January 2018

இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் சங்க கால வசிப்பிடமானக் கீழடித் தொல்லியல் களம் பற்றிய கட்டுரையே இது. தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி என்ற ஊருக்கு அருகில் இந்த அகழாய்வு மையம் அமைந்துள்ளது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இது.

இதையடுத்து கீழடியில் கண்டெடுக்கப்பட்ட இர‌ண்டு கார்பன்‌ மாதிரிகளின் காலத்தைக் கண்டறிய அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள ‘பீட்டா அனலடிக்‘ என்ற நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அவை அனுப்பிவைக்கப்பட்டன. அந்தப் பரிசோதனையின் முடிவுகளை மத்திய கலாசாரத்துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா  வெளியிட்டார். அதில் “கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டுகளுக்கும், மற்றொரு பொருள் 2,220 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரிகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

காவிரிப் பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு மத்திய தொல்லியல் துறை தமிழகத்தின் கீழடியில்தான் ஆய்வு நடத்தி இருக்கிறது. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் மேடானது, கிட்டத்தட்ட 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. கி.பி. 300-ம் ஆண்டு தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் கிடைத்தன. ஆனால், கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து, அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருந்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத், அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, துணை கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீராம் பணியில் அமர்த்தப்பட்டார். அதன்பிறகு மத்திய தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சிக்கு அனுமதியளித்தது. தற்போது, கீழடியில் பெயரளவிற்கு மட்டுமே ஆராய்ச்சி நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சுமார் 2200 வருடங்கள் பழமையானவை நிரூபணமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கீழடியில் கிடைக்கும் ஆய்வு முடிவுகள் தமிழகத்தின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தமிழகத்தில் கல்வெட்டுகள்,  புலவர் பாடல்கள் ஆகியவை உண்டு. ஆனால் நம்மிடம் வரலாற்று சாட்சியங்கள் இல்லை. தற்போது அவை கீழடியில் கிடைத்துள்ளன.

கீழடியில் அக்கால மக்களின் வாழ்க்கை முறை மற்றும் தொழிற் கூடங்கள் செயல்பட்டதற்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளன. அங்கே ஆய்வு நடத்தினால் வைகை ஆறு தடம் மாறிய தகவல்கள் கிடைக்கலாம். பழங்கால சமூகமாக இருந்தாலும் கீழடியில் வாழ்ந்த மக்கள் நாகரிக சமூகமாக இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கீழடியில் ஆய்வை தொடரும்போது கூடுதல் தகவல்கள் கிடைக்கும். அங்கே கிடைத்துள்ள பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகமாக அமைப்பதற்கு தேவையான இடத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்று அப்போதைய செய்தியாளர்கள் பேட்டியில் கூறினார் அமைச்சர் என்.டி.கே.ரங்கராஜன்.

இதுகுறித்து,  மத்திய தொல்லியல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கீழடியில் இரண்டு சதவிகிதம் மட்டுமே அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. இரண்டு வருடங்கள் ஆராய்ச்சி நடத்தியதற்கே 5,300 தொன்மையான பொருள்கள் கிடைத்திருக்கின்றன என்றால், இன்னும் பத்து முதல் இருபது வருடங்கள்வரை ஆராய்ச்சி நடத்தினால் என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது. இன்னும் பல வருடங்கள் ஆராய்ச்சி நடத்தினால்தான் கீழடியின் உண்மையான காலத்தையும், அங்குவாழ்ந்த மக்களின் நாகரிகத்தையும் முழுமையாகக் கண்டறிய முடியும். இப்போது பரிசோதனையில் இருந்து கிடைத்திருக்கும் தகவல், மதுரைக்கு அருகே ‘சங்ககால நகரம்’  ஒன்று இருந்ததற்கான ஆதாரம் மட்டுமே. கீழடியில் முழுமையாக ஆறு மீட்டர் ஆழத்திற்கு அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும். அப்போதுதான், இந்த நகரம் எப்படித் தோன்றியது என்பதை கண்டுபிடிக்க முடியும்” என்றார்.

வைகையாறு தோன்றும் தேனி மாவட்டம் தொடங்கி கடலில் கலக்கும் இராமநாதபுரம் மாவட்டம் வரை வைகை ஆற்றங்கரையின் அருகமை பகுதிகளில் 2013-14இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின்போது தொல்லியல் எச்சங்கள் உள்ள 293 பகுதிகள் கண்டறியப்பட்டன. இவை களஞ்சியங்கள், வணிகத் தலங்கள், துறைமுகங்கள், வாழிடங்கள், கோயில்கள் என்ற வகையிலானவை. வருசநாட்டிலும், அழகங்குளத்திலும் சிறிய அளவிலான அகழாய்வுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பெரிய அளவிலான அகழாய்வுகள் இதுவரை நடந்திருக்கவில்லை.

கிட்டத்தட்ட 48 சதுரக் குழிகள் வெட்டப்பட்டு உறைகிணறுகள், செங்கற் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், மிளிர்கல் அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்பு வேல், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் எனப் பல்வேறு தொல்லெச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பாண்டியர்களின் தொல்நகரான “பெருமணலூர்” இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கீழடியில் 10 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக இது திகழ்ந்ததற்கு இது வலுவான சான்றாக உள்ளது. சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்துள்ளது. நீர் வழங்கலும், கழிவுநீர் அகற்றலும் நாகரிக வளர்ச்சியின் முக்கிய மைல்கல்களாகக் கருதப்படுவன. கீழடியில் சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளன. இங்கு பழங்கால சுடுமண் உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பட்டினப்பாலை கூறும் உறைகிணற்றுப் புறச்சேரி’ என்ற தொடருக்குச் சான்று பகிர்கின்றதாகவும், ஆற்றங்கரைகளிலும், பெரிய குளக்கரைகளிலும் இவ்வாறு உறைகிணறுகள் அமைத்து நீரெடுக்கும் தமிழரின் பண்டைய வழக்கத்தை எடுத்துக்காட்டுவனவாகவும் உள்ளதாகத் தொல்லியல் அறிஞர் வெ.வேதாச்சலம் குறிப்பிடுகிறார். வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிதாகக் கருதப்படும் நிலையில் இங்கு பெருமளவில் செங்கல் கட்டிடங்கள் உள்ளது ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

ரோமப் பேரரசுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பை மெய்ப்பிக்கும்படியான, வணிகர்களால் கொண்டுவரப்பட்ட ரௌலட் (rouletted), அரிட்டைன் (arretine) வகை மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. அழகங்குளத்திலும் இத்தகைய பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் வரலாற்றின் தொடக்ககாலத்தைச் சேர்ந்தவையான கருப்பு, சிவப்பு மண்பாண்டத் துண்டுகள், வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கருப்பு, சிவப்பு மண்பாண்டத் துண்டுகள், செம்பழுப்பு நிற கலவை பூசப்பட்ட மண்பாண்டத் துண்டுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் செம்பழுப்பு நிற ரசட் (russet) கலவை பூசப்பட்ட பாண்டங்கள் இதுவரை கொங்குப் பகுதியிலேயே கிடைத்திருப்பதைக் கொண்டு இப்பகுதி கொங்குப் பகுதியுடனும் வாணிபத் தொடர்பிலிருந்ததாகக் கருதப்படுகிறது.

‘ஆதன்’, ‘உதிரன்’, ‘திசன்’ போன்ற தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இங்கு சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. யானைத் தந்தத்தினாலான தாயக்கட்டைகள், தாமிரத்தாலான கண் மை தீட்டும் கம்பி ஆகியவையும் கிடைத்துள்ளன. இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரை கட்டைகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், சுடுமண் பொம்மைகள் உட்பட்ட பல்வேறு அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

முதல் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சி கீழடியில் ஜூன், 2015 ஆம் ஆண்டு வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு தொடங்கியது. இரண்டாம் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சி  2016 ஆம் ஆண்டு  ஜனவரி 2ந்தேதி அன்று அகழாய்வு தொடங்கியது. இதில் மருத்துவ குடுவைகள்,  பழங்கால உறை கிணறுகள், தொழிற்சாலை, அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன.

இரண்டாம் கட்ட அகழாய்வின் முடிவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட அகழாய்வு சனவரி, 2017 முதல் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் தலைமையில் நடைபெறுகிறது. இப்பணி 30 செப்டம்பர் 2017ல் முடிகிறது. மூன்றாம் கட்டப் பணியில் 400 சதுர மீட்டர் அளவுக்கு 16 குழிகள் தோண்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகில் பொய் சொல்லாத மனிதரே இல்லை. எவராக இருந்தாலும் ஏதேனும் ஒரு சூழலில் பொய் சொல்லித்தான் ஆக வேண்டும். இதை பொய் என்பது ஒருவிதம், உண்மையை மறைப்பது என்பது இன்னொரு விதம். நீங்கள் கேட்கலாம் இரண்டிற்கும் என வித்தியாசம் இருக்கிறது என்று இருக்கிறது.

ஒரு உதாரணம் மூலமாக சொல்லலாம். நான்கு குழந்தைகள் விளையாடும் பொழுது ஒருவருடைய பொம்மையை மற்றோருவர் எடுத்து மறைத்து வைத்து விட்டு, நான் எடுக்கவில்லை என்றால் அது பொய். பொம்மையை வைத்திருந்த குழந்தை தேடும் பொழுது, மூன்றாவது குழந்தை பொம்மையை எடுத்து சென்ற குழந்தையை காட்டி கொடுக்காமல் அமைதியாய் இருந்தால் அது உண்மையை மறைப்பது. பெரும்பாலும் கணவர் எங்கு பொய் சொல்கிறார்கள், எங்கு உண்மையை மறைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

பெண்களுக்கு எப்போதும் ஆடை, ஆபரணங்கள் மீது தனி ஈடுபாடு உண்டு. ஒரு திருமணத்திற்கு நீங்கள் கிளம்பும் பொழுது, இந்த ஆடை எனக்கு எப்படி இருக்கு என்று கேட்டால், அவ்வளவாக நன்றாக இல்லை என்றால், நீங்கள் வருத்தப்படுவீர்கள் இல்லை என்றால் மாற்றிக்கொள்ள செல்வீர்கள். அவ்வளவு பொறுமை அவர்களுக்கு கிடையாது. எனவே மிக அழகாக இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். அதற்காக உங்கள் அழகை பற்றி கவலைப்படுவதில்லை என்று அர்த்தம் இல்லை. என்றுமே என் மனைவியின் அழகை நானே ரசிக்க வேண்டும் என்ற எண்ணமும் மறைந்திருக்கிறது.

நீங்கள் பண்டிகை காலங்களில் ஆடைகள் வாங்குவதற்காக மாலை வேளையில் கடைக்கு செல்ல இரு தினங்களுக்கு முன்பே முடிவு செய்கிறீர்கள். உங்கள் கணவர் அலுவலக பணிகள் முடிந்து வந்தவுடன் போக காத்திருக்கிறீர்கள். அன்று உங்கள் கணவருக்கு அலுவலக பணி அதிகமாக இருக்கிறது மற்றும் அவர் மேலதிகாரி அவருக்கு எதோ அவசர வேலை கொடுத்திருக்கிறார். அதை உங்களிடம் சொன்னால் பிரச்சனை வரும் என கருதி அவர் சொல்ல ஆரம்பிப்பது, இதோ நான் 10 நிமிடத்தில் கிளம்பிவிட்டேன் என்பது. இப்படியே பத்து பத்து நிமிடமாக 1 மணி நேரம் போய்விடும்.

ஆண்களுக்கு எப்போதுமே பெண்களிடம் ஒரு கர்வம் இல்லை தலைக்கனம் என்றே சொல்லலாம். என்னால் எந்த ஒரு சூழ்நிலையும் சமாளிக்க முடியும், மிக மோசமான பிரச்சனைகளை கூட. உதாரணமாக, உங்கள் வீட்டின் குழாய் சரி செய்ய வரச்சொல்ல வேண்டும், இரு தினங்களாக உங்கள் கணவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அவர் வேலை சுமையின் காரணமாக மறந்துவிடுகிறார். அப்போது உங்களிடம் சொல்லவில்லை என்று சொன்னால் அவர் கர்வம் போய்விடும், உடனே உங்களிடம் நான் சொல்லிவிட்டேன். நாளை வருவார்கள் என்று பொய் சொல்வது.
உங்கள் கணவர் எதாவது ஒரு பிரச்சனையின் காரணமாக வருத்தமாய் இருக்கும் பொழுது, நீங்கள் கேட்டல் ஒன்றும் இல்லை என்பார். கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கேட்டல், இது என்னுடைய பிரச்சனை நானே சரிசெய்து கொள்வேன் என்பர். அவர் அதை உங்களிடம் சொல்லி உங்களை வருத்தப்பட வைக்க வேண்டாம் என்பதற்கான பொய் அது.

நீங்களும் உங்கள் கணவரும், அவருடைய அலுவலகம் முடிந்ததும் திரைப்படத்திற்கு செல்ல முடிவு செய்திருப்பீர்கள். உங்கள் கணவரே உங்களை வந்து அழைத்து செல்வதாய் கூறி இருப்பார். நீங்கள் உங்கள் கணவரின் கைபேசி அழைப்புக்காக காத்திருக்கிறீர்கள். உங்கள் கணவர் வேலை சுமையில் அதை மறந்து கால தாமதமாக வீட்டுக்கு வரும் பொழுது, அவர் மறந்ததை காட்டி கொள்ளாமல் நான் உன் கைபேசிக்கு அழைத்தேன், ஆனால் அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக கூறியது என்பர்.

உங்கள் கணவருக்கு அவர் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும். உங்களிடம் கேட்கும் பொழுது, நீங்கள் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். அவரும் அதை ஏற்று கொள்வதாய் சொல்லிவிட்டு, இரவு தூங்கும் வேளையில் என்னை மிகவும் கட்டாயப்படுத்தி அழைக்கிறார்கள் என்று உங்களின் மனதை மாற்ற முயற்சிப்பது.

நீங்களும் உங்கள் கணவரும் வெளியில் சென்றிக்கும் பொழுது, உங்களை ஒரு அழகான பெண் கடந்து சென்றால், உங்கள் கணவர் அந்த பெண்ணை உற்று நோக்குவதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், உடனே உங்கள் கணவர், நான் அவளை பார்க்கவில்லை. நான் அவள் அணிந்திருந்த ஆடை அழகாக இருந்தது. உனக்கு வாங்கலாம் என்பதற்காக அவள் ஆடையையே பார்த்துக்கொண்டிருந்தேன் என்பர்.

எப்பொழுதும் உங்கள் கணவர், அவருடைய முன்னாள் வாழ்க்கையை பற்றி ஏதும் உங்களிடம் கூறி இருக்கமாட்டார். எல்லா ஆண்களுக்கும் திருமணத்திற்கு முன்பு எப்படியும் ஒரு காதல் இருந்திருக்கும். அவர் பொய் சொல்லியிருக்கமாட்டார் ஆனால் மறைத்திருப்பர். அதை பற்றி மனைவியிடம் உண்மையை சொல்லும் கணவர் மிக நேர்மையானவர். ஆனாலும் அதை பற்றி மனைவியிடம் பகிர்ந்துகொள்ள விரும்பமாட்டார்.

தான் தன் மனைவியை விட சிறந்தவன் எனும் கர்வம் எப்போதும் ஆண்களின் மனதில் வேரூன்றி இருக்கும். அவர்கள் எப்போதும் உன்னை விட நான் சிறந்தவன் அல்லது நான் தான் அறிவாளி என்று கூறிக்கொள்வதுண்டு. ஆனால் அவர்களுக்கும் தெரியும் அது பொய் என்று.

நான் எப்போதும் பொய் சொல்லமாட்டேன். இதுவே அவர் சொல்லும் மிக பெரிய பொய். அவர் உங்களிடம் எதாவது பொய் சொல்லியிருக்கலாம். ஆனால் அது பொய் என்று தெரிந்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று அந்த சூழ்நிலையை சமாளிக்க பொய் சொல்வது. அப்போது தான் நான் பொய்யே சொல்லமாட்டேன் எனும் வாசகமும்.

மெய்யும், பொய்யும் கலந்ததே மனித வாழ்கை. பொய் பேசுபவன் கெட்டவனும் இல்லை, உண்மையை பேசுபவன் நல்லவனும் இல்லை. உண்மை பேசி தீமையை விளைவிப்பதை விட தக்க தருணத்தில் பொய் பேசி அதிலிருந்து காப்பது நன்மை பயக்கும். உங்கள் கணவர் சொல்லும் சின்ன பொய்களை கூட ரசிச்சு பாருங்க, அப்புறம் உங்க வாழ்க்கையே உங்களுக்கு இனிமையானது இருக்கும்.

காடுகளுக்குள்ளும் மலைகளின் மீதும் இருக்கும் பல கோயில்கள் குறித்து நாம் கேள்விபட்டிருப்போம். சில கோயில்களுக்கு நாமே சென்று வந்திருப்போம். ஆனால் 1000 அடி நீளமுள்ள மலைக்குகையில் மார்பளவு நீரில் அமைந்திருக்கும் அதிசய நரசிம்மர் கோயில் குறித்து இதுவரை அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த அதிசய நரசிம்மர் கோயில் குறித்து பாப்போம் வாருங்கள்.

கர்நாடக மாநிலம் பிதார் நகரிலிருந்து 4.8 கி.மீ தொலைவில் இருக்கும் மனிசூல மலைத்தொடரில் அமைந்திருக்கிறது ஜர்னி நரசிம்மர் குகை கோவில். மற்ற கோயில்களுக்கு பயணிப்பதை போல் இந்த ஜர்னி நரசிம்மரை தரிசிப்பது அவ்வளவு எளிதல்ல.

1000 அடி நீளமுள்ள இந்த மலை குகையில் கடுமையான வரட்சியான காலத்திலும் கூட எப்பொழுதும் 4 அடி முதல் 5 அடி நீர் நிறைந்தே இருக்கிறது. இந்த நீர் எங்கிருந்து வருகிறது எங்கே செல்கிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அதிசயமாக கருதப்படுகிறது .

இந்த தண்ணீரில் அதிசயமான பல மூலிகைகளின் சக்திகள் இருப்பதாகவும் இதில் நடத்து சென்று நரசிம்மரை தரிசித்தால் பல்வேறு வியாதிகள் குணமாகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். குகையில் எப்பொழுதும் வவ்வால்கள் தொங்கியபடியே இருக்கிறது இந்த வௌவால்கள் மனிதர்களை கண்டு பயப்படுவதுமில்லை, இதுவரை எந்த மனிதர்களையும் காயப்படுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குகையின் இறுதியில் சுயம்புவாக தோன்றிய ஜர்னி நரசிம்மரும் சிவலிங்கமும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். நரசிம்ம பெருமான் இரண்யகசிபுவை பிரகல்நாதனுக்காக வதம் செய்தபின்னர் ஜலாசுரன் என்ற அசுரனை இந்த குகையில் வதம் செய்ததாகவும் இறுதியில் அசுரன் நீராக மாறி நரசிம்மரின் பாதத்தில் சரணடைந்ததாகவும் தல புராணங்கள் கூறுகிறது.

நரசிம்மரை தரிசிக்கவேண்டும் என்ற மனவுறுதியுடன் கடினமான பாதைகளை கடந்து சென்றால் ஜர்னி நரசிம்மரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற காலம் சென்று இன்று அனைத்து பெண்களும் கல்வி கற்கும் மாற்றம் நிலவி பெண்கள் துணிச்சலாக பணிக்கும் செல்ல நேர்ந்த இந்த வேளையில் தான் அவர்களுக்கான பாலியல் துன்புறுத்தல்களும் பணியிடங்களில் அதிகரித்துள்ளது என்று கூறுவது சற்று வியப்புகுரிய ஒன்றே. “பாலின சமத்துவம் என்பது ஓர் இலக்கு மட்டுமல்ல! வறுமை ஒழிப்பு,  நீடித்த வளர்ச்சி,  நல்லாட்சி போன்ற பெரும் சவால்களை சந்திக்கத் தேவையான ஒரு முன் நிபந்தனை” என்று கூறியவர் ஐ.நா. பொதுச் செயலாளர்  கோபி அன்னான்.

இன்னும் சொல்லப்போனால் வரதட்சணை, பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் கொலை, குடும்ப வன்முறை எனப் நீண்டுகொண்டே செல்கிறது பெண்களின் மீதான அடக்குமுறைகள். இதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள்,  பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது போல தோன்றினாலும்,  அதன் நடைமுறை விதிகள் மக்கள் எளிதில் பயன்படுத்த இயலாத வகையில் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கச் செல்வதும் அவ்வளவு சுலபமாக இல்லை. காவல்துறையின் அணுகுமுறை, தாமதமான செயல்பாடு போன்றவற்றால், காலம் கடந்துதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல வழக்குகளில் நடவடிக்கை என்பது பாதிப்புக்குள்ளானவரையே குற்றவாளி ஆக்குகிறது.

நமது சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. அதனால், குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது. உலகளவில் எடுத்துக்கொண்டாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை அதிகம் நடைபெறும் நாடாக இந்தியா இருக்கிறது. இவையெல்லாம் எவ்வளவு வேதனை கொள்ளவேண்டிய தருணம். கற்புக்கு பெயர் கொண்ட நம் நாட்டில் தான் பெண்களுக்கு எதிராக பல பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களும் துன்புறுத்தல்களும் பணி செய்யும் இடங்களில் நடைப்பெறுகிறது.

பல பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள். பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து 70 சதவிகித பெண்கள் புகார் அளிப்பதில்லை என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. எத்தனையோ கஷ்டங்கள், குடும்ப சூழ்நிலைகளினால் பணிக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடம் கிடைப்பது அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை. பார்வையால் பலாத்காரம் செய்யும் ஆண்கள்,  சிரித்து பேசினாலே பணிந்து போய்விடுவாள் என்று நினைத்து தவறாக நடக்க முற்படும் உயரதிகாரிகள் பல இடங்களில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
வளர்ந்த நாடுகளில் மட்டுமல்ல வளரும் நாடுகளிலும் உலகில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன. சின்னஞ்சிறு பிள்ளைகள், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள் மட்டுமல்லாது சித்தாள், விவசாய கூலிகள், நெசவு தொழிலாளிகள் ஏன் நூறுநாள் வேலைக்கு செல்லும் பெண்கள் கூட பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அலுவலங்களில் பெண்கள் பார்க்கும் போது ஆபாச செய்கைகள், கீழ்த்தரமான கருத்துகள், தவறான எண்ணத்தில் தொட்டு பேசுதல், நேரடியாக பாலியல் உறவுக்கு அழைத்தல், உடல் ரீதியாக துன்புறுத்துதல் உள்ளிட்ட பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கிறது.

உண்மையில் இது அனைவராலும் மறுக்க முடியாமல் ஏற்று கொள்ளக்கூடிய செய்தியே ஒரு நடிகைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பிற பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் போது குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதை மறந்து விடுகிறது இந்த சமூகம். பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பெரும்பாலும் வெளியில் சொல்வது கிடையாது. ஏனெனில், அவ்வாறு தெரிவித்துவிட்டால், நான்கு சுவருக்குள் நடப்பது ஊருக்கே தெரிந்துவிடுகிறதே என்ற தயக்கம்தான். மேலும் ஒரு ஆண் செய்த தவறுக்கும் உலகத்தினரால் அந்த பெண் தான் வஞ்சிக்கபடுகிறாள் இதுவும் குற்றம் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

இது குறித்து இந்திய பார் அசோசியேஷன் இந்த ஆண்டு ஆய்வு நடத்தியது. ஆய்வில், 6,047 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, மும்பை என நாட்டின் முன்னணி நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நீக்கமற, இத்தகைய பாலியல் தொல்லைகள் மறைமுகமாக நடைபெறுவதாகவும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் வேலை கிடைக்க வேண்டுமெனில் அல்லது வேலையை நிரந்தரம் செய்துகொள்ளவும், சம்பள உயர்வு போன்ற சலுகைகளுக்காகவும் என பல விதங்களில் பாலியல் ரீதியாக,  ஒத்துழைத்து செல்லும்படி தங்களது உயர் அதிகாரிகள் வற்புறுத்துவதாக, பல பெண்கள் தெரிவித்துள்ளனர்.

உயரதிகாரிகளின் காம இச்சைக்கு இணங்காத நிலையில், அதிக பணிச்சுமையை ஏற்படுத்துவது இரவில் தாமதமாக வீட்டிற்கு செல்லும் சூழ்நிலையை உருவாக்குவது என உயர் அதிகாரிகளின் தொல்லை நீளுவதாகவும் பெண்கள் குறிப்பிடுகின்றனர். பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடத்திலோ அல்லது படிக்கும் இடத்திலோ இது போன்ற சம்பவம் நேர்ந்தால், அதைத் துணிச்சலுடன் வெளியே சொல்ல வேண்டும்.

நம் அனைவருக்கும் இது தெரிந்த செய்தி என்ற ஒன்றாக கூட இருக்கலாம் கடந்த 1997ம் ஆண்டு பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விசாகா என்பவரின் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் பணியிடத்தில் பாலியல் வன்முறை என்பது மனித உரிமைமீறல் நடவடிக்கை என்பதை முதல் முறையாக ஏற்றுக் கொண்டது. இவ்வழக்கில் தனது தீர்ப்பில் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களையும் அளித்தது. இதுதொடர்பான சட்டம் இயற்றப்படும் வரை இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் இந்த வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கியது. இதனடிப்படையில் தான் பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான சூழல் எழுந்தது.
விசாகா வழக்கில் நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்படி நிறுவனம் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களை மட்டுமே கட்டுப்படுத்துவதாக இருந்தது. ஆனால், பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டமானது, அலுவலகங்களில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, கட்டிடத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள் உள்ளிட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்கள், தற்காலிக அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலி அல்லது பயிற்சி அடிப்படையில் வேலை செய்பவர்கள், ஊதியம் பெற்றோ அல்லது பெறாமலோ பணிபுரிபவர், தன்னார்வு அடிப்படையில் வேலை செய்வோர் என அனைத்து பெண் தொழிலாளர்களுக்கும் பணியிடத்தில் பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்துள்ளது. இச்சட்டத்தின்படி, 10 பேருக்கு மேல் பெண்கள் பணியாற்றும் எந்தவொரு நிறுவனமும் அலுவலக அளவிலான புகார் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

அவ்வாறு புகார் குழுவிலோ அல்லது ஊடகங்களிலோ சொல்லும் பெண்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது பெண்ணியல் ஆர்வலர்களின் கருத்து. ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தைரியமாக வெளியே சொல்லும் பட்சத்தில் அவரைச் சமுதாயம் ஏளனமாகப் பார்க்கக்கூடாது. மாறாக, அவரை ஆதரிக்க வேண்டும். எனினும், குழந்தைப் பருவத்திலிருந்தே பெண் குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வையும் தன்னம்பிக்கையையும் பெற்றோர்கள் கூட்டி வளர்க்க வேண்டும் என்றும் பெண்கள் கூறியுள்ளனர். மேலும் சமூக ஆர்வலர்கள் தேசிய அளவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி ஆண் உயர் அதிகாரிகளுக்கும் மனநலப் பயிற்சி முகாம்கள் வழங்குவது போன்ற சில முயற்சிகளை முன்னெடுத்தால் மட்டுமே வரும்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் நிகழாமல் தவிர்க்க முடியும் என்று கூறுகின்றனர்.

பெண்களின் உடை,  நடத்தைகளைப் பற்றி பேசும் சிலர் அதே நேரத்தில் பணியிடங்களில் உள்ள ஆண்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்பதையும் சற்று யோசித்து செயல்படுங்கள். மேலும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆண்கள்,  பணிக்கு செல்லும் தங்களின் மனைவி,  சகோதரி,  மகளை நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதும் பல பாதிக்கப்பட்ட பெண்களின் கருத்தாக உள்ளது. சுதந்திர இந்தியாவில் நம் பெண்களும் சுதந்திரமாக தான் இருக்கட்டுமே அவர்களை உடல் ரீதியாகவும் உள்ளத்தின் ரீதியாகவும் ஏன் துன்புறுத்த வேண்டும் சற்றே சிந்தியுங்கள் தோழர்களே.

பக்தர்களின் வறுமையை நீக்கி வளமடையச் செய்யும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் செருகுன்னு எனுமிடத்தில் அமைந்திருக்கும் அன்னபூரணேஸ்வரி கோவில் திகழ்கிறது.

தல வரலாறு :
காசியில் ஏற்பட்ட மிகப்பெரும் பஞ்சத்தால் மக்கள் உணவு கிடைக்காமல் பசியால் அவதியுற்றனர். அவர்களது பசிப்பிணியைத் தீர்க்க நினைத்த பார்வதிதேவி, காசியில் பெரிய மாளிகை ஒன்றை உருவாக்கி, அன்னபூரணி என்ற பெயரில் அங்கு வருபவர்களுக்கு உணவு வழங்கத் தொடங்கினார். காசி அரசாளுகைக்குட்பட்ட பகுதி மக்கள் அனைவரும் அங்கு வந்து சாப்பிட்டுப் பசியாறிச் சென்றனர்.

இதனையறிந்த காசி அரசன், உண்மை நிலையை அறிய அங்கு மாறுவேடத்தில் சென்று சாப்பிட்டான். அங்கிருந்த அன்னபூரணி அனைவருக்கும் அட்சயப் பாத்திரத்திலிருந்து உணவை எடுத்து வழங்கிக் கொண்டிருந்ததையும், அந்தப் பாத்திரத்திலிருந்து உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வந்து கொண்டிருப்பதையும் பார்த்து வியப்படைந்தான்.

அவனுக்கு அங்கு உணவளித்துக் கொண்டிருப்பது சாதாரண பெண்ணல்ல என்பதும், அவள் இறைவியான பார்வதி தேவி என்பதும் தெரிந்தது. உடனே அவன், அன்னபூரணியை வணங்கித் தன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பஞ்சம் தீரும் வரை அங்கேயே தங்கியிருந்து மக்களைக் காக்க வேண்டினான்.

அதனைக் கேட்ட அன்னபூரணி, தன்னால் காசியில் தங்கியிருக்க முடியாது என்றும், தான் சில நாட்களில் தென்திசை நோக்கிச் செல்லப் போவதாகவும் சொன்னார். அதனைக் கேட்ட அரசன் வருத்தமடைந்தான். அவன் வருத்தத்தை அறிந்த அன்னபூரணி, தான் இங்கு சில காலம் தங்கியிருந்ததால் இந்நாட்டில் இருந்த பஞ்சம் அனைத்தும் நீங்கிச் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதால் கவலையடைய வேண்டாம் என்று அவனிடம் சொன்னாள்.

அதனைக் கேட்டு மகிழ்ந்த அரசன், “அன்னையே, தாங்கள் தென்னாடு சென்றாலும், நாங்கள் வழிபட இங்கு அன்னபூரணியாகக் கோவில் கொண்டருள வேண்டும்” என்று வேண்டினான். அன்னபூரணியும் அவன் விருப்பப்படி அங்கு கோவில் கொண்டாள். அதன் பிறகு, அன்னபூரணி தென்திசை நோக்கிச் சென்றாள்.

காசியிலிருந்து தென்னாட்டிற்குத் தங்கப்படகில் வந்த அன்னபூரணியுடன் சாமூண்டீஸ்வரி (களரிவதிக்கல் தேவி), திருவற்காடு பகவதி (மடை கவைல் தேவி) எனும் இரண்டு தேவியர்களும் வந்தனர். கடல் பயணத்தில் ஆழி தீரம் (தற்போது ஆயிரம் தெங்கு என அழைக்கப்படுகிறது) எனுமிடத்திற்கு வந்த போது, அங்கிருந்த கிருஷ்ணர் கோவில் ஒன்று அவரது கண்ணில் பட்டது.

அந்தக் கிருஷ்ணர் கோவிலின் அருகிலேயேத் தானுமிருக்க விரும்பிய அன்னபூரணி, படகோட்டியைத் திரும்பச் செல்லும்படி சொல்லிவிட்டு அங்கு தனக்குத் தனியாக ஒரு கோவில் அமைத்துக் கொண்டாள் என்று இக்கோவிலின் தலவரலாறு சொல்லப்படுகிறது.

தென்னாட்டுக்குக் கடல் வழியாக வந்த அன்னபூரணி, கோலதிரி மரபு அரசர்கள் ஆட்சி செய்து வந்த நாட்டின் செல்வவளங்களைக் கேள்விப்பட்டு அங்கு வந்த போது, அங்கிருந்த இயற்கை அழகில் மயங்கி, அங்கிருந்த கிருஷ்ணர் கோவிலை அடுத்துக் கோவில் கொண்டார் என்று செவிவழிக் கதை ஒன்றும் சொல்லப் படுகிறது.

இக்கோவில் 1500 ஆண்டுகளாகக் கிருஷ்ணர் கோவிலாக இருந்தது என்றும், அப்போது ஆட்சியிலிருந்த மன்னரான அவிட்டம் திருநாள் ராசராசா என்பவர் அக்கோவிலின் அருகில் அன்னபூரணேஸ்வரிக்குச் சிலை நிறுவித் தனிக் கோவில் அமைத்தார் என்றும் சொல்கின்றனர்.

ஆலய அமைப்பு :
இங்குள்ள கோவில் வளாகத்தில் தென்புறம் கிருஷ்ணர் கோவிலும், வடபுறம் அன்னபூரணேஸ்வரி கோவிலும் அமைந்துள்ளன. இரண்டு கோவில்களின் கருவறைகளும் ஒரே பாறையில் எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு ஒரே அளவில் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்விரு கோவில்களிலும் அன்னபூரணேஸ்வரி கோவிலே மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் அன்னபூரணேஸ்வரி அன்னப் பாத்திரம் மற்றும் அன்னக் கரண்டியுடன் காட்சியளிக்கிறார்.

வழிபாடு :
அதிகாலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காக ஆலயம் திறந்திருக்கும். இக்கோவிலில் தினமும் நான்கு வேளை வழிபாடுகள் நடைபெறுகின்றன. இரவு நேரத்தில் நடைபெறும் அத்தாழ வழிபாடு முடிந்தவுடன் இரண்டு கிண்ணங்களில் நெய்யமிர்து எனப்படும் நைவேத்தியம் இறைவி முன்பாகப் படைக்கப்படுகிறது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் மலையாள ஆண்டு தொடக்க நாளிலிருந்து ஏழு நாட்கள் சிறப்பு விழா நடத்தப்பெறுகிறது. இவ்விழாவில் ஆறு நாட்கள் யானையின் மேல் எடுத்துச் செல்லப்படும் அன்னபூரணேஸ்வரி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசை நோக்கிக் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் கோவிலுக்குத் திரும்பக் கொண்டு வரப்படுகிறார். இப்படிச் செய்வதால் அனைத்துத் திசையிலுமிருக்கும் மக்களும் வறுமையின்றி வளமடைவர் என்கின்றனர்.

1994-ம் ஆண்டு முதல், மலையாள நாட்காட்டியில் கும்பம் (மாசி மாதம்) பூசம் நட்சத்திர நாளில் இக்கோவில் நிறுவப்பட்ட நாள் சிறப்பு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவை தவிர, சிவராத்திரி, நவமி, ஏகாதசி போன்ற நாட்களிலும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

ஆலயச் சிறப்புகள் :
இக்கோவிலுக்கு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் கோவில் நடை அடைக்கப்படும் முன்பாக, சாப்பிடாதவர்கள் யாரும் இருக்கின்றனரா? என்று கேட்டுத் தெரிந்து கொண்டே நடை அடைக்கப்படுகிறது. இக் கோவிலுக்குத் தாமதமாக வருபவர்களும் பசியால் வாடாமலிருக்க, இங்கிருக்கும் ஆலமரம் ஒன்றில் கோவில் பிரசாதம் உணவுப் பொட்டலமாகக் கட்டித் தொங்கவிடப்படுகிறது.

இங்கு அன்னதானத்திற்கு எடுக்கப்படும் அரிசியின் அளவிற்கேற்பக் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் இருக்கும் என்கின்றனர். ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால், அவர்களது வறுமை அனைத்தும் நீங்கி வளமடைவர் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

பெயர்க் காரணம் :
அன்னபூரணேஸ்வரி கோவில் அமைந்திருக்குமிடம் ‘செருகுன்னு’ என்று அழைக்கப்படுகிறது. அந்த ஊரிலிருக்கும் சிறு குன்று ஒன்றின் மேல் இக்கோவில் அமைந்திருப்பதால், சிறு குன்று என்று அழைக்கப் பெற்றுப் பின்னர் அது ‘செருகுன்னு’ என்று மாறிப் போய்விட்டது என்று சிலரும், தொடக்கத்தில் இந்தக் குன்று சோற்றுமலையாக இருந்தது என்றும், சோற்றுக்குன்று என்று அழைக்கப்பட்டதே செருகுன்னு என்று மருவி விட்டது என்று சிலரும் சொல்கின்றனர்.

அமைவிடம் :
கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், தாலிப்பிரம்பா எனுமிடத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செருகுன்னு எனுமிடத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சிறுகுன்றின் மேல் இக்கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்குச் செல்லக் கண்ணூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

அதிக அளவு சிகரெட் பிடிப்பவர்கள் அப்பழக்கத்தை கைவிட முடியாமல் தினமும் ஒரு சிகரெட்டாவது புகைத்து விடுகிறார்கள். அதனால் உடலுக்கு எந்தவித தீமையும் ஏற்படாது என கருதுகின்றனர்.

அது தவறு என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. தினம் ஒரு சிகரெட் பிடித்தால் கூட இருதயம் பலவிதமான நோய்களால் கடுமையாக பாதிக்கும். பின்னர் அதுவே வயதான காலத்தில் பக்கவாதத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய்வு கூறுகிறது.

தினசரி 20 சிகரெட் புகைப்பவர் அதை கைவிட்டு ஒரு சிகரெட்டுக்கு மாறினாலும் மரணத்தை ஏற்படுத்தும். இருதய நோய்களை உருவாக்கும்.

எனவே இருதய நோய்களில் இருந்து தப்பிக்க சிகரெட் பிடிக்க எந்த ஒரு வரையறையும் இல்லை என அறிவியல் இதழில் நிபுணர்கள் ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளனர். 1946 முதல் 2015-ம் ஆண்டு வரை படிப்படியாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் தினமும் ஒரு சிகரெட் பிடிக்கும் ஆண்களில் 48 சதவீதம் பேரும் பெண்களில் 57 சதவீதம் பேரும் இருதய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் ஆண்களில் 25 சதவீதம் பேரும், பெண்களில் 31 சதவீதம் பேரும் பக்கவாதத்தால் அவதிப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடியை அலச வேண்டும் எப்போதுமே தலை முடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முடி கொட்டுதலுக்கு முக்கிய காரணமான பொடுகு மற்றும்  அரிப்பிலிருந்து இது தடுக்கும். மேலும் தலை முடியின் வகையை பொறுத்து, அதற்கு தகுந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்.
கடுகு எண்ணெய் ஒரு கப் கடுகு எண்ணையை எடுத்து நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளுடன் கலக்கவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து,  பின்னர் வடிகட்டி ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை வைத்து, தலையை நன்கு மசாஜ் செய்து கொண்டால், முடி ஆரோக்கியம்  பெரும்.

வெந்தயம் சில டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, 40  நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டூம். இதை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் முடி கொட்டுதல் குறையும்.  மசாஜ் முடியை குளிர்ந்த நீரில் அலசி, தலை முடியையும், ஸ்கால்ப்பையும் கைகளால் நன்கு கோதி விட்டு மசாஜ் செய்ய வேண்டும். இது தலையில் இரத்த  ஓட்டத்தை தூண்டி முடி கொட்டுவதை தடுக்கும்.

வெங்காயம் தலையில் வழுக்கை விழுவதை தடுக்க, பச்சை வெங்காயம் ஒன்றை எடுத்துக் கொண்டு, வழுக்கை விழும் இடத்தில், தோல் சிவக்கும் வரை  தேய்த்து, பின்னர் அங்கே தேனை தடவினால், முடி வளர்ச்சிக்கு இந்த முறை ஒரு தூண்டுதலாக இருக்கும்.

இயற்கை ஷாம்பு 5 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தேய்த்து, ஊற  வைத்து, நீரில் அலசினால், முடி கழிதல் நின்று, நன்கு ஆரோக்கியமாக வளரும்.

தேங்காய் எண்ணெய் ஒரு கப் தேங்காய் எண்ணெயை சூடேற்றி, காய வைத்த நெல்லிக்கனியை அதில் போட்டு, கொதிக்க விட்டு வடிகட்டி, அதனை ஒரு  பாட்டிலில் ஊற்றி, தினமும் தலையிலும், தலை முடியிலும் நன்கு மசாஜ் செய்தால், முடி கொட்டுதலின் அளவு கண்டிப்பாக குறையும்.

நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு நெல்லிச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முடிக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தால்,  முடி உதிர்வை குறைக்கலாம்.

கொத்தமல்லியை வாங்கி, அதை நன்றாக அரைத்து 1 கப் அளவு சாறு எடுத்து, முடியை நன்கு அலசுங்கள். அதுவும் ஒரு தீர்வே. தேங்காய் பால் தலையை  தேங்காய் பாலால் அலசுவதும் கூட முடி உதிர்தலை உடனடியாக தடுக்கும்.

இந்த காலத்து பெண்கள் அதிகமாக செலவு செய்வது ஷாப்பிங் தான். தலை சீப்பு முதல் வைர நெக்லஸ் வரை ஷாப்பிங்கில் செலவிடுவார்கள் பெண்கள்.

பெண்கள் ஷாப்பிங் போனால் பயந்து அலறும் ஆண்கள்தான் அதிகம். காரணம், பெண்கள் ஷாப்பிங்கின்போது எடுத்துக் கொள்ளும் நேரம்.

இதுபோல இருக்கும் பெண்களின் ஷாப்பிங் ஆசையை ஆண்கள் கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

மாத சம்பளம் வாங்கியவுடன் வீட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டும் பணத்தை எடுத்து வைத்துக் கொண்டு, மிச்சமாக இருக்கும் பணத்தை வங்கி சேமிப்பு கணக்கில் போட்டுவிட்டால் பெண்களின் ஷாப்பிங் ஆசைக்கு முற்று புள்ளியாக இருக்கும்.

ஷாப்பிங் செய்வதற்கு முன் பெண்களிடம் என்ன வாங்க போகிறோம் என்ற லிஸ்டை எடுத்து அதற்கு ஏற்ற பணத்தை மட்டும் எடுத்து செல்லுங்கள். இதை பெண்களிடம் பொருமையாக சொல்லுங்கள்.

மனதை ரிலாக்ஸாக வைத்து கொண்டு ஷாப்பிங் செல்லுவது நல்லது. பரபரப்பாக சென்று பொருட்களை வாங்கும் போது செலவிடும் நேரமும், தேர்வு செய்யும் பொருளும் சரியாக அமையாது. பொருமையுடம் நிதானமாக செல்லுங்கள்.

ஷாப்பிங் செய்வது ஒரு குறிப்பிட்ட உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் மற்றும் உங்களை பற்றி முழுதும் அறிந்தவர்களுடன் செல்லுங்கள். விருப்பத்துக்கு மாறான ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்க நிர்பந்திக்கும் நிலை வரும்.

விலை குறைவாக இருக்கிற மற்றும் வழக்கமாகச் செல்லும் கடைகளுக்கு மட்டும் செல்லுங்கள். அங்குதான் உங்களுக்கு பிடித்தமான பொருட்கள் இருக்கும்.

தேவையற்ற ஒரு பொருள் உங்களுக்கு வேண்டாம் என்பதில் உறுதியாக இருங்கள். பட்டியலிட்டதற்கு மேல் ஒரு பொருளையும் வாங்காதீர்கள்.

பணம் மட்டும் அல்ல ஷாப்பிங் செல்லும்போது தேவையின்றி நேரம் வீணாவதைத் தடுப்பதும் டென்ஷனைக் குறைக்கும்.

ஷாப்பிங் செல்லுவதற்கு முன் பெண்களை சாப்பிட வைத்து கூட்டிச் செல்லுங்கள். இதனால் ஷாப்பிங் முடித்துவிட்டு ஹோட்டலுக்கு கூப்பிடுவார்கள்.

பெரும்பாலும் பில் கட்ட கையில் பணத்தை வைத்திருங்கள். கார்டை பயன்படுத்துவதை தவிருங்கள். பணப்பரிவர்த்தனை செய்யும் போது பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது சலுகைகள் வரும் நேரமாகப் பார்த்து பொருட்களை வாங்குங்கள்

காதல் என்பது எப்போது எந்த நேரத்தில் வரும் என்பதே நம் யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் தான்.. ஆனால் ஜோதிடத்தின் பார்வையில் இருந்து பார்க்கும் பொழுது, ஒரு குறிப்பிட்ட இரண்டு ராசிக்காரர்கள், காதலித்தால் அந்த காதலில் பல பிரச்சனைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இது உண்மை தானா என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது, இந்த இணை ராசிக்காரர்களுக்கு இடையில் காதல் அந்த அளவுக்கு மலர்வதில்லை என்று கூறப்படுகிறது. எனவே முன்னேச்சரிக்கையாக நமது எதிர் ராசிக்காரர்களுடன் காதல் ஆசையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது..
ஜோதிட ரீதியாக பார்க்கும் பொழுது, இந்த இந்த ராசிக்காரர்களுக்கு இடையில் காதல் மலர்வது என்பது சிரமமான ஒன்று.. அப்படியே காதல் மலர்ந்தாலும் கூட அதில் பல பிரச்சனைகள் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகின்றது.. அந்த வகையில் இந்த பகுதியில் எந்த 8 ராசிக்காரர்களுக்கு இந்த ராசிக்காரர்களுடன் காதல் வாழ்க்கை சிறப்பாக அமையாது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

1.துலாம் மற்றும் மீனம்
துலாம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு இடையே காதல் மலர்வது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக கருதப்படுகிறது.. இந்த இரண்டு ராசிக்காரர்களும் காந்தங்களை போன்றவர்கள் என்றே கூறலாம்.. இவர்கள் இருவரும் நேர் எதிரான சிந்தனைகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.. ஆனால் காதல் வாழ்க்கை என்பது நீண்ட கால பயணம் ஆகும். எதிலும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் துலாம் ராசிக்காரர்களின் குணமானது கனவை நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மீன ராசிக்காரர்களுக்கு ஒத்துப் போகாது. இரண்டு வெவ்வேறு அளவுகளில் உள்ள சக்கரங்களை கொண்டு வாழ்க்கை பாதையில் கண்டிப்பாக சிறப்பாக பயணிக்கவே முடியாது என்பது தான் உண்மையான ஒன்றாகும்.

துலாம் ராசிக்காரர்களின் குணம்
துலாம் ராசிக்காரர்களுடைய குணம் என்னவென்றால், எந்த ஒரு விஷயத்தையும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வருமா வராதா என்று யோசித்து முடிவு செய்ய கூடியவர்கள்.. பிராக்டிக்கலாக இருப்பவர்கள், இவர்களுக்கு ஒவ்வொரு விஷயமும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

மீன ராசிக்காரர்களின் குணம்
மீன ராசிக்காரர்கள் மெல்லிய மணம் கொண்டவர்கள், வாழ்க்கையின் பாதைக்கு ஏற்றவாறு செல்ல கூடியவர்கள். சிறு சொல்லை கூட தாங்கிக் கொள்ள முடியத இளகிய மனம் கொண்வர்களாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு காதல் கைகூடுமா?
துலாம் மற்றும் மீனம் ஆகிய இரண்டு ராசிக்காரர்களும் காதலில் சிறப்பாக செயல்பட முடியாது.. இவர்கள் இருவரும் இரு வேறு துருவங்களாக இருக்கிறார்கள். ஆனால் நட்பு ரீதியாக பார்க்கும் பொழுது இவர்கள் மிக சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மீன ராசிக்காரர்கள் இளகிய மனம் படைத்தவர்கள்.. இவர்களால் துலாம் ராசிக்காரர்களுக்கு ஈடு கொடுக்க முடியாது.

2.மேஷம் மற்றும் விருச்சிகம்
கண்டிப்பாக மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் காதலில் சிறப்பாக செயல்பட முடியாது என்று ஜோதிடம் கூறுகிறது. இவர்களது காதல் மற்றும் திருமண வாழ்க்கையானது அந்த அளவுக்கு சிறப்பானதாக இருக்க வாய்ப்பு இல்லை..

ஆதிக்கம்
மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் இருவருமே மற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் குணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இரண்டு ராசிக்காரர்களும் தனிப்பட்ட முறையில் காணும் போது மிக சிறந்த சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

3.கடகம் மற்றும் மிதுனம்
கடகம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள் இருவருமே கிட்டதட்ட ஒரே மாதிரியான குணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இவரும் ஒரே நேரத்தில் சோகமாகிவிடுவது, கோபமடைந்து விடுவார்கள். அதே போல இருவரும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் மாறிவிடுவார்கள்…

பிரிவு
காதல் அல்லது இல்லற வாழ்க்கையில் எப்போதுமே ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவர் அமைதியாக அவரை சமாதானம் செய்து வைக்கும் நோக்கில் இருந்தால் தான் பிரச்சனை பெரியதாகாமல் இருக்கும். அல்லது ஒருவர் சோகமாக இருக்கும் போது மற்றொருவர் ஆறுதல் சொல்லும் விதமாக இருப்பது அவசியமாகும். ஆனால் இவர்களுக்கு இடையில் இது இல்லை..

4.சிம்மம் மற்றும் ரிஷபம்
பொதுவாக இரண்டு ராசிகளுக்கு இடையில் காதலில் ஏதேனும் ஒரு சில பகுதிகளாகவது சிறப்பாக அமையும் என்று கூறலாம்.. ஆனால் இந்த இரண்டு ராசிகளுமே சுத்தமாக பொருந்தாத இராசிகளாக உள்ளன. இந்த இரண்டு ராசிக்காரர்களுக்குமே மற்றவர்களை தங்களுக்கு கீழ் அடிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

பிரச்சனை
பொதுவாக முதலிடம் என்பது யாராவது ஒருவருக்கு மட்டுமே கிடைக்க கூடியதாக இருக்கும்.. இது தான் இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் இடையில் ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக அமையும். பொதுவாக காதல் மற்றும் திருமண வாழ்க்கை என்பது வாழ்வில் பெரும்பகுதியினை உள்ளடக்கியது. இதில் ஒருவரிடம் ஒருவர் தோற்றுக் கொண்டே இருப்பது என்பது இந்த இரண்டு ராசிக்காரர்களாலும் சகித்துக் கொள்ள இயலாத ஒரு விஷயமாக அமையும்.


5.தனுசு மற்றும் மகரம்
தனுசு மற்றும் மகரம் இரண்டு ராசிக்காரர்களுக்கும் இடையில் பல்வேறு வித்தியாசங்கள் இருக்க தான் செய்கின்றன. தனுசு ராசிக்காரர்கள் மாறுதல்களை விரும்புபவர்களாகவும், அனைத்து விஷயங்களிலும் நேர்மறையான சிந்தனை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்..

ஈர்ப்பு நீடிக்காது!
எப்போதுமே இரு வேறுபட்ட சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளை கொண்ட இருவர் காதலில் அதிகமாக ஈர்க்கப்படுகிறார்கள் என்ற ஒரு கருத்து உள்ளது. தனுசு மற்றும் மகர ராசிக்காரர்களு இடையேயும் ஆரம்பத்தில் அதிக ஈர்ப்பு இருக்கும். ஆனால் இந்த ஈர்ப்பும் காதலும் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்பது தான் நடைமுறை…


6.கும்பம் மற்றும் விருச்சிகம்
கும்பம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் இருவருமே பிடிவாத குணம் மற்றும் தன்னிச்சையாக வாழ வேண்டும், சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.. மேலும், கும்ப ராசிக்கார்கள் எப்போதுமே விருச்சிக ராசிக்காரர்களின் குறைகளை தான் பார்க்கிறார்கள் என்று ஜோதிடம் கூறுகின்றது..

ஈர்ப்பு
கும்பம் மற்றும் விருச்சிக ராசிகாரர்கள் இருவரும் ஆரம்பத்தில் தங்களது அறிவார்ந்த உரையாடல்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.. ஆனால் இந்த ஈர்ப்பானது நீண்ட நாட்களுக்கு நிலையாக இருக்காது..

வேறுபாடு
கும்ப ராசிக்காரர்கள் அனைவரிடமும் மனிதாபிமான முறையில் நடந்து கொள்வார்கள். அனைவரிடமும் கருணையுடன் இருப்பார்கள். அனைவரையும் நேசிப்பார்கள்.. சுதந்திரமான வாழ்க்கையை எதிர்பார்ப்பார்கள்.. ஆனால் விருச்சிக ராசிக்காரர்கள், ஒரு குறிப்பிட்ட சில நபர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மீது மட்டும் அன்பு செலுத்த கூடியவர்களாக இருப்பார்கள். பிரிவு எப்படி உண்டாகும்? காலங்கள் செல்ல செல்ல, விருச்சிக ராசிக்காரர்கள், கும்ப ராசிக்காரர்கள் தங்களை அதிகமாக காதலிக்கவில்லை என்று நினைப்பார்கள்..

கும்ப ராசிக்காரர்கள்
அனைவரையும் நேசிக்கும் உள்ளம் கொண்டவர்களாக இருப்பதால், தன் மீது காதல் என்று பொசசீவ் ஆக மாறிவிடுவார்கள் விருச்சிக ராசிக்காரர்கள்.. இது கும்ப ராசிக்காரர்களின் மனநிலையை பாதிப்படைய செய்வதாக இருக்கும்.


7.துலாம் மற்றும் கடகம்
முதலில் துலாம் மற்றும் கடக ராசிக்காரர்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் ஏற்ற துணையை போல தான் தோன்றுவார்கள். ஏனெனில் இவர்கள் இருவரும் வேண்டுவது அமைதி, சமநிலை மற்றும் ஒற்றுமையாகும். சற்று கூச்ச சுபாவம் உள்ள இந்த கடக ராசிக்காரர்கள் மீது துலாம் ராசிக்காரர்கள் அக்கறையற்ற மனநிலையுடன் நடந்து கொள்வார்கள்..

பிரிவு எப்படி உண்டாகும்?
நீண்ட கால வாழ்க்கை என்று வரும் பொழுது, கடக ராசிக்காரர்கள், சின்ன சின்ன தீண்டல்கள் மற்றும் அன்பு, அரவணைப்பு போன்றவை தன் துணையிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.. ஆனால் துலாம் ராசிக்காரர்கள் அறிவு சார்ந்த விஷயங்களுக்கு தங்களது துணையுடைய துணையை எதிர்பார்ப்பார்கள்..

8.மீனம் மற்றும் மிதுனம்
மீனம் மற்றும் மிதுன ராசியை உடைய ஜோடிகள் மிகச்சிறந்த ஜோடிகளாக இருப்பார்கள்.. இவர்கள் ஒரே மாதிரியான குணாதியங்களை அதிகமாக கொண்டிருப்பார்கள்.. இவர்கள் இருவருமே மெல்லிய மனம் படைத்தவர்களாக இருப்பார்கள்.. விளையாட்டுத்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் இருவருக்கும் பொருந்த கூடிய விஷயம் என்றால் இவை இரண்டு மட்டும் தான் என்று கூறலாம்.

சந்தேகம்
இவர்கள் இருவருக்கும் இடையில் சந்தேக எண்ணம் என்பது அதிகமாக உண்டாகலாம். எனவே இவர்கள் இருவருக்கும் இடையில் அதிகமாக சண்டைகள் உண்டாகும். இது காதல் பிரிவிற்கு காரணமாக அமையும்.. அல்லது மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை கொடுப்பதாக இருக்கும்.

உடலுறவு என்பது அனைவரது வாழ்க்கைக்கும் அத்தியாவசியமான ஒன்றாக தான் உள்ளது. ஆனால் எதுவுமே அளவுக்கு மீறினால் ஆபத்து தான்.. அது குறிப்பாக இந்த விஷயத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. உடலுறவின் மீது அதீத ஆவல் வந்தால் பல தீமைகள் உண்டாகும்…

முக்கியமாக சமூகத்தில் நம் மீதான கண்ணோட்டம் மாறும்.. நம்மை நம்பி வந்திருக்கும் உறவுகளுக்கு துரோகம் செய்ய நேரிடும்.. குழந்தைகளை சரியாக வளர்க்க முடியாது.. சமூகத்தின் முன்னால் குற்றவாளியாக நிற்க வேண்டியது நிலை நிச்சயம் உருவாகும்.. இது போன்ற பல பிரச்சனைகள் உடலுறவு இச்சைகள் அதிகரிப்பின் காரணமாக உண்டாக கூடும்…

மது, புகைப்பழக்கம் என எதுவுமே அளவோடு இருந்தால், அதில் இருந்து எளிதாக மீண்டு வந்து விடலாம்.. அதுவே அதற்கு நாம் அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது மிக மிக கடினமான விஷயமாகும். அதுமட்டுமின்றி அதனால் நமக்கு உண்டாகும் விளைவுகளும் அதி பயங்கரமான விளைவுகளாக இருக்கும்..

அதே போன்று தான் உடலுறவும் கூட, குறிப்பிட்ட எல்லையை தாண்டும் போது நாம் உடலுறவுக்கு அடிமையாகிவிடுவோம்.. இதனால் பல பிரச்சனைகள் உண்டாகும்.. சிலருக்கு நாம் இது போன்று உடலுறவுக்கு அடிமையாகிவிட்டோமா என்று அறிவதற்கே பல காலம் எடுத்துக் கொள்ளும்.. ஆனால் இதனை முன் கூட்டியே அறிந்து விட்டால் இதில் இருந்து மீண்டு வருவது என்பது சுலபமான விஷயமாகிவிடும்..!

உடலுறவுக்கு அடிமையாகவது என்பது முதலில் உங்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இல்லாமல் இருந்தாலும் கூட, நாட்கள் செல்ல செல்ல இது உங்களுக்கு மட்டுமின்றி, உங்களை சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்க கூடியதாக அமைந்து விடும்..


காரணம் இந்த உடலுறவின் மீது உள்ள அதீத ஈடுபாடானது பிறருக்கு பாலியல் தொல்லை கொடுப்பது மற்றும் பாலியல் வன்புணர்வு போன்றவற்றிற்கு காரணமாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சுய இன்பம் காண்பது என்பது அனைவரும் செய்ய கூடிய ஒரு விஷயம் தான்.. ஆனாலும் இது அதிகமாக கூடாது.. இது அதிகரித்து காணப்பட்டால் அவர்கள் உடலுறவுக்கு அடிமையாகிவிட்டார்கள் என்று அர்த்தமாகும். எந்த நேரமும் சுய இன்பம் காண வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்பது, ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் சுய இன்பம் காண்பது போன்றவைகள் உடலுறவுக்கு ஒருவர் அடிமையாகிவிட்டார் என்பதை குறிக்கும்.

குழந்தைகள் பசிக்காக மட்டும் அழுவதில்லை! குழந்தைகள் அழ 16 காரணங்கள் இருக்கின்றன! குழந்தைகள் பசிக்காக மட்டும் அழுவதில்லை! குழந்தைகள் அழ 16 காரணங்கள் இருக்கின்றன!

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

கடலுக்கு அடியில் இருக்கிறது பாதி அமெரிக்கா. டைட்டானிக் கண்டுபிடிப்பாளர் – டைம் பாஸ் #004 கடலுக்கு அடியில் இருக்கிறது பாதி அமெரிக்கா. டைட்டானிக் கண்டுபிடிப்பாளர் – டைம் பாஸ்

இந்த உடறவுக்கு அடிமையாக உள்ளவர்கள் எப்போதும் செக்ஸ் பற்றியே தான் பேசிக் கொண்டிருப்பார்கள்.. அவர்களை பொருத்தவரையில் இந்த உலகில் அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் செக்ஸ் மட்டும் தான்.. அடுத்து எப்போது உடறவில் ஈடுபடலாம் என்ற எண்ணத்துடனேயே இருப்பார்கள்.. இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவர் உடலுறவுக்கு அடிமையாக இருக்கிறார் என்று அர்த்தமாகும்.

இந்த உடலுறவிற்கு அடிமையாக இருப்பவர்கள் அதிக நேரம் ஆன்லைனிலேயே கழிப்பார்கள்.. ஆன்லைனில் பார்ன் படங்களை பார்ப்பது, போன் மூலமான பாலியல் சேவைகளை பயன்படுத்துவது என்று உடலுறவு மட்டும் தான் வாழ்க்கை என்று இதிலேயே மூழ்கி கிடப்பார்கள்.. தொடந்து பாலியல் சார்ந்த விஷயங்கள், தொடர்புடைய படங்கள் போன்றவற்றை பார்ப்பார்கள்.

இது போன்று உடலுறவுக்கு அடிமையாக இருப்பவர்கள் அவர்களது துணையுடன் மட்டும் உடலுறவு வைத்துக் கொள்வது கிடையாது. இவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட துணைகளுடன் உடலுறவில் ஈடுபட கூடியவர்களாக இருப்பார்கள். இந்த நிலை சிறிது சிறிதாக மாறி விலை மாதுகளிடம் செல்ல கூடிய நிலையிலும் இருப்பார்கள்..

இவர்கள் தாங்கள் உடலுறவு வைத்துக் கொள்ளும் துணையுடன் உணர்ச்சி ரீதியாக தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுதல், கஷ்டங்களை தாங்குதல், அன்பை பரிமாறிக் கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபாடு இல்லாமல் தான் இருப்பார்கள்.. அவர்களது தேவை முடிந்ததும் தன் துணையை கண்டு கொள்ளாத நிலையில் இருப்பார்கள்.

இவர்கள் எப்போதும் பல எதிர் பாலினத்தவர்களிடம் செக்ஸ் சேட்டில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள்.. அதிகமாக உடலுறவு சார்ந்த படங்களை பார்க்க கூடிய நபர்களாக இருப்பார்கள்.

இவர்கள் நீண்ட நாட்களாக ஒருவரின் மீது அன்புள்ளவர்களை போலவே நடந்து கொள்வார்கள்.. அவர்களை அடைய வேண்டும் என்ற ஆசைகள் மட்டுமே மனதில் இருக்கும்.. ஏதேனும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் எதிர்பாலின நபர் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு விடுவார்கள் இது இரண்டு பேருக்குமே ஆபத்தில் தான் முடியும்.

உடலுறவுக்கு அடிமையாக இருப்பவர்கள் தங்களது பண்பாடுகள் மற்றும் மரபுகள் போன்றவற்றை மீறி நடந்து கொள்ள கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட துணைகளை வைத்துக் கொள்வது, விலை மாதுக்களிடம் செல்வது, முன் பின் தெரியாத நபர்களுடன் உறவில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்..

இது போன்ற செயல்களில் ஈடுபடுவது என்பது அவர்களது சமய மரபுகளுக்கு எதிரானது என்றாலும் கூட தங்களது சுய உடலுறவு தேவைக்காக மரபுகளை மீறி இது போன்ற தீய செயல்களில் ஈடுபடுவார்கள்.

உடலுறவு மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்து வரும் இவர்களுக்கு, தங்களின் உடலுறவு தேவை எவ்வளவு என்பதே தெரியாது. இது போன்று இருப்பது தான் இந்த செக்ஸ் தேவை அதிகமாக உள்ளது என்பதற்கான அறிகுறியாக உள்ளது..

ஒருவர் தொடந்து 6 மாத காலமாக இதே செயல்முறைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பவராக இருந்தால் இவர் உடலுறவுக்கு அடிமையாகிவிட்டார் எனப்படுகிறது..

புகைப்பழக்கம், மதுவிற்கு அடிமையாவது போல இதுவும் பாலியலுக்கு அடிமையாதல் தான்.. உங்களுக்கு இது போன்ற அறிகுறிகளுடன் ஒருவரை தெரிந்தால் அவரை மருத்துவரிடம் அழைத்து சென்று இதற்கான தீர்வு காண வேண்டியது அவசியமாகும். இது போன்ற நபருக்கும் உளவியல் ரீதியான சிகிச்சை தேவைப்படுகிறது.. இவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் இது அவருக்கும் அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் ஆபத்தை கொடுக்கும்.

இது போன்ற பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை என்பது அவசியமாகிறது. இவர்களுக்கான மருத்துவ சிகிச்சையான பல படிநிலைகளை கொண்டதாக அமைகிறது.. இதற்கான சிகிச்சையை மன ரீதியாக எடுத்துக் கொள்ளும் போது, ஒரு நபர் இதில் இருந்து விடுபடலாம்.

அது ஊட்டி மலையின் ஒரு பகுதி. இருளில் காடுகளுக்குள் ஒரு சாகச பயணம். குழுவாகச் சென்றதில் சிறு தூரத்திற்கு மேல் நடக்க முடியாததால் மூவர் மட்டும் அடிவாரம் திரும்பினோம். மணி இரவு 12:30. கடும் குளிர். ஒரு நபர் அழுக்கு வேஷ்டி, சட்டை, ஒரு போர்வை ஒன்றை மேலே சுற்றிக்கொண்டு கையில் ஒரு மரப்பெட்டி, ஒரு தகர டப்பா சகிதம் அப்பொழுது தான் வந்தார். உடனே அங்கிருந்த நான்கு, ஐந்து நபர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். நாங்களும் அங்கு என்ன நடக்கிறது காண விரைந்தோம். எந்த நம்பரில் பணம் வைத்தாலும் இரண்டு மடங்கு தருவதாக டப்பாவை உருட்டிக்கொண்டு இருந்தார். அந்த விளையாட்டுக்குப் பெயர் “லங்கர் கட்டை” என்று முடிந்து தான் தெரிந்தது. இரண்டு நபர்கள் ஆளுக்கு சில நூறுகளைக் கட்டி இரட்டிப்பாகப் பெற்று அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தனர். மூன்றாம் நபர் தொடர்ந்து தவறாகக் கூறி பணத்தை விட்டுக் கொண்டே இருந்தார். அப்பொழுது தான் எனக்குள் இருந்த ஞானி வெகுண்டெழுந்தார். என்னுடைய பர்ஸில் இருந்து பணம் வெளியே வந்ததும் மூன்றாம் நபர் விலகிவிட்டார். சாம்பிள்’க்கு ஒரு நான்கு முறை உருட்டினார். நான்கு முறையும் நான்கு என்று சொன்னால் அங்கு நான்கு. ஆறு என்றால் ஆறு. சரியென்று பணம் கட்டத் துவங்கினேன். ஒரு முறை கூட கரெக்ட்டான நம்பரை அனுமானிக்க முடியவில்லை. கொண்டு சென்ற ஐந்நூறும் காலி. என்னுடைய நண்பர் என்னைக் காப்பாற்ற களத்தில் குதித்தார். என்னுடைய தளபதி. அவருடைய பர்ஸும் சைபர். மற்றோறு நண்பர் வந்தார். இறுதியில் மூவர் கைகளிலும் காலி பர்ஸ் மட்டும் தான். சுற்றி இருந்த மூவரும் உருட்டும் ஆளுடன் வேறு இடம் நோக்கி நகர்ந்தனர். பின் தான் மரமண்டைக்கு தெரிந்தது. அவர்கள் நால்வரும் ஒரே அணியென்று. மூன்று பேரிடமும் தேநீர் அருந்தக் கூட பணம் இல்லாமல் மற்றவர்கள் வரும் வரை குரங்குகள் போல வண்டியின் முன் அமர்ந்துகொண்டு இருந்தோம்.

சூதாட்டம் என்பது மிகக் குறுகிய காலத்தில் நமது அனுமானத்தையும் அதிர்ஷ்டத்தையும் மட்டும் நம்பி நம் பணத்தை முதலீடு செய்யும் ஒரு விஷயம். பாகுபாடு இல்லாமல் அனைத்து வகுப்பு, அனைத்து தரப்பு மக்களையும் சூதாட்டத்தின் கவர்ச்சி சில தினங்கள் வந்து செல்லும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஒவ்வொரு மாநில சூழ்நிலை, கலாச்சாரம், பங்கேற்கும் சமூகம், வசதி வாய்ப்புகளைப் பொருத்து சூதாட்டக்களம் மாறுபடுகிறது.

நூற்றாண்டுகளாக தாயக்கரமும் பரமபதமும் இந்தியாவில் உள்ளன. மகாபாரத கதையே தாயக்கரத்தில் சூதாடுவதை மையமாக வைத்துத் தான் நகரும். பரமபதம் அச்சிடும் தொழில்நுட்பம் வருவதற்கு முன்பு வரைந்து விளையாடி இருக்கலாம். பின்பு அச்சிடும் தொழில்நுட்பம் வந்தவுடன் தங்களுக்கு விருப்பமான கதைகளுடன் அச்சிட்டு விளையாடி மகிழ்ந்தனர். ஆடுபுலியாட்டம் இன்றளவிலும் சுமை தூக்குவோர் அல்லது வாகன ஸ்டான்ட் போன்று தினசரி காத்திருக்கும் இடத்தில் விளையாடுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பொருட்செலவோ, உபகரணமோ இல்லாமல் வெறும் பென்சில், ஒரு சில கற்கள், தேவையென்றால் வரையப்பட்ட அட்டை இருந்தால் போதும் என்பதால் இவ்வகை விளையாட்டுகளில் தீவிரம் அதிகரித்து அதுவே பந்தயமாக மாறி இருக்கலாம்.

செஸ் என்கிற சதுரங்கம் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்து விளையாடப்பட்டு வருகிறது. சீனாவில் தொடங்கி இந்தியாவிற்குள் நுழைந்து இங்கிருந்து தான் பிற நாடுகளுக்குச் சென்றுள்ளது. குப்தர்கள் காலத்தில் “சதுரங்கா” என்று அழைக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அல்லது பெரிதும் சூதாட்ட களத்தில் செஸ் இல்லையென்றாலும் உள்ளூர் பந்தயங்களில் பரிசுத்தொகைக்காக விளையாடப்படுகிறது.

கேரம்போர்டு விளையாட்டு தெற்காசிய மக்களிடையே மிகப் பிரபலம். இந்த விளையாட்டு இந்தியா மகாராஜாக்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இன்றளவில் தமிழ்நாட்டின் வீதிக்கு வீதி கேரம்போர்டு சாம்பியன்களை நம்மால் பார்க்க முடியும். பெரும்பாலான சிறு மற்றும் பெரு நகரங்களில் சிறு அறைகள், கிளப்கள், என பல்வேறு தளத்தில் இதற்காக போர்டின் பிரத்யேக விளக்குகள் அமைக்கப்பட்டு தினசரி பந்தயங்கள் மறைமுகமாக நடக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை உண்மையான சூதாட்டம் என்று பரவலாக நம்பப்படுவதில் சீட்டு விளையாட்டு முதல் இடத்தைப் பிடிக்கிறது. பொது இடத்தில் விளையாடத் தடை செய்யப்பட்ட ஒன்று. இதற்கான அங்கீகரிக்கப்பட்ட க்ளப்கள், விடுதிகள் போன்ற ஒரு சிலவற்றில் மட்டுமே தொழில் முறை சூதாடிகளும், மற்றவர்களும் விளையாடுகின்றனர். புள்ளிகள் கணக்கில் ஒரு புள்ளிக்கு மிகக் குறைந்த பட்சம் ஒரு ரூபாய் முதல் ஒரு புள்ளிக்கு சில ஆயிரம் ரூபாய் வரை க்ளப்களில் ஆடப்படுகிறது. சாதாரண மக்களிடம் விடுமுறை தினம், பொது நிகழ்ச்சி, சுற்றுலா, திருமணம் போன்ற நிகழ்வுகளில் ஒன்று கூடும்பொழுது பணம் வைத்து விளையாடுவதை ஒரு சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கொங்கு மாவட்டங்களில் சேவல் சண்டைகள் மிக பிரபல்யம். வெளிப்படையாகப் பந்தயங்கள் விடுவதை அரசு அனுமதிக்கா விட்டாலும் வளர்ப்பவர்கள் இடத்தில் இவை நடப்பதுண்டு. சாதரனமாக ஒரு கட்டு சேவல் என்கின்ற பந்தய சேவல் ரூபாய் 50௦0 முதல் 5௦,0௦0 வரை விற்பனை செய்யப்படுகிறது. பல விதமாக வகை சேவல்கள் மற்றும் அதன் தன்மையும் கேட்டால் மலைப்பாக இருக்கும். ஒரு சில ஆர்வலர்கள் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவின் மங்களூர் வரை சென்று சேவல்களை வாங்கி பயிற்சி அளித்து வருகின்றனர். போட்டிகளில் வென்றவருக்குத் தோற்ற சேவலும், பந்தய பணமும் அளிப்பது வழக்கம். இவ்வகை கட்டு சேவலின் இறைச்சி சுவையில் உலகின் மற்ற எந்த விலங்கின் இறைச்சியும் போட்டி போட முடியாது என்றே சொல்லலாம்.

புறா பந்தயம் ஒரு குறிப்பிட்ட சாரரிடம் மட்டுமே நடக்கிறது. இது தமிழகம் முழுவதும் பரவலாக ஆங்காங்கே நடக்கும். குறிப்பிட்ட பந்தய தூரத்தை அடைவது, அல்லது அதிக நேரம் தரை இறங்காமல் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டே இருப்பது என்று வெவ்வேறு வகையான போட்டிகள் நடக்கின்றன.

முதலில் வார லாட்டரி / மாத குலுக்கல் என்று இருந்த பொழுது அது மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பரிசு இல்லையென்றால் அடுத்த குலுக்கல் தினத்திற்காகக் காத்திருந்தனர். காலப்போக்கில் பரிணாம மாற்றம் அடைந்து மூன்று நம்பர் / ஒரு நம்பர் குலுக்கல் போன்றவை உள் நுழைந்தன. ஒரு நாளைக்கு இரண்டு முறை குலுக்கல் / பல கம்பெனி லாட்டரிகளில் இது நடைபெறும். மக்கள் தங்கள் வேலை, பொருள், நிம்மதி அனைத்தையும் இழந்து தமிழகத்தின் தெருக்களில் லாட்டரி கடை வாசல் முன்பே காத்திருந்தனர். பின்பு முழுமையாக லாட்டரிகளுக்கு தடையைக் கொண்டு வந்தது தமிழக அரசு. இப்பொழுது கேரளா லாட்டரிகளை ஏஜென்ட்கள் மூலம் வாங்கி ஒரு கூட்டம் தங்கள் அதிர்ஷ்ட தாகத்தை தீர்த்துக் கொள்கின்றனர்.

ஆன்லைன் சூதாட்டங்களில் கணக்கிட முடியாத வகைகள் உண்டு. இதில் நாம் பந்தயம் கட்டிய பணத்தையும் வென்ற பணத்தையும் சரியாகத் தரும் இணையதளங்களைக் கண்டுபிடிப்பது மிகக்கடினம்.

இணையதளத்தில் சீட்டு விளையாட்டு, குதிரை பந்தயம், ஸ்போர்ட்ஸ் பெட்டிங் எனப்படும் புட்பால், கிரிக்கெட் போன்ற அனைத்து முக்கியமான போட்டிகள் நடக்கும்போதும் பிரத்யேக இணையக் கவுண்டர்கள் ஓபன் செய்வார்கள். பரிவர்த்தனை அனைத்தும் இணையத்தில் நடைபெறும். பெரும்பாலான இணையதளங்கள் இவ்வகை பெட்டிங்’கில் சரிவர பணத்தை திருப்பித் தருவதில்லை. புகார் செய்யவும் முடியாமல் ஏமாறுபவர்கள் ஏராளம்.

பெங்களூர், கோவா போன்ற பெரு நகரங்கள் மற்றும் சுற்றுலா நகரங்களில் மட்டுமே வெளிநாட்டு விளையாட்டான ராயல் கேசினோ விளையாடப்படுகிறது. மேலும் இவ்வகை விளையாட்டுகள் மேல்தட்டு மக்கள் மட்டுமே விளையாடும் மிக அதி செலவீனமான விடுதியாக இருக்கும்.

மக்கள் தொகை பெருக்கம், வேலை வாய்ப்பின்மை, சுய தொழிலில் ஏற்படுகின்ற சிரமங்கள், குடும்பச் சூழல் போன்றவற்றால் குறுகிய காலத்தில் அதிக பணத்தை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் பெரும்பாலான மக்கள் உழல்கின்றனர். சூதாட்டமும் அதற்கேற்றால் போல் புது வருகையாளர்களுக்கு சில நாட்கள் பணத்தை அள்ளித் தரும். அவர்களே வாடிக்கையாளர்களாக மாறிவிட்டால் கை குட்டையைக் கூட மிச்சம் விடாது. சூது என்பது ஒரு போதை. குறுகிய கால பணம் கொழிக்கும் வழி என்றாலும் அது ஒரு புதை குழி!!!!!!!!!!!!!

உலகையே நடுநடுங்க வைத்த ஒரு சர்வாதிகாரி என்றாலே நம் நினைவில் வந்து நிற்கும் பெயர் ஹிட்லர். இரண்டாம் உலக போரின் கதாநாயகனாகவும் வில்லனாகவும் அனைவருக்கும் காட்சி அளித்தவன். நாஜி கட்சியின் நிறுவனர்,  இவன் தான் இரண்டாம் உலகப் போரைத் தொடங்கி ஹோலோகாஸ்டின் இனப்படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டவன். யுத்தம் முடிவடைந்த நாட்களில் அவனைக் கொன்ற போதிலும், அவனது வரலாற்று மரபு இருபதொண்ணம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. இரண்டாம் உலக போர் முடிவதற்கு இவன் காரணமாக இருந்த கதாநாயகன் என்று குறிப்பிட்டாலும் இரண்டாம் உலக போரில் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு முக்கிய காரணமாக இருந்தே ஒரே வில்லன் ஹிட்லர் தான். உலக நாடுகளை வென்று ஜெர்மனியின் காலில் கிடக்க வேண்டும் என எண்ணியவர் உலகப்போருக்கு காரணமானவர் ஹிட்லர் தான். எந்த கொடுமையான செயலைச் செய்தவனை குறிப்பிடும் போதும் ஹிட்லர் மாதிரி என்று பரவலாகக் கூறப்படுவதைக் கேட்டிருக்கலாம். எல்லோருக்குமே ஹிட்லர் ஏறத்தாழ ஒரு கோடி யூதர்களைக் கொன்றது தெரிந்திருக்கும். சரித்திரத்தின் பக்கங்களில் சிகப்புப் பக்கங்களாய் என்றும் பயமுறுத்தும் செயல்.இதற்கு ஹிட்லர் காரணம் என்பது உண்மை தான்.
அடால்ப் இட்லர் காஸ்தாப் ஜூம் பொம்மர் என்னுமிடத்தில் 20 ஏப்ரல், 1889 இல் தாய் (அலய்ஸ இட்லரின் மூன்றாவது மனைவி) கிளாரா போல்ஸ் (1860–1907), தந்தை ஆலாய்ஸ் ஹிட்லருக்கும் (1837–1903) ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்த நால்வர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அடால்ப் ஹிட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா ஹிட்லர் மட்டும்தான்.

ஹிட்லரின் அப்பா தகாத உறவில் பிறந்ததால் தன்னுடைய தாய் பெயரை பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டார். ஹிட்லரின் அப்பாவுக்கு அடக்குமுறை குணம் கொஞ்சம் அதிகம். அதுவே சிறுவன் ஹிட்லர் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. சிறு வயதிலேயே அடால்ப் ஹிட்லரின் தந்தை, வீட்டில் உள்ள அனைவரையும் அடக்கி ஆளும் தன்மை உடையவராக இருந்தார். வீட்டில் பல கடுமையான விதிமுறைகள்,  தன் பிள்ளைகள் இதைதான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் என்று அடால்ப்பின் வீடே ஒரு சிறிய ராணுவம் போல இருந்தது. தன் தந்தை எவ்வாறு தன்னையும் தன் தாயையும் அடித்துத் துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய மெயின் கேம்ப் என்ற சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புறுவதைக் கண்டு அவர் மேல் அளவுகடந்த பாசம் கொண்டார் என்று தெரிகின்றது. அதே சமயம் அவர் தந்தைமேல் அளவு கடந்த வெறுப்பையும் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது என்றும் தெரிகின்றது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அடால்ப்பின் வாழ்விலும், அவரது தந்தையின் அடக்குமுறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த அடக்குமுறையின் வெளிப்பாடே பிற்காலத்தில் ஹிட்லரை சர்வாதிகாரியாக மாற்றியது. அடுத்ததாக ஹிட்லர் தனது இளமைகாலத்தைக் கழித்த வியென்னா நகரம் யூதர்களுக்கு எதிரான சிந்தனையைத் தூண்ட வழி வகுத்தது. அனைவரும் கூறும் குற்றச்சாட்டு ஹிட்லர் யூதர்களுக்கு எதிரானவர் என்பதே.
தான் மிகவும் விரும்பி சேரத் துடித்த கலைக் கல்லூரியில் இரு முறை அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. தாயின் மரணம், பொருளாதார சீர்குலைவு போன்றவை ஹிட்லரை வெறுப்பின் விளிம்பிற்குத் தள்ளியது. இந்த இன்னல்களுக்குக் காரணம் தேடி அலைந்த ஹிட்லரை,  அன்றைய வியென்னா யூதர்கள் பக்கம் திருப்பியது. தன் பூர்வீகக் குடிகள் மட்டுமே அனுபவிக்க உரிமையுள்ள நிலத்தைக், குடியேறிய மக்கள் பறிப்பதா என்று கேள்வி எழுந்தது. ஒரு கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் ஹிட்லரை பிகாசோ மாதிரி ஒரு ஓவியராகத் தான் உலகம் அறிந்து இருக்கும். ஆனால் அவரின் சில வெறுப்புகள் அவரை ஒரு சர்வாதிகாரியாக உலகம் பார்க்கும் படி செய்துள்ளது.

அடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள ஒநாய் என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த ஹிட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். 1920 களில் அவரை அப்படித்தான் அழைத்தனர். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி என அழைத்தனர். ஹிட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள்  காப்பாளர் என்றும் பொருள்படும்.

ஹிட்லருடைய தந்தைவழி சொத்துக்களின் கடைசி பங்கு கிடைத்தவுடன் ஜெர்மனியின் பாரம்பரிய நகரமான முனிக் நகருக்கு குடிபெயர்ந்தார். அவர் குடிபெயர மற்றுமொரு காரணம் இருந்தது. ஹிட்லர் இராணுவத்தில் சேர விருப்பம் இல்லாமல் அங்கு சென்றார் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவரை இராணுவத்தில் சேர வைத்தது.
ஹிட்லர் கடைசி வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அவருக்காக உயிர் விட துணிந்து உயிரையும் விட்ட  எவா பிரான் என்ற  காதலி  இருந்தாள். ஹிட்லரின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக ஹிட்லரை அவதார புருஷராக நம்பினார்கள், ஹிட்லர் பற்றிய உண்மைகளை, விமர்சனங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த உண்மை மிகவும் வியக்க வைக்க கூடிய ஒன்று ஐந்து முறை மகாத்மா காந்தி நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் ஒருமுறை கூட நோபல் பரிசை வென்றதில்லை. அதே சமயம் ஹிட்லர் நோபல் பரிசை வென்றுள்ளார். அகிம்சை என்று போராடியவரை விட சர்வாதிகாரியாக நின்ற ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. மிகவும் தைரியமான மற்றும் வீரமான மனிதரான ஹிட்லர் பூனை பயம் கொண்ட நோயான அலுரோஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்.

பிப் 27, 1933 அன்று இரவு, ஹிட்லர் ஜெர்மன் அதிபராக பதவி ஏற்று நான்கு வாரங்களுக்கு பிறகு, ஜெர்மன் பாராளுமன்றத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் தீ விபத்து ஏற்படுகின்றது. மாரினுஸ் என்ற மன நலம் குன்றிய, ஒரு கம்யூனிஸ்ட் கைது செய்யப்பட்டு, குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட்டு கொல்லப்படுகின்றார். இது ஒரு கம்யூனிச சதி என்று கூறி, ஹிட்லர் , அப்போதுள்ள 86 வயதுடைய ஜெர்மானிய அதிபர் பவுல் வான் ஹிந்தேன்புர்கிடம் ரீக்ஸ்டேக் சட்டத்தை அனுமதி அளிக்கச் சொல்கின்றார். இந்த சட்டத்தின் படி, ஹேபியஸ் கார்பஸ், கருத்துரிமை, ஊடக சுதந்திரம், மக்கள் ஒன்று கூடும் சுதந்திரம் அனைத்தும் தடுக்கப்படுகின்றது.
அரசு, மக்களின் கடிதங்களையும், தொலைபேசியையும் ஒட்டுக்கேட்க அனுமதி அளிக்கப்படுகின்றது. பின்னர் Enabling Act of 1933, எந்த ஒரு சட்டத்தையும், பார்லிமென்ட் அனுமதி இல்லாமல் அமுல் படுத்த, அவர் சொன்னது போல், “பொது/அரசியல் வாழ்க்கையில் தூய்மையை ஏற்படுத்த”, ஹிட்லருக்கு முழு அனுமதி அளிக்கப்படுகின்றது. இதற்குப் பின் தேசிய சோசலிச கோட்பாடை எதிர்க்கும் எந்த ஒரு மனிதனையும் கைது செய்யவும், நாடு கடத்தவும் மேலும் கொல்லபடுவதையும் வழக்கமாக்கி வந்தனர். யூதர்களைப் பொருத்தவரை, ஹிட்லரும் நாஜிகளும் அவர்களை எலி போன்ற மிருகங்களாக கருதினர். அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தொழில்கள் அபகரிக்கப்பட்டு, இறுதியில் சில முகாம்களில் அடைக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டனர்.

இவ்வளவு பயங்கரவாதமும் ஏன் ஜெர்மனியில் நடந்தது என்றால், அங்குள்ள மக்கள் அதை அனுமதித்ததால் தான். ஹிட்லரும், நாஜிகளும் மக்களின் அமைதியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தான் இவ்வளவு பெரிய பயங்கரவாதத்தை நடத்தினர். இவை எல்லாம். “வலிமை மிக்க தேசம்” என்ற பெயரில் நடந்ததால் மக்கள் கண்டுகொள்ளவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய விஞ்ஞானியும் கோட்பாடு இயற்பியலின் தந்தை என்றும் அழைக்கப்பட்டவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம். அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னமாகியது ஹிரோசிமா, மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாக கிழிந்தது நாகசாகி. ஆயிரம் ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியாகிய அந்த செய்திகேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு விம்மி, விம்மி அழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்துச்  சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு உற்பத்தியாவதற்கு அடிப்படையாக இருந்தது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அணுகுண்டின் அடிப்படையாக கருதும் சூத்திரம் E=mc2 நிறைக்கும் ஆற்றலுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் இந்த ஆற்றலைக்  கண்டுபிடித்தவர் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அறிவியல் கண்டுபிடிப்புகள் நன்மைக்காகவே பயன்பட வேண்டும் என்று நம்பிய இவர்தான் இருபதாம் நூற்றாண்டின் தனித்த அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ம் தேதி ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார் ஐன்ஸ்டீன். அவர் பிறந்தபோது அவர் ஒரு மேதை இல்லை. உண்மையில் மூன்று வயது வரை பேசாமல் இருந்ததால் கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர். வகுப்பிலும் சராசரி மாணவராகத்தான் இருந்தார். ஐன்ஸ்டீனுக்கு அறிவியல் மீது ஆர்வம் பிறந்தபோது வயது 4. ஒருமுறை அவருக்கு காம்பஸ் என்ற திசைகாட்டி கருவியைப்  பரிசாக தந்தார் அவரது தந்தை. அதனுள் இருந்த காந்தம் அவரை அறிவியல் உலகம் நோக்கி ஈர்த்தது. பள்ளியில் தானாகவே கால்க்ளஸ் என்ற கணிதக்  கூற்றைக்  கற்றுக்  கொண்டார். அதன் பின் ஏற்பட்ட சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டார் ஆனால் ஆசிரியருக்கும் அந்த கேள்விகளுக்கு பதில் தெரியாமல் திகைத்துப்போனார். தன் சிறுவயதிலேயே வார்த்தைகளாலும், சொற்களாலும் சிந்திப்பதைக்  காட்டிலும் படங்களாகவும், காட்சிகளாகவும் சிந்தித்தார் ஐன்ஸ்டீன்.

அவர் அறிவியலில் பல கண்டுபிடிப்புகளும், சாதனைகளும் புரிந்திருந்தாலும் வாழ்க்கையில் தன் குடும்பச்  சூழலில் அவர் அதிகம் நாட்டத்துடன் இல்லை என்பதே உண்மை. வால்டர் ஐசக்சன் என்ற நூல் ஆசிரியர் உலகிலேயே மிக மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Einstein: His Life and Universe) என்ற புத்தகத்தை வெளியிட்டார். உலகிலேயே மிகப்பெரிய விஞ்ஞானியாக பார்க்கும் ஒருவர் மேல் குற்றம் சாட்டப்படும் வண்ணம் அமைந்தது இந்த புத்தகம். தனது வாழ்க்கையில் பல்வேறு கண்டுபிடிப்பிற்கும், புகழுக்கும் உரிய இவர் தன் திருமண வாழ்க்கையைச் சரி வர வாழவில்லை. ஐன்ஸ்டின் மாணவராக இருந்த போதே, அவரது அறிவாற்றலால் கவரப்பட்டு காதலியாக மாறிய மிலவா என்ற பெண்ணை அவரும் காதலித்தார். மேலும் அவர் ஐன்ஸ்டீனுடன் பணியாற்றிய பெண் தான் விஞ்ஞானி மிலவா மாரிக்கை அவரையே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தினார் ஐன்ஸ்டீன்.
ஐன்ஸ்டீனின் முதல் மனைவி மிலவா
ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை  பதினோரு ஆண்டு காலமே நீடித்தது. தனது மனைவிக்கு இவர் விதித்த நிபந்தனைகள் கேட்டாலே வியப்புக்குள்ளாக்குகிறது. ஐன்ஸ்டீன் தனது மனைவியை ஒரு வேலைகாரியை போலத்தான் நடத்தியுள்ளார். ஆனால் அவரது மனைவியோ தனது அன்புக்குரிய கணவனுக்கு அனைத்து வேலைகளையும் செய்துக்கொடுத்துள்ளார். ஐன்ஸ்டீன் அறைக்குச் சென்றே அவருக்கு உணவளித்துள்ளார். இந்தப் பெண் மட்டும் சாதாரணப் பெண் அல்ல ஐரோப்பாவில் முதல் முறையாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தனைக்கும் ஐன்ஸ்டீனை விழுந்து, விழுந்து கவனித்தவர் அவரது மனைவி மாரிக் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மனைவி மிலவா மற்றும்
அவரது இரண்டு குழந்தைகள்
ஐன்ஸ்டீன் இடையில் 1912 ஆம் ஆண்டு தனது உறவினரான எல்சாவின் பக்கம் திரும்பினார். எல்சாவிடம் மாரிக் மனச்சோர்வு மற்றும் பொறாமைக்குணம் பிடித்தவள் என்று கூற ஆரம்பித்தார். மாரிக்கிடம்  விவகாரத்து கேட்டார் ஐன்ஸ்டீன். ஆனால் மாரிக் தர மறுத்து விட்டார். நீ என்னுடன் வாழ சில நிபந்தனை உண்டு என்று ஐன்ஸ்டீன் கூறினார். அந்த நிபந்தனைகள் அருகில் வந்து உட்காரக்கூடாது, வெளியில் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் தன்னுடன் பேசக் கூடாது, வெளியுலக தொடர்புகளை அதிகம் தெரிந்து வைத்துக் கொள்ளக்கூடாது என்று நீளுகிறது ஐன்ஸ்டீனின் நிபந்தனைப் பட்டியல். அதையும் விட மிக முக்கியமான ஒன்று தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவரது மனைவி எதிர்பார்க்கக்கூடாது என்று கூறினார் ஐன்ஸ்டீன். எந்த வகையிலும் தன்னைக் கவர முயற்சிக்கக் கூடாது. அனுமதி இல்லாமல் பேசக் கூடாது என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று. இந்த நிபந்தனைகளையும் தாண்டி அவள் இவரை நன்கு கவனித்தாள். அவருக்கு வேண்டியவற்றை செய்து கொடுத்தாள். அவரின் துணிகளையும் துவைத்து தேய்த்து அவருக்கு கொடுத்து பணிவிடை செய்தாள். அவளால் முடிந்தவரையில் எந்த எதிர்பார்ப்புமின்றி அவருக்கு பணிபுரிந்தாள். ஆனால் அவளுக்கு எந்த வித கைமாறும் செய்யவில்லை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இப்படிப்பட்ட 11 ஆண்டு கால வேதனை வாழ்க்கைக்கு பின் ஐன்ஸ்டீனை விட்டு தனது மனைவி பிரிந்து சென்றார். கூடவே தன் பிள்ளைகளையும் அழைத்துச் சென்று விட்டார். ஐன்ஸ்டீனின் குழந்தைகளில் ஒருவர் ஹான்ஸ் ஆல்பர்ட். இன்னொருவர் எட்வர்ட். 1902 ஆம் ஆண்டு லிசரல் என்ற மகள் பிறந்தார். பின்னர் அவரைத் தத்து கொடுத்துவிட்டனர். மாரிக் மற்றும் ஐன்ஸ்டீன் ஆகியோர் பிப்ரவரி 14, 1919 அன்று ஐந்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்தனர்.
அவரது இரண்டாவது மனைவி
எலிசாவுடன் இருக்கும் புகைப்படம்
ஐன்ஸ்டீன் ஜூன் 2, 1919 இல் எல்சாவை திருமணம் செய்தார். எனினும் அந்த இரண்டாவது திருமணமும் அவருக்கு மகிழ்ச்சி தருவதாக  அமையவில்லை. அவள் திடிரென்று மரணித்துவிட்டாள். இந்த வாழ்க்கையும் துயரில் சென்று முடிந்தது. பி்ன்னர் அவரது செயலாளர் பெட்டி நியூமன்னுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் வேறு பல பெண்ணுடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் அவர் ஒரே ஒரு செயலுக்கு விசுவாசமாக இருந்தார் அது தான் இயற்பியல். பல முறை தன் திருமண வாழ்வில் தான் சரியாகத் தான் நடந்துக்கொள்கிறோம் என்று எண்ணினார். சில சமயம் அது தவறென்றும் உணர்ந்தார். பிறகு இவையெல்லாம் தன் வெற்றிக்கு இடையூறு தரும் வண்ணமாக உள்ளது என்று எண்ணி இருபது ஆண்டுகள் மனைவி, துணைவியின்றி தனியாகவே வாழ்ந்து ஏப்ரல் மாதம் 18ஆம் நாள் 1955ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
இருபது ஆண்டுகள் மனைவி
துணைவியின்றி தனியாகவே வாழ்ந்தார்.
வாழ்க்கை என்பது இரண்டு நிலைகள்தான். ஏற்றமும், தாழ்வுமே அது. அதில், சரியாகப் பயணிப்பவர்கள் வெற்றிபெறுகிறார்கள். இந்த வெற்றியின் பயணத்தில் ஐன்ஸ்டீனின் வாழ்வும் அடையும். இன்பமும், துன்பமும் அவரை எதிர்கொண்டபோது எந்த சூழ்நிலையிலும் தனது வழியை மாற்றாமல் இருந்தார். அதனால்தான் அவருக்கு மிக உயர்ந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிரபல விஞ்ஞானி ஆன பிறகு அவர் கூறியிருக்கிறார் –  “நான் ஒரு இயற்பியல் விஞ்ஞானி ஆகவில்லை என்றால் ஒரு இசைகலைஞனாகி இருப்பேன். நான் அடிக்கடி இசையைப்பற்றி யோசித்துக்கொண்டு இருப்பேன். என் பகல் கனவு இசையிலேயே கழியும். நான் வாழ்வை இசையின் அடிப்படையிலேயே பார்க்கிறேன். என் வயலினில் இருந்து வெளிப்படும் இசையில் நான் என் வாழ்க்கையின் அதிகப்படியான மகிழ்ச்சியினை காண்கிறேன்” என்று கூறினார். அவரது மரணம் வரை விண்வெளி மற்றும் நேரம் ஆகியவற்றின் கோட்பாடுகளுக்கான கண்டுபிடிப்பிற்கான தேடல் இருந்தது. அவர் தன்னை தானே, உடலையும் ஆத்மாவையும் விஞ்ஞானத்திற்கு விற்றுவிட்டதாக ஒருமுறை சொன்னார். ஆனால் கண்டுபிடித்த இராட்சத விஞ்ஞானம் மனித இனத்தின் பல வழிகளில் பயன்பட்டிருந்ததாலும் அவர் சாதாரண மனித இனமானதால் அவர் மீதும் பல குற்றச்சாட்டுகளும் தவறுகளும் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு நாயகனாக இருந்த விருப்ப நாயகன்தான் புரூஸ் லீ. இன்று தற்காப்புக்  கலை இந்த அளவு பிரபலம் ஆனதற்கு ஒரே முக்கிய காரணம் புரூஸ் லீயாகத்தான் இருக்க முடியும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு உண்மையே. புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும், கால்களும் எதிரியைத்  தாக்கும் வேகத்திற்கு அன்றைய திரையுலக தொழில்நுட்பத்தால் கூட ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 கட்டங்கள் என்பதே கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுப்பதற்கு ஒரு வினாடிக்கு 34 கட்டங்களாக மாற்றியமைத்தனர்.
புரூஸ்லீ 1940ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ந்தேதி அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ மாகாணம் சைனா நகரப்  பகுதியில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் லீ ஹோய்-சுவென் மற்றும் கிரேஸ் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை ஒரு நடிகர். புரூஸ்லீக்கு அவரது பெற்றோர்கள் லீ ஜூன்பேன் என பெயர் வைத்தனர். அந்த பெயர் அமெரிக்க மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியரின் வாயில் நூழையவில்லை. எனவே அந்த செவிலியர் செல்லமாக புரூஸ் எனக் கூப்பிட அதுவே பிறகு அவரது பெயராக நிலைபெற்றது.
புரூஸ் லீக்கு மூன்று மாதங்கள் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12 வயதுவரை லா செல் கல்லூரியில் மேல்நிலைக் கல்வி பயின்றார் புரூஸ் லீ. பின்னர் புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் தனது படிப்பை தொடர்ந்தார். 1959 ஆம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் ஹாங்காங் கேங்கஸ்டர் ஒருவரின் மகனை தாக்கினார் புரூஸ் லீ. இந்த சம்பவத்தால் பயந்து போன அவரது தந்தை, புரூஸ் லீயை சான் பிரான்சிஸ்கோவிற்கு அனுப்பி வைத்தார். சீன வம்சாவளியைச்  சேர்ந்தவர் என்றாலும் அமெரிக்காவில் பிறந்தவர் புரூஸ் லீ. அதன்பிறகு பாரம்பரிய கல்வி பெற சீனாவிற்கு அனுப்பப்பட்டார். தற்காப்புக்  கலையை ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்த லீ,  சீனத்  தற்காப்பு கலையை உலகம் முழுவதும் பரப்புவதற்கு பள்ளி ஒன்று தொடங்கினார். அவரது பள்ளியில் குங்பூ, கராத்தே,  ஜுடோ, குத்துச்சண்டை போன்ற அனைத்து வடிவங்களும் ஒன்றுசேர்த்து புதிய கலையை கற்றுக்கொடுத்தார். கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களைச்  சேர்த்து புரூஸ் லீ உருவாக்கிய புதிய தற்காப்பு கலை அவரது பெயரிலேயே ‘புரூஸ்லீ குங்பூ’ என அழைக்கப்பட்டது. இதனைத்  தத்தவப் பாடத்துடன் சேர்த்து ‘ஜே கேடி’ எனும் புதிய பயிற்சியை அறிமுகப்படுத்தினார். இதனை பயிற்றுவிக்க பல பள்ளிகளையும் திறந்தார். தற்காப்பு கலையின் உச்சத்தைத்  தொட்ட புரூஸ்லீ தத்துவம் முதுகலை படித்தவர். மேலும் இவர் ஆழ்ந்த தத்துவ ஞானம் உடையவர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு நிகழ்வே. தற்காப்புக்  கலையை இன்று உலகம் முழுவதிலும் கொண்டு சென்ற இவர் குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

சண்டைக்கு புரூஸ் லீ அளித்த விளக்கம் ஒன்று. களத்தில் எதிரி இருக்கக்கூடாது. ஆனால் சண்டை நடக்கவேண்டும். ஒரு விறுவிறுப்பான நாடகம் போல சண்டை அமைய வேண்டும். போட்டிக் களத்தில் யார் வேண்டுமானாலும் எதிரியாக வரலாம், எப்படி வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் வேறு சிந்தனையோ, கனவோ இருக்கக்கூடாது. சண்டை குறித்து எந்த அச்சமும், பதட்டமும் இல்லாமல் சண்டைக்குத்  தயாராக இருக்க வேண்டும். எதிரி தடுக்கும்போது தாக்கவும், எதிரி தாக்கும்போது தடுக்கவும் வேண்டும். சண்டை இல்லாத சண்டைதான் என் கனவு என்று சொன்னார் புரூஸ் லீ.
புரூஸ்லீயின் தந்தை ஒரு நடிகர் என்பதால் புரூஸ்லீயின் நடிப்பு வாழ்க்கை சிறு வயதிலேயே ஆரம்பமானது. தனது  18 வயதிற்குள் 20 படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது பேட்மேன் பட தயாரிப்பாளர் வில்லியம் டோசியர் பார்வையில் இவர் பட்டது இவர் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. புரூஸ்லீ அமெரிக்காவில் இருந்தபோது ‘தி கிரீன் ஹார்னட்’, ‘அயர்ன் சைடு’, ‘ஹியர் கம் த பிரைடுசு’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.

அமெரிக்காவில் இருந்து ஹாங்காங் திரும்பிய இவருக்கு கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் சௌ ஒரு படத்தில் நடிக்குமாறு ஒப்பந்தம் செய்துக்கொண்டார். ரேமண்ட் தயாரிப்பில் இவரது முதல்படம் 1971ஆம் ஆண்டு  பிக்பாஸ் என்ற பெயரில்  வெளிவந்தது. வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும், ’Crawn Colony Cha Cha’ சாம்பியனாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது. இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. இவரது அதிவேக சண்டைகளும் கண்களில் அவர்காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூல் பெற்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த 1972ல் வெளிவந்த ‘பிஸ்ட் ஆப் பியூரி‘ திரைப்படம் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து மிகப்பெரிய வெற்றியை மீண்டும் பெற்று தந்தது. அதே ஆண்டில் புரூஸ்லி கதை எழுதி இயக்கிய ‘வே ஆப் தி  டிராகன்‘ திரைப்படம் புரூஸ்லீயின் புகழ் உலகளவில் கொண்டு சென்றதோடு அவருடன் சேர்ந்து குங்பு கலையையும் பிரபலமடைய வைத்தது. வே டூ த டிராகன் படத்தின் கிளைமாக்ஸில், தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த கராத்தே மாஸ்டர் சக்நாரிஸை புரூஸ் லீ பயன்படுத்தினார். ரோமில் எடுக்கப்பட்ட இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் புரூஸ் லீயும் சக்நாரிஸும் மோதுவதை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அத்தனை ஆக்ரோஷமான அற்புதமான சண்டைக்காட்சி இது.

தன்  இளம்வயதிலேயே எதிர்பாராதவிதமாக மரணத்தைத்  தழுவிய அவரால் சில படங்கள் மட்டுமே நடிக்க முடித்தது என்றாலும், அவரது மிகப்பெரிய வெற்றிப்படம் உலகோர் அனைவராலும் மறக்க முடியாத திரைப்படம் ‘என்டர் தி  டிராகன்‘. இந்த படத்திற்கு ஏராளமான சிறப்புகளும் உண்டு. ஒட்டுமொத்த படமாக பார்க்கும்போது வித்தியாசமான காட்சி அமைப்பு, திடுக்கிடும் திரைக்கதை உத்தி, கண்களில் ஒற்றிக்கொள்ளும் ஒளிப்பதிவு, செவியைக்  குளிர வைக்கும் இசை எதுவுமே இல்லையென்றாலும், நரம்புகள் முறுக்கேறச் செய்யும் சண்டை காட்சிகளால் ரசிகனைக்  கட்டிப்போடச்  செய்தது  ‘என்டர் த டிராகன்’. இந்தப்  படம் உலகெங்கும் உள்ள ஆக்சன்  ரசிகர்களை அதிரவைத்தது. புரூஸ் லீ என்று பெயர் மந்திரம் மாதிரி உச்சரிக்கப்பட்டது. இதனால் உலகைக்  குலுக்கிய படங்களின் பட்டியலை சேர்ந்தது  ‘என்டர்  த டிராகன்’. இதன் வசூல் சாதனை அமெரிக்காவில் மட்டும் 850,000 டாலர்கள். ஆனால் அந்த வெற்றியை அவரால் பார்க்க முடியாமல் போனது.

தலை வலி என்று படுக்கச்  சென்றவருக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழுந்திரிக்கவில்லை. பிறகு ஹாங்காங் குயீன் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமல் மரணத்தைத்  தழுவினார். இன்றளவும் அவர் மரணம் ஒரு புரியாத மர்மமாகவே உள்ளது.
முப்பது வயதிலேயே புகழின் எல்லா சிகரங்களையும் தொட்டுப் பார்த்தவர், முன் கோபத்துடன் நடந்து கொண்டது, ஏராளமான எதிரிகளை அவருக்குச்  சம்பாதித்து கொடுத்தது. படத்தில் இவருடன் சண்டையிடுகிறவர்கள் மூக்கை உடைத்துக் கொள்வதும், பற்கள் பறி கொடுப்பதும் சாதாரணம். திரையில் இவ்வளவு ஆக்ரோசமாக இவ்வளவு உண்மையாக நிகழ்த்திக்  காட்டியவர் புரூஸ்லீக்கு முன்பும் இல்லை, பின்பும் இல்லை என உறுதியாகக் கூறலாம். அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது முழு உருவ வெண்கலச்  சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை கடந்த நூற்றாண்டின் சமூகத்தைப் பாதித்த சிறந்த 100 மனிதர்களின் பட்டியலில் புரூஸ்லீயையும் சேர்த்துள்ளது. ஒரு கலையை எப்படி நேசிப்பது, அது எங்கனம்  உச்சத்துக்குக்  கொண்டு செல்வது என்பதைக்  கற்றுக் கொள்ளும் வண்ணம் அனைவருக்கும் அரிய ஆசானாகவே இன்னும் விளங்குகிறார்.

“ஞான நல்லறம்வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.. .
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்.. .
இலகு சீருடை நாற்றிசை நாடுகள் 
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்து 
இங்கே திலக வாணுதலார் 
தங்கள் பாரத தேசம் ஓங்க 
உழைத்திடல் வேண்டுமாம்”.

என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப இன்று தமிழ் பெண்கள் அனைத்து துறையிலும் தன் கால் தடங்களை பதித்துக் கொண்டிருப்பதை எண்ணினால் இதுதான் பாரதி கண்ட புதுமை பெண்களா என்ற மகிழ்ச்சியும் வியப்பும் ஆட்கொள்கிறது அடிமனதில். நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்பதே அனைவரது கருத்தாக இருந்தது. ஆனால் இன்றையக்காலத்தில் அந்த எண்ணம் மாறி விண்வெளி துறையில் கால் பதிக்கும் அளவு பெண்கள் வளர்ந்துள்ளனர் என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய தருணம்.

ரிசப்ஷனிஸ்ட் டூ பெப்சிகோ சி.இ.ஓ. இந்திரா நூயி:

‘இந்திரா நூயி‘…உலக வர்த்தக மற்றும் பொருளாதாரத்தில் வலிமைமிக்க குரலாக ஒலித்துக்கொண்டிருப்பவர். உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானமான நிறுவனமான ‘பெப்சிகோ’வின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், தலைவராகவும் பணியாற்றி வரும் இந்திரா நூயியின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணம். 1955-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி சென்னையில் பிறந்த இவரது முழுப்பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பி.எஸ்ஸி படிப்பும், கொல்கத்தா ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ படிப்பும் முடித்த கையோடு சிறிது காலம் ஏ.பி.பி என்னும் வர்த்தக நிறுவனத்திலும், பின் ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸ்’ நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராகவும் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து சென்னை பியர்ட்செல் ஆடை நிறுவனத்தில் பணி செய்தார். தன்னுடைய பணி வெற்றிகரமாக இருந்தாலும் கார்ப்பரேட் உலகில் நிலவும் போட்டியை எதிர்கொள்ள எம்.பி.ஏ படித்தது போதாது என்று தனக்கு நெருங்கிய பலரிடமும் தெரிவித்தார். அதனால் தனது வேலையை விட்டுவிட்டு, அமெரிக்காவின் ‘யேல்’ பல்கலைக்கழகத்தில் பப்ளிக் மற்றும் பிரைவேட் மேனேஜ்மென்ட் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்திலேயே படிப்பு செலவுக்காக ஒரு நிறுவனத்தில் பார்ட் டைம் ரிசப்ஷனிஸ்டாக பணியாற்றினார். முதுகலைப் பட்டம் பெற்றதும் மோட்டோரோலா, ஏசியா பிரவுன் பொவரி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு இறுதியாக 1994-ம் ஆண்டு பெப்சி குளிர்பான நிறுவனத்தில் Strategic Planning & Development பிரிவின் துணைத் தலைவராக சேர்ந்தார்.
பெப்சி நிறுவனத்தில் சேர்ந்த பிறகு இவரது வாழ்க்கையும், அந்நிறுவன வளர்ச்சியும் உலகம் முழுக்கவும் புகழ்பெற்றன. பெப்சி நிறுவனத்தில் சேர்ந்ததும், ‘தற்போதைய நம் வளர்ச்சியும், முன்னேற்றமும் போதாது. இன்னும் நம் தயாரிப்புகளை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கூட்டு முயற்சியுடன் பணியாற்ற வேண்டும்’ என அடிக்கடி சக ஊழியர்களிடம் சொல்வார். சொல்வதோடு மட்டுமில்லாமல் ஊழியர்களுடன் சேர்ந்து தயாரிப்பு, சேகரிப்பு, விற்பனை, கள ஆய்வு போன்ற பல பணிகளை தானே நேரடியாக களம் இறங்கினார். வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப பெப்சி மற்றும் இதர விற்பனைப் பொருட்களின் வடிவம், அளவு, தரம் ஆகியவற்றில் பல மாறுதல்களைப் புகுத்தினார். இவரது வருகைக்குப் பிறகு 45 ஆண்டுக்கும் மேலான அந்நிறுவன வளர்ச்சி பெரிய முன்னேற்றப் பாதைக்குச் சென்றது. இதனால் 2006-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

சாந்தி துரைசாமி:

சக்தி மசாலாவின் நிர்வாகி. இவரின் அயராத உழைப்பும் ஊனமுற்றவர்களுக்கு வேலை வாய்ப்பும் தந்த கருணை மிகு பெண்மணி. சாதாரண ஏழ்மை குடும்பத்தில் பிறந்த இவர் தன் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக தன் படிப்பை ஆறாம் வகுப்புடன் நிறுத்திக்கொண்டு தன் தம்பி படிப்பிற்காகவும் தன் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டும் தன்னால் இயன்ற அளவிற்கு குடும்பத்திற்கு உதவி புரிந்துள்ளார். தன்னால் முயன்ற அளவு சில வேலைகளை வீட்டிலிருந்தே செய்தும் வீட்டிற்கு வருவாய் ஈட்டியுள்ளார். இவரது உதவும் மனப்பான்மை இன்று பல ஊனமுற்றவர்களுக்கும் தன்னாலும் உழைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. இவர் உற்சாகத்தையும், இன்முகத்தையும் ஒருங்கே பெற்ற பண்பாளர்,  கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றிகளை தன் வசப்படுத்தி வருபவர். பல்வேறு சமூக நல அமைப்புகளில் பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்படுபவர் என்ற பாராட்டுக்குரியவர். இவரது சக்தி மசாலா நிறுவனம் ஈரோட்டில் உள்ள மாமாரத்துபாளையம் என்ற இடத்திலுள்ளது. இவர் பல விருதுகளையும் பெற்ற போற்றத்தக்க ஒரு பெண்மணியே.
40 ஆண்டு களுக்கு முன்பு சிறு முதலீட்டில் வணிகத்தை தொடங்கிய அவர், தனது கணவர் துரைசாமியின் பங்களிப்புடன் ‘சக்தி மசாலா’ நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். சக்திதேவி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி மருத்துவமனை, மறுவாழ்வு மையம், சிறப்புப் பள்ளி ஆகியவற்றோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மரம் நடும் பணி, அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது என்பது உட்பட பல சேவைகளை ஆற்றிவருகிறார். நாடும் நம் சந்ததியினரும் நலமுடன் வாழ பசுமை உலகம் படைப்பதில் தீவிரமாக கடந்த எட்டு ஆண்டுகளாக மரம் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேமிப்புத் திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். முதல் இரண்டு ஆண்டுகள் வரை மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர் கேட்கின்ற போதெல்லாம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். இதுவரை 1,00,000 மரக்கன்றுகளுக்கு மேல் வழங்கியுள்ளோம். மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு, வேலியிட்டு நீர்பாய்ச்சி பராமரித்தும் வருகிறார்கள்.

மல்லிகா ஸ்ரீனிவாசன்:

மல்லிகா சீனிவாசன் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபராவார். தொழில் நுட்ப அறிஞருக்கான அங்கீகாரம் பெற்ற ஒரு சிந்தனையாளர் ஆவார்.  இந்திய விவசாயத்துறை வணிகத்திற்கும் கல்வித்துறைக்கும் சிறந்த பங்களிப்பு மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர். தற்போது இவர் 1960 ஆம் ஆண்டில் சென்னையில் துவங்கப்பட்ட TAFE – டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார். உலகிலேயே மூன்றாவது பெரிய டிராக்டர் தயாரிப்பாளரும், இந்தியாவில் இரண்டாவது பெரிய நிறுவனமான TAFE 150,000 க்கும் மேற்பட்ட டிராக்டர்களை வருடாந்திர விற்பனையாக இந்தியா உட்பட ஐரோப்பா, அமெரிக்கா போன்ற 82 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது.
25 வருட இடைவெளியில், டிராக்டர் வணிகத்தின் சுழற்சியின் திறனைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய டிராக்டர்களின் தரம் வாய்ந்த தயாரிப்பாளராக TAFE ஐ, ஒரு வலுவான மற்றும் தரமான அமைப்பாக நிறுவியுள்ளது. தயாரிப்பு மற்றும் செயல்முறை மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், இந்நிறுவனத்தின் விரிவாக்கத்தை தொடர்ந்து உறுதிசெய்துள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த சக்தி வாய்ந்த பெண்மணிகளில் ஒன்றாகவும், இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர்களில்  ஒருவராகவும் அறியப்பட்ட மல்லிகா ஸ்ரீனிவாசன் “டிராக்டர் ராணி” என்று அழைக்கப்படுகிறார்.

“ஒரு வியாபாரத்தை நடத்த நீங்கள் பணத்தை நேசிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒரு நிறுவனத்தை உருவாக்க, ஒரு சிறந்த குழுவை உருவாக்க நீங்கள் ஒரு கனவைக் கொண்டிருக்க வேண்டும். அந்த கனவு கல்வி மற்றும் ஆரோக்கியமான சமூக சூழலை உடையதாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தனது நிறுவனத்தில் கூட பெண் தொழிலாளர்களை அதிகம் ஊக்குவிக்கிறார். தொழில் மற்றும் வணிகத் துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக டாஃபே குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.