Articles by "tips"

Showing posts with label tips. Show all posts

முடியை அலச வேண்டும் எப்போதுமே தலை முடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முடி கொட்டுதலுக்கு முக்கிய காரணமான பொடுகு மற்றும்  அரிப்பிலிருந்து இது தடுக்கும். மேலும் தலை முடியின் வகையை பொறுத்து, அதற்கு தகுந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்.
கடுகு எண்ணெய் ஒரு கப் கடுகு எண்ணையை எடுத்து நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளுடன் கலக்கவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து,  பின்னர் வடிகட்டி ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை வைத்து, தலையை நன்கு மசாஜ் செய்து கொண்டால், முடி ஆரோக்கியம்  பெரும்.

வெந்தயம் சில டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, 40  நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டூம். இதை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் முடி கொட்டுதல் குறையும்.  மசாஜ் முடியை குளிர்ந்த நீரில் அலசி, தலை முடியையும், ஸ்கால்ப்பையும் கைகளால் நன்கு கோதி விட்டு மசாஜ் செய்ய வேண்டும். இது தலையில் இரத்த  ஓட்டத்தை தூண்டி முடி கொட்டுவதை தடுக்கும்.

வெங்காயம் தலையில் வழுக்கை விழுவதை தடுக்க, பச்சை வெங்காயம் ஒன்றை எடுத்துக் கொண்டு, வழுக்கை விழும் இடத்தில், தோல் சிவக்கும் வரை  தேய்த்து, பின்னர் அங்கே தேனை தடவினால், முடி வளர்ச்சிக்கு இந்த முறை ஒரு தூண்டுதலாக இருக்கும்.

இயற்கை ஷாம்பு 5 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தேய்த்து, ஊற  வைத்து, நீரில் அலசினால், முடி கழிதல் நின்று, நன்கு ஆரோக்கியமாக வளரும்.

தேங்காய் எண்ணெய் ஒரு கப் தேங்காய் எண்ணெயை சூடேற்றி, காய வைத்த நெல்லிக்கனியை அதில் போட்டு, கொதிக்க விட்டு வடிகட்டி, அதனை ஒரு  பாட்டிலில் ஊற்றி, தினமும் தலையிலும், தலை முடியிலும் நன்கு மசாஜ் செய்தால், முடி கொட்டுதலின் அளவு கண்டிப்பாக குறையும்.

நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு நெல்லிச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முடிக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தால்,  முடி உதிர்வை குறைக்கலாம்.

கொத்தமல்லியை வாங்கி, அதை நன்றாக அரைத்து 1 கப் அளவு சாறு எடுத்து, முடியை நன்கு அலசுங்கள். அதுவும் ஒரு தீர்வே. தேங்காய் பால் தலையை  தேங்காய் பாலால் அலசுவதும் கூட முடி உதிர்தலை உடனடியாக தடுக்கும்.

கற்றாழையில் இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள கற்றாழை உதவுகிறது.

கற்றாழையை ஜூஸ் செய்தும் சாப்பிடலாம். தோல் நீக்கிய சோற்றை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும்.

தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன்படுகிறது.

இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப் பயன்படுகிறது. இலை மஞ்சள் நிறத் திரவமும் தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும்.

வயிற்றில் உள்ள நாக்குப் பூச்சிகளை வெளியேற்றுகிறது. எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும். நிறம் கருமையடையும். ஜெல்லைப் பதப்படுத்தி குளிர்பானமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி கண்கள் சிவந்து விடும். அப்போது கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக் கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும்.

இப்போது கண் எரிச்சல் குறைவதோடு சிவந்த நிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.

நீர்க்கடுப்பு, வயிற்றின் எரிச்சல் உள்ள சமயங்களில் கற்றாழைச் சோற்றுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் அவை குணமாகும். சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல எரிச்சலாக இருக்கும்.

இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்கு போன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.

கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும்.

உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

இந்த ஆண்டும் பட்டையைக் கிளப்பத் தொடங்கிவிட்டது குளிர். `விஷப் பனி மாதிரியில்ல இருக்கு… காலையில எட்டு மணி வரைக்கும் வீட்டை விட்டு வெளியவே வர முடியலை’ என்கிற குரல்களைக் கேட்க முடிகிறது.

`இந்தத் தட்பவெப்பநிலை, கிருமிகள் செழித்து வளர உதவும். சூரிய ஒளியின் வெப்பம் குறைவாக இருப்பதால், நோய்க் கிருமிகள் அதிக வீரியம் பெற்று, குறிப்பாக ‘வைரஸ்’ நோய்க்கிருமிகள் அதிகம் உற்பத்தியாகும். ஆக, குளிர்காலம் கிருமிகளுக்குக் கொண்டாட்டமான காலம்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

பனிக்காலத்தில் சளி, இருமல், தலைவலி, தொண்டைக்கட்டுதல், ஆஸ்துமா, காதடைப்பு, சோர்வு, நுரையீரல் பாதிப்பு, மூட்டுவலி, அலர்ஜி போன்ற பல பிரச்னைகளும் வரிசைகட்டி வரத் தொடங்கிவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களைத் தொற்று நோய்கள் எளிதில் தாக்கும். ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு, ‘பனிக்காலம்’ என்பதே படு அவஸ்தையான காலம்.

“உடல்நலனில் தனிக் கவனமும் முன்னெச்சரிக்கையும் இருந்தால், இந்தப் பனிக்காலத்தில் நோயை நெருங்க விடாமல் கடந்து விடலாம். உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதும், உடலுக்கு உஷ்ணம் தரும் உணவுகளை உட்கொள்வதும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதும் குளிர்காலத்தில் தாக்கக் கூடிய நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள உதவும்”

குளிர்கால பிரச்னைகளிலிருந்து தப்பிக்க… சில எளிய வழிமுறைகள்

நாமிருக்கும் இடம் நல்ல காற்றோட்டத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். குடிக்கவும் குளிக்கவும் வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தவும். பனிக்காலத்தில் அதிகம் மசாலா சேர்த்த உணவுகளைத் தவிர்க்கவும். காரம், புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்ளலாம். குளிர்பானங்கள், நீர்ச்சத்துள்ள காய்கறிகளைத் தவிர்க்கலாம்.

ரோட்டோரக் கடைகளில் சாப்பிடுவதோ, ஃபாஸ்புட் உணவுகளை உண்பதையோ தவிர்க்கலாம். ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் உணவுகளை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இயல்பான வெப்பநிலைக்கு வந்தவுடன் அவற்றைப் பயன்படுத்தலாம்.

ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள், பகல் நேரங்களைத் தவிர, அதிகாலை, மாலை நேரத்துக்குப் பிறகு வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம். மேலும், ஒட்டடை அடிப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்யாமலிருக்கலாம். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. மூச்சுப்பயிற்சி, யோகா, தியானத்துக்கு தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் ஒதுக்கலாம். இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.

பனிக்காலத்தில் வியர்வை குறைவாக இருக்கும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். சிறுநீர் கழித்த பின்னர் கை,கால்களைச் சுத்தப்படுத் திக்கொள்ள வேண்டும். இதைக் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்தலாம். சுகாதாரமற்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.

பனி பொழியும் அதிகாலையிலும், பின் இரவுகளிலும், வெளியில் செல்லும் போது காதுக்குப் பஞ்சு வைத்துக்கொள்ளலாம் அல்லது மப்ளர் போன்றவற்றால் காதுகளை மறைத்துக்கொள்ளலாம்.

மன அழுத்தமிக்க இன்றைய வாழ்க்கை முறையில் ஏராளமானோர் சரியான தூக்கம் கிடைக்காமல் அவஸ்தைப்பட்டு கொண்டிருக்கின்றனர். மனிதன் ஆரோக்கியமாக வாழ தூக்கம் மிகவும் அவசியமானது. அந்த தூக்கம் சரியாக கிடைக்காவிட்டால், அதுவே உடலில் பல நோய்களை வரவழைக்கும். தூக்கத்தின் மூலம் தான் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கிறது.

சரியான ஓய்வு கிடைக்காமல் உடல் இயங்கிக் கொண்டிருந்தால், உடலுறுப்புக்கள் விரைவில் பாதிக்கப்படும். ஆகவே எப்படி உண்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதேப் போல் தூக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்காக தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்தும் பழக்கத்தைக் கொள்ளக்கூடாது.

இக்கட்டுரையில் 30 நொடிகளிலேயே ஆழ்ந்த உறக்கத்தைப் பெற சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து தெரிந்து, மனதில் கொண்டு பின்பற்றி நடந்தால், இரவு நேரத்தில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

புத்தகம் படி
இரவில் படுக்கையில் படுத்ததும் தூங்க வேண்டுமானால், படுக்கும் முன் சிறிது நேரம் புத்தகத்தைப் படியுங்கள். அதுவும் ஆர்வத்தைத் தூண்டும் புத்தகத்தைப் படிக்காமல், போர் அடிக்கும் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். இதனால் படுத்த உடனேயே தூங்கிவிடலாம்.

ஒரே நேரத்தில் உறங்குங்கள்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் தூங்காமல், தினமும் ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் இரவு நேரத்தில் தினமும் தூங்கும் நேரம் வந்ததுமே தானாக தூங்கிவிடுவீர்கள். ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதால், மூளை செரடோனின் மற்றும் மெலடோனின் அளவை சரிசெய்து, தானாக தூக்கத்தைப் பெறச் செய்யும்.

ஆரோக்கியமான டயட்
ஆம், ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்வதன் மூலம் படுத்ததும் தூக்கத்தைப் பெற முடியும். மேலும் ஆய்வுகளில் பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் சாப்பிட்டால் நல்ல தூக்கத்தைப் பெறலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் வான் கோழி சாப்பிட்டால், அதில் உள்ள அதிகளவிலான ட்ரிப்டோஃபேன் ஒருவித மயக்க உணர்வை உண்டாக்கி, நம்மை விரைவில் தூங்க வைக்கும்.

யோகா
தூக்கம் வராமல் அவஸ்தைப்பட்டால், தூங்கும் முன் சிறிது நேரம் யோகா செய்யுங்கள். இதனால் உடலினுன் அனைத்து பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக செல்வதோடு, உடல் ரிலாக்ஸ் ஆகி, விரைவில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.

தியானம்
எளிதில் தூக்கத்தைப் பெற தியானம் மேற்கொள்வதும் ஓர் அற்புத வழியாகும். இரவில் படுக்கும் முன் தியானத்தில் ஈடுபடுவதன் மூலம், மனதில் உள்ள குழப்பங்கள் மற்றும் அழுத்தங்கள் நீங்கி, சுவாசம் சீராகி சீக்கிரம் தூக்கத்தைப் பெறச் செய்யும்.

வெதுவெதுப்பான பால்
இரவில் நல்ல தூக்கம் கிடைக்க வேண்டுமானால், ஒரு டம்ளர் பால் குடிக்க சொல்வார்கள். இதை பலரும் பொய் என்று நினைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அது தான் இல்லை. இரவில் வெதுவெதுப்பான பாலைக் குடிக்கும் போது, அது ட்ரிப்டோபேன் அளவை சீராக்கி சீக்கிரம் தூக்கத்தை வரவழைக்கும்.

எலக்ட்ரானிக் பொருட்கள்
எலக்ட்ரானிக் பொருட்களை அறையில் படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டாம். இதிலிருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சம் மூளையை ரிலாக்ஸ் அடையச் செய்யாமல் செய்து, தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். எனவே படுத்ததும் தூங்க நினைத்தால், அருகில் மொபைல், லேப்டாப் போன்றவற்றை 1 மணிநேரத்திற்கு முன்பாகவே பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள்.

கருப்பு நிற திரைச்சீலைகள்
படுக்கை அறையில் உள்ள ஜன்னல்களின் வழியே வெளிச்சம் வந்தால், அங்கு கருப்பு நிற திரைச்சீலைகளை வாங்கி தொங்கவிடுங்கள். இதனால் அந்த அறை முழுவதும் இருட்டாக இருப்பதுடன், படுத்ததுமே துங்கிவிடலாம். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

சருமத்தை அழகாக்குவதில் இயற்கையானவைப் போல பாதுகாப்பானது எதுவுமில்லை. செலவும் குறைவு, கெமிக்கலும் இல்லை. ஆயுர்வேதத்தில் நிறைய பொருட்கள் உங்கள் சருமத்தின் நிறத்தினை அதிகரிக்கச் செய்து, மேனிக்கு மினுமினுப்பு அளிக்கிறது.

அதனால்தான் வெளி நாட்டவரும் இப்போது ஆயுர்வேதம், போன்ற நம் நாட்டு இயற்கை முறைகளின் பக்கம் வருகின்றனர்.

சிலருக்கு என்ன செய்தாலும் சருமம் பொலிவின்றி காணப்படும். க்ரீம்கள் எல்லாம் அப்போதைக்கு தீர்வு அளிப்பது போல இருந்தாலும், நிரந்தரமான அழகினை தருவதில்லை என உங்களுக்கு தோன்றுகிறதா?

அப்படியெனில் இந்த குறிப்பு நிச்சயம் உங்கள் சாய்ஸில் இடம் பெறும். என்ன வழிகளில் உங்கள் அழகினை மெருகூடலாம் என பார்க்கலாம்.

சாமந்தி பூ ஃபேஸ் பேக் :
உங்களுக்கு தெரியுமா? கிராமங்களில் சாமந்தி பூவினை அரைத்து, குழந்தைகளுக்கு பூசி குளிக்க வைப்பார்கள். குழந்தை தங்க நிறத்திற்கு மாறும். இது அனுபவப் பூர்வமான உண்மை. இங்கே சாமந்திப் பூ வினைக் கொண்டு ஃபேஸ் பேக் எப்படி செய்வது என பார்க்கலாம்.

சாமந்தி பூவின் இதழ்களைப் பிரித்தெடுத்து அவற்றை பாலுடன் சேர்த்து நன்றாக மைய அரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேனினை சேர்த்து, நனறாக கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து காய்ந்ததும் கழுவி விடுங்கள்.

வாரம் இரு முறை இந்த மாஸ்க் போட்டு வந்தால், சருமம் இறுக்கமடையும். முகப்பருக்கள் மறைந்து விடும். சருமம் மினுமினுக்கும்.

மஞ்சள்-கடலை மாவு ஃபேஸ் பேக் :
இது மிகவும் எளிதாக வீட்டில் இருக்கக் கூடியவை. திருமண சமயங்களில் உடனடியாக கருமை போய், நிறம் அதைகரிக்க வேண்டுமென்றால், இந்த ஃபேஸ் பேக்கை உபயோகிங்கள். சருமமும் பளபளப்பாகும்.

4 ஸ்பூன் க்டலை மாவில், அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து, சிறிது பால் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இதனை முகத்தில் போட்டு, 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். உடனடியாக கருமை நீங்கி சருமம் ஜொலிப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

குறிப்பு : இந்த பேக்கை அதிக நேரம் போட்டு காய விடக்கூடாது. சருமத்தில் நுண்ணிய சுருக்கங்கள் வர காரணமாகிவிடும்.

அரோமா ஃபேஸ்பேக் :
இந்த அரோமா பேக் சருமத்தில் அருமையான பலன்களை தரும். சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றி, போஷாக்கினை அளிக்கிறது. அதில் சேர்த்துள்ள மூலிகைகள் சருமத்திற்கு ஜொலிப்பினை தருகின்றன.

தேவையானவை : அரைத்த சந்தனம் – 1 ஸ்பூன் ரோஜா எண்ணெய் – 2 துளிகள் லாவெண்டர் எண்ணெய் -1 துளி கடலை மாவு-2 ஸ்பூன் மஞ்சள் – ஒரு சிட்டிகை

மேலே கூறிய அனைத்தையும் சிறிது மோர் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். 10-15 நிமிடங்கள் அப்படியே விடவும். வாரம் இரு முறை செய்தால், உங்களுக்கு இளமையான சருமம் கிடைக்கும்.


இருமலும் சளியும் வாட்டி வதைக்கின்றதா? ஆங்கில மருத்துவத்தை விட சித்த வைத்தியம் சிறந்தது என்று எமது முன்னோர்கள் கூறுவார்கள்.

தேமல், வயிற்றுக்கோளாறுகள், விலா எலும்பு வலி, இளைப்பு நோய், நீர்க்கோவை இவ்வாறான பல நோய்களுக்கு மருந்தாகிறது திப்பிலி.

இது சளித்தொல்லைக்கும் சிறந்தவொரு நிவாரணமாகும். திப்பிலியின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறிந்தும் அறியாத பல விடயங்கள் உண்டு.

திப்பிலி இருமல், களைப்பு, வயிற்று வலி, வாய்வு போன்ற பல பிரச்சனைகளை குணமாக்க வல்லது.

திப்பிலி பொடியினை தேனோடு கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல், தொண்டை கமறல் சரியாகும்.

திப்பிலியை தூளாக்கி தேனுடன் கலந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் தேமல் சரியாகும்.

திப்பிலி இளைப்பு நோய்க்கும் சிறந்தவொரு மருந்தாக காணப்படுகின்றது. திப்பிலி பொடியுடன் கடுக்காய் பொடியும் சம அளவு கலந்து தேனுடன் இலந்தை பழ அளவு சாப்பிட்டு வரவேண்டும். இதை நாள்தோறும் இரண்டு வேளை தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் இளைப்பை நோய் குணமாகும்.

திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.
திப்பிலியை சிறிதளவு தேனில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால் பசியின்மை, வயிற்றுக்கோளாறுகள் குணமாகும்.

அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். இதில், பேரிச்சம்பழம் – தேன் கலவை ; மற்றும் அத்திப்பழம் – தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரிக்கும், ஆண்மை பெருகும்…

தேன் – பேரிச்சம்பழம் – தேவையான பொருட்கள்!
பேரிச்சம்பழம் – அரைக்கிலோ (விதை நீக்கியது)
சுத்தமான தேன் – அரைக்கிலோ
குங்குமப்பூ

செய்முறை: 1
ஒரு அகண்ட பாத்திரத்தில் அரைக்கிலோ பேரிச்சம்பழம் மற்றும் அரைக்கிலோ தேனை போடவும், அதன் மீது குங்குமப்பூவை சிறிதளவு தூவ வேண்டும்

செய்முறை: 2
இதை காலையில் 7-8 மணியளவில் இளம் வெயில் நேரத்தில் அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டு. ஊறிய பிறகு அதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்

செய்முறை: 3
இரவு உறங்க செல்லும் முன்னர், அதில் இருந்து இரண்டு பேரிச்சம் பழத்தை எடுத்து சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு உறங்குங்கள்.

தேவையான பொருட்கள்:
அத்திபழம்
தேன்
குங்குமப்பூ

செய்முறை: 1
பேரிச்சம்பழம் – தேன் கலவை சாப்பிட்டு முடித்த பிறகு தான், அத்திப்பழம் – தேன் கலவை உட்கொள்ள வேண்டும். அரைக்கிலோ அத்திப்பழம், தேன் மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளவும்.

செய்முறை: 2
அதை காலை நேரத்தில் இளம் வெயில் நேரத்தில் அரை மணிநேரம் ஊறவைத்து எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை: 3
அதில் இருந்து இரவு உறங்கும் முன்னர் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டு பிறகு ஒரு டம்ளர் பால் குடித்த பிறகு உறங்குங்கள்

இரத்த சோகை!
இந்த இரண்டு கலவை சாப்பிட்டு முடிக்கும் ஒரு மாத காலத்தில் உங்கள் உடலில் இரத்தம் சுத்திகரிக்கு ஆகியிருக்கும். இரத்த சோகை இருக்கும் நபர்கள் உடலில் இரத்தம் அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பார்கள்இரத்த சோகை! இந்த இரண்டு கலவை சாப்பிட்டு முடிக்கும் ஒரு மாத காலத்தில் உங்கள் உடலில் இரத்தம் சுத்திகரிக்கு ஆகியிருக்கும். இரத்த சோகை இருக்கும் நபர்கள் உடலில் இரத்தம் அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பார்கள்

ஆண்மை!
இயல்பாகவே ஆண்மை அதிகரிக்க அத்திப்பழம் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும், பாலில் உள்ள மூலக்கூறுகளும் ஆண்மை பெருக உதவுகிறது. அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது உங்கள் ஆண்மை பெருக வெகுவாக உதவும்.

இன்றைய காலத்தில் பெண்களுக்கு தாடி வைத்திருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு, பல ஆண்களும் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பெண்களைக் கவர வேண்டுமென்று தாடி வளர்க்க ஆரம்பிப்பவர்கள், இக்கட்டுரையை முதலில் படியுங்கள்.

தாடி வைக்கும் முன் ஒருவர் தங்களின் முக வடிவத்திற்கு எந்த ஸ்டைல் தாடி நன்றாக இருக்கும் என்று தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் மேற்கொண்டால், அவரது தோற்றம் இன்னும் சிறப்பாக காட்சியளிக்கும்.

ஆகவே ஆண்களே எந்த முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது . அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

அழகைப் பராமரிப்பது அவ்வளவு சாதாரண விஷயமெல்லாம் கிடையாது. அதிலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டுமானால், அதற்கு நாம் நிச்சயம் மெனக்கெட வேண்டும். அழகும் இளமையும் மாறாமல் நீடித்திருப்பது மட்டும் எளிதாக வாய்த்துவிடுமா என்ன?

கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேண்டும். சிரமத்தைப் பார்த்தால், வெளியில் பேரழகியாக உலா வர முடியுமா?

அப்படி உங்கள் சருமத்தை மிகவும் இளமையாக வைத்திருக்க வேண்டுமென்றால் என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்?

வெந்தயம் உடல் சூட்டைத் தணிக்கும் மிகச்சிறந்த பொருள்.

வைட்டமின் பி3 மற்றும் நியாசின் ஆகியவை வெந்தயத்தில் நிரம்பியிருக்கின்றன.

அது சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்கிவிடும். ஒரு கைப்பிடியளவு வெந்தயத்தை 2 மணி நேரம் வரையிலும் ஊற வைத்து, நன்கு மை போல அரைத்து ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவும். தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.

மத்திய கிழக்கு நாடுகளில் பெண்கள் உடல் எடையை அதிகரிப்பதற்காக சர்க்கரை, ஆலிவ் ஆயில் உடன் வெந்தயம் சேர்த்து சாப்பிடுவது அந்த காலத்தில் வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்த பொடி தயாரிப்பது அவ்வளவு பெரிய விஷயமெல்லாம் கிடையாது.

வெறும் வாணலியில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து பொடி செய்யவும். சிலருக்கு இது அதிக கசப்பாக இருப்பதுபோல் இருந்தால், வெந்தயத்துடன் சிறிது வேர்க்கடலை அல்லது பாதாம், வால்நட் ஏதாவது ஒன்றையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

தினமும் இரவு படுக்கைக்கு போகும்முன் மிதமான சூடுள்ள பாலில் ஒரு ஸ்பூன் அளவு கலந்து குடித்து வரலாம்.

இட்லி, தோசை மற்றும் சூடான சாதத்துடன் நெய் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தையோ அல்லது வெந்தயப் பொடியையோ காய்ச்சி கொடுத்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

மாதவிலக்கு காலத்தில் அதிகமான ரத்தப் போக்கையும் கட்டுப்படுத்தும்.

இரவில் ஊற வைத்து காலையில் அரைத்து முடியில் தடவி ரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கொட்டுவது, பொடுகு, அரிப்பு போன்ற பிரச்னைகள் தீரும்.

முடி அடர்த்தியாகவும் வளரும்.

வெந்தயத்தை பருக்கள் மீது தடவினால் முகப்பரு நீங்கும்.

இது எப்போதும் நம்மை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

இத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் எமது பக்கத்தில் உள்ள விளம்பரம் ஒன்றினை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை வழங்குங்கள்.

பேபி வைப்ஸ் போலவே தற்போது பெரும்பாலானோர் ஸ்கின் கேர் வைப்ஸ் பயன்படுத்துகிறார்கள். காற்று புகாத வண்ணம் டைட்டான பாக்ஸில் ஈரப்பசையுடன் வைப்ஸ் இருக்கும்.

இதனை நாம் எளிதாக பயன்படுத்தலாம். தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவ முடியாத சமயங்களில் இதனைப் பயன்படுத்தலாம். மேக்கப் ரீமூவ் செய்வதற்கு சருமம் வறண்டு காணப்பட்டால் இதனைப் பயன்படுத்தி முகத்தை துடைக்கலாம்.

இதனைப் பயன்படுத்த எளிதாக இருந்தாலும் இதனால் ஏராளமான தீமைகள் ஏற்படுகிறது.

ஸ்கின் கேர் வைப்ஸில் ஏராளமான கெமிக்கல்ஸ் இருக்கும். எப்போதும் அவை ஈரப்பதத்துடன் இருப்பதற்காக அவற்றில் கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இவற்றால் சென்ஸிட்டிவ் ஸ்கின் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் சருமம் வரண்டு போகும். இதனால் பல்வேறு சரும பாதிப்புகள் உண்டாகும்.

தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலைகளில் தான் அதிகமாக இதனை பயன்படுத்துகிறார்கள் ஆனால் இதனை பயன்படுத்துவதால் முகம் முழுவதுமாக சுத்தம் ஆகாது. சில நுண்ணிய துகள்கள் முகத்தில் ஒட்டியபடியிருக்கும். இப்படியே அடிக்கடி செய்து வந்தால் அது சருமத்திற்கு பாதிப்பையே உண்டாக்கும்.

வைப்ஸில் இருக்கும் ஆல்கஹால் நம் சருமத்தை வறட்சியாக்கிடும். இது சீக்கிரத்திலேயே சருமத்தில் சுருக்கம் விழுவதற்கு காரணமாக அமைந்திடும். இதனால் பருக்கள், கரும்புள்ளி தோன்றும்.

இன்று முப்பதை தாண்டுவதற்குள் இடுப்பு வலி, இரத்த ஓட்டம் சீரின்மை, நீரிழிவு, உடல் பருமன் போன்றவை ஏற்படுவதால் தான் ஆண்மை குறைபாடு, விறைப்பு தன்மை கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன.

இதற்கு தீர்வாக நிவாரணம் தேடி பலரும் ஆங்கில மருந்துகளை தான் நாடி செல்கின்றனர். ஆனால், நமது நாட்டின் உணவு கலச்சாரத்திலேயே இதற்கான தீர்வுகள் இருந்தன என சில பண்டையக் கால குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.
அந்த காலத்தில், வயதான அரசர்கள் இதற்கு எதை தீர்வாக எடுத்துக் கொண்டனர் என்று காண்கையில்… ஒரு சில உணவுகளின் பெயர்கள் தான் குறிப்பிடப்பட்டுள்ளன…

குங்குமப்பூ:குங்குமப்பூ கருவளம் அதிகரிக்க உதவும் சிறந்த உணவுப் பொருள் ஆகும். இது நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்து கருவளத்தை தூண்டுகிறது.
குறிப்பு: குங்குமப்பூவை ஒரு சிட்டகை அளவு எடுத்து, இதமான நீரில் கலந்து, இரவு படுக்க செல்லும் முன் குடிக்க வேண்டும்.

ஷிலாஜித் (Shilajit)!:நோய் எதிர்ப்பு கோளாறு, வயதாகும் போது ஏற்படும் விறைப்பு குறைபாடு, இரத்த ஓட்டம் சீரின்மை போன்றவைக்கு ஷிலாஜித் சிறந்த தீர்வளிக்கும். இது அந்தரங்க உறுப்புகளின் வலுவின்மையை சரிசெய்யும்.
குறிப்பு: ஒரு சிட்டிகை அளவு ஷிலாஜித்தை நெய் அல்லது தேனுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

புளியங்கொட்டை!புளியங்கொட்டையில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. முக்கியமாக இது விந்தணு எண்ணிக்கை குறைபாடு மற்றும் விறைப்பு தன்மை குறைபாடுகளை போக்கவல்லது.
குறிப்பு: புளியங்கொட்டை பவுடரை பாலில் கலந்து ஒரு நாளுக்கு இரண்டு முறை குடித்து வர வேண்டும்.

அஸ்வகந்தா!:அஸ்வகந்தா வலுவின்மை சரிசெய்யும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கும். மேலும், குறைந்த விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்.
குறிப்பு: ஒரு டேபிள்ஸ்பூன் அஸ்வகந்தாவை இதமான நீரில் கலந்து குடித்து வர வேண்டும்.

நெல்லிக்காய்!:நெல்லிக்காய் சிறுநீர் கோளாறுகள், குறைந்த விந்தணு எண்ணக்கை சரிசெய்யும். மேலும், இது விறைப்பு தன்மை குறைபாட்டையும் சரி செய்யும் என கூறப்படுகிறது.
குறிப்பு: நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் பவுடரை உறங்கும் முன் உட்கொள்ளுங்கள். பிறகு இதமான சூட்டில் பாலை குடித்து வரவும்.

மூக்குரட்டைக்கொடி (Boerhavia Diffusa):மூக்குரட்டைக்கொடி (போயாரியா டிபியூசாசா) எனும் இந்த தாவரத்தின் இலைகளை வீக்கம், வலி, சளி குறைய பயன்படுத்துகிறார்கள்.பண்டையக் காலத்தில் இதை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், விறைப்பு தன்மை குறைபாடு நீங்கவும் பயன்படுத்தியுள்ளனர்.

குறிப்பு: அரை டீஸ்பூன் அளவு போயாரியா டிபியூசாசாவை, ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து ஒரு நாளுக்கு இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும்.
மருத்துவர் குறிப்பு!இவை அனைத்துமே மூலிகை மற்றும் இயற்கை பொருட்கள் தான். ஆயினும், ஒருசில உடல் ஆரோக்கிய குறைபாடுகள் / நோய்கள் உள்ளவர்களுக்கு இது அலர்ஜியாக இருக்கலாம்.

இது ஒவ்வொரு தனி நபரின் ஆரோக்கியம் சார்ந்தும் வேறுபடும். எனவே, இதை பின்பற்றும் முன்னர் மருத்துவர் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

இத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் எமது பக்கத்தில் உள்ள விளம்பரம் ஒன்றினை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை வழங்குங்கள்.

முகத்தை சரியாக பராமரிக்காவிட்டால் நம் முகத்தில் பருக்கள் தோன்றுவதுண்டு, ஆனால் இவை சரியாக பராமரிக்காவிட்டால் முகத்தை மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தை எடுத்துச் சொல்பவையாகவும் இருக்கிறது.

பருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. அதிகமாக எண்ணெய் சுரந்து அவை வெளியே வர முடியாமல் அவை பருக்களாக உருவாகும். எண்ணெய் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்துவதால் இதனை தவிர்க்கலாம்.

தலையில் பொடுகு இருக்கிறது, அல்லது பொடுகு வருவதற்கான ஆரம்ப நிலை என்றால் கூட தலையில் பருக்கள் தோன்றும். தலையில் உருவாகும் பாக்டீரியா சருமத்தை அலர்ஜியாக்கும். அதனால் தலையில் பருக்கள் தோன்றுகிறது.

அதிகமான உணவு சாப்பிட்டாலோ, அல்லது எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால் நெற்றியில் பருக்கள் ஏற்படும்.

ஷாம்புவைத் தவிர தலைக்குப் பயன்படுத்தும் எண்ணெய், சீரம், ஹேர் ஸ்ப்ரே போன்ற எந்தப் பொருட்கள் சேரவில்லை என்றாலும் நெற்றியில் பருக்கள் உண்டாகும்.

இதனைத் தவிர்க்க அதிக தண்ணீர் குடித்திடுங்கள், காய்கறி மற்றும் பழங்களை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். செயற்கை சுவையூட்டிகளை தவிர்த்திடுங்கள்.

தினமும் உடற்பயிற்சி செய்திடுங்கள், ஸ்ட்ரஸை குறைக்க யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம். தலைமுடியை முறையாக பராமரியுங்கள்.

கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா… அடர்த்தியா… கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்…

* வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும்.

* நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.

* முடி எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.

* அழுகின தேங்காயைத் தூக்கி எறியாமல் சிறிது சுடு நீருடன் அரைத்துத் தலையில் தடவி ஊறவைக்கவும். பிறகு நன்றாக ‘மசாஜ்’ செய்யவும். மயிர்க்கால்கள் வலுப்பெற சரியான வழி இது.

* இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.

* நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் சில துளிகள் கிளிசரின் சேர்த்துக் கொண்டால் முடி அறுந்து போகாது.

* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும்.

* தேங்காயைத் தண்ணீ­ர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

* நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.

* விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.

* கூந்தல் வறண்டு இருந்தால ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.

* அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.

* தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப் பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும்.

* நேரமில்லை என்பவர்கள் சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக்கொள்ளலாம்.

* பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.

* தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.

* ஓடி ஆடி வெயிலில் அலைந்து திரிந்து வாழ்க்கையை ஓட்டுகின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். தினமும் உச்சந்தலையில் ஒரு விரல் சுத்தமானவிளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, முடியும் உதிராது.

* தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீ­ருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.

இதோ, முடி பளபளப்பாக காய்கறி வைத்தியம்:

* வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி (ஒரு கப்) அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்தச் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மயிர்க் கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால் முடி பளபளப்பாக மென்மையாக மாறும்.

ஒவ்வொருவருமே ஒவ்வொரு கட்டத்தில் தங்களுக்கு பிடித்தவரை உணர்ச்சிரீதியாக ப்ளாக்மெயில் செய்வோம். இதற்கு முக்கிய காரணம் தான் சொல்வதை தவறாமல் கேட்க வேண்டும், செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் தான். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஒருவேளை அப்படி செய்யாவிட்டால், உணர்ச்சிரீதியாக அவர்களை ப்ளாக்மெயில் செய்ய ஆரம்பிப்பார்கள்.

குறிப்பாக காதலிக்கும் போது ப்ளாக்மெயில் செய்வது தான் மிகவும் அதிகம். அப்படி ப்ளாக்மெயில் செய்து தன் தற்காலிகமாக எண்ணத்தை நிறைவேற்றுவதால், உறவு தான் பாதிக்கப்படுமே தவிர, இருவருக்குள் சந்தோஷம் நீங்கி உறவு நீண்ட நாள் நீடிக்காமல் ஒருகட்டத்தில் முறிந்துவிடும். ஆகவே உங்கள் வாழ்க்கை சந்தோஷேமாக மனதிற்கு பிடித்தவருடன் நீண்ட நாட்கள் செல்ல வேண்டுமானால், உணர்ச்சிரீதியாக ப்ளாக்மெயில் செய்யும் உங்கள் துணையிடம் மனம் விட்டு பேசி, அவர்களுக்கு அவர்களது தவறை உணர்த்த வேண்டும். முக்கியமாக பெண்கள் தான் அதிகம் உணர்ச்சிரீதியாக ப்ளாக்மெயில் செய்வார்கள்.

* உங்கள் காதலி உங்களை உணர்ச்சிரீதியாக அதிகம் ப்ளாக்மெயில் செய்பவராக இருந்தால், அவர்கள் என்ன சொன்னாலும் நீங்கள் ‘முடியாது’ என்று சொல்லக்கூடாது என்று நினைப்பார்கள். அதுமட்டுமின்றி உங்களிடம் எதை சொன்னாலும் நீங்கள் அவர்களை ஒரு கேள்வி கூட கேட்காமல் சரி என்று சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஒருவேளை நீங்கள் முடியாது என்று சொன்னால், கோபப்படுவார்கள் அல்லது அழ ஆரம்பிப்பார்கள்.

* உங்களால் ஏதேனும் நடைபெற வேண்டுமானால், உங்களிடம் வேண்டுகோள் விடுக்காமல் உங்களுக்கு கட்டளை விடுப்பார். ஒருவேளை நீங்கள் முடியாது என்று சொன்னால், உங்களிடம் சண்டை போட்டுக் கொண்டு, அழுவார்கள்.

* உணர்ச்சிரீதியாக ப்ளாக்மெயில் செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளில் ஒன்று அச்சுறுத்துவது. உதாரணமாக உங்களிடம் ஏதாவது ஒன்றை சொல்லி நீங்கள் செய்யாவிட்டால், அவர் உங்களை அச்சுறுத்துவார். அப்படி அச்சுறுத்தியும் நீங்கள் அவர்கள் வழிக்கு செல்லாவிட்டால், வாழ்க்கை முடித்துக் கொள்வேன் என்று சொல்லி ப்ளாக்மெயில் செய்வார்கள். அதிலும் நீங்கள் மடங்கவில்லை என்றால், அழுது கொண்டு கத்த ஆரம்பிப்பார்கள். அதுமட்டுமன்றி நீங்களே வந்து அவர்களை சமாதானம் செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள்.

ஆகவே உங்கள் காதலி இப்படியெல்லாம் நடந்தால், உடனே அவர்கள் மீது கோபம் கொண்டு அவர்களை விட்டு பிரிவதை தவிர்த்து, அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். பொறுமையாக பேசி புரிய வைத்து, வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு செல்லுங்கள். இல்லாவிட்டால் ப்ளாக்மெயில் செய்யும் குணம் வாழ்க்கையை நாசமாக்கிவிடும்.

இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம் Facebook மற்றும் Twitter-ல் Share செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..

ஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால் பைத்தியமாய்த் திரிவார்கள் என்பதும் இயல்புதான்.
ஆனால் ஆண்களைக் கிறங்கடிக்க இந்தக் கால இளம் பெண்கள் செய்யும் தந்திரங்கள்தான் எத்தனை எத்தனை! ஆண்களைப் பார்த்ததும் அவர்களுடைய நடை, உடை, பாவனைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பாருங்கள்.
அதுவே ஒரு கவிதைதான்!! ஏதோ ஒரு சினிமாப் படத்தில் ஒரு இளைஞன் சொல்வதைப் போல், அவ்ளோ நேரமும் லோக்கல் மொழியில் பேசிக்கொண்டு வரும் பெண்கள், தங்களுக்குப் பிடித்த ஆண்களைப் பார்த்ததும் ஆங்கிலத்தில் பேசிக் கொள்வார்கள்.
இதுவும் ஆண்களுக்கு ஒரு கிரக்கம் தான்! இதில் கொடுமை என்னவென்றால், இவ்வளவையும் செய்துவிட்டு அந்தப் பெண்கள் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு இருப்பார்கள்.
ஆண்களை மயக்கத்தான் இப்படியெல்லாம் செய்கிறோமா என்றுகூடத் தெரியாமல் இன்னும் சில பெண்கள் இருப்பார்கள். நாள்தோறும் நம் ஆபிஸிலேயே நாம் இதுபோன்ற செயல்களை நேரடியாகப் பார்க்கலாம். ஆண்களைக் கவர பெண்கள் செய்யும் கிறங்கடிக்கும் தந்திரங்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

இறுக்கமாக ஜீன்ஸ்

இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்து வரும் பெண்களை நாம் நாள்தோறும் பார்க்கத் தான் செய்கிறோம். அவசர அவசரமாக ஆபிஸுக்கு வருவது போல் பாசாங்கு செய்து, மெல்லிய ஸ்டைலுடன் ஒரு டான்ஸ் மூவ்மெண்ட் கொடுப்பார்கள் பாருங்கள். எப்பேற்பட்ட ராமனும் ஒரு பெர்ஸெண்ட்டாவது கிறங்கத் தான் செய்வான்!
அழகான சோம்பல்
அந்தப் பெண்களுக்கு சோர்வே இருக்காது. ஆனால் அப்படி இருப்பதுபோல், ஆண்களாகிய நமக்கு முன்னே கைகளை உயர்த்தி கழுத்தைச் சாய்த்துக் கொண்டு நாமே எதிர்பார்க்காத நேரத்தில் சோம்பல் முறிப்பார்கள். அதுவும் ஒரு அழகுதான்!
முடி படும் பாடு
எத்தனையோ சினிமாப் படங்களில் கூட இதைப் பார்த்திருக்கிறோம். ஆண்களுடன் பேசும் போது, அல்லது பேசத் துடிக்கும் போது, இந்தப் பெண்கள் தங்கள் கூந்தலை முன்னால் இழுத்துப் போட்டுக் கொண்டு அதை வாரி வாரி விடுவார்கள். இதில் சில ஆண்கள் க்ளீன் போல்டு ஆவது நிச்சயம்!
கடிபடும் உதடுகள்
தனக்குப் பிடித்த ஆண்களைப் பார்த்து உற்சாகம் ஆகும் பெண்கள், சந்தோஷத்தில் தங்கள் உதடுகளைக் கடிக்கும் அழகே தனிதான். இதில் ஆண்கள் ரொம்பவும் சொக்கித்தான் போவார்கள்!
அன்ன நடை
அந்தப் பெண்கள் ஒயிலாக நடந்து வரும் அழகில் நிச்சயமாக ஆண்களாகிய நாம் ஒரு நிமிடமாவது கவிஞர்களாகவே ஆகிவிடுவோம். அதுவும் அவர்கள் ‘கேட்வாக்’ என்னும் பூனை நடையில் இடுப்பை அசைத்து நடந்து வரும் போது, நம் இதயமும் அந்த நடைக்கு ஏற்ப தடதடவென அடிக்கும் தானே!
ஆண்களின் சட்டையில்…
நமக்குப் பிடித்த பெண்கள், ஆண்களாகிய நம்முடைய சட்டையை அணிந்து கொண்டு வருவதைப் பார்த்தால் எப்படி இருக்கும்? அந்தச் சட்டை எவ்வளவு அழுக்காக இருந்தாலும் சரி, அவர்கள் நம் கண்களுக்கு செக்ஸியாகத் தான் தெரிவார்கள். அதுக்கு அப்புறம் என்ன நடக்கும் என்பது வேறு விஷயம்!

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற பழமொழி இருக்கிறது. இதை நம்மில் பலர், கல் குடித்தாலும், புல் அடித்தாலும் கணவன், கணவன் தான் என புரிந்து வருகிறோம்.
ஆனால், கல் போல கடினமானவாக இருப்பினும், புல் போன்று மென்மையானவனாக இருந்தாலும், அவன் கணவன் தான் என்பது தான் பொருள்.
இது பெண்கள் கூறும் மற்றும் பெண்களுக்கு கூறப்படும் பழமொழி. இது கணவன் எப்படி இருந்தாலும், இல்லறம் நன்றாக செயல்பட கணவனை ஏற்று நடந்துக் கொள்ள வேண்டும் என கூறப்படுவது,
இந்த காலத்திற்கு இது ஒத்து வராது. எனவே, கணவன்மார்கள் மனைவியோட சந்தோசமாக இருக்க இந்த 10 விஷயங்களில் செம்மையாக செயல்பட வேண்டும்.
செயல் #1 
பேசும் போது குறுக்கே குறுக்கே பேசாமல், இடையூறு செய்யாமல் அவர்கள் சொல்வதை தெளிவாக, முழுமையாக கேட்ட பிறகு பதில் பேசுங்கள்.
செயல் #2 
குற்றம் கூறாமல் பேச கற்றுக்கொள்ளுங்கள். என்றோ நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறி, அவர்களை குற்றம் கூறி மட்டம் தட்டுவதை தவிர்த்துவிடுங்கள்.
செயல் #3 
அன்பு, பாசம், அக்கறை, பாதுகாப்பு, என எதுவாக இருந்தாலும் சிக்கனம் இல்லாமல் முழுமையாக வெளிப்படுத்துங்கள்.
செயல் #4 
போ, தொலைந்துபோ… எக்கேடுக்கேட்டு போ, ஒழிந்துபோ போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். அவர்கள் கேட்பதை செய்யும் போது புலம்பிக்கொண்டே செய்ய வேண்டாம்.
செயல் #5 
சண்டைப் போடாமல் பதில் கூறுங்கள். பல தம்பதிகள் மத்தியில் கேள்விகள் எழும் போது உண்டாகும் சண்டைகளை விட, அதற்கான பதில்கள் கிடைக்கும் போதும், கூறும் போதும் தான் பெரிய சண்டைகள் வெடிக்கும்.
செயல் #6 
பாசாங்கு இல்லாமல், நடிக்காமல், பொய் கூறாமல் உங்கள் துணையிடம் அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
செயல் #7 
புகார் சொல்லாமல் புகழ்ந்து பேசுங்கள். சிலர், துணை என்னதான் நல்லது செய்தாலும், சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினாலும், எல்லாம் ஓகே தான் இது நொட்டை, அது சொத்தை என புகார் கூறுவார்கள். இதை தவிர்த்துவிடுங்கள்.
செயல் #8 
சபலம், சந்தேகம் இல்லாமல் நம்புங்கள். நம்புகிறேன் என கூறிக் கொண்டு பின்னாடி உளவுத்துறை வேலை பார்ப்பது, வேவுபார்ப்பது போன்றவை தவறு.
செயல் #9 
தண்டனை அளிக்காமல் மன்னிக்கும் பழக்கம் கடைபிடியுங்கள். தெரியாமல் செய்யும் தவறுகள் இயல்பு, தெரிந்தே செய்யும் தப்பு தான் குற்றம்.
செயல் #10 
செய்யும் சத்தியத்தை மறக்க வேண்டாம், பின்னாட்களில் மறுக்க வேண்டாம். இது, பூக் கம்பகமாக இருக்கும் இல்லறத்தில் பூகம்பம் வெடிக்க செய்யும்.

சிவப்பு நிற ஆடை அணிந்துள்ள பெண்களைக் கண்டதும் ஆண்களுக்கு காதல் உணர்வு கிளர்ச்சி அதிகரிக்கிறதாம்.

எனவே பெண்களே தனியாக எங்காவது சென்றாலோ, காதலரை சந்திக்க சென்றாலோ சிவப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

அதேசமயம் கணவருக்கு மூடு வரவழைக்க நினைக்கும் பெண்கள் சிவப்பு நிற ஆடைகளை அணிவதற்கு தடை ஏதும் இல்லை என்கின்றனர் அவர்கள்.

முடிந்தால் சிவப்பு நிற உடைகளை மட்டுமே அணியலாம்.

இன்றைக்கு இளைஞர்களை அதிகம் பாதிக்கும் விசயம் ஆண்மை குறைபாடு, தாம்பத்திய உறவு பிரச்சினைதான்.

இணையதளங்களில் அதிகம் தேடப்படும் செய்தியும் அதுவாகத்தான் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஆண்களின் காதல் உணர்வுகளை அதிகரிப்பதில் உடைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று தெரியவந்துள்ளது.

காதலர் தினத்தில் காதலிக்கும் நபருக்கு பரிசாக சிவப்பு ரோஜா கொடுப்பது பாரம்பரிய வழக்கமாக உள்ளது.

அதேபோல தனது காதலி சிவப்பு நிற உடையணிந்து வருவதை பார்த்தால் அந்த ஆணுக்கு காதல் உணர்வு கிளர்ந்தெழுகிறதாம்.

இது தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் ஒன்றில் இது கண்டறியப்பட்டுள்ளது.

அதேசமயம் கவர்ச்சியாக உடை அணியும் பெண்களைக் கண்டால் ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதாம். இதனால் அவர்களின் ஆண்மை கூட பறிபோகும் ஆபத்து இருப்பதாக ஆய்வு தெரிகிறது.

நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார் ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர்.

இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும்,

நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களில் ஆண்களை தள்ளுகிறது என்றும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

கண்ணுக்கு மை அழகு. அதோடு ஆரோக்கியமும் கூட. கண்களில் உண்டாகும் சூட்டை கட்டுப்படுத்தும். குளிர்ச்சியானது.

கண்களுக்குள் விழும் தூசுகளை எளிதாக வெளியேற்றும்.

இயற்கையான கண்மை உங்களுக்கு செய்ய தெரியாதென்றால் , இங்கே இருக்கும் குறிப்பின்படி செய்யுங்கள்.

ஒரு வருடத்திற்கும் மேலாக வரும். மிக மிக நல்லது. கண்களுக்கு ஒளியை தரும்.

இமைகள் அடர்த்தியாகும். புருவங்களும் உபயோகிக்கலாம். இதனால் புருவம் இல்லாதவரகளுக்கு நன்றாக வளரும்.


தேவையானவை :
விளக்கெண்ணெய் - ஒரு கப் அளவு.
சந்தனம் - தேவையான அளவு
விளக்கு - மண் விளக்கு இருந்தால் உகந்தது.
செம்பு தட்டு அல்லது பித்தளைதட்டு - 1
சந்தன வில்லையை விட சந்தன கட்டை நல்லது.


சந்தனக் கட்டையால் சந்தனத்தை தேய்த்து ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சுத்தமான சிறிய பருத்தித் துணியில் சந்தனத்தை தோய்த்து காய விடுங்கள்.

நன்றாக காய்ந்ததும் அதனை திரி போல் செய்து கொள்ளுங்கள்.

ஓரளவு பெரிய விளக்கில் விளக்கெண்ணெய் விட்டு அதில் திரியை வைக்கவும். 

செம்பு தட்டு இருந்தால் மிகவும் நல்லது.

அது இல்லையென்றால் ஏதாவது பித்தளை தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். தட்டின் உள்ளே சந்தனத்தை முழுவதும் தடவுங்கள்.

இப்போது திரியில் தீபம் ஏற்றி அதன் மேல் இந்த சந்தனம் பூசிய தட்டை மூடுங்கள். சந்தனம் தீயின் மீது படும்படி வைக்க வேண்டும்.

லேசாக காற்று பூகும்படி வைக்க வேண்டும்.

இல்லையெனில் அணைந்துவிடும்.

இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு மறு நாள் தட்டை எடுத்துப் பார்த்தால், அதில் சந்தனக் கரி தட்டில் படிந்து இருக்கும்.

அந்த கரியை அனைத்தையும் ஒரு ஸ்பூனால் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த கரியில் சுத்தமான நெய் அல்லது விளக்கெண்ணெய் சிறிது குழைத்தால் மை தயார்.

குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கு வரும் செய்து பாருங்கள். 

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.