சுக்கிர வளையம் அல்லது காதல் பெல்ட்.ஒருவேளை இந்த ரேகை இல்லாவிட்டால் கவலைப்பட வேண்டும். இது அனைவருக்குமே இருக்காது. மிகவும் சென்சிடிவ்வானவர்கள் மற்றும் காதல்பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு தான் இருக்கும். கையில் உள்ள முக்கிய ரேகைகளில் ஒன்று தான் இதய ரேகை. இந்த ரேகை சுண்டு விரலின் கீழே ஆரம்பமாகி நடுவிரல் அல்லது ஆள்காட்டிவிரலை நோக்கி சென்றவாறு இருக்கும். உங்களுக்கு படத்தில் காட்டப்பட்டவாறு, இதய ரேகை நடுவிரலின் மேலே ஏறுவது போன்று இருந்தால், நீங்கள் மிகவும் புத்திசாலி, லட்சியக்காரர் மற்றும் யாரையும் சார்ந்த வாழ விரும்பாதவர்களாக இருப்பர்.

ஆனால் நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவும் சிறப்பானதாக இருக்கும் மற்றும் சுயநலவாதியாக இருப்பர். ஒருவேளை உங்கள் இதய ரேகை படத்தில் காட்டப்பட்டவாறு நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கு இடையே சென்றால், கருணை உள்ளம் மற்றும் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பர்.

அதே சமயம் அதிக உணர்ச்சிவசப்படுவீர்கள். இதய ரேகை ஆள்காட்டி விரலின் மேலே ஏறினால், நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பர். முக்கியமாக இந்த வகையினர் எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும், மனம் தளராமல் எதிர்கொள்வர் மற்றும் எப்போதும் சந்தோஷமாக இருப்பர். இந்த வகையான இதய ரேகையைக் கொண்டவர்கள், பொறுமைசாலி, அக்கறையுள்ளவர்கள்,

அமைதியானவர்கள் மற்றும் அநியாயத்திற்கு நல்லவர்களாக இருப்பர். மொத்தத்தில் தன்னலமின்றி, பிறர் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பர். 

நாம் அனைவருமே அழகான பொலிவான முகத்தை பெற விரும்புவோம். அதற்காக கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கி முகத்திற்கு பயன்படுத்தி வருகின்றோம். நம் முகத்தின் அழகை நிரந்தரமாக எப்போதும் பொலிவாக வைத்துக் கொள்வதற்கு நம் வீட்டிலேயே உள்ளது சிறந்த பொருட்கள்.

பப்பாளி: பப்பாளி இயற்கையாகவே சிறந்த மருத்துவக் குணம் கொண்ட ஒரு பழ வகையாகும். எனவே தேவையான அளவு பப்பாளி பழத்தை கூழ் போல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் 1/2 டீஸ்பூன் சந்தனம், 4 துளி ரோஸ் வாட்டர், 1/4 டீஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல செய்துக் கொள்ள வேண்டும். பின் இந்த பேஸ்ட்டை நம் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 30 நிமிடம் கழித்து சூடான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் அகற்றப்பட்டு முகம் பொலிவாக இருக்கும்.

வாழைப்பழம்: வாழைப்பழம் நமது சருமத்தை மென்மையாக்கும் தன்மைக் கொண்டது. எனவே வாழப்பழத்தை அரைத்து, அதனுடன் 3/4 டீஸ்பூன் தயிர் மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றைக் கலந்து நம் முகத்திற்கு பேஸ்பேக் போட்டு, 20 நிமிடம் கழித்து காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் நமது முகத்தின் கருமை நிறம் மாறி பிரகாசமாக இருக்கும்.

தக்காளி: தக்காளி நமது சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் சருமத்தை நீக்கும் தன்மைக் கொண்டது. எனவே தக்காளிச் சாறுடன், சிறிதளவு சர்க்கரையை கலந்து கொள்ள வேண்டும். பின் இதை நம்முடைய முகத்தில் தடவி, மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இதனால் நம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் எண்ணெய் சருமங்களை தடுத்து, பளபளப்பான சருமத்தின் அழககைத் தருகிறது.

தர்ப்பூசணி: தர்ப்பூசணி பழமானது, நமது சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் அழுக்குகள் ஆகியவற்றை நீக்கி சருமத்தைப் பொலிவுறச் செய்கிறது. 2 டேபிள்ஸ்பூன் தர்ப்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் சாறு எடுத்துக் கொண்டு அதனுடன் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் பால் பவுடரைக் கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். பின் இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து நீரில் கழுவினால், முகம் பளபளப்பாக இருக்கும்.

ஆப்பிள்: ஆப்பிள் பழத்தினை தினமும் சாப்பிட்டு வந்தால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆப்பிள் பழத்தை பேஸ்ட் செய்து, அதனுடன் 1 டேபிள்ஸ்பூன் தேன் கலந்து, அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, சூடான தண்ணீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகள் பளபளப்பாக இருக்கும்.

வெள்ளரிக்காய்: 1 டேபிள்ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதை காட்டன் பஞ்சைக் கொண்டு முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து, சூடான தண்ணீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

இத்தாலியில் நபர் ஒருவர் தமது மனைவி பிரிந்து செல்வதாக கூறியதை அடுத்து அவரை நெருப்பு வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் ஃபார்மியா எனும் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

42 வயதான Polo Pietropaolo என்பவரின் மனைவி கார்லா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்த நிலையில் இருவருக்கும் இடையேயான வாக்குவாதத்தின்போது கார்லா கூடிய விரைவில் தாம் வேறொரு திணை தேடிச் செல்ல இருப்பதாகவும், வாழ்க்கை வெறுமையாக கடந்து செல்ல தம்மால் அனுமதிக்க முடியாது எனவும் தமது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

 
இதில் ஆத்திரம் அடைந்த பாலோ, அழகான முகவும் வடிவான உடலும் இருப்பதால் தானே தம்மை விட்டு வேறு துணை தேடிச் செல்கிறாள், அந்த அழகை அழித்து விடுகிறேன் என வன்மம் கொண்டுள்ளார்.இந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த கார்லா மீது நெருப்பு வைத்து அவரது முகத்தை சிதைக்க முயற்சித்துள்ளார்.

இந்த கொலை முயற்சியில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் கார்லா.குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்த பொலிசார் நீண்ட நீதிமன்ற விசாரணையின் பின்னர் பாலோவுக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத் தந்துள்ளனர். மட்டுமின்றி கார்லா பெற்றெடுத்துள்ள குழந்தையை பார்க்கவோ சொந்தம் கொண்டாடவோ பாலோவுக்கு அனுமதியும் மறுத்துள்ளனர். கூடவே கார்லா மீது மேற்கொண்ட இந்த கொடூர தாக்குதலுக்கு அபராதமாக 250,000 யூரோ (இலங்கை மதிப்பில் ரூ.393,498,62 கோடி) தொகை வழங்க வேண்டும் எனவும், குழந்தைக்கு 50,000 யூரோ வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில் ராணுவ வீரருக்கும், ராணுவத்தில் அதிகாரியாக இருக்கும் ஒருவருடைய மகளுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. அப்போது மணமகள் வீட்டில் முதலிரவிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அதன்பிறகு மணமகள் முதலிரவு அறையில் தனியாக காத்திருந்தார்.

இந்த நிலையில் அப்போது அப்போது அறையை 2 பெண்கள் தட்டி உள்ளனர். உறவினர்கள்தான் கதவை தட்டுகிறார்கள் என்று மணமகள் கதவை திறந்துள்ளார். அப்போது அந்த பெண்கள் 2 பேரும் தன்னுடைய கையில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலை மணப்பெண் மீது வீசி விட்ட தப்பி ஓடி விட்டனர்.

ஆசிட் பட்டவுடன் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் வலியால் அலறி துடித்தார். மணப்பெண் அலறிய சத்தத்தை கேட்டு வந்த உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிட் வீசிய பெண்களை தேடி வருகின்றனர். ஆசிட் வீச்சால் மணமகள் முகம், கண் ஆகியவவை பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

பெல்ஜியத்தை சேர்ந்த தம்பதி ஜேன்- மோனிகா, கடந்த 1993ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தோனேஷியாவை சேர்ந்த மோனிகாவை, கடும் சட்டதிட்டங்களை கடந்து ஜோன் பெல்ஜியம் அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஜோன் கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு பிறகு தற்போது தன்னோடு குடும்பம் நடத்தி வந்த தன்னுடைய மனைவி பிறவியிலேயே பெண் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் ஜோனின் மனைவி மேனிகா பாலியல் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர் என்பதையும் ஜோனுக்கு தற்போது தான் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டெல்லியில் பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. தலைநகர் டெல்லியில் பலாத்கார சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. தற்போது மகளை தந்தை பலாத்காரம் செய்த வக்கிர சம்பவமும் நடந்துள்ளது.டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார் பாதிக்கப்பட்ட சிறுமி. இவரது தாய் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டில் சிறுமி தனியாக இருந்துள்ளார். இந்த நேரத்தில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சிறுமியின் தந்தை அந்த சிறுமியை கட்டிப்போட்டு வாயில் துணியை வைத்து அடைத்து பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் இது பற்றி வெளியில் சொன்னால் சிறுமியையும், அவரது தாயையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் வெளியில் சொல்ல முடியாமல் மனதில் புழுங்கி வந்த சிறுமியை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை வீட்டில் யாரும் இல்லாததால் மீண்டும் சிறுமையை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார் அவரது தந்தை. இதனால் மனமுடைந்த சிறுமி தனது பள்ளி ஆசிரியரிடம் இது குறித்து கூறி அழுதுள்ளார். மாணவி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதனையடுத்து அந்த காமுக தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கியூபாவின் நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ரோ இன்று காலமானார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2008ம் ஆண்டில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்றைய தினம் உயிரிழந்தார் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

1926 ஆகஸ்டு 13 – கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ பிறந்தார்.

காஸ்ட்ரோவின் தந்தை ஏன்ஜல் காஸ்ட்ரோ. காஸ்ட்ரோ குடும்பம் மிகவும் நடுத்தர குடும்பம்.

ஏன்ஜல் காஸ்ட்ரோ ஒரு பண்ணையார். ஏன்ஜல் ரஸ் காஸ்ட்ரோ ஸ்பெய்னில் இருந்து கியூபாவுக்கு பிழைக்க வந்தவர் என்கிறார்கள்.

கியூபாவின் ஓரியன்ட் மாகாணத்தில் குடியேறினார். ஏன்ஜல் காஸ்ட்ரோ கடுமையாக உழைத்து ஒரு பண்ணையார் ஆனார்.

அவரின் கீழ் ஆயிரக்கணக்கான கியூபர்கள் வேலை பார்த்தார்கள். 1940 ஏக்கர் நிலத்திற்கு உரிமையாளர் ஆனார் ஏன்ஜல். பிடலின் தாய் லினா, இவர் ஒரு க்யூப பெண்மணி. ஏழை விவசாயின் மகள்.

இத்தம்பதிக்கு முதல் குழந்தையாக காஸ்ட்ரோ பிறந்தார். மேலும் காஸ்ட்ரோ பிறந்த பின்னரே இத்தம்பதியினர் திருமணம் செய்து கொண்டிருந்தனர்.

அதனால் சிறுவன் காஸ்ட்ரோவிற்கு அவனது பெற்றோரின் திருமணத்தை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. பிடல் இயற்கையாகவே ஏழைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.

1930 ல் கியூபாவில் பொருளாதார நெருக்கடி காரணமாக காஸ்ட்ரோ தமது ஐந்து வயதில், சான்டியாகோ டி-க்யூபா சென்றார்.

ஏஞ்சலின் குடும்ப நண்பர் வீட்டிற்கு காஸ்ட்ரோவும் அவரது சகோதர சகோதரிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஏஞ்சலின் குடும்ப நண்பர் ஒரு ஆசிரியர்.

ஆனால் மிகவும் ஏழை. அதனால் ஏஞ்சல் குழந்தைகளுக்கு அனுப்பும் பணத்தை அந்த முழுக் குடும்பமும் பகிர்ந்துக்கொண்டது. இதனால் காஸ்ட்ரோவின் சகோதரிகள் அனைவரும் வீடு திரும்பிவிட்டனர்.

ஆனால் காஸ்ட்ரோ மட்டும் அங்கேயே தங்கி தன்னுடைய படிப்பை தொடங்கினார். சான்டியாகோ டி-கியூபாவில் லா சேல் எனும் பள்ளியில் காஸ்ரோ படித்தார். பின் காஸ்ட்ரோ டோலோரஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

1941 ல் காஸ்ட்ரோ பெலன் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு படிக்கும்போதே காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசம் எனும் பெயர் தெரியவந்தது. 1945 -ல் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது காஸ்ட்ரோ உயர்கல்வியை முடித்திருந்தார்.

ஸ்பானிய உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது.. காஸ்ட்ரோவிற்கு அப்போது கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது.

ஆனால் அவர்களை எல்லோரும் ஒதுக்கிவைத்தார்கள் என்பது மட்டும் அவருக்கு தெரியும். நாட்கள் செல்ல செல்ல காஸ்ட்ரோவும் கம்யூனிசத்தை மறந்து போனார்.

பின் காஸ்ட்ரோ 1945 ல் ஹவானா பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றார். இங்குதான் காஸ்ட்ரோ கம்யூனிசவாதியாகப் பரிமாணம் பெற்றார்.

கியூபாவின்ச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார்.

கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.

கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார்.

49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே.

சர்வதேச அளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து 93 மைல் தூரத்தில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும்.

இதைவிட ரஸ்யா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ரஸ்யாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.

இவர், ஹவானா பல்கலைகழகத்தில் சேர்ந்த பிறகு சிறிது சிறிதாக அரசியலால் ஈர்க்கப்பட்டார். கல்லூரி அரசியலில் பங்கு கொண்டார். அப்போது இரண்டு முக்கிய கட்சிகள் மாணவர்கள் மத்தியில் இயங்கி கொண்டிருந்தன.

ஒன்று 1925-இல் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று ஜோஸ் மார்த்தியை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட ஆர்த்தோடாச்சோ கட்சி. காஸ்ட்ரோ கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். முதல் வருடமே பிரச்சாரத்திலெல்லாம் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.

ஜுலை 26, 1953 ல் மொன்காடாத் ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார் காஸ்ட்ரோ. நன்றாக திட்டமிடப்பட்டிருந்தும் பிடெலின் வண்டி கோளாறு காரணமாகவும், இருட்டில் மற்ற வீரர்கள் வழி தவறியதாலும் அந்த தாக்குதல் தோல்வியை தழுவியது.

காஸ்ட்ரோவும் மாட்டிக்கொண்டார். 1953 ல் காஸ்ட்ரோவின் வழக்கு நீதி விசாரணைக்கு வந்தது. காஸ்ட்ரோ புரட்சிக்கு திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார்.

இதேவேளை பாடிஸ்டாவின் அரசையும் தோலுரித்துக்காட்டினார்; அமெரிக்காவைக் கடுமையாக சாடினார். நீதி மன்றத்தில் ஃபிடெல் நிகழ்த்திய இந்த உரையே பின்னாளில் ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ (THE HISTORY WILL ABSOLVE ME) என்று வெளிவந்த நூலாகும். பின் மே 15 1955 ல் காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோ கொரில்லா முறை தாக்குதல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

கியூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வியை காஸ்ட்ரோ அறிமுகப்படுத்தினார். 1995 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவிகிதம் 96 ஆகும்.

மேலும் கியூபாவின் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிபவர்களில் 60 சதவிகிதத்தினர் பெண்கள் ஆவர். மருத்துவ துறையிலும் கியூபர்கள் சிறந்து விளங்கினர். மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவாக

உணவு செரிமானமின்மையால் பிடெல் 2008 ஆம் ஆண்டில் பதவிவிலகினார். அவருக்கு பின் அவரின் தமையன் ராவுல் காஸ்ட்ரோ அதிபராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குழந்தைக்கு தேவையான அறிவும், அரவணைப்பும் தங்களது பெற்றோரிடம் இருந்தே அதிகமாக கிடைக்கின்றன.

தந்தை அறிவை போதித்தால், தாய் அன்பை போதிக்கிறாள். இப்படி நாம் குழந்தையாய் இருக்கும்போதே பெற்றோரிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பும் அரவணைப்பும் சரியான முறையில் கிடைத்தால், எதிர்காலத்தில் வெற்றிபெற்ற நபராக இந்த சமுதாயத்தில் திகழ்வோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், இளம் வயது குழந்தைகளே, பெற்றோர்கள் ஆனால் வாழ்க்கை என்ன ஆவது?

இதோ உலகின் இளம் வயது அம்மாக்கள்

Alfie Patten & Chantelle Stedman
Alfie Patten என்ற 13 வயது சிறுவனுக்கும், இவரது காதலியான 15 வயது Chantelle- க்கும் குழந்தை பிறந்துள்ளது.

April Webster and Nathan Fishbourne
இளம் வயது பெற்றோர்களின் வரிசையில் April Webster மற்றும் Nathan Fishbourne ஆகிய இருவரும் இணைந்துள்ளனர். இருவருக்குமே 14 வயது தான். இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Ionel Stanescu and Rifca Stanescu
11 வயதான Rifca Stanescu தனது காதலனான Ionel- ஐ திருமணம் செய்தார். திருமணமாகி ஒரு வருடத்திற்குள் இவருக்கு மரியா என்ற பெண் குழந்தை பிறந்தது.

மரியாவுக்கு 15 வயது சிறுவன் Ion என்பவனுடன் திருமணம் நடந்தது. இதனால் இளம் வயதிலேயே Rifca பாட்டியாகியுள்ளார்.

Lina Medina
பெரு நாட்டை சேர்ந்த Lina Medina 5 வயதில் தாயாகியுள்ளார் என்பது அதிர்ச்சியான செய்தி. இச்சிறுமிக்கு 6 பவுண்ட் எடையில் ஆண் குழந்தை பிறந்தது. இச்சிறுமிதான் உலகிலேயே மிகவும் இளம்வயது தாய் ஆவார்.

Tressa Middleton

பிரித்தானியாவைச் சேர்ந்த இந்த மாணவிக்கு வயது 11. இவரது சகோதரனால் பலாத்காரம் செய்யப்பட்ட இச்சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.

2016ஆம் ஆண்டு தொடக்கம் முதலே பூமியில் வேற்று கிரகவாசிகள் பற்றி அனைத்து இடங்களிலும் பேசி வருகின்றனர். அண்மையில் ஆகாயத்தில் இருந்து வித்தியாசமான பொருட்கள் விழுந்ததாக செய்திகள் வெளியானது.

அதைத்தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி நிலவு பூமிக்கு மிக அருகில் வந்தது. இதை சூப்பர் மூன் தினம் என்று குறிப்பிட்டனர். அன்று பறக்கும் தட்டு ஒன்று புகைப்படத்தில் சிக்கியுள்ளது.

இது வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டு என்று ஒரு சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தக் காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அவ்வப்போது வேற்று கிரகவாசிகள் குறித்து வெளிவரும் தகவல் குறித்து ஆய்வாளர்கள் கூற மறுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தமது பதவி காலம் முடிவடைந்த பின்னர் குடியேறவிருக்கும் புதிய வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதை அடுத்து அவர் குடியேறுவதற்கு என்று புதிய வீடு ஒன்றை அமெரிக்க அரசு ஒதுக்கியுள்ளது. இந்த புது வீட்டின் புகைப்படங்கள் அனைத்தும் பார்ப்பவர்களை மிரள வைக்கும்படியாக உள்ளதாய் கூறுகின்றனர்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதும் ஒபாமா குடும்பம் இந்த புதிய இல்லத்தில் குடியேற இருப்பதாக கூறப்படுகிறது.

வெள்ளை மாளிகையில் இருந்து மிக அருகாமையில் அமைந்துள்ள இந்த இல்லமானது 8,000 சதுர அடி பரப்பளவை கொண்டதாகும்.

இந்த புதிய இல்லத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் அனைத்தும் வெள்ளை மாளிகையில் உள்ளது போலவே வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த புதிய இல்லத்தில் அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய 9 படுக்கை அறைகளும், 8 குளியல் அறைகளும், ஒரு உயர் ரக சமையல் அறையும், விருந்தினர் அறை ஒன்றும், விஸ்தாரமான முற்றமும் கொண்டுள்ளது.

ஒபாமாவின் இளைய மகள் சாஷா மேல்நிலை படிப்பை முடிக்கும் மட்டும் தலைநகரில் குடியிருக்கவே அவர் விரும்புகின்றாராம்.




Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.