February 2017

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குழு மோதல்கள் தொடர்பில் நான்கு பேர் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பிரதான வீதி மடத்தடியிலுள்ள சுகாதார நிலையம் ஒன்றுக்கு அருகில் இரு குழுக்களிடையே கடுமையான மோதல் இடம்பெற்றதால் குறித்த பகுதியில் பதற்ற நிலை நிலவியது.

இந்த சம்பவத்தின் போது அப்பகுதியில் உள்ள முச்சக்கர வண்டியொன்று சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியிலுள்ள வீடுகளின் மேலும் கற்கள் வீசப்பட்டது. இந்த அட்டகாசத்தில் ஈடுபட்ட குழுக்கள் பொலிஸார் வருவதற்கு முன்பாகவே அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதன் போது இரவிரவாக நடத்தப்பட்ட சோதனையின் போது நான்கு பேர் யாழ்பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

அத்துடன் குறித்த அசம்பாவித சம்பவத்தில் ஈடுபட்ட ஏனையவர்களும் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும்.

அப்படி இருக்கும் போது, நமது வீட்டில் அல்லது கோவில் பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம் உங்களுக்கு தெரியுமா?

தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?

தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன், இரண்டாம் கண் லஷ்மி, மூன்றாம் கண் சிவன் என்று போற்றப் படுகிறது.

அப்படி இருக்கும் தேங்காயை நாம் பயன்படுத்தும் போது, அது அழுகி இருப்பது, கோணலாக உடைவது, சிதறு தேங்காய் உடைக்கும் போது சுக்கு நூறாக உடைவது, தேங்காயில் பூ வருவது இது போன்ற அனைத்து விஷயத்திற்கும் நன்மை மற்றும் தீமைக்கான சகுனங்கள் உண்டு.

அந்த வகையில் தேங்காய் உடைக்கும் போது, அது அழுகிய நிலையில் இருந்தால், அவர்களுக்கு அது ஏமாற்றம் மற்றும் கலக்கத்தை கொடுத்து, மனதில் குழப்பத்தை அளிப்பதால், இதை நாம் அபசகுனமாக நினைக்கிறோம் அல்லவா?

ஆனால், உண்மையில் நாம் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால், அது நல்ல அறிகுறி என்றும். அவர்களை அண்டி இருக்கும் தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி போன்றவை அகன்று போகிறது, எனவே இது ஒரு நல்ல அறிகுறி தான் என்று கூறப்படுகிறது.

தேங்காய் கொப்பரையாக இருந்தால் என்ன அர்த்தம்?

நாம் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால், அவர்களின் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்று அர்த்தமாகும்.

தேங்காயில் பூ இருந்தால் என்ன அர்த்தம்?

நாம் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால், அது நமக்கு பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும் ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது.

ஜேர்மனி பணயகைதி தலையை துண்டித்து கொலை செய்து அதை வீடியோவாக பதிவு செய்து ஐஎஸ் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றிருந்த ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த 70 வயதான ஜூர்கன் கான்ட்னர் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐஎஸ்யுடன் தொடர்புடைய அபு சயீப் என்ற பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார்.

அவரை விடுவிக்க வேண்டுமானால் 6 லட்சம் அமெரிக்க டாலர் (இலங்கை மதிப்பில் 8 கோடி) வழங்கவேண்டும் என்று பயங்கரவாதிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஜூர்கன் கான்ட்னரை விடுவிப்பது தொடர்பாக பயங்கரவாத குழுவினருடன் பிலிப்பைன்ஸ் அரசின் தூதர் ஜீசஸ் துரேஸா பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், பணய கைதி ஜூர்கன் கான்ட்ஸாவை பயங்கரவாதிகள் தலையை துண்டித்து கொன்றுவிட்ட தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பான வீடியோ படத்தையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர். இந்த தகவலை பிலிப்பைன்ஸ் அரசின் தூதர் ஜீசஸ் துரேஸா உறுதிப்படுத்தி இருக்கிறார்.

கணவனைக் கொன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவப் பெண் சாமரி லியனகே, இந்த வாரம் விடுதலை செய்யப்படவுள்ளார் என அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இலங்கைப் பெண்ணின், நன்னடத்தை காரணமாகவே அவர் விடுதலை செய்யப்படவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கை மருத்துவப் பெண், தனது கணவனை கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதம் அவர்களது இல்லத்தில் வைத்து சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார்.

இந்த குற்றச்சாட்டு காரணமாக குறித்த பெண்ணுக்கு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

குறித்த பெண் மருத்துவரின் கணவர், சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் துன்புறுத்தல்கள் உட்பட பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்தமையாலேயே இலங்கைப் பெண் தன் கணவரை சுத்தியலால் தாக்கி கொலைசெய்துள்ளார்.

இதேவேளை, சிறைத் தண்டனை நிறைவடைந்த பின்னர்,சாமரி லியனகேவை நாடு கடத்துமாறு அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இருப்பினும், தன்னை நாடு கடத்த வேண்டாம் என அந்நாட்டு குடிவரவு அமைச்சரிடம் சாமரி லியனகே கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை ரத்துச் செய்யப்பட்டிருந்த சாமரி லியனகேயின் விசாவை மீள புதுப்பித்து தருவதாக அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், மீளாய்வு மேற்கொண்டு சாமரி லியனகேவுக்கு அவுஸ்திரெலியாவில் தங்குவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

களுத்துறை பகுதியில் சிறைச்சாலை வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் களுத்துறை சிறைச்சாலையில் கடமை புரியும், காரைத்தீவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன், இதில் 24 வயதான சிவானந்தம் தர்மீகன் எனும் உத்தியோகத்தரே பலியாகியுள்ளார்.

அவரோடு மற்றுமொரு சிறைச்சாலை உத்தியோகத்தரான விஜயரத்ன என்பவரும் கொல்லஇதேவேளை சம்பவத்தில் இரு சிறைச்சாலை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளதுடன் மூன்று அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ப்பட்டுள்ளாமேலும், பாதாள உலக குழுவை சேர்ந்த ஒருவருடன் மொத்தமாக 7 பேர் இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ர்.

தமிழீழ எழுச்சிப் பாடகராக விளங்கி தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதி உன்னத இசைப் பணியாற்றி சாவடைந்த மாமனிதர் எஸ்.ஜீ. சாந்தனின் இறுதி வணக்க நிகழ்வுகள் கிளிநொச்சியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அவரது இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ள எதிர்வரும் 28.02.2017 ம் திகதி செவ்வாய்க் கிழமை அன்றைய தினம் பகல் 11.00 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இறுதி வணக்க நிகழ்வுகளில் கலைஞர்கள், கல்விச் சமூகத்தினர், வர்த்தகர்கள், விவசாயப் பெருமக்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் என அனைவரையும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பகல் மரணமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் படி எஸ்.ஜி.சாந்தன் சாந்தனின் உடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 தொடக்கம் 11.00 வரை ஓட்டுமடம் அன்பன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அன்னாரின் பிரேதம் இரவு 11 மணியளவில் மாங்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பின்னர் நாளை திங்கட்கிழமை அவரது உடல் மு.ப 11 மணியளவில் இறுதிக் கிரியைகளுக்காக கிளிநொச்சியிலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்ட காலத்திலும் கலைத்துறையில் வளர்ச்சிப் பரிமாணத்தில் பின்னிற்கவில்லை. என்பதற்கு காந்தக் குரலோன் சாந்தன் சிறந்த எடுத்துக்காட்டு.

அவரது ஆத்ம சாந்திக்கான இறுதிக் கிரியைகள் கண்ணீருடன் ஆரம்பமாகி உள்ளது.

இந்தியாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய், மனைவி மற்றும் அவர் தோழியை கூலிப்படை வைத்து கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் டெல்லி மாநிலத்தை சேர்ந்தவர் Amarinder Singh . இவர் மனைவி Paramjit Kaur. இவர்களுடன் Amarinder தாய் Daljit Kaurம் ஒன்றாக வசித்து வந்தார்.

Amarinder – Paramjit தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Amarinder நடத்தி வரும் நிறுவனத்தில் அக்கவுண்டண்டாக வேலை செய்யும் Ruby என்ற பெண்ணும், Amarinder-க்கு கள்ளக்காதல் ஏற்ப்பட்டுள்ளது.

இதையறிந்த Amarinder தாயும், மனைவியும் இதை கண்டித்துள்ளனர். தன் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் இருவரையும் கொலை செய்ய Amarinder திட்டமிட்டார்.

அதன்படி கூலிப்படைக்கு பணம் கொடுத்துள்ளார்.

கூலிப்படையினர் Amarinder வீட்டுக்கு வந்த போது அவர் தாய், மனைவியுடன், அவர் தோழியும் உடன் இருந்துள்ளார்.

மூவரையும் கூலிப்படையினர் இரக்கமில்லாமல் கொலை செய்து அங்கிருந்து ஓடிவிட்டனர்.

பின்னர் இது குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைக்க Amarinder அதிரடியாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் பெற்ற தாயின் தலையை, மகன் வெட்டி பூஜை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்திரதூர்கா பகுதியைச் சேர்ந்த திம்மப்பா என்பவர் அவரது தாயுடன் வசிந்து வந்துள்ளார். இவருக்கு அவரது தாயுக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் நேற்று முந்தினம் இரவு வழக்கம்போல் இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதாம் முற்றிப்போய் மகன் ஆத்திரமடைந்து தாயின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார். அதன் பிறகு தாயின் தலையோடு வீட்டை சுற்றி வந்து பூஜை செய்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினரிடம் தம்மப்பா, கடவுள் கனவில் வந்து தாயை பலி கொடுக்க சென்னதாக கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

வடகொரிய அதிபர் அண்ணனை கொல்ல ரூ.6 ஆயிரம் கூலி வழங்கப்பட்டதாக கொலையாளி பெண் வாக்குமூலம் அளித்தார். வடகொரிய அதிபர் அண்ணனை கொல்ல கூலி ரூ.6 ஆயிரம்: கொலையாளி பெண் வாக்குமூலம் கோலாலம்பூர்: வடகொரிய அதிபர் கிம் ஜாங்- யங்கின் அண்ணன் கிம்ஜாங்-நம்.

இவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கடந்த 13-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது முகத்தில் வி.எக்ஸ் என்னும் கொடிய ரசாயன வி‌ஷத்தை வீசி இக்கொலை நடத்தப்பட்டது. இந்த ரசாயன பொருளை விமான நிலையத்தில் அமர்ந்திருந்த கிம்ஜாங்-நம் முகத்தில் ஒரு பெண் வீசியது அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. அதைத்தொடர்ந்து தேடப்பட்டு வந்த அப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் சிதிஅய்சியா.

இந்தோனேசியாவை சேர்ந்தவர். அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது விமான நிலையத்தில் இருந்த தன்னிடம் 4 பேர் ஒருவிதமான பொருளை கொடுத்தனர். டி.வி. வேடிக்கை நிகழ்ச்சிக்காக அதனை ஒரு நபர் மீது வீச வேண்டும் என்றனர். அந்த பொருள் குழந்தைகள் உடலில் தடவும் வாசனை எண்ணெய் என்றும் கூறினர் என்றார். அதற்காக தனக்கு 90 அமெரிக்க டாலர் அதாவது ரூ.6 ஆயிரம் தந்தனர் என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக வியட்நாமை சேர்ந்த டோன் திஹுவாங் என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட கிம்ஜாங்-நம் வடகொரிய முன்னாள் அதிபர் கிம்ஜாங்- இல்லின் முதல் மனைவியின் மகன் ஆவார். இவரை குடும்பத்தில் இருந்தும், அரசியலில் இருந்தும் அதிபர் கிம்ஜாங்-இல் ஒதுக்கி வைத்திருந்தார். மேலும் இளைய மகனான தற்போதைய அதிபர் கிம்ஜாங்-யங்கை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். அதையடுத்து வடகொரியாவில் இருந்து வெளியேறிய கிம்ஜாங்-நம் சீனாவின் மக்கால் பகுதியில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த 13-ந்தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் கொலை செய்யப்பட்டார். என்றாவது ஒருநாள் தனக்கு அவர் அரசியல் போட்டியாக அவர் வரலாம் என கருதி வடகொரிய அதிபர் கிம்ஜாங்-யங் கூலிப் படையை ஏவி அவரை கொன்று இருக்கலாம் என்ற வதந்தியும் பரவி வருகிறது.

கணவர் செய்த கொடுமையால் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரை சேர்ந்தவர் Namrata Paswan (28).

இவருக்கும் Deepratan என்ற நபருக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில் நேற்று தன் அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியிலிருந்து Namrata கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். இதற்கான அதிர்ச்சி காரணம் தற்போது வெளியில் வந்துள்ளது. Namrataன் தாய் கிரண் இது பற்றி கூறுகையில், என் மகள் ஐ.ஏ.எஸ் படிப்புக்கு படித்து கொண்டிருக்கும் போது Deepratan குடும்பத்திலிருந்து வரன் கேட்டு வந்தார்கள்.

முதலில் நாங்கள் மறுத்தோம். ஆனால் அவர்கள் வீட்டார் திருமணத்துக்கு பின்னர் கூட Namrata ஐ.ஏ.எஸ்க்கு படிக்கட்டும் என கூறினார்கள். இதனால் சம்மதம் தெரிவித்து என் மகளை Deepratanக்கு திருமணம் செய்து வைத்தேன். ஆனால் திருமணத்துக்கு பின்னர் தான் Deepratanன் சுயரூபம் என் மகளுக்கு தெரிந்தது. அவளை தினமும் Deepratan காலால் எட்டி உதைப்பதும், அடித்து துன்புறுத்துவதுமாக இருந்துள்ளான். மேலும், மோசமான உறவுக்கு வற்புறுத்தியதால் எனது மகள் மனதளவில் பாதிக்கப்பட்டாள்.


இதை Namrata எங்களிடம் அழுது கொண்டே ஒரு நாள் கூறினார். நாங்கள் அவருக்கு ஆறுதல் கூறிவந்த சமயத்தில் Namrata வீட்டின் 14வது மாடியிலிருந்து விழுந்து மர்மமாக இறந்திருக்கிறாள். இது, தற்கொலை கிடையாது. என் மகளை அவர் கணவர் கொலை செய்து விட்டார் என Namrataவின் தாயார் கிரண் கூறியுள்ளார்.

தாயகத்தின் பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2.10 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை இன்று காலை இவர் இறந்து விட்டதாக வதந்திகள் வெளிவந்தவண்ணமிருந்தன.

ஆனாலும் இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இவர் இறந்ததாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியசீலன் தெரிவித்திருந்தார்.

சிறந்த பாடகரான நாடகக் கலைஞர் எஸ்.ஜே.சாந்தன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான பாடகராக விளங்கினார்.

1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தின் பிரபல நட்சத்திரப் பாடகராக விளங்கிய இவர், சிறந்த நடிகராகவும் காணப்பட்டார்.முதன்முதலில் 1972 இல் கொழும்பு, செட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்வையிடச் சென்றபோது அங்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது.

இதன்போது ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இதுவே இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக அமைந்ததுடன் இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது.

இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது இரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார்.

அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார்.1977 இல் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த இவர், 1981இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.

அந்த இசைக்குழு 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் இசைக்குழு என்ற பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

எரிபொருள் ஏற்றிச்செல்லும் ரயில் ஒன்று தடம்புரண்டமையினால், வடபகுதிக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொலன்னாவையில் இருந்து அனுராதபுரம் வரை பயணித்த இந்த ரயில் செனரத்கம மற்றும் தம்புத்தேகம பகுதிக்கு இடையில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் தடம்புரண்டுள்ளது.

ரயில் பாதையை சீர்படுத்தும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று காலை 5 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த ரயில் தாமதமாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் மார்பு இடர்பாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சில தினங்களுக்கு முன்னர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் தங்கியுள்ள அவருக்கு மற்றொரு சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டியிருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்பிட்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, குடும்ப உறுப்பினர்கள் தவிர்ந்த மற்றையவர்கள் சந்திப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் சில தினங்கள் அவர் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

கூண்டுக்குள்ளே விடுதலையை அடைக்க முடியுமா.? கொலைவெறியால் அறத்தின் மூச்சை உடைக்க முடியுமா.?புரட்சிக்கவிஞர் காசிஆனந்தன் உணர்ச்சிவரிகளில் ஈழத்தின் இளம் குயில் ஜெசிக்காவின் எழுச்சிக் குரலில் ஈழத்தின் வலிசுமந்த நினைவுகளை படம்பிடிக்கும் தென்னிந்திய இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில் உருவான 'கடல் குதிரைகள்'
திரைப்பட இசை வெளியீட்டு விழா
தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகர் யாழில் இன்று ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

தமிழ்தேசிய பண்பாட்டுப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வு தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெறுகிறது.

கடல் குதிரைகள் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவும் ஈழத்து கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது.


வைத்தியர்களின் கவனயீனத்தினால் சத்திர சிகிக்சையின் மூலம் பிறக்கவிருந்த குழந்தை பலியாகியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கேகாலை வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது உயிரிழந்த குழந்தையின் தந்தை சாட்சி வழங்கியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி மாவனெல்ல வைத்தியசாலையில் குழந்தை பிறக்கவிருந்தது. மனைவியுடன் தனிப்பட்ட வைத்தியரை சந்திப்பதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதியாகுமாறு மனைவிக்கு வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார். அடுத்த நாள் 10ஆம் திகதி காலை மாவனெல்ல வைத்தியசாலையில் மனைவியை அனுமதித்துள்ளார்.

அன்றைய தினம் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும், 11 மற்றும் 12ஆம் திகதியும் அதிக வலி காணப்பட்டமையினால் வைத்தியர் அழைக்காமல் இருப்பது ஏன் என வினவிய போது வைத்தியர் விடுமுறையில் சென்றுள்ளதாக வைத்தியசாலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சை மேற்கொள்ளாமல் குழந்தையை பெற முடியாது என தனக்கு புரிந்துக் கொள்ளமுடியாத நிலையில் 10, 11, 12 ஆகிய மூன்று தினங்களும் வைத்தியர் விடுமுறை என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 12ஆம் திகதி இரவு சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு வைத்தியர்கள் இல்லை. அதனால் கேகாலை வைத்தியசாலையில் தனது மனைவியை அனுமதிக்குமாறு வைத்தியசாலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் கர்ப்பிணி தாயாரை கேகாலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள போதிலும், அங்கு பரிசோதித்த வைத்தியர்கள் அதிக தாமதமாகியுள்ளமையினால் குழந்தை வயிற்றுக்குள்ளேயே உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சத்திரசிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்து பயனில்லை. அதனால் சாதாரண முறையில் குழந்தையை வெளியே எடுப்போம் என கூறி 13ஆம் திகதி கர்ப்பிணி தாயின் வயிற்றில் இருந்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.

மாவனெல்ல, கம்மானகொட பகுதியை சேர்ந்த 25 வயதான இராணுவ வீரரே குழந்தையின் தந்தையாவார். குழந்தையின் மரணத்திற்கு வைத்தியரின் செயற்பாடே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் The Thinnai என்ற அதி சொகுசு ஹோட்டல் ஒன்று அண்மையில் திறக்கப்பட்டுள்ளது.

ஓய்வெடுப்பாற்கு முழுமையான சூழலை கொண்ட வகையில் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வடபகுதியில் காணப்படும் ஹோட்டல் தேவையை இது நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோட்டல் முகாமைத்துவத்தை திருநெல்வெலி ப்ரோபர்ட் டெவலோபர்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

வடக்கு பிரதேசத்தின் சுற்றலாடல், பொருளாதாரம் மற்றும் அங்கு மக்களின் வாழ்க்கை நிலைமையை அதிகரிப்பதற்கு சேவை செய்வது இந்த உள்ளூர் நிறுவனத்தின் முயற்சியாகும்.

ஹோட்டல் அமைந்துள்ள சுழல் சுமூகமான வகையில் அமைந்துள்ளதுடன் யாழ் குடா நாட்டின் பல பிரசேங்களில் காணப்படுகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு தேடுவதற்காக இங்கு I love green என்ற திட்டமும் செயற்படுத்தபடுகின்றது.

ஹோட்டலுக்கு பயன்படுத்தப்படும் பால், பழங்கள் மற்றும் மரக்கறிகள் உட்பட அனைத்து உணவும் ஹோட்டலுக்கு சொந்தமான பண்ணையில் இருந்தே பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் குறிப்பிடத்தக்க அளவானோருக்கு தொழில் வாய்ப்புக்களையும் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது







.

கடல்சூழல் தூய்மை காவலர்களாக திகழ்பவை கடல் ஆமைகள். கடற்கரை ஓரங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள், காலநிலை மாறுபாடு,

கடலில் கலக்கும் கழிவுகளால் ஏற்படும் சூழல் கேடு, முறையற்ற வகையிலான மீன்பிடிப்பு போன்றவற்றால் சமீப காலமாக இந்த ஆமைகள் இனம் அழிவுக்கு உள்ளாகி வருகின்றன.

சித்தாமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை மற்றும் பச்சை ஆமை என 5 வகை கடல் ஆமைகள் இந்திய கடல் பகுதியில் காணப்படுகின்றன.

இனத்தை சேர்ந்த இந்த ஆமைகளில் கருவுற்ற பெண் ஆமைகள் முட்டையிடுவதற்கு தாங்கள் பிறந்த மணற்பாங்கான கடற்கரை பகுதிகளையே நாடி செல்கின்றன.

இவ்வாறு கரைக்கு வரும் ஒரு ஆமை சிறு குழியினை தோண்டி அதில் 100 முதல் 150 முட்டைகளை இட்டு அந்த குழியினை மூடிவிட்டு செல்கின்றன.

ஏழு முதல் 10 வாரங்களுக்குள்ளாக இந்த முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிவரும். பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே ஆமை முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக வெளியேறுவதால் இவை மற்ற விலங்குகளிடம் இருந்து தப்பித்து கொள்ளும்.

குஞ்சு பொரித்த சில நாட்களில் கடலுக்கு செல்லும் இவை அலையின் திசையினை நோக்கி நீந்த தொடங்குகின்றன.

கடல் ஆமைகள் மாமிச உணவிற்காகவும், அதன் தோலுக்காகவும் வேட்டையாடப்பட்டாலும் முறையற்ற மீன்பிடி முறைகளும் கடற்கரையோர பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளினாலும் இந்திய கடலோர பகுதிகளுக்கு இனப்பெருக்கம் செய்ய வரும் ஆமைக்கள் அரிதாகி விட்டன.

இந்த நிலையில் கடல் ஆமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மன்னார் வளைகுடா கடற்கரை ஓர பகுதிகளில் வன உயிரின பாதுகாப்பு அலுவலர்கள் ஆமை முட்டைகளை சேகரித்து, அவை குஞ்சு பொரிக்கும் வரை பாதுகாப்பதற்கென ஆங்காங்கே பாதுகாப்பு மையங்கள் அமைத்துள்ளனர்.

கடற்கரை ஓரங்களில் ஆமைகளால் இட்டு வைக்கப்படும் முட்டைகளை சேகரித்து இந்த மையங்களில் வைத்து குஞ்சு பொரித்த பின்னர் அவற்றை கடலில் விடும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 3 மாதங்களில் முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான கடற்கரை பகுதிகளில் இருந்து சுமார் 5500 முட்டைகள் சேகரிக்கப்பட்டு அவற்றில் இருந்து இதுவரை 240 குஞ்சுகள் பொரிக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளன.

இந்த சூழலில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள அரிய வகை ஆமை ஒன்று நேற்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், தாமரைகுளம் அருகே உள்ள வலங்காபுரி தெற்கு கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் ஒதுங்கிய இந்த பெண் ஆமையின் வயது 125 இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

250 கிலோ எடை கொண்ட இந்த ஆமை பாறையில் மோதி அடிபட்டு இறந்து கரை ஒதுங்கி இருக்க கூடும் என சொல்லப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த வன உயிரின பாதுகாப்பு வனச்சரகர் சதீஷ், வனச்சரக அலுவலர்கள் ராதா, காளிதாஸ், முனியசாமி, கருப்பன் உள்ளிட்டோர் வலங்காபுரி கடற்கரை பகுதிக்கு சென்று இறந்த ஆமையின் உடலை கைப்பற்றினர்.

கால்நடை மருத்துவர் சரண்யா ஆமையின் உடலை கூராய்வு செய்த பின்னர் ஆமையின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.

இது போன்று ஆமையின் உயிரிழப்புகள் சமீப காலமாக அதிகரித்து வருவது குறித்து நம்மிடம் பேசிய வன உயிரின பாதுகாவலர்கள் ‘‘கடலில் வாழும் சிறு மீன்களை உணவாக கொள்ளும் சொறி மீன் எனப்படும் ஜெல்லி மீன்களை கடல் ஆமைகள் உட்கொள்கிறது.

இதனால் மீனவர்களுக்கு நல்ல விலையினை ஈட்டி தரும் பல மீன் இனங்களின் வளர்ச்சியை பாதுக்காப்பதுடன், கடலின் தூய்மையையும் பாதுகாக்க கடல் ஆமைகள் பெரிதும் உதவுகிறது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியான தனுஷ்கோடி பகுதி ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க உகந்த பகுதியாக இருந்து வந்தது. இதனால் ஏராளமான ஆமைகள் இப்பகுதியில் காணப்பட்டு வந்தன. சமீப காலமாக இதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

தனுஷ்கோடிக்கு அமைக்கப்பட்ட புதிய சாலைக்கும் கடலின் கரைக்கும் இடையே 30 முதல் 40 அடி அகலம் வரையிலான மணல் பகுதி இருந்து வந்தது.

புதிய சாலையினை பாதுகாப்பதற்காக இந்த மணல் பகுதியில் பெரும் பாறை கற்களை குவித்து தடுப்புகள் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் கருத்தரித்த ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிட முடியாத சூழல் எழுந்துள்ளது.

கடற்கரை ஓரங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளால் அங்கு வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது. கழிவுகளை கடலில் கலக்க கூடாது.

இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை விளக்குகள் போட கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மதிக்காத தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் லாரி லாரியாக பாறாங் கற்களை கடற்கரை ஓரங்களில் குவித்து வருகின்றனர்.

இது பற்றி அவர்களிடம் பல முறை எடுத்து சொல்லியும் எதையும் காதில் வாங்கவில்லை. ஒருபுறம் தடை செய்யப்பட்ட வலைகளால் மீன்பிடிப்பதும், மறுபுறம் வளர்ச்சி என்ற பெயரில் கடல் வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலை தொடர்ந்தால் உலக உயிரின காப்பகமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் இந்திய கடல் பகுதியான மன்னார் வளைகுடா, வரும் காலத்தில் ஆமைகள் இல்லா வளைகுடா பகுதியாக மாறிவிடும்’’ என்றனர்.

ஒருபக்கம் மலைகளை ஆக்கிரமிப்பதால் வன உயிரினங்கள் ஊருக்குள் புகுகின்றன. மறுபக்கம் கடற்கரை ஓரங்களை அபகரிப்பதால் கடல்வாழ் உயிரிங்கள் கரைக்கு வர மறுக்கின்றன. என்ன செய்ய போகிறது அரசு?

#Kalmunai
advertisement

வாகரை கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை ஊழியர் நலன்புரிச் சங்கத்தினர் இன்று(23) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தினை வடக்கு பிரதேச சபைக்கு முன்பாக கல்முனை திருகோணமலை பிரதான வீதியை மறித்து நடாத்தியுள்ளனர்.

பிரதேச சபை ஊழியர்கள் கறுப்பு பட்டி அணிந்து பிரதேச சபை நுழை வாயிலை மூடி இரண்டு மணி நேரம் கடமை செய்யாது வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது.

அண்மையில் வாகரை பிரதேச சபை செயலாளர் மற்றும் ஊழியர்கள், மட்டக்களப்பு மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை விமர்சித்து போலி முகநூல் பக்கத்தில் வெளிவந்த செய்தியை எதிர்த்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது செயலாளர் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்களை களங்கப்படுத்தாதே, எமது பிரதேச சபையின் பெயருக்கு பங்கம் விளைவிக்காதே, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிடாதே,

நல்லாட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாதே, பிரதேச சபையின் முதுகிலே குத்தாதே, குள்ள நரி கூட்டங்களை உடனடியாக கைது செய் என பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

போலியான முகநூலில் பிரதேச சபைக்கு எதிராக வெளியிட்டவரை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு கோரி பிரதேச சபை ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுச சனத் பியதாஸ மற்றும் வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.இராகுலநாயகி ஆகியோரிடம் மகஜரையும் வழங்கி வைத்துள்ளனர்.

இதன்போது சபையின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் தொடர்ரபில் பிரதேச சபை ஊழியர்களால் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.

மேலும், குற்றவாளிகளை இனங்கண்டு கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுச சனத் பியதாஸ தெரிவித்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு பிரதேச சபை நுழை வாயிலை திறந்து ஊழியர்கள் கடமைக்கு சென்றள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.

கட்டட வேலை செய்யும் இளைஞர் ஒருவரே இவ்வாறு இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தெரியவருவதாவது,

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் நிர்மாணப் பணியில் ஈடுபட்டு வந்த நபர், அக்கட்டடத்தின் மேலிருந்து கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில் படுகாயமடைந்த அந்நபர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெட்டப்பட்ட 40 மாடுகளின் தலைகளுடன் இறச்சியையும் கொழும்பிற்கு கொண்டுச் செல்ல முற்பட்ட லொறி ஒன்று வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வைத்து துரத்தி பிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா வைத்திய சுகாதார அதிகாரி எஸ். லவன் தெரிவித்துள்ளார்.

வவுனியா சோயா வீதியிலுள்ள மாடுகள் வெட்டும் தொழுவத்தில் இன்று (23) பிற்பகல் 2.30 மணியளவில் சட்டவிரோதமான மாடுகள் வெட்டப்படுவதை அறிந்து கொண்ட வைத்திய அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்றுதுடன் வவுனியா மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரியின் உதவியும் பெறப்பட்டு வெட்டப்பட்ட மாடுகளை பரிசோதித்தபோது ஆவணங்கள், போக்குவரத்து ஆவணங்கள், மாடுகள் பெறப்பட்ட உரிமையாளர்களின் ஆவணங்கள், எதுவும் இன்றி சட்டவிரோதமான முறையில் கொழும்பிற்கு வெட்டப்பட்ட மாடுகள் கொண்டு எத்தனித்துள்ளனர். இதன்போது அதிகாரிகள் உடனடியாகது துரத்தி பிடித்துள்ளனர்.

இதேவேளை நகரசபை சுகாதார பரிசோதகர் மற்றும் கால்நடை வைத்திய அதிகாரிகளை தனது கடமைகளைச் செய்யவிடாமல் இடையூறு விளைவித்துள்ளனர்.

 இதில் சில உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெற்று உதவி செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

கைப்பற்றிய வெட்டப்பட்ட மாடுகள் மற்றும் வாகனச்  ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த மாடுகள் அனைத்தும் இளம் பசுமாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட 63 வயதுடைய பெண்ணொருவர் முதன் முறையாக குழந்தை பெற்றுள்ள சம்பவம் அண்மையில் டுபாயில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே முதல் கணவர் மூலம் செயற்கை கருத்தரிப்பு முறையில் 13 வயதில் குழந்தை உள்ளதாகவும் தற்போது 2வது திருமணம் செய்த அவர் சென்னையில் செயற்கை கருத்தரிப்பு முறை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவருக்கு டுபாயில் குழந்தை பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, குழந்தை 2.25 கிலோ எடை உள்ளதாகவும் ஆனால் தம்பதியின் பெயர் வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக 60 வயதுக்கு மேல் பெண்கள் குழந்தை பெறுவது மிகவும் ஆபத்து என கூறும் நிலையில் ஆரோக்கியமான முறையில் முதன் முறையாக இலங்கை பெண்ணொருவர் குழந்தையை பெற்றுள்ள சம்பவம் தற்போது வைரலாகிவருகின்றது.

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கர்ப்பிணிப்பெண் படுகொலையில் சந்தேகநபரை அடையாளம்காட்டும் அடையாள அணிவகுப்பு நேற்று இடம்பெற்றது.

இதில் கண்கண்ட சாட்சியாக உள்ள மாற்றுத்திறனாளி சிறுவனிடம் நீதிபதி கேள்வி கேட்டதுடன், அடையாள அணிவகுப்பின்போது சில விதிமுறைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது வாய்பேச முடியாத குறித்த சிறுவனிடம் ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம். றியால் “நீங்கள் எதற்காக வந்துள்ளீர்கள்?” என வினவியுள்ளார்.

இதற்கு சிறுவன் “ஊர்காவற்துறை பெண் படுகொலை தொடர்பாக சந்தேகநபர்களை அடையாளம் காட்ட வந்துள்ளேன்” என்று சைகை மூலமாக தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்துறை கர்ப்பிணிப்பெண் படுகொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் அடையாள அணிவகுப்பிற்கு பொலிஸார் தயார்படுத்தியிருந்தனர்.

இதில் ஒரு சந்தேகநபருக்கு 7 பேர் வீதம் இரு சந்தேகநபர்களுக்கும் 14 பேர் அடங்களாக அனைவரையும் வரிசைப்படுத்தியிருந்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் ஏனையவர்களுடன் கலந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் 14 பேரில் குறித்த இரு சந்தேகநபர்களையும் அடையாளம் காட்டுமாறு மாற்றுத்திறனாளி சிறுவனிடம் நீதவான் கோரியுள்ளார்.

இதன்பின்பு குறித்த ஈரேழு பேரில் முதலில் ஒருவரையும், பின்னர் மற்றைய சந்தேகநபரையும் குறித்த சிறுவன் சரியாக தேடிப்பிடித்துள்ளான்.

தொடர்ந்து, இருவரின்மீதான வழக்கு திறந்த நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், இவர்களை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம். றியால் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலக போர் காலத்துக்கு உரியது என கருதப்படும் பாரிய குண்டு ஒன்று பிரித்தானியாவில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் போர்ட்ஸ்மவுத் (Portsmouth) துறைமுகத்தில் நீருக்கு அடியில் இருந்து இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று அதிகாலை இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரோயல் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த துறைமுகத்தை அண்மித்த பகுதியில் படகு சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், போர்ட்ஸ்மவுத் மற்றும் Southsea தொடருந்து நிலையத்திற்கு இடைப்பட்ட ரயில் சேவைகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பகுதியை அண்மித்த பகுதியின் வீதிகள் சிலவும் மூடப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மீட்கப்பட்டுள்ள வெடிகுண்டு 226 கிலோ நிறையுடைய அதி சக்தி வாய்ந்த வெடிபொருள் என ரோயல் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த குண்டு ஜேர்மனியின் SC 250 என நம்பப்படுவதாகவும் பிரித்தானிய கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

தலை கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திஹன நகரத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்த ஒருவர் மீது மற்றொரு பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு தலைகவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை நிறுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர். எனினும் உத்தரவை மீறி அவர்கள் பயணித்ததோடு முன்னால் நின்ற பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியையும் பறிக்க அவர்கள் முயற்சித்துள்ளனர்.

இதன்போது மற்றுமொரு பொலிஸ் அதிகாரியினால் சந்தேகநபர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் தப்பி சென்று தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் இருவரும் சகோதரர்களாகும். பிரதேசங்களில் இடம்பெறும் கொள்ளை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் தேடப்படும் சந்தேகநபர்கள் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குறித்த சகோதரர்களில் ஒருவர் மீது வீடொன்றை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டமை தொடர்பில் தெல்தெனிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான தீர்ப்பு எதிர்வரும் மாதம் 27ஆம் திகதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழங்காலில் இருத்தி , இரு கைகளையும் கால்களுடன் இணைத்து கட்டி , இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டி தூக்கி உயிரிழக்கும் வரையில் அடித்தே கொன்றார்கள்.
உயிரிழந்த பின்னரும் அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை. என யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் கூறியதாகவும் , படுகொலையானவரின் நண்பர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் 25ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் சாட்சியம் அளித்து இருந்தனர்.

அதனை அடுத்து சுன்னாகம் காவல் நிலையத்தை சேர்ந்த  8 காவல்துறை உத்தியோகஸ்தர்கள்  மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில் 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன.

அதில் 5 காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றிலும் , கொலை குற்றம் சாட்டப்பட்டு உள்ள 5 பேர் உட்பட  8 பேருக்கு எதிராக சித்திரவதை குற்ற சாட்டு சுமத்தப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றிலும் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த வழக்கின் சித்திரவதை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது  சாட்சி பதிவுகள் ஆரம்பமானது. அதில் குறித்த வழக்கின் முதலாவது சாட்சியமான இராசதுரை சுறேஸ் என்பவரது சாட்சி பதியப்பட்டது.

காலில் ஆணி அடித்து  மர்மஉறுப்பை  குறட்டால் நசித்தார்கள்.

இதில் அவர்,  எம்மை மாவீரர் தினம் கொண்டாடியதற்காக சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர். பின்னர் எம்மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தினர்.

எம்மையும் எம்முடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட சுமனன் என்பவரையும் ஒரே அறையில் அடைத்து வைத்தனர். அவ்வேளை சுமணன்  என்பவரை முழங்காலில் இருத்தி கால்களுக்குள் கைகளை விட்டு கட்டி இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டித் தொங்கவிட்டு அடித்தார்கள்.

அதன்போது அவர் தாம் மருத்து பாவிப்பவர் எனவும் தம்மை அடிக்க வேண்டாம் என கூறினார். ஆனால் அதனை கருத்திலெடுக்காத பொலிஸார் தொடர்ந்து அவரை போட்டு அடித்தார்கள். இவ்வாறு (அவர் கூறும்போது குறித்த கொலை செய்யப்பட்ட நபர் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எப்படி இருந்தார் என்பதை சாட்சி நீதிபதிக்கு தனது உடலால் செய்து காண்பித்திருந்தார்.)

இவ்வாறு அடிக்கும் போது சுமனன் இறந்து விட்டார். அவனது மூக்கால் இரத்தம் வந்துகொண்டிருந்தது. அதன் பின்பும் பொலிஸ் உத்தியோகத்தர்களது வெறித்தனம் அடங்காமல் இறந்த பின்பும் போட்டு அடித்தார்கள். எனக்கு ஆணிகளை காலில் இறுக்கி மின்சார கம்பியால் சுட்டார்கள். எனது ஆணுறுப்பை குறட்டால் நசித்தார்கள். பின்னர் இறந்த சுமனனது உடலை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நின்ற புதிய ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போனார்கள்.

இதன்போது உமக்கும் சுமனன் என்பவருக்கும் அடித்த சித்திரவதை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் யார் யார் என்பதை அடையாளம் காட்ட முடியுமா? என பிரதி மன்றாதிபதி வினாவியபோது சாட்சி எதிரி கூண்டில் நின்று குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை முறையே அவர்கள் என்ன என்ன செய்தார்கள் என்று கூறியிருந்தார். அத்துடன் தற்போது இதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றில் இல்லை எனவும் கூறியிருந்தார்.

அவற்றை தொடர்ந்து அவரது சாட்சியங்களும் எதிரி தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்கு விசாரனை செய்யப்பட்டது.

அடுத்து,  இரண்டாவது சாட்சியமான துரைராசா லோகேஸ்வரனது சாட்சியம் பதிவு செய்யபட்டது.

தனி நாடு வேணுமா ? என கேட்டு தாக்கினார்கள்.

தாம் கடந்த 2011.11.21ஆம் திகதி தமது புன்னாலைகட்டுவன் சித்தி விநாயகர  பாடசாலையில் கற்கும்  தாய் தந்தையை இழந்த, போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கினோம். இதன்போது அங்கு வந்த ஊரேழு இராணுவ முகாமை சேர்ந்த பிரசாத் என்பவர் நீங்கள் மாவீரர் நிகழ்வா கொண்டாடுகிறீர்கள் என கேட்டனர். அதற்கு நாம் இல்லையென பதிளித்தோம்.

இதன்பின்பு அன்றைய தினம் இரவு எனது வீட்டிற்கு வந்த சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சிந்திக்கபண்டார, மயூரன், பிரசாந் ஆகியோர் என்னை திருட்டு குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்து சென்றனர்.

அதன் பின்னர் 24.11.2011 அன்று சுமனன் என்பவரை சிந்திக்க , மயூரன் ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்து காலை 9க்கும் 10க்கும் இடைப்பட நேரத்தில் கொண்டு வந்திருந்தனர்.

அதன்போது சுமனது நெற்றிப் பகுதியில் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. அத்துடன் தனிநாடு வேண்டுமா என கேட்டு கேட்டு எம்மை அடித்து.  எமக்கு மின்சார கம்பியினால் சுடுவைத்தனர். என சாட்சியம் அளித்தார்.

இதனை தொடர்ந்து அரச தரப்பு விசாரனையில் உங்களையும் சுமனனையும் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர்களை அடையாளம் காட்ட முடியுமா என வினவியபோது குறித்த சாட்சி அவர்களை எதிரி கூண்டில் நின்றவாறு சுட்டு விரலால் அடையாளம் காட்டி அவர்களில் இருவரது பெயர்களையும் சரியாக குறிப்பிட்டிருந்தார்.

இதன்பின்பு அவரது சாட்சியமானது எதிரி தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்குவிசாரனை செய்யப்பட்டது. இதன்போது அவரது மன்றில் வழங்கிய சாட்சியில் இரு விடயங்கள் பொலிஸ் தரப்பினது வாக்குமூலப் பதிவில் வேறுபட்டிருந்த நிலையில் அது மன்றால் அடையாளமிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அவர் சாட்சிப் பதிவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

6ஆம் மற்றும் 8ஆம் சாட்சியும் பதிவு.

இதன் பின்னர்  6ஆம் மற்றும் 8ஆம் சாட்சிகளும் மன்றால் பதிவு செய்யப்பட்டது.

புதிய சாட்சியங்களை அணைக்க அனுமதி.

அதனை தொடர்ந்து இவ் வழக்கை நெறிப்படுத்தும் பிரதி மன்றாதிபதி குமார்ரட்ணம் இவ் வழக்கின் குற்றப் பத்திரிகையில் 30ஆம் 31ஆம் 32ஆம் சாட்சிகளாக மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை அணைப்பதற்கு மன்றின் அனுமதியை கோரியிருந்தார். அத்துடன் இவ் வழக்கின் சாட்சியில் இருந்து 2ஆம் 4ஆம் 5ஆம் சாட்சிகளை நீக்குவதற்கான அனுமதியையும் கோரியிருந்தார்.

இவ்விரு விண்ணப்பங்களும் மன்றானது அனுமதியளித்துடன் இவ் வழக்கின் மீதி சாட்சிப்பதிவுகளை பதிவு செய்வதற்காக எதிர்வரும் மாதம் 14ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் அதுவரை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைக்கவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.

குறித்த வழக்கு விசாரணையில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி நாகரட்ணம  நிஷாந்துடன் பிரதி மன்றாதிபதி குமார் ரட்ணம் முன்னிலையாகியிருந்தார்.

எதிரிகள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸ் நிலையத்தில் முறையிடவோ அல்லது அவராலோ இவ் வழக்கு தொடுக்கப்படாதுடன் அவர் தற்போது இல்லையெனவும் குறிப்பிட்டிருந்தனர்.

அத்துடன் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்ற சாட்சி இருந்தாலேயே அவரை எதிரி தரப்பு சட்டத்தரணிகள் குறுக்கு விசாரனை செய்கின்ற போதே குற்றச் சம்பவத்தின் உண்மை தன்மை மன்றுக்கு தெரியவரும். எனவே இவ் வழக்கில் அவ்வாறானதொரு சந்தர்ப்பம் இல்லையென குறிப்பிட்டிருந்தனர்.

உயிரிழந்தவரின் உடலில் 20க்கும் மேற்பட்ட காயங்கள் காணப்பட்டன.

இதனை தொடர்ந்து இவ் வழக்கினை நெறிப்படுத்தும் அரச சட்டத்தரணியும் பிரதி மன்றாதிபதியுமான குமார் நாகரட்ணம்,  குறித்த சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த நபரது மரண விசாரனையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது குறித்த நபரது உடலில் 20க்கு மேற்பட்ட காயங்கள் உள்ளதாகவும், அவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அவற்றை அடிப்படையாக கொண்டு இவ் வழக்கை நடாத்தமுடியும் எனவும் அவர் விண்ணப்பமொன்றை மேற்கொண்டிருந்தார்.

சித்திரவதை என்பது போர்க்குற்றம், அது மனிதவுரிமை மீறல்.

இந்நிலையில் இவ் விடயம் தொடர்பாக, குறித்த சித்திரவதை என்பது போர்க்குற்றம் எனவும், அது மனிதவுரிமை மீறல் குற்றமெனவும் குறிப்பிட்ட நீதிபதி குறித்த சித்திரவதை வழக்கினை பாதிக்கப்பட்டவரது உறவினர் பாதுகாவலர் ஆகியோரது முறைப்பாடுகளின் அடிப்படையிலும் நடாத்தமுடியும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பொன்றை மேற்கோள்காட்டியதுடன், சித்திரவதைக்கு உள்ளான நபர் உயிருடன் இல்லாவிட்டால் வழக்கை நடாத்த முடியாதென்றால் சித்திரவதைக்கு உள்ளான நபரை கொலை செய்துவிட்டால் வழக்கே இல்லாமல் தப்பித்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி இவ் வழக்கை தொடர்ந்து நடாத்துவதற்கும், குறித்த எதிரி தரப்பு சட்டத்தரணிகளது ஆட்சேபனை விண்ணப்பத்தையும் நிராகரித்து நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவு இட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா ஆர்டிக் கடலில் மர்மமான முறையில் அணு குண்டு சோதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது எனவும். அதில் இருந்து காற்றில் கலந்துள்ள கதிரியக்கம் கொண்ட துகள்களால், ஜேர்மனி , பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகளில் உள்ள சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போக கதிரியம் கொண்ட இந்த துகள் காற்றில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதனை பல நாடுகள் மறைத்து வருகிறது. இன் நிலையில் குறித்த கதிரியம் கொண்ட துகள்கள் பிரித்தானிய வழி மண்டலத்திலும் கலந்துள்ளதா என்று ஆராய, இன்றைய தினம்(22) அமெரிக்காவில் இருந்து விசேட ராணுவ விமானம் ஒன்று வந்துள்ளது.

WC 135 என்று அழைக்கப்படும் இந்த ராணுவ விமானம், வானத்தில் பறந்தபடியே நிலத்தையும் காற்றையும் ஸ்கேன் செய்து அதில் எங்காவது கதிரியக்கம் கொண்ட தூகள்கள் உள்ளதா என்று கண்டுபிடித்துவிடும். இதனை பிரித்தானியாவுக்கு அனுப்புமாறும். பிரித்தானிய வழி மண்டலத்தை பரிசோதனை செய்யுமாறும். திரேசா மே அம்மையார் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு அமைவாக அமெரிக்கா உடனடியாக இந்த அதி நவீன விமானத்தை பிரித்தானியாவுக்கு அனுப்பியுள்ளது. குறித்த விமானம் பறப்பில் ஈடுபட்டு, பல பகுதிகளை ஸ்கேன் செய்துள்ளது என தற்போது ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன் முழுமையான அறிக்கை விரைவில் மக்களுக்கு கிடைக்கும். குறித்த கதிரியக்க தூசி துகள்கள், மனிதர் மேல் பட்டாலோ. அல்லது அதனை மனிதர் சுவாசித்தாலோ , சில மாதங்களில் உடனே புற்று நோய் உருவாகி இறக்க நேரிடும். இது போல பல ஐரோப்பிய நாடுகளில் தற்சமயம் நடந்துள்ளது. ஆனால் அனைத்து நாடுகளும் மெளனம் காப்பதாக கூறப்படுகிறது. ரஷ்யா செய்துள்ள இந்த நாசகார வேலையை, ஐரோப்பிய நாடுகள் கண்டுபிடிக்கவே இவ்வளவு வாரங்கள் பிடித்துள்ளது. இதனை மக்கள் அறிந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அல்லவா. சுயலாபம் கருதியே இதனை அன் நாட்டு அரசுகள் மூடிமறைப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

8 வயது சிறுவன் ஒரு­வனை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யமை மற்றும் ஆயு­தத்தைக் காண்­பித்து கொலை அச்­சு­றுத்தல் விடுத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டு­களின் கீழ் 10 வயது சிறுவன் ஒருவன் கைது­செய்­யப்­பட்டு சிறு­வர்­க­ளுக்­கான நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்ட சம்­பவம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.

பேர்த் நகரின் வட புற­ந­கரப் பகு­தியை சேர்ந்த குறிப்­பிட்ட சிறுவன் தன்னை விடவும் இரு வயது இள­மை­யான சிறு­வ­னை கத்­தியைக் காண்­பித்து கொலை அச்­சு­றுத்தல் விடுத்து பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யுள்ளான். பேர்த் சிறுவர் நீதி­மன்­றத்தில் இடம்­பெற்ற இந்த வழக்கு விசா­ர­ணையின் போது மேற்­படி வழக்கை விசா­ரித்த நீதி­பதி, அந்த சிறுவன் நீதி­மன்ற செயற்­கி­ர­மங்­களை புரிந்து கொள்ளும் பக்­கு­வத்தை அடை­யா­ததால் அவ­னுக்­கான தண்­ட­னையை பிற்­போட்டு அவனை பிணையில் செல்ல அனு­ம­திப்பதாகத் தெரிவித்தார். அதே­ச­மயம் அவனை தீவிர கண்­கா­ணிப்பின் கீழ் பாட­சாலைக் கல்­வியைத் தொடர அவர் உத்­த­ர­விட்­டுள்ளார்.

இந்­நி­லையில் அந்த சிறுவன் கல்வி கற்கும் பாட­சா­லையைச் சேர்ந்த ஏனைய மாண­வர்­களின் பெற்றோர் சிறுவன் குறிப்பிட்ட பாடசாலையில் தொடர்ந்து கல்வி கற்க அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் சற்று முன்னர் துப்பாக்கி பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களுதாவளைப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இயக்குனர் நேசகுமார் விமல்ராஜ் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளார்.

இதன்படி குறித்த 12 சந்தேகநபர்களில் 11ஆம் இலக்க சந்தேகநபரே அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியால் இன்று அறிவித்துள்ளார்.

அரச தரப்பு சாட்சியாளராக மாறும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமையவே குறித்த 11ஆவது இலக்க சந்தேகநபர் அரச தரப்பு சாட்சியாளராவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் முடியும் தருவாயில் உள்ள வித்தியா கொலை வழக்கிற்கு மேலும் ஒரு அனுகூலமான சாட்சி கிடைத்துள்ளது.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இழுபட்டுக்கொண்டிருக்கும் வித்தியா கொலை வழக்கிற்கு ஒரு விடிவு கிடைக்கும், அந்த சகோதரியின் மரணத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரேசில் கால்பந்து அணியின் இளம் வீரரான நெய்மருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

ரொனால்டோ, மெஸ்ஸி வரிசையில் இவரும் உலகின் சிறந்த கால்பந்து வீரராக உள்ளார்.

இந்நிலையில் இவருக்கு ரபெல்லா என்ற ஒரு சகோதரி உள்ளார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர்.

ரபெல்லாவின் படத்தை நெய்மர் தனது வலது கையில் பச்சை குத்தியுள்ளார். அதேபோல் நெய்மரின் கண்களை ரபெல்லா தனது கையில் பச்சை குத்தியுள்ளார்.

இவருக்கும் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமூகவலைதளங்களில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்தியாவில் கோவில் திருவிழாவின் போது 60 அடி தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள கொட்டுரேஸ்வர கோவில் திருவிழாவிலே இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தேர் திருவிழாவில் கலந்துக்கொண்ட ஆயிரக்கணக்கானோர் பக்தியுடன் தேரை இழுத்துக்கொண்டிருந்த போது திடீரென தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்துள்ளது. இதில் தேரின் சக்கரத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

தேர் கவிழும் நிகழ்வை சம்பவயிடத்திலிருந்த நபர் ஒருவர் தனது போனில் பதிவு செய்துள்ளார். தற்போது, குறித்த அதிர்ச்சி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு அண்மையில் உள்ள காணியில் மனித எச்சம் காணப்படுவதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் நேற்றும், இன்றும் அதிகாரிகள் நிலத்தினைத் தோண்டி ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், இன்று அப்பகுதி நிலத்தை அகழும்போது மனித எச்சங்கள் வந்துகொண்டிருப்பதாக முறக்கொட்டாஞ்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அத்துடன் இன்று கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களுடன் காணப்பட்ட இரும்புக் கம்பிகள் மற்றும் மண் மாதிரிகள் என்பன ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஒப்படைத்து பகுப்பாய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் தடயங்கள் காணப்பட்ட இடத்திற்கு மேலதிக நீதவானும், மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் ஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி, சிரேஷ்ட வைத்திய நிபுணர் எம்.சிவசுப்பிரமணியம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் பி.சி. சுரங்க பெரேரா, கண்டி வைத்தியசாலை வைத்திய நிபுணர் அஸித்த கீர்த்தி, மாத்தளை பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர் டி.ஐ.வைத்தியலங்கார, புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரி ஜே.ஏ.ரி.வி.பிரியந்த ஆகியோர் அடங்கிய குழு பயணம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் முன்னிலையிலேயே குறித்த எச்சங்களும் மீட்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவின் உலக ஒழுங்கில் இன்று அரசியல் முக்கியத்துவம் மிக்க இரண்டு வெவ்வேறு சிந்தனைப் போக்கு கொண்ட நாடுகளைக் காணலாம்.

அதில் சீனா மற்றும் ரஷ்யாவின் அதிகரிக்கும் ஈடுபாடும், செயற்பாட்டுவாதமும் ஒருவகை.

1945ம் ஆண்டு முதல் சர்வதேசப் பரப்பில் தன்னாதிக்கம் செலுத்தி இப்போது தனது ஜனநாயக நாடுகளின் நம்பிக்கை, தகுதி, விருப்பம் என்பனவற்றில் வீழ்ச்சி கண்டு வரும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இரண்டாவது வகை.

சீனாவும், ரஷ்யாவும் ஒன்றை ஒன்று நெருங்கி வர, இப்போது உள்ள உலக ஒழுங்கை மாற்றுவதில் அந்நாடுகளின் விருப்பமும், தகுதியும் அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளினதும் விருப்பத்தையும், தகுதியையும் சந்திக்க, அமெரிக்காவின் உலக ஒழுங்கு சீர்குலைந்து மூன்றாவது உலக யுத்தத்துக்குள் நாம் வீழ்ந்துவிடும் நேரம் வரும்.

உயிர்கள், சொத்துக்கள், சுதந்திரம், நம்பிக்கை என்பவற்றிலான அந்த அழிவின் விலையைக் கணக்கிட முடியாது.

தனது சர்வதேச ஒழுங்கில் அடிப்படை ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் அமெரிக்கா கொண்டுள்ள பொறுப்பு குறித்து ஆதங்கம் வெளிப்படுத்தப்படும் நேரத்திலும் அமெரிக்கா அதையிட்டு அலட்டிக்கொள்ளாமல் இருப்பது போலவே தெரிகிறது.

உலக ஒழுங்குகள் என்றோ ஒருநாள் சீர்குலையும் என்றுதான் சரித்திரம் கூறுகிறது. இருப்பினும், அந்த சீர்குலைவு எதிர்பாராத, வேகமான, அராஜக நிகழ்வுகளாகவே இருக்கும்.

20 ஆம் நூற்றாண்டின் முதல் பத்து வருடங்களில் தொடர்புத்துறை மற்றும் போக்குவரத்து வசதிகளில் ஏற்பட்ட புரட்சி மக்களையும், பொருளாதாரத்தையும் ஒன்றிணைத்ததால் அதிகாரப் போட்டிக்கு முற்றுப்புள்ளி இடப்படும் என்றே அறிஞர்கள் எதிர்வு கூறினர்.

அடுத்த நான்கு வருடங்களில் உலகின் சரித்திரத்திலேயே பெரும் நாசம் விளைவித்த யுத்தம் மூண்டது.

1920 களுக்குப் பின்னிருந்த அமைதி 1930 களில் நெருக்கடியாக மாறி மற்றுமோர் உலக யுத்தம் ஏற்பட்டது.

நீண்ட சரித்திரம் கொண்ட இந்த சூழ்நிலையில் இன்று நாம் எங்கே இருக்கிறோம் என்பதை எப்போதும் போலவே, இப்போதும் அறிந்து கொள்வது அசாத்தியமாகவே உள்ளது.

இருப்பினும், அந்த வழித்தடத்தில் நாம் எங்கேயோ ஒரு இடத்தில் இருக்கிறோம் என்றால் அது தவறானதாக இருக்காது.

இந்த சூழ்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக் காலம் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என இப்போது கூற முடியாவிட்டாலும் அவருடைய நிர்வாகம் மற்றுமொரு யுத்தத்தை நோக்கியதான நகர்வுகளைக் குறைப்பதையோ, பின் தள்ளுவதையோ விட அந்த ஆபத்துக்குள் உலகை வேகமாகக் கொண்டு சென்றுவிடும் என்பதைத்தான் நடக்கும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ரஷ்யாவுடனான அமெரிக்காவின் விட்டுக் கொடுப்பு விளாடிமிர் புட்டினுக்கு உற்சாகம் தரும்.

அத்துடன், சீனாவுடன் கடுந் தொனியிலான பேச்சு ட்ரம்ப் நிர்வாகத்தின் மன உறுதியை பெய்ஜிங் இராணுவ வழியில் பரீட்சித்து பார்க்கவே இட்டுச் செல்லும்.

ஜனாதிபதி ட்ரம்ப் அப்படிப்பட்ட மோதலுக்கு தயாராக இருக்கிறாரா என்பது தெளிவில்லை.

இப்போதைக்கு தனது கடும் வார்த்தைப் பிரயோகம், செயல்களின் விளைவுகள் பற்றி அவர் சிந்திப்பதாகவும் தெரியவில்லை.

சீனாவும் ரஷ்யாவும் நீண்ட காலமாகவே அரசியல் மாற்று சக்திகளாக இருக்கின்றன.

ரஷ்யா தனது பாரம்பரிய மேற்கு நாட்டு எதிரிகளிடமிருந்தும், சீனா கீழைத்தேச எதிரியிடமிருந்தும் இன்று பாதுகாப்பாக இருப்பதுபோல முன்னெப்போதும் அப்படி உணர்ந்ததில்லை என்றாலும் இப்போதைய உலக அதிகார கட்டமைப்பில் அவை அதிருப்தி கொண்டிருக்கின்றன.

முன்புபோல தத்தமது பிராந்தியங்களில் அவை இப்போது ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றன.

சீனாவின் விடயத்தில் அது கிழக்கு ஆசியாவிலுள்ள நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாகும்.

ஜப்பான், தென் கொரியா அடங்கலான அந்த நாடுகள் பெய்ஜிங்கின் தந்திரோபாய, பொருளாதார, அரசியல் முன்னுரிமை விடயங்களில் எதிர்ப்பின்றி இணங்குகின்றன.

இதனால் அமெரிக்காவின் செல்வாக்கு ஹவாய் தீவுகளுக்குப் பின்னாலுள்ள கிழக்கு பசுபிக்கை நோக்கி பின்தள்ளப்படுவதையும் அது காட்டுகிறது.

ரஷ்யாவைப் பொறுத்தவரை, அது ஒரு காலத்தில் தனது சாம்ராஜ்யத்தின் பகுதியாகவோ, செல்வாக்குப் பரப்பின் பகுதியாகவோ கருதிய மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் தன்னாதிக்கம் செலுத்துவதாகும்.

அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கில் நியாயமற்ற அதிகாரம், செல்வாக்கு, கௌரவம் என்பன பகிர்ந்தளிக்கப்படுவதில் உள்ள தமது குறைகளை நிவர்த்தி செய்ய பெய்ஜிங்கும், மொஸ்கோவும் இப்போது முயல்கின்றன.

ஏகாதிபத்திய நாடுகள் என்ற வகையிலான இந்த நாடுகள் சர்வதேச அமைப்பிலுள்ள ஜனநாயக நாடுகளாலும், எல்லைகளிலுள்ள ஜனநாயக நாடுகளாலும் ஆட்கொள்ளப்படும் ஆபத்தில் இருப்பதாக உணர்கின்றன.

இவை அமெரிக்கா தமது அபிலாஷைகளுக்குப் பெரும் தடையாக இருப்பதாகக் கருதுவதால் தமது உரிமையுள்ள இலக்குகளை அடைவதில் தடையாக உள்ள அமெரிக்காவின் சர்வதேச பாதுகாப்பு ஒழுங்கை பலவீனமடையச் செய்ய வேண்டுமென நினைக்கின்றன.

அண்மைக் காலம்வரை ரஷ்யாவும், சீனாவும் தமது இலக்குகளை அடைவதில் பெரும் தடைகளைச் சந்தித்திருக்கின்றன.

பிரதான தடையாக இருப்பது சர்வதேச ஒழுங்கும் அதை ஆதரித்து காப்பாற்றும் பாதுகாவலனுமே.

மேலும், சோவியத்தின் பொதுவுடைமை சித்தாந்தம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து வந்த இரு தசாப்தங்களில் ஜனநாயக அரசாங்கங்களின் வளர்ச்சியும், செழுமையும் பெய்ஜிங் மற்றும் மொஸ்கோவின் அதிகார ஆட்டத்துக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.

அத்துடன் தண்போர் முடிவுக்கு வந்தது முதல் தமது எல்லைகளுக்கு அருகிலுள்ள தாராளமய ஜனநாயக நாடுகளின் ஒவ்வொரு முன்நகர்வையும் ஒரு அச்சுறுத்தலாகவே அவை கருதுகின்றன.

எனவே, அமெரிக்க ஆதரவிலான ஜனநாயக நாடுகளின் இந்த தொடர்ச்சியான அச்சுறுத்தல் சீனாவையும், ரஷ்யாவையும் இயற்கையாக அந்த ஒழுங்குக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக திருப்பி விட்டுள்ளது.

ஆனால், அண்மைக் காலம் வரை உள்நாட்டு, சர்வதேச சக்திகளின் செல்வாக்கும் அந்த ஒழுங்கை நேரடியாக எதிர்கொள்ள முடியாதபடி சீனாவையும், ரஷ்யாவையும் தடுத்திருக்கிறது.

அமெரிக்காவுடனான நேரடி மோதல் தோல்வியடைந்தால் உள்நாட்டில் தமது ஆட்சி உரிமைக்கு என்ன நடக்கும் என சீனத் தலைவர்கள் கவலைப்படுகின்றனர்.

புட்டினும் அமெரிக்காவினதும், ஐரோப்பிய நாடுகளினதும் சிறிதளவான எதிர்ப்பைக் கூட எதிர்கொள்வதில் அதிக எச்சரிக்கையுடனேயே இருந்து வருகிறார்.

A9 வீதியில் பழையமுறிகண்டிக்கும் - திருமுறிகண்டிக்குமிடையில் 18ஆம் போர் என்னும் (பண்டாரவன்னியனுக்கும் வெள்ளையர்களுக்குமிடையில் யுத்தம் நடைபெற்ற) இடத்தில் கனரகவாகனம் குடைசாய்ந்தது.
மாங்குளத்தில் பால் வாகனம் விபத்து துரதிஷ்ட வசமாக உயிர் தப்பிய சாரதி.

இன்று (20) 1.45 மணியளவில் பால் கொள்வனவு செய்யும் நெஸ்லே வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்து இடம்பெற்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கனகராயன்குளத்திலிருந்து மல்லாவிக்கு பால் கொள்வனவு செய்வதற்காக சென்று கொண்டிருந்த பால் வாகனம் மாங்குள சந்திக்கு முன்பு ஏ9 பிரதான வீதியில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் வீதியை விட்டு விலகி வீதியின் மறுபக்கத்திற்கு சென்று தடம்புரண்டுள்ளது. வாகன சாரதி துரதிஷ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

நித்திரை தூக்கம் காரணமாகவே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



உலகில் அமானுஷ்ய சக்தி உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் திகலூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 6 வயதுடைய சிறுமி ஒருவர் வீட்டில் தன்னை ஏதோ தொந்தரவு செய்வதாக தந்தையிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தந்தை வீடு முழுவதும் சிசிடிவி கமெரா பொருத்தியுள்ளார். இதனையடுத்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை கண்டு தந்தை அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், குறித்த திகிலூட்டும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோவில், சிறுமி வீட்டில் தனியாக பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது சிறுமியின் அருகிலிருக்கும் பொம்மை ஒன்று அமானுஷ்யமாக தனது தலையை அசைக்கிறது. இதனையடுத்து, சிறுமி ஒரு அறையில் வரைந்துக்கொண்டிருக்கிறார்.

அப்போது திடீரென காகிதங்கள் பறக்கிறது. உடனே சிறுமி அறையை விட்டு ஓடுகிறார். தொடர்ந்து கமெரா பதிவாகிறது. இதனையடுத்து மேசை மேலிருந்த பொருட்கள் கீழே விழுகிறது. இறுதியாக மேசையே அமானுஷ்யமாக நகர்கிறது. இதை பார்த்த சிலர் இந்த வீடியோ உலகில் அனுமாஷ்ய சக்தி உள்ளது என்பதை நிருபிக்கும் வகையில் உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.