August 2016

இணையத்தளங்களில் அடிக்கடி பெண்களுக்கான அழகுக் குறிப்புக்களும் இதர தகவல்களும் வருகின்றன என மனம் வருந்தும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கவலையை விடுங்க பொஸ். இதோ உங்களுக்கான மச்ச சாத்திரம். படியுங்க மச்சத்தை கண்டுபிடியுங்க….

· இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.
· நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.
· வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.
· வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
· வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
· வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.
· இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.

· இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.
· இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
· இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.

· இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.

· இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
· மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.
· மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
· மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.

· மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

· மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.
· நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.

· மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.
· மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.
· மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.

· மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
· வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
· இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.

· வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.
· இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.

· இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.

· தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.
· கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.
· கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.
· இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.
· வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.

· மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.
· வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.
· வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

· வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.
· தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.
· வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.
· வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.
· இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்

· முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.
· முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.
· முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.

மேஷம் – காதல்
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.
ரிஷபம் – காதல்
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார். ஆசன வாய் உறவில் மிக்க நாட்டம் கொண்டவராக இருப்பார்.
மிதுனம் – காதல்
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.
கடகம் – காதல்
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.
சிம்மம் – காதல்
சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.
கன்னி – காதல்
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம் – காதல்

எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.
விருட்சிகம் – காதல்
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.
தனுசு – காதல்
இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.
மகரம் – காதல்
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.
கும்பம் – காதல்
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.
மீனம் – காதல்
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.
இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம் Facebook மற்றும் Twitter-ல் Share செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..

மனிதர்களின் சிந்தனைகள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். மற்றவர்களை சிரிக்க வைப்பதற்கும், ஏமாற்றுவதற்கும் கொமடியாக எதையாவது செய்து தானும் மகிழ்ந்து மற்றவர்களை மகிழ்விப்பார்கள்.

ஆனால் சிலர் மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற பெயரில் மிகவும் கொடூரமாக சிந்திப்பார்கள். அப்படியொரு சிந்தனை செய்த மனிதர்களின் காட்சியே இதுவாகும்.

தாய், மகன் இருவரும் மரணித்தது போன்று நடிக்கிறார்கள். மகள் வருகிறாள்... மிகவும் கதறுகிறார்... எழுப்ப முயற்சிக்கிறார். ஆனால் முடியவில்லை என்பதால் பொலிசுக்கு போன் செய்கிறார். அதன் பின்பு நடந்ததை நீங்களே பாருங்க...

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.

இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.

இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்”நாவலன் தீவு”என்று அழைக்கப்பட்ட”குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்”குமரிக்கண்டம்”.ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !!

பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்”இறையனார் அகப்பொருள்”என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள”தென் மதுரையில்”கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,”பரிபாடல்,முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்”ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்”கபாடபுரம்”நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்”அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்”ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில்”தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய”மதுரையில்”கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்”அகநானூறு,புறநானூறு,நாலடியார், திருக்குறள்”ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..

இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்………!!

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !

இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே !

முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !

நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !

தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .
நன்றி !

நமது இதிகாசம், புராணங்களில் ஒருவர் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது. எப்படி வாழ்ந்தால் ஒருவரது எதிர்காலம் எப்படி இருக்கும், கர்மா என்றால் என்ன? எதனால் அடுத்த பிறவி எடுக்கிறார்கள், மறுபிறவி என ஒன்று இருக்கிறதா? என பலவன கூறப்பட்டுள்ளன.

இவை எல்லாம் உண்மையா? பொய்யா? கட்டுக்கதையா? வெறும் கதையா? என இன்றளவும் பல மேடைகளில் தலைப்பாக கொண்டு பேசப்படுகின்றன. 50:50 இதை உண்மை என்றும் பொய் என்றும் கூறி தான் வருகிறார்கள்.

மரணம் என்பது யாரும் விரும்பாத ஒன்று. ஆனால், பிறக்கும் போதே மரணம் என்பது நிச்சயம் என்பது எழுதப்படாத நியதி. ஆனால், அந்த மரணம் எப்போது வரும் யாராலும் கணிக்க முடியாது.

அப்படிப்பட்ட மரணம் நிகழ போகிறது என சிவ புராணத்தில் கூறப்பட்டிருக்கும் 11 அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்…

1. வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள் செயலிழப்பு அல்லது செயலிழந்து வருகிறது எனில், ஆறு மாதங்களில் இறப்பு நேரிடும் என் சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

2. திடீரென உடல் வெள்ளை / மஞ்சளாக நிறம் மாற துவங்குகிறது. உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தென்படுகின்றன என்றால் அடுத்த ஆறு மாதத்தில் அந்த நபர் உயிரிழக்க நேரிடலாம்.

3. தொண்டை மற்றும் நாக்கு ஒருவருக்கு விடாமல் வறட்சி அடைந்துக் கொண்டே இருக்கிறது எனில், அந்த நபர் விரைவில் இறந்துவிடுவார் என்று அர்த்தம்.

4. ஒருவரது இடது கை அச்சம் அல்லது பதட்டத்தின் காரணமாக நடுங்கிக் கொண்டே இருக்கிறது / நாவில் வறட்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்றால், அந்த நபர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவர்.

5. ஒருவரால் கருப்பு அல்லது சிவப்பு நிற வட்டத்தை நிலா மற்றும் சூரியனில் பார்க்க முடிகிறது என்றால் அவர் 15 நாட்களுக்குள் இறந்துவிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

6. ஒருவரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை பார்க்க முடியவில்லை / மிக மந்தமாக தான் தெரிகிறது எனில், அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

7. ஒருவர் திடீரென நீல ஈக்களால் சூழப்படுகிறார் என்றால் அவர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவார் என்று அர்த்தமாம்.

8. கருடன், காகம், கழுகு / புறா ஒருவரது தலையில் வந்து அமர்வது மரணத்தின் அறிகுறி என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

9. ஒருவர் தனது நிழலில் தனது தலைப் பகுதியை காண முடியவில்லை என்பது மற்றுமொரு மரணத்தின் சமிக்ஞை என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

10.எதையும் சரியாக பார்க்க முடியாமல் போவது / நெருப்பை தெளிவாக பார்க்க முடியாமல் போவது மரணம் உங்களை எட்டிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் சமிக்ஞை.

11. எண்ணெய், தண்ணீர் போன்றவறில் ஒருவரது பிரதிபலிப்பை பார்க்க முடியாவிட்டால் ஆறு மாதத்தில் அவர் இறந்துவிடுவார் என சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம் Facebook மற்றும் Twitter-ல் Share செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..

* சொந்த காலில் நில்!

அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும்.

நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை, யாருடைய உதவியும் இன்றி வாழ்வது என்பதே ஓர் பெரிய கெளரவம் தான்.

* உலகம் சுற்றும் வாலிபன்!

குறைந்தபட்சம் சிங்கபூர், மலேசியா-வாவது சென்று வந்துவிட வேண்டும். புது இடம், புதிய கலாச்சாரம் உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள, புத்துணர்ச்சி அடைய பெருமளவு உதவும்.

* பேரார்வம்!

பேரார்வம் என்பது உங்கள் வேலையை குறிப்பது. ஆரம்பத்தில், வேலை வேண்டும் என்பதற்காக ஏதாவது வேலையில் சேர்ந்திருக்கலாம். ஆனால், 30 வயதுக்குள்ளாவது உங்களுக்கு பிடித்த துறை / தொழில் / வேலையில் சேர்ந்துவிட வேண்டும்.

* தோல்வி!

தோல்வியில் கற்காத பாடத்தை நீங்கள், வேறு எங்கும் கற்க முடியாது. தோல்வி உங்களை ஒழுங்குப்படுத்தும் ஆசான்.

ஓர் தோல்வியையாவது நீங்கள் சந்தித்துவிட வேண்டும். இல்லையேல், 30 வயதை கடந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை கையாள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படலாம்.

* முதலீடு!

சம்பாதித்த பணத்தை, வருமானம் ஈட்டும் வகையில் எதிலாவது முதலீடு செய்து வைத்துவிட வேண்டும். அதை செலவு செய்யாமல், வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டும்.

* தீய பழக்கம்!

ஏதேனும் ஒரு கெட்டப் பழக்கத்தையாவது 30 வயதுக்குள் நிப்பாட்டி விட வேண்டும். புகை, மது, கெட்ட வார்த்தை பேசுதல், பெண்மையை கொச்சையாக எண்ணுதல் என எதையாவது ஒன்றையாவது.

எந்த கெட்டப் பழக்கமும் இல்லையா?. நீங்களே உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், தூய நல்லவர்களை இந்த உலகம் கேலி கிண்டல் தான் செய்யும்.

* உண்மையான நட்பு!

எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும், உங்கள் அருகில் நின்று தோள் கொடுக்க ஓர் தோழமை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான தோழமை அமைத்துக் கொள்ள வேண்டும்.

* பிடிக்காவிடில் பிரிவு!

ஓர் நபருடன் பழகுவது பிடிக்கவில்லையா, உங்கள் சுற்றதிர்காகவும், அலுவலக நண்பர்களுக்காகவும் விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா?. வேண்டவே வேண்டாம். முற்றிலுமாக பிரிந்துவிடுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நல்லது நினைக்கும் நபர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு இனி நீங்கள் பயணம் செய்வது தான் நல்லது.

* சேமிப்பு!

பெரும்பாலும் 30 வயதை கடக்கும் போது, சிலர் திருமணம் ஆகியும், சிலர் குழந்தை குட்டி என இருப்பார்கள்.

எனவே, அடுத்த தலைமுறைக்கான சேமிப்பை அளவிற்கு குறையாமல் எடுத்து வைக்க வேண்டும். இது உங்களுடைய கடமை.

* கைதேர்ந்தவர்!

நீங்கள் செய்யும் பணியில் நீங்கள் கைதேர்ந்தவர் என்ற நற்பெயருடன் விளங்க வேண்டும். அட, அவரு கிட்ட இந்த வேலைய கொடுங்க, சரியா செய்வார் என நால்வர் கூற வேண்டும்.

* ஆராய்ந்து செயல்படுதல்!

கனிமங்களை ஆராய தெரிந்தவர்கள் தான் ஆராய்ச்சியாளர்கள் என்றில்லை. மனிதர்களை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

* நேரம் பொன் போன்றது!

நேரத்தை அளந்து செலவு செய்ய வேண்டும். 30 வயதுக்கு மேல் நேரத்தை வீண் விரயம் செய்வது, உங்கள் வாழ்க்கையில் பெரும் இழப்பாக அமையும்.

* நெட்வர்க்!

ஊரோடு ஒத்துவாழ் என்பார்கள். ஆம், 30 வயதுக்கு மேல் நீங்கள் ஓர் நெட்வர்க் போல, பணியிடம், வாழ்விடத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும். இது உங்களை பல நிலைகள் உயர உதவும்.

* நீங்களாக இருங்கள்!

மற்றவர்களுக்காக உங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வாழ தேவையில்லை. நீங்கள் நீங்களாக வாழ வேண்டிய தருணம் இது.

* படிப்பில் உயரம்!

உங்கள் துறை சார்ந்த படிப்பில், முழுமை அடைந்திருக்க வேண்டும். பி.எச்.டி முடித்தால் முழுமை என்றில்லை. இன்றைய அப்டேட் என்ன என்று அறிந்து வைத்திருந்தாலே போதுமானது. ஏதாச்சும் செய்யுங்க பாஸ்!!

பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். ஆண்பாவமோ சொல்லாதது. பெண்மனசு ரொம்ப ஆழம். அதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம் என்பார்கள். ஆண்களின் மனது ஆழமெல்லாம் இல்லை. ஆனால் அதில் இருப்பதைக் கண்டுபிடிக்க பெண்கள் பெரும்பாலும் முயல்வதில்லை என்பது தான் உண்மை.

பெண்களை மலர்கள் என்போம். காலங்காலமாக அப்படி கவிதை சொல்பவர்கள் ஆண்கள் தான். மலரினும் மெல்லினமாய் பெண்களை அவர்கள் தங்கள் கலைக் கண்களால் பார்க்கின்றனர். கிளைகளில் அவர்கள் பூத்துக் குலுங்குகையில் மகிழ்கின்றனர்.

ஆண்களை வேர்கள் என்று சொல்ல வேண்டும். அவை பூமிக்குள் மறைந்திருக்கும். எப்போதும் வெளியே வந்து, ‘நான் தான் வேர்’ என அது விளம்பரப் படுத்துவதில்லை. ஆனால் அந்த குடும்பம் எனும் மரம் சாய்ந்து விடாதபடி எப்போதும் பூமியை இறுகப் பற்றிக் கொண்டே இருக்கும். பூக்களின் வசீகரம் குறைந்தால் உடனடியாக நீரை உறிஞ்சி கிளைகளுக்கு அனுப்பி வைக்கும்.

கிளைகள் பூக்கிரீடம் சூட்டிக்கொள்ளும் போது வேர்களில் விழா நடக்கும். ஆனால் அந்த விழாவை யாரும் காண்பதில்லை. அது ஆழ்கடலில் குதித்து விளையாடும் ஒரு மீனைப் போல வெளிப்பார்வைக்கு மறைவாகவே இருக்கிறது.

கிளைகளின் வசீகரமும், இலைகளின் வசீகரமும் வேர்களைப் பற்றிய நினைவுகளையே மறக்கடிக்கச் செய்து விடுகின்றன. அதற்காக வேர்கள் கவலைப்படுவதில்லை. தன் கடன் பணிசெய்து கிடப்பதே என அமைதியாய் இருக்கின்றன.

வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையைத் துருவிப் பார்த்தால் அதிகம் பேசாத ஆண்களே அங்கே இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் தனது வெற்றி என்பது மனைவியர் தோல்வியடையாமல் இருப்பதே எனும் ஞானத்தை அடைந்த ஞானியர்கள் அவர்கள்.

ஒரு சுவாரஸ்யமான‌ கதை உண்டு. ஐம்பது ஆண்டு காலம் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை நடத்திய ஒரு தம்பதியரை பேட்டி கண்டார்கள். கனவனைப் பார்த்து, “இந்த வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம் என்ன ?” என்று கேட்டார்கள்.

கணவர் சொன்னார், “பெரிய பெரிய விஷயங்களில் முடிவுகளை நான் எடுப்பேன். சின்னச் சின்ன விஷயங்களை என் மனைவியே பார்த்துக் கொள்ளட்டும் என விட்டு விடுவேன். அது தான் எங்கள் வெற்றிகரமான வாழ்க்கை ரகசியம்”.

“அதென்ன சின்னச் சின்ன விஷயம் ?”

“என்ன டிவி வாங்கறது, என்ன கார் வாங்கறது, எங்கே டூர் போறது, எங்கே பிள்ளைகளை படிக்க வைக்கிறது…இப்படிப்பட்ட விஷயங்கள் ”

“அப்போ பெரிய விஷயங்கள் ?”

“ம்ம்…. அமெரிக்கா ஈராக் கூட போரிடலாமா ? பிரான்ஸ் சிரியாவை தாக்கலாமா ? இந்த மாதிரி ! ”

அதாவது குடும்பத்தின் சாவியை மனைவியிடம் ஒப்படைத்து விடுபவர்கள் ஆண்கள். காரணம் வேறொன்றுமில்லை குடும்பம் சமாதானமாக இருக்க வேண்டும் என்பது தான்.

அதனால் தான் சீரியல் பார்த்து ரொம்பவே துயரத்தில் இருக்கும் பெண்களிடம் தங்களுடைய பிரச்சினைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் அதற்காக, “எதுவும் பேசமாட்டாரு” எனும் பட்டத்தையும் வாங்கிக் கொள்வார்கள்.

ஆண்கள் பேசாமலிருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம், “பேசப் போய் வீணா எதுக்கு பிரச்சினை” என்பது தான். பெண்களால் பேசாமலிருக்க முடிவதில்லை. காரணம் அவர்கள் பேசுவதற்காகப் படைக்கப்பட்டவர்கள். அவர்களால் பேசாமல் இருக்க முடிவதில்லை. அந்த ஒரே காரணத்துக்காகத் தான் ஏவாளைப் படைக்கும் முன் ஆதாமைப் படைத்து வைத்தாரோ கடவுள் எனும் சந்தேகம் எனக்கு உண்டு.

பெண்கள் உணர்ச்சிகளை கொட்டோ கொட்டெனக் கொட்டுவார்கள். அதைக் காயப்படுத்தாமலும், ஈரப்படுத்தாமலும் காதில் போட்டுக்கொள்ள வேண்டிய கடமை கணவனுக்கு உண்டு. திடீரென “நீங்க என்ன சொல்றீங்க ?” என மனைவி கேட்டால் கணவனுக்கு இரண்டு பதட்டங்கள் வரும். ஒன்று, “நான் என்ன சொன்னா பிரச்சினை இல்லாமல் இருக்கும்”. இரண்டாவது, “இதுவரை மனைவி என்ன தான் பேசிட்டிருந்தா?”. மனைவியர் அந்த கேள்வியைக் கேட்காமல் இருப்பது என்பது என்ன ஒரு பாக்கியம் என்பது கணவர்களுக்கு மட்டுமே தெரியும்!.

மனைவியின் பேச்சில் உடன்பாடு இல்லாவிட்டால் நீங்கள் அமைதியாய் இருக்கலாம். உடன்பாடு இருந்தால் நீங்கள் அமைதியாய் இருக்கலாம். மறுபடி வாசிக்க வேண்டாம். சரியாகத் தான் சொல்லியிருக்கிறேன். “வாயை மூடிட்டு பேசறதைக் கேளு” எனும் ஒரு வரி தான் பெரும்பாலும் ஆண்களுக்கான உரையாடலின் பங்கு.

இன்னொரு முக்கியமான விஷயம் மறதி ! . மறதி என்பது ஆண்களுக்கு இறைவன் கொடுத்த வரம். பெண்களின் அதீத ஞாபகசக்தி ஆண்களுக்கு இறைவன் கொடுத்த சாபம். எல்லாவற்றுக்கும் ஒரு சமநிலை வைப்பவர் இறைவன் என்பதன் இன்னொரு வெளிப்பாடு இது. கல்யாணம் ஆன புதுசுல நீங்கள் சொன்னது முதல், நேற்று நீங்கள் வாங்க மறந்த விஷயங்கள் வரை மனைவியின் நினைவுப் பேழையில் இருக்கும். மறதிக்கு மனைவி தரும் பெயர், “உங்களுக்கு அக்கறையில்லை !!!”. அப்படி மனைவி திட்டியதையே அரைமணி நேரத்தில் ஆண்கள் மறந்துவிடுவது தான் வரத்தின் அழகு.

வாரம் ஆறு நாட்கள் வீட்டிலேயே இருந்து தேவையான உதவிகளைச் செய்துவிட்டு ஏழாவது நாள் மாலையில் அரைமணி நேரம் வெளியே கிளம்பும் போது பின்னாடியிருந்து ஒரு குரல் கேட்கும், “எப்பவும் பிரண்ட்ஸ் கூட சுத்தினா போதும்… நாளைக்கு பிள்ளைகளுக்கு ஸ்கூல் இருக்கு.. வீட்ல அவ்ளோ வேலை இருக்கு…!!!”. அந்த நேரத்தில் உள்ளுக்குள் எழுகின்ற எரிமலைக் குழம்பை, ஆலகால விஷத்தைப் போல தொண்டைக்குழியில் தேக்கி, “ஒன் அவர்ல வந்திடுவேன்” என சிரித்துக் கொண்டே சொல்லும் கலை அவ்ளோ ஈசியா என்ன?.

தான் செய்யும் செயல்களுக்கெல்லாம் ஒரு நன்றி, ஒரு பாராட்டு வேண்டுமென எதிர்பார்ப்பவர் மனைவி என்பது கணவர்களுக்குத் தெரியும். மறக்காமல் அதைச் செய்து விடுவார்கள். ஆனால் கணவன் செய்யும் செயல்களெல்லாம் ‘அது அவரோட கடமை’ ரேஞ்சுக்குத் தான் பெரும்பாலும் மனைவியரால் எடுத்துக் கொள்ளப்படும். “மனைவி திட்டாம இருந்தா, பாராட்டினதுக்கு சமம்பா” என்பதே ஆண்களின் ஆழ்மன சிந்தனை.

“இதெல்லாம் கூட நான் சொன்னா தான் செய்வீங்களா?” எனும் குரல் கேட்காத வீடுகள் உண்டா? மனைவியை திருப்திப்படுத்த அடுத்த முறை ஏதாவது தாமாகவே செய்தால், “ஏன் இதையெல்லாம் செஞ்சிட்டு திரியறீங்க?” எனும் பதில் வரும். அமைதியாய் ,”அப்போ என்ன செய்யணும்” என்று கேட்டால் “இதெல்லாம் கூட நான் சொன்னா தான் செய்வீங்களா?” எனும் பதில் வரும். உலகம் மட்டுமல்ல உருண்டை எனும் அறிவியல் உண்மை உணர்ந்த களைப்பில் ஆண்கள் சிரிக்கும் சிரிப்பு அவர்களுக்கே புரியாதது.

“மன்னிச்சிடும்மா” எனும் ஆண்களின் வார்த்தையில் “ஆள விடு சாமி… ” எனும் பொருள் உண்டு. அந்தப் பொருள் வெளியே தெரியாத அளவுக்கு பேசும் வலிமையில்லாத கணவர்கள் வாட்ஸ்ஸப் பயன்படுத்துவதே நல்லது. நடிப்பை விட ஐகான் ஈசி! “ஆமா செய்றதையெல்லாம் செஞ்சுட்டு.. மன்னிப்பு வேற” என இரட்டையாய் எகிறும் மனைவியரை சமாளிப்பது கலிங்கப்போரை விடக் கடினமானது.

என்ன பரிசு கிடைத்தாலும், “வாவ்.. சூப்பர்” என்பது கணவர்களின் வழக்கம். மனைவியோ “சேலை.. நல்லா ‘தான்’ இருக்கு, பட் பார்டர் கொஞ்சம் சரியில்லை.. எவ்ளோ ஆச்சு… மாத்த முடியுமா?” என பல கேள்விகளுக்கு நடுவே ஏண்டா கிஃப்ட் வாங்கினோம் என கலங்கும் கணவர்கள் அப்பாவிகளா இல்லையா?.

வெளியே போக தயாராகி ஒருமணி நேரம் காத்திருப்பார் கணவன். மேக்கப் முடித்த மனைவி சொல்வார், “சீக்கிரம் வாங்க, காரை வெளியே எடுத்திருக்கலாம்ல, ஷூ போடுங்க, கார் சாவி எங்கே? எல்லா இடத்துக்கும் லேட்டாவே போக வேண்டியது”. “இதப்பார்ரா…” என கவுண்டமணி கணக்காய் மனசுக்குள் ஒலிக்கும் குரலை வெளிக்காட்ட முடியுமா என்ன?.

“இதெல்லாம் என்கிட்டே சொல்லவேயில்லை” எனும் மிரட்டல் கேள்வி தவறாமல் வரும் ஆண்கள் எதையாவது தெரியாத்தனமா மறந்து தொலைத்தால். அதே விஷயத்தை மனைவி சொல்லாமல் இருந்தால், “ஆமா.. நீங்க எப்போ வீட்டுக்கு வரீங்க, எங்கே பேசறீங்க… இதையெல்லாம் சொல்ல ?”எனும் பதில் தானே வழக்கம்!.

இப்படியெல்லாம் எதிரும் புதிருமாக இருந்தாலும், இணைந்தே வாழ்வதில் தான் குடும்ப வாழ்க்கை அர்த்தமடைகிறது. ஆண் எனும் பாத்திரத்தில் ஊற்றி நிரப்பும் பானமாக பெண் இருப்பதும், பெண் எனும் பாத்திரத்தில் நிரம்பித் தளும்பும் பானமாக ஆண் இருப்பதுமே வாழ்வின் அழகு.

ஒருவருடைய தவறை அடுத்தவர் எளிதாக எடுத்துக் கொள்வதும், வெற்றிகளை இணைந்தே ரசிப்பதும், ரசனைகளை மதிப்பதும், தனிப்பட்ட நேரங்களை ஒதுக்குவதும், விவாதங்களில் தோற்பதை வெற்றியாய் நினைப்பதும் குடும்ப வாழ்க்கையின் தேவைகள்.

ஒரு குழந்தை சமூகத்தில் சரியான இடத்தை அடைய ஒரு தந்தையின் அருகாமையும் வழிகாட்டுதலும் மிகவும் அவசியம் என்கின்றன ஆய்வுகள். தாயின் அன்பை விட தந்தையின் அன்பு இதில் அதிக முக்கியம் என்கின்றன சில ஆய்வுகள். கணவன் மனைவி உறவு இறுக்கமாய் இருந்தால் தான், தாய் தந்தை பொறுப்புகளும் செவ்வனே நடக்கும்.

ஆண்கள் மரியாதையை எதிர்பார்க்கிறார்கள், பெண்கள் அன்பை எதிர்பார்க்கிறார்கள் என்று உளவியல் சொல்வதுண்டு. உண்மையில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்கள் எதிர்பார்ப்பதும் அன்பு மட்டுமே. அன்பு அடுத்தவரை மரியாதை குறைவாய் நடத்தாது என்பது மட்டுமே புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

கணவனிடம் மனைவிக்கும், மனைவியிடம் கணவனுக்கும் அன்பும் பகிர்தலும் தொடர்ந்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அங்கே ஏதேனும் இடைவெளி விழும்போது தான் வேறு ஏதேனும் ஒரு உறவு வந்து நுழைந்து விடுகிறது. அது குடும்ப வாழ்க்கைக்கு கண்ணிவெடியாய் மாறிவிடுகிறது.

பெண்பாவம் பொல்லாததாய் இருக்கலாம், ஆண்பாவம் சொல்லாததாய் இருக்கலாம்... ஆனால் இதயத்தில் அன்பு இல்லாததாய் மட்டும் இருக்க வேண்டாம்.

என் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் வசித்துவந்தார்கள்…குடும்பத்தலைவர் அரசு வேலையில் இருந்தார் நல்ல குடும்பம் அன்பான மனைவி அழகான குழந்தைகள்.. திடீரென அவர் உடல் காரணமில்லாமல் இளைக்க ஆரம்பித்தது… இவரும் ஏதோ காய்ச்சல் போலிருக்கிறது என்று “SELF MEDICATION” எடுத்துக்கொண்டார் ஆனால் என்ன செய்தாலும் உடல் இளைத்துக்கொண்டே போவதை தடுக்கமுடியவில்லை இந்நிலையில் ஒரு நாள் நடக்கவே முடியாமல் அவர் நடந்துபோவதை பார்த்த நான் கிராமத்தில் இருக்கும் அவர் அப்பாவுக்கு போன் பண்ணினேன் அவரும் வந்தார்..

நாங்களெல்லாம் வற்புறுத்தி HOSPITAL க்கு அழைத்துப்போனோம் அங்கு டெஸ்ட் பண்ணியபோதுதான் அவர் “HIV POSITTIVE” எயிட்ஸ் நோயாளி என தெரியவந்தது…பிறகு நடந்த கொடூரம்தான் சொல்லவே முடியாத அளவுக்கு இருந்தாது…!! அவர் அப்பாவும் அம்மாவும் HOSPITAL வாசலிலேயே அவரை விட்டுவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டார்கள்…!! அவரோ நடக்க முடியாமல் இருக்கிறார். அந்த நேரத்தில் என் நண்பர் ஒருவர் இந்த வியாதிக்கு அரசு மருத்துவமனையில் மட்டுமே நல்ல TREATMENT கிடைக்கும் என்று சொன்னார்.. பிறகு நானும் என் நண்பரும் சேர்ந்து அவரை GH ல் அட்மிட் செய்தோம்.

பிறகு பக்குவமாக அவர் மனைவியிடம் விஷயத்தை சொல்லி புரியவைத்தோம்.. அதுவரை கூட இருந்த நண்பர்கள் எல்லாம் இவர் HIV நோயாளி என்று தெரிந்த வுடன் இவரை விட்டுவிட்டு ஒதுங்கிவிட்டார்கள்…நான் அவருடைய அப்பாவுக்கு மறுபடி போன் பண்ணி வரசொன்னேன் அதற்க்கு அவர் …..”தம்பி அவனை அப்பிடியே ஒரு டாக்சி வைத்து இங்கு கொண்டுவந்து வயலில் உள்ள மோட்டார் ரூமில் போட்டுவிடு..!! இருக்கிற வரை இருந்துவிட்டு சாகட்டும் என்றார்”…. !!

அதன் பிறகு நான் ஓர் முடிவுக்கு வந்தேன் என்ன ஆனாலும் சரி அவரை காப்பாற்ற நாம் எதாவது முயற்சி செய்யவேண்டும் என்று..அதற்கான முயற்சிகளை தொடர்ந்தேன் ! GH ல் அட்மிட் செய்து 20 நாள் TREATMENT ல் சற்று தேறியிருந்தார்…பிறகு அவருடைய அப்பா அம்மா என்று ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்… அவர்கள் பார்க்க ஆரம்பித்த உடன் நான் ஒதுங்கிக்கொண்டேன்..கிட்டத்தட்ட மறந்தே போனேன்..!!

இந்நிலையில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது, அந்த அண்ணன் இரண்டு SWEET BOX எடுத்துக்கொண்டு என் வீட்டிற்கு வந்தார் பார்க்கவே ரொம்ப நல்லா இருந்தார் ” தம்பி ஒரு SWEET BOX எனக்கு பதவி உயர்வு கிடைத்ததற்கு..!!! இன்னொன்று நான் சொந்தமாக நிலம் வாங்கியிருக்கேன் அதற்க்கு ! என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.. அந்த சமயம் எனக்கு சொல்ல முடியாத அளவு சந்தோசமாக இருந்தது…!! இப்போ அவர் நலமாக இருக்கிறார்.

நண்பர்களுக்கு, “HIV” நோயாளிகளை வெறுத்து ஒதுக்காதீர்கள்… உங்களுக்கு தெரிந்து சந்தேகப்படும்படியான யாராவது இருந்தால் உடனே GH க்கு கூட்டிப்போங்கள்… நிச்சயமாக “எய்ட்ஸ்” குணப்படுத்த முடியாத நோய்தான் ஆனால் இப்போதிருக்கிற மருத்துவ வசதிகளை வைத்து மரணத்தை நிச்சயம் 15 TO 2O வருஷங்கள் தள்ளிப்போடலாம்…இதை செய்யும்போது ஒரு குடும்பம் காப்பாற்றப்படும் இல்லையா..!!

மகா­பா­ர­தத்தில் அனை­வ­ரது சர்ச்­சையைக் கிளப்­பி­விட்ட விடயம் இது. அண்ணன் தம்­பிமார் ஐவர்க்கு ஒரு மனை­வியா? அப்­ப­டி­யானால், எவ்­வாறு சண்­டை­யில்­லாது வாழ்க்­கையைக் கூறு­போட்­டார்கள்? எல்­லோ­ருமே எப்­படி ஏகமன­தாக ஏற்றுக் கொடண்­டார்கள்?

தமிழர் பண்­பாடு ஒரு­வ­னுக்­கொ­ருத்தி என்­ப­துதான். ஆனால் திரெ­ள­பதை ஐவ­ருக்­கொ­ருத்­தி­யான மர்மம் இன்றும் பல­ருக்கும் புரி­யாத புதி­ரா­கவே உள்­ளது.

உண்­மையில் நடந்­த­துதான் என்ன? பாஞ்­சால தேசத்தின் மன்னன் துரு­பதன். தனது மகள் திரெ­ள­ப­திக்கு திரு­மணம் நடத்தி வைப்­ப­தற்­காக சுயம் வரத்தில் ஒரு போட்­டி­யையும் வைத்தார்.

பாண்­ட­வர்கள் ஐவரும் பாஞ்­சால தேசத்தில் நடை­பெற இருந்த சுயம்­வ­ரத்­திற்குச் சென்­றனர். அப்­போது தான் வியா­சக முனிவர் ஒரு வர­லாற்று உண்­மையை விப­ரித்தார். முனிவர் ஒரு­வ­ருக்கு அழ­கிய பெண் இருந்தாள், அவ­ளுக்கோ திரு­மணம் நடை­பெறக் கால­தா­மதம் ஆகிக் கொண்டே இருந்­தது. அப்­பெண்ணோ “தனக்கு திரு­மணம் விரைவில் நடை­பெ­ற­வேண்டும்” என்று பர­ம­சி­வனைக் குறித்து கடுந்தவம் செய்தாள்.

பர­ம­சி­வனும் அவள் முன்பு தோன்­றினார். “பெண்ணே!, நீ விரும்­பிய வரத்தைக் கோள்” என்­றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பய­பக்­தி­யுடன் எம் பெரு­மானே!, நற்­கு­ணங்­களைக் கொண்­ட­வரை நான் கண­வ­னாகப் பெற வரமருளுங்கள்” என்று பணிந்தாள்.

பர­ம­சிவன் பதி­லேதும் கூறாமல் நின்றார். அப் பெண்­ம­ணியோ, தான் வேண்­டிய வரத்தை திரும்பத் திரும்பக் கூற­லானாள். இவ்­வாறு அவள் ஐந்து தட­வைகள் “நற்­கு­ணங்­களைக் கொண்­ட­வரை நான் கண­வ­னாகப் பெற வரமருளுங்கள்” என்று வேண்­டினாள்.

ஐந்தாம் முறை­யாக அப்பெண் கூறிய பின்பு பர­ம­சிவன் குறுநகை புரிந்தார். “பெண்ணே!, நீ விரும்­பிய வண்­ணமே நற்­கு­ணங்கள் நிறைந்த ஐந்து கண­வர்­களைப் பெறு­வா­யாக” என்று வர­ம­ரு­ளினார்.

“நான் ஒரு­வ­ரைத்தான் மணக்க விரும்­பு­கிறேன் ஆனால் நீங்கள் ஐவரை மணக்க வேண்­டு­மென அருளிச் செய்­தீர்­களே” என்று அப்­பெண்­மணி மெய் சிலிர்க்கக் கேட்டாள்.

“பெண்ணே…நீ ஐந்து முறை வரம் கேட்டாய் நானும் அரு­ளி­விட்டேன், அடுத்த பிற­வியில் நீ இந்த வரத்தின் படி கண­வர்­களைப் பெறுவாய்” என்று கூறி, பர­ம­சிவன் மறைந்தார். பர­ம­சி­வனால் வரம்­பெற்ற அப்பெண்தான் துரு­பதன் புத்­தி­ரி­யான திரெ­ள­ப­தை­யாவாள் என்று கூறி­மு­டித்தார் வியா­சக முனிவர்.

திரெ­ள­ப­தியை சுயம்­வ­ரத்தில் மணக்க துரு­பதன் ஒரு போட்டி வைத்­தி­ருந்தான். சுழலும் சக்­க­ரத்தின் நடுவில் உய­ரத்தில் ஒரு மீன் இருக்கும். கீழே உள்ள நிழலை நோக்­கி­ய­ப­டியே மேலே சுற்றும் மீனைக் குறி­பார்த்து அம்­பினால் எய்து வீழ்த்த வேண்டும் அதுதான் நிபந்­தனை.

இப்­போட்­டியைக் கண்­டு­ க­ளிக்­கவும் அதில் பங்­கு­பற்றி திரெ­ள­ப­தியை மனை­வி­யாக அடைய ஆவல் கொண்ட மன்­னர்­களும் கூடி­யி­ருந்­தனர். அக் கூட்­டத்தில் துரி­யோ­தனன், கர்ணன் இவர்­க­ளுடன் அந்­தணர் வேடத்தில் இருந்த பாண்­ட­வர்­களும் இருந்­தார்கள்.

போட்டி விறு­வி­றுப்­பாக ஆரம்­ப­மா­னது. பல நாட்டு மன்­னர்கள் வில்லில் நானேற்ற முடி­யா­த­வர்­க­ளாகத் தோற்றுப் போயினர். துரி­யோ­தனன் போன்­றோரும் வில்லின் வேகத்தால் கீழே விழுந்­தனர். கர்ணன் தன்­னு­டைய திற­மையால் நானேற்றி மேலே சுழல்­கின்ற மீனை வீழ்த்தி விடலாம் என்று உற்­சா­கத்­துடன் எழுந்தான்.

சபை­யிலே ஒரே உற்­சாகம் “நிச்­சயம் கர்ணன் வெற்­றி­பெற்று திரெ­ள­ப­தியை மணந்­து­கொள்வான்” என்று பேசிக் கொண்­டதும் திரெ­ள­ப­தியின் செவிப்­ப­றை­யிலும் முட்­டி­மோ­தி­யது. கர்ணன் வில்லைத் தொட்டு வளைக்கும் நேரத்தில் திரெ­ள­பதி தன் தோழி­யிடம் உரக்கக் கூறினாள்.

“ஒரு தேரோட்­டியின் மகன் இந்தப் போட்­டியில் வென்றால் நான் அவனை மணந்து கொள்ள மாட்டேன்” என்றாள். வில்லை வளைக்க முயன்ற கர்­ணனின் காது­களில் அவை இடி ஓசை­யாக ஒலித்­தது.

அக்­கினி மின்னல் அவன் உணர்­வு­களை ஊடு­ரு­விற்று. அவ­மா­னமும், வெறுப்பும் கர்­ணனைப் புடை­சூழ, வில்லை கீழே வைத்­து­விட்டு தனது இருக்­கையை நோக்கி நகர்ந்தான்.

அந்­தணர் வேடத்தில் இருந்த அர்ச்­சுனன் சுயம்­வ­ரத்தில் வென்று திரெ­ள­ப­தியை மணக்கும் தகுதி பெற்றான். துரு­பத மன்­னனின் ஆசி­யுடன் பெரி­யோர்­களின் வாழ்த்­துக்­க­ளு­டனும் அர்ச்­சுனன் திரெ­ள­ப­தி­யையும் அழைத்துக் கொண்டு தருமர், பீமன், நகுல, சகா­தே­வ­னு­டனும் இல்லம் வந்­த­டைந்­தனர்.

வாயிலில் நின்ற வண்ணம் “தாயே!, நாங்கள் மாங்­கனி ஒன்றை கொண்டு வந்­தி­ருக்­கின்றோம்” என்று பாண்­ட­வர்கள் கூற குந்­தி­தே­வியும் இல்­லத்­துள்ளே இருந்­த­வாறே “அவ்­வா­றாயின் ஐவரும் அதைப் பகிர்ந்து கொள்­ளுங்கள்” என்று மொழிந்தாள்.

“அர்ச்­சுனா போட்­டியில் வெற்றி பெற்ற நீயே திரெ­ள­ப­தியை மணக்க வேண்டும் தாய் கூறி­யதை நீ தவ­றாக எடை­போட வேண்டாம்” என்­று­ரைத்­தார்கள் சுகோ­த­ரர்கள். “வியா­சக முனிவர் நமக்கு உரைத்­தப்­படி தாயின் வாக்கு பொய்ப்­ப­தற்­கில்லை எனவே ஐவ­ருமே மணந்து கொள்வோம்” என்றான் அர்ச்­சுனன்.

பின்பு திரெ­ள­ப­தியின் முடிவை அறிய விழைந்த­ போது, தாய் குந்திமாதே­வியின் வாக்கை தெய்வ வாக்­காகச் சிர­மேற்று ஐவ­ரையும் மணக்க இசைந்தாள் திரெ­ள­பதி. பாண்­ட­வர்­களின் மனப் போராட்­டத்தைப் போக்க வியா­சகர் அங்கு வந்தார். பாண்­ட­வர்கள் தேவ­கு­மா­ரர்கள் என்றும் திரெ­ள­பதி லட்­சு­மியின் அம்சம் பெற்­றவள் என்றும் கூறினார். மேலும் பர­ம­சி­வ­னிடம் பெற்ற வரமே இது என விளக்­க­ம­ளித்தார்.

பாண்­ட­வர்கள் ஐவரும் திரெ­ள­ப­தியை மணந்து கொண்­டதும் தங்­க­ளுக்குள் ஒரு விதி­மு­றையை வகுத்துக் கொண்­டார்கள். ஒரு வருடம் ஒரு­வ­ரோடு திரெ­ள­பதி மனை­வி­யாக வாழ­வேண்டும். அவ்­வாறு அவர்கள் வாழும் ஓராண்டு காலமும் மற்ற நான்கு பாண்­ட­வர்­களும் அவர்­களைப் பார்க்கக் கூடாது. இவ் விதியை மீறிப்­பார்த்தால் அவர்­களைப் பார்த்­தவர் ஓராண்டு கான­கத்தில் வசிக்க வேண்டும்.

5 கணவன்மார்களுடன் வாழ்ந்த ஒருத்தி எப்படிப் பத்தினியருள் ஒருவராக ஆனாள்?

5 கணவன்மாருடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு ஒண்ணும் திரெளபதி அர்ச்சுனனுக்கு மாலையிடவில்லை. என்றாலும் இதிலும் ஒரு அர்த்தமும், தாத்பரியமும் இருக்கிறது என்பதாலேயே இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது.
5 கணவன்மாருடன் வாழ்ந்த திரெளபதி முறையே ஒருத்தருடன் ஒரு வருஷம் என்ற கணக்கில் வாழ்ந்தாள். ஒரு வருஷம் முடிந்ததும் “அக்னிப் பிரவேசம்” செய்து
தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டுதான் அடுத்த கணவனுடன் வாழ்ந்தாள்.

இன்றைக்கும் கணவனைப் பிரிந்த மனைவியரும் சரி, இல்வாழ்க்கை நன்கு அமைய வேண்டுபவரும் சரி. திரெளபதி அம்மன் கோவிலில் “தீ மிதி” என்னும் பூக்குழியில் இறங்கித் தங்களைப் புனிதப் படுத்திக் கொள்வதைப் பார்க்க முடியும்.
ஒருமுறை பஞ்ச பாண்டவரின் வனவாசத்தின் போது கிருஷ்ணர் அவர்களைச் சந்திக்க வந்தார். அன்று திரெளபதி பீமனுடன் சேர்ந்து வாழத் துவங்கும் நாளாக அமைந்தது. பீமனுக்கு ஏற்கெனவே சந்தேகம். இந்தப் பெண்மணி எப்படி எல்லாரையும் கணவனாக ஏற்றுக் கொண்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள். என்று. அதுவும் இப்போது கிருஷ்ணர் வேறு வந்திருக்கிறார்.

திரெளபதிக்கு அண்ணன் முறை. அவர் முன்னால். பீமன் முகம் சுருங்கிக் கிடந்தது. கிருஷ்ணர் ஒருவாறு ஊகித்துக் கொண்டார். திரெளபதியைக் கண்களால் பார்த்துச் சிரித்தார். திரெளபதியும் கிருஷ்ணரைப் பார்த்துச் சிரித்தாள்.

பீமனுக்குக் கோபம் வந்தது. என்றாலும் தனிமைக்காகப் பொறுமையுடன் இருந்து, தனிமையில் கிருஷ்ணரைச் சந்தித்து,. ‘கிருஷ்ணா, உனக்கே இது நியாயமா? இவ்வளவு நாள் எனக்கு அண்ணியாக இருந்தவள், எனக்குத் தாய் ஸ்தானத்தில் இருந்தவள் இன்று முதல் ஒரு வருஷத்திற்கு மனைவி, என்றால் என்னால் எப்படி ஏற்க முடியும்? நீயானால் சிரிக்கிறாய்! திரெளபதியும் சிரிக்கிறாளே!’ என்று கேட்டான்.

கிருஷ்ணர் சொன்னார்: ‘பீமா, நடப்பவை எல்லாம் உன்னைக் கேட்டு நடக்கவில்லை. ஏற்கெனவே இது இவ்வாறு நடக்கும் என்று சொல்லி இருப்பது தான் நடக்கிறது. இதில் நீ வருந்த ஒரு காரணமும் இல்லை. இருந்தாலும் உன் ஆறுதலுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், கேள்!

இன்றிரவு திரெளபதி நள்ளிரவில் தனியாக வெளியில் செல்வாள் அல்லவா?” என்று கேட்டார். ‘ஆம், பார்த்திருக்கிறேன். ஒரு வருஷம் முடிந்ததும் ஒவ்வொரு நள்ளிரவிலும் வெளியே சென்று விட்டுப் பின் உதயத்தில் திரும்பி வருவாள்.’ என பீமன் சொல்ல, ‘அப்போது திரெளபதி எப்படி இருப்பாள்?’ என்று கிருஷ்ணர் கேட்க, பீமனோ, ‘புடம் போடப் பட்ட புதுப் பொன்னைப் போல் ஜொலிப்பாள். அவள் முகத்தின் தேஜஸ் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.’ என்று சொல்கிறான்.

‘பீமா, இன்றிரவு அம்மாதிரித் திரெளபதி வெளியே போகும்போது நீயும் உடன் போய்ப் பார்.’ என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

அன்றிரவில் நள்ளிரவில் திரெளபதி வெளியே போக பீமனும், கிருஷ்ணனும் அவளுக்குத் தெரியாமல் தொடர்ந்து போகிறார்கள். அவர்கள் இருவரும் மறைந்து இருந்து பார்க்கும் வேளையில் தீ மூட்டிய திரெளபதி, தானும் அந்தத் தீயில் விழுகிறாள். மனம் பதைத்த பீமன் அவளைக் காப்பாற்ற ஓட முயற்சிக்கத் தடுக்கிறார், பரந்தாமன்.

‘அங்கே பார்!’ என்கிறார். என்ன ஆச்சரியம்! தீக்குள் திரெளபதியா தெரிந்தாள்? சாட்சாத் அந்த அகிலாண்டேஸ்வரி, சர்வ உலகத்தையும் காத்து அருளும் மஹா சக்தி, அன்னை தன் சுய உருவில் காட்சி அளிக்கிறாள். அவளைத் தீயும் சுடுமோ? அவளே தீ, அவளே, நீர், அவளே வாயு, அவளே ஆகாயம், அவளே நிலம். சகலமும் அவளே அல்லவா? திகைத்துப் போன பீமனை அழைத்து வந்து புரியவைக்கிறார் அந்த வாசுதேவன்.

‘பீமா, நீங்கள் ஐவரும் பஞ்ச பூதங்கள் என்றால் உங்களை ஆளும் மஹாசக்தி திரெளபதி ஆவாள். அவளுக்குள் நீங்கள் அடக்கமே அன்றி அவள் உங்களுக்குள் அடக்கம் இல்லை. எப்படி இந்தப் பிரபஞ்சமானது பஞ்சபூதத்தையும் வெளிக்காட்டி ஆளுமை செய்கிறதோ,

அதை ஆளுமை செய்யும் சக்தி இவளே! நீங்கள் ஐவரும் ஐம்புலன்கள் என்றால் உங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா இந்தத் திரெளபதி ஆவாள். இந்த ஜீவாத்மா எப்படிப் பரமாத்மாவிடம் ஐக்கியம் ஆகிறதோ அப்படி நீங்கள் அனைவரும் அவளுள் ஒடுங்குவீர்கள்.

உனக்கு இந்த உண்மை புரியவேண்டும் என்பதற்காக இந்தக் காட்சியைக் காட்டினேன். இந்த உண்மை உனக்குள் உறைந்து போகட்டும். இவளை விடக் கன்னியோ, அல்லது பத்தினியோ இவ்வுலகில் இல்லை. அனைத்தும் இவளே! இந்த உண்மைதான் உங்கள் ஐவரையும் திரெளபதி மணம் புரிந்ததாகக் காட்டப் படும் காட்சி. இதன் உள்ளே உள்ள இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் என்னையே உணர்ந்தவர்கள் ஆவார்கள். நீ கவலை இல்லாமல் உன் கடமையைச் செய்.’ என்கிறார்

மனிதர்களின் வாழ்வானது விதி எனும் புரியாத புதிரினால் ஆட்டுவிக்கப்படுகின்றது. இதனால் மனிதர்களின் வாழ்வில் எப்போது என்ன நடக்கும் என்றே எவராலும் துல்லியமாக கூற முடியாது.

ஆனாலும் சில மனிதர்களின் நல்லநேரம் எப்படிப்பட்ட விபத்துக்களிலும் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.... அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி மனிதரையே தற்போது காணப்போகிறீர்கள்....

முதலில் கார் வந்து மோதியது அதன் பின்பு ட்ரக் மோதிய பின்பும் சைக்கிளில் வந்த மனிதர் எப்படி துள்ளி எழுந்து செல்கிறார் என்பதைக் காணொளியில் நீங்களே காணப்போகிறீர்கள்.... ஒருவேளை ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற மனிதராக இருப்பாரோ என்னவோ?...

பெண்களின் கைகளது அமைப்பை வைத்து அவர்களது குணாதிசயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

மிருதுவான கைகள்:

கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். லாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

வறட்சியான கைகள்:

கைகள் வறட்சியாகவும், நரம்புகள் வெளியே தெரியும்படியும் அமைந்திருந்தால், அவளது குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகமிருக்கும். கணவனும், பிள்ளைகளுமே கூட விரோதியாவார்கள்.

உள்ளங்கை பள்ளம்:

உள்ளங்கைகள் சிறிது பள்ளமாக இருக்கும் பெண்கள் உத்தமிகள். உண்மையைப் பேசும் குணமுடையவர்கள். ஒழுக்கமானவர்கள். உள்ளங்கைகள் அதிக பள்ளமாகவும், முக்கியமான ரேகைகள் மட்டுமே நன்றாகத் தெளிவாகப் பிரகாசமாக இருந்தால் எந்தக்காலத்திலும் சரீர ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

கைகளின் நீளம்:

பெண்களது கைகள் முழங்கால் அளவுக்கு நீண்டு தொங்கும்படி அமைந்திருந்தால், அவர்கள் சகல சவுபாக்கியங்களுடன் இருப்பார்கள். வாழ்க்கையின் சங்கடங்கள் எதையும் சிரித்த முகத்துடன் சகித்துக் கொள்வார்கள். கணவனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பார்கள்.

கை விரல்கள்:

பெண்களின் கை விரல்கள் மென்மையாகவும், ஒழுங்காகவும், அழகாகவும் இருந்தால் சகல சவுபாக்கியங்களும் அமைந்திருக்கும். இத்தகைய பெண்களுக்கு புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகமிருக்கும். கணவனை மதிப்பவர்கள். எல்லோரும் பாராட்டும் வகையில் நடந்துகொள்வார்கள். இனிமையாகப் பேசி, பழகக்கூடியவர்கள். நீண்ட கை விரல்களை உடைய பெண்கள் கலையார்வமுள்ளவர்கள். இசை ஞானம் உள்ளவர்களாகவோ, இசைக் கருவிகளை வாசிப்பதில் பெரிதும் வல்லவர்களாகவோ இருப்பார்கள்.

சிலர் நாட்டியத்திலும், சிலர் நடிப்பிலும் சிறந்து விளங்குவார்கள். கை விரல்கள் பருமனாகவும், முரடாகவும் அமையப் பெற்ற பெண்கள், உழைத்து சம்பாதித்து வாழ்பவர்களாக இருப்பார்கள். பொறாமைக் குணமுடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்குப் புத்திர பாக்கியம் அமைவது அரிது. கை விரல்கள் நெருக்கமாக சேர்ந்திருந்தால், கஞ்சத்தனம் மிக்கவர்களாகவும், பணம் சேர்ப்பதிலேயே எப்போதும் குறியாகவும் இருப்பார்கள்.

நகங்கள்:

கைவிரல் நகங்கள் சொத்தையாகவும், கறுப்பாகவும் இருந்தால் ஆயுட்காலம் முழுவதும் கஷ்டமும், வறுமையும், பலரின் பழிப்பும் உண்டாகும். விரல் நகங்கள் சிவந்து, பளபளப்பாக, அழகாகக் காணப்பட்டால் அப்பெண்கள் ஆரோக்கியமானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். பெண்களது கைகள் சமமாக இருந்தால், அவர்களுக்கு எல்லா சவுபாக்கியங்களும் கிட்டும். குடும்பத்தை நன்றாக நிர்வாகிப்பார்கள். பெரியவர்களிடம் மரியாதை மிக்கவர்கள். இவ்வாறு பெண்களின் கை அமைப்பினை வைத்தே அவர்களின் குணாதிசியங்களை தெரிந்து கொள்ளலாம்.

மறுபிறப்பு பற்றி உலகில் பலரும் பல்வேறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். சிலர் நம்புவார்கள், சிலரோ நம்பமாட்டார்கள். இவற்றுக்கு முற்றிப்புள்ளி வைக்க வேண்டுமானால் கருடபுராணத்தைப் பற்றி அனைவரும் தெரியவேண்டியது அவசியம்.

இந்த கருடபுராணத்தில் உயிர்களின் மறுபிறவி பற்றி அனைத்து விடயங்களும் கூறப்பட்டுள்ளது. முதலில் “கருட புராணம்” என்றால் என்ன என்பதை நோக்குவோம்.

பரம்பொருளான விஷ்ணு பகவான் தனது வாகனமான கருடாழ்வார் மீது அமர்ந்து உலகை சுற்றிப்பார்த்தார்.

அப்பொழுது கருடன் விஷ்ணுவை நோக்கி “சுவாமி மனிதர்களின் இறப்பின் பின் என்ன நடக்கும்? இவர்களது உயிர் எங்கு செல்லும், இறப்பின் பின்னர் நடப்பது என்ன?” என்ற கேள்விகளை கேட்டது.

இதற்கு விஷ்ணுபகவான் வழங்கிய பதில்களே கருட புராணம் ஆகும். இந்த கருட புராணத்தில் இறப்பின் பின்னர் உயிர்கள் எங்கு செல்கின்றது, என்ன செய்கின்றது, சுவர்க்கம், நரகம், போன்ற அனைத்து விடயங்களும் மற்றும் மறுபிறவி பற்றிய விடயங்ளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அடிப்படையில் மாறாதது விஞ்ஞானம், ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுதான் மாறுபட்ட வெளிப்பாட்டின் தோற்றம். இதை அனைவரும் உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்தால் மறுபிறவி உண்டு என்பதையும், உடல் அழியக் கூடிய ஒன்று, ஆன்மா அழிவற்ற ஒன்று என்பதை மனிதன் உணர்ந்து விடுவான். இதை உணர்ந்தால் மரண பயத்திலிருந்தும் விடுபட முடியும்.

அழியாத ஆன்மா அழியக் கூடிய உடலில் ஏன் வாசம் செய்கின்றது?

உயிருக்கு அழிவில்லை என்றால் மரணம் என்ற ஒன்று ஏன் ஏற்பட வேண்டும்?

இதற்கு பரமாத்மா மகாபாரதத்தில் அர்ஜூனருக்கு மிகத் தெளிவாக விபரித்துள்ளார். அதாவது “நீர் H2O” இல் ஹைட்ரஜன் வாயு ஒரு பங்கும், ஒட்சிசன் இரண்டு பங்கும் உண்டு. இரண்டும் வேறு வேறாக இருந்துதான் ஒன்று சேர்ந்தது. ஒன்று இன்றி ஒன்று இல்லை. அதே போல்தான் உலகில் உயிர்கள் தோற்றம் பெற்றன.

மனிதன் எவ்வாறு குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்திற்குச் சென்று, மீண்டும் இளமைப் பருவத்திலிருந்து முதுமைப்பருவத்தை அடைகின்றானோ, அதே போல் ஆன்மாவும் ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு மாறுகின்றது.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா வேறு உலகத்திற்குச் செல்கின்றது. அவ்வாறு செல்ல முடியாத ஆன்மாக்களே சாந்தியடைய முடியாமலும், இறைவனை அடைய முடியாமலும் சபிக்கப்பட்டதைப் போன்று ஆவியாகின்றன.

இந்த ஆன்மாக்கள் இறைவனை அடைவதற்கு எத்தனை துன்பங்களை எதிர்நோக்குகின்றன, மனிதனின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே அவனது மறு பிறப்பு அமைகின்றது. இவை பற்றிய கருட புராணம் விரிவாக கூறுகின்றது.

உடலை விட்டுப்பிரிந்த ஆன்மா அடுத்த பிறப்பில் எந்த பிறவி எடுக்கின்றான், எங்கு பிறக்கின்றான் என்பது இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால் மறுபிறப்பை நிர்ணயிப்பவன் எமதர்மன். ஆகவே மறு பிறப்பு என்பது உண்மையான ஒன்று. கருட புராணத்தை படித்தோர் இதை அறிவர்.

வீட்டில் உள்ள இயற்கை பொருள்களை வைத்து லிப்ஸ்டிக் எனபடும் கெமிக்கல் மூலம் ஏற்படும் உதட்டின் கருமையை போக்க முடியும் என பார்க்கலாம்.

சிறிது தேனை எடுத்து உதட்டில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து பின்பு 15 நிமிடம் கழித்து குளிர்ச்சியான நீரில் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நாளடைவில் உதட்டின் கருமை மறைந்து உதடுகள் வசீகரமாக தென்படும்.

வெள்ளரிக்காய் துண்டுகளை உதட்டின் மேல் சுமார் 20 நிமிடம் வரை ஊற வைத்து வந்தால், அது உதடுக்கு குளிர்ச்சி அளிப்பதோடு கருமையை படிப்படியாக குறைய செய்யும்.

கற்றாழையில் உள்ள ஜெல்லை உதட்டில் போட்டு சிறிது நேரம் மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து குளிர்ச்சியான நீரில் முகம் கழுவ அவை உதடுகள் மென்மையாகவும், சிவப்பு நிறத்துடன் காட்சியளிக்கும்.

மேலும், தயிரில் எண்ணெய் பசை அதிகமாக இருப்பதால் அவற்றை உதட்டில் தடவி வர உதடுகள் மென்மையாகவும், உதட்டில் ஏற்படும் கருமையையும் நீக்கும்.

ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 5-வது இந்திய வீராங்கனை, வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைகளும் சிந்து வசமானது.

இதுதவிர இளம் வயதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையையும் 21 வயதான சிந்து தட்டிச் சென்றுள்ளார். சிந்து வெள்ளி வென்றதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா 2-வது பதக்கத்தை பெற்றுள்ளது.
பதக்கம் பெற்ற சிந்துவுக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் மட்டுமின்றி பரிசு மழையும் கொட்டி வருகிறது. தற்போது இணையத்தில் விஜயகாந்த் மகனுடன் சிந்து பேசும் Dubsmash காட்சியும் கலக்கி வருகிறது....

பிறந்த நட்சத்திரத்தின்அடிப்படையில் உங்களது பொதுகுணம்:-

அசுவினி:

செல்வந்தர் புத்திசாலி விவாதம் செய்பவர் ஆடம்பர பிரியர் பக்திமான் கல்விமான் பிறருக்கு அறிவுரை சொல்பவர்.

பரணி:

நன்றிமிக்கவர் திறமைசாலி தர்மவான் எதிரிகளை வெல்பவர் அதிர்ஷ்டசாலி சாதிப்பதில் வல்லவர் வசதியாக வாழ்பவர்.

கார்த்திகை:

பக்திமான் மென்மையானவர் செல்வந்தர் கல்வி சுமார் வாழ்க்கைத்தகுதிஅதிகம் பழகுவதில் பண்பாளர்.

ரோகிணி:

கம்பீரவான் உல்லாசப்பிரியர் கலாரசிகர் ஊர் சுற்றுபவர் செல்வாக்கு மிக்கவர் வசீகரமானவர்.

மிருகசீரிடம்:

தைரியசாலி முன்கோபி தர்மவான் புத்திசாலி திறமை மிக்கவர் செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.

திருவாதிரை:

எளிமை சாமர்த்தியசாலி திட்டமிட்டுப்பணி செய்பவர் விவாதத்தில் வல்லவர் சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.

புனர்பூசம்:

கல்விமான் சாதுர்யப் பேச்சு ஊர்சுற்றுவதில் ஆர்வம் நன்றிமிக்கவர் ஆடம்பரத்தில் நாட்டம்.

பூசம்:

பிறரை மதிப்பவர் பக்தியில் நாட்டம் வைராக்கியம் மிக்கவர் நண்பர்களை நேசிப்பவர் புகழ்மிக்கவர் மென்மையானவர்.

ஆயில்யம்:

செல்வந்தர் தர்மவான் செலவாளி ஆடம்பரப்பிரியர் சத்தியவான் நேர்மை மிக்கவர்.

மகம்:

ஆராய்ச்சி மனப்பான்மை கல்வியில் ஆர்வம் தர்மவான் பழக இனிமையானவர் நேர்மையாக நடக்க விரும்புபவர்.

பூரம்:

ஒழுக்கமானவர் புத்திசாலி விவசாயம் வியாபாரத்தில் ஆர்வம் உண்மையானவர் செல்வாக்கு பேச்சுத்திறன் மிக்கவர்.

உத்திரம்:

நாணயமானவர் பக்திமான் நட்புடன் பழகுபவர் நன்றி மறவாதவர் சுகபோகி உறவினர்களை நேசிப்பவர்.

அஸ்தம்:

ஆடை ஆபரண பிரியர் கல்வியில் ஆர்வம் கலாரசிகர் நகைச்சுவையாகப் பேசுபவர் தாய்மீது பாசம் கொண்டவர் பழக இனியவர்.

சித்திரை:

ஊர் சுற்றுவதில் ஆர்வம் கல்விமான் தைரியசாலி எதிரிமீதும் இரக்கம் சாதிப்பதில் வல்லவர் பரந்த உள்ளம் கொண்டவர்.

சுவாதி:

புத்திகூர்மையானவர் யோசித்து செயல்படுபவர் சுகபோகி பழக இனியவர் நம்பகமானவர் யோகம் மிக்கவர்.

விசாகம்:

வியாபார ஆர்வம் சாமர்த்தியசாலி கலா ரசிகர் தர்மவான் சுறுசுறுப்பானவர் தற்பெருமை கொண்டவர்.

அனுஷம்:

நேர்மையானவர் அந்தஸ்து மிக்கவர் அமைதியானவர் ஊர் சுற்றுவதில் ஆர்வம் அரசால் பாராட்டு பெறுபவர்.

கேட்டை:

துணிச்சலானவர் குறும்பு செய்வதில் வல்லவர் முன்கோபி நட்ப்பால் சாபம் பெற்றவர் சாமர்த்தியசாலி உடல் நல அக்கறை இருத்தல் நன்று.

மூலம்:

சுறுசுறுப்பானவர் கல்வியாளர் உடல்பலம்மிக்கவர் நீதிமான் புகழ்விரும்பி அடக்கமிக்கவர்.

பூராடம்:

சுகபோகி செல்வாக்குமிக்கவர் பிடிவாதக்காரர் வாக்குவாதத்தில்வல்லவர் கடமையில் ஆர்வம் கொண்டவர்.

உத்திராடம்:

தைரியசாலி கலையில் ஆர்வம் பொறுமைசாலி நினைத்ததை சாதிப்பவர் சாதுர்யமாகப் பேசுபவர்.

திருவோணம்:

பக்திமான் சமூகசேவகர் சொத்துசுகம் கொண்டவர் பிறரை மதிப்பவர் உதவுவதில் வல்லவர்.

அவிட்டம்:

கம்பீரமானவர் செல்வாக்கு மிக்கவர் தைரியசாலி முன்கோபி மனைவியை நேசிப்பவர் கடமையில் ஆர்வம் கொண்டவர்.

சதயம்:

வசீகரமானவர் செல்வந்தர் நட்புக்காக செயல்படுவார் பொறுமைசாலி முன்யோசனை கொண்டவர் திறமையாக செயல்படுபவர் ஒழுக்கமானவர்.

பூரட்டாதி:

மன திடமானவர் பலசாலி சுகபோகி பழக இனியவர் தொழிலில் ஆர்வம் மிக்கவர் குடும்பத்தை நேசிப்பவர்.

உத்திரட்டாதி:

கல்வியாளர் சாதுர்யமாகப் பேசுபவர் ஆபரணபிரியர் பக்திமான் கடமையில் ஆர்வம் மிக்கவர்.

ரேவதி:

தைரியசாலி நேர்மையானவர் எதிரியை வெல்பவர் சுகபோகத்தில் நாட்டம் தற்புகழ்ச்சி விரும்புபவர் பழக இனியவர்.

கிராமப்புறங்களில் பெண்கள் ஒருவருக்கொருவர், தலையில் பேன், ஈறுகளைத் தேடிப்பிடித்து நசுக்கிக்கொண்டு மனம்விட்டுப் பேசிக்கொண் டிருப்பார்கள். இந்தப் பழக்கம் ஆயுளை விருத்தி செய்ய உதவும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் அமெரிக்க ஆய்வாளர்கள்.

பபூன் என்கிற வாலில்லாக் குரங்குகளின் செயல் பாடுகளை 17 ஆண்டுகள் ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

பபூன் கூட்டத்தில் பிற பெண் குரங்களுக்குப் பேன் பார்க்கும் வழக்கமுள்ள பெண் குரங்குகளுக்குப் பிறக்கிற குட்டிகள், நீண்ட ஆயுளுடன் வளர்ந்து முதிர்ச்சியடைய அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

உறவின் அளவுகோல்

பபூன் கூட்டத்தில் பெண் குரங்குகள் ஒன்றுக்கொன்று பேன் பார்க்கிற கால அளவு, பேன் பார்க்கிற தடவைகள், ஒரு பெண் குரங்கு இன்னொரு பெண் குரங்கைத் தனக்குப் பேன் பார்க்கும்படி அழைக்கிற தடவைகள், ஒரு பெண் குரங்கு தானாகப் போய் இன்னொரு குரங்குக்குப் பேன் பார்க்கிற முறைகள் போன்றவை ஒரு கூட்டத்தின் சமூக உறவாடலுக்கு அளவுகோல்களாகின்றன.

இந்தக் காரணிகள் ஒரு பெண் குரங்கு மற்ற பெண் குரங்குகளுடன் கொண்டுள்ள சுமுகமான நட்புக்கும் அளவுகோல்களாகும். பெண் குரங்குகள் மற்ற பெண் குரங்குகளின் குட்டிகளையும் பாதுகாத்துப் பராமரிக்கும் பண்புள்ளவை. எனவே, பெண்களுக்கிடையிலான சுமுக உணர்வு கூட்டத்தின் ஒட்டுமொத்தமான நன்மைக்கும், சமூகம் நீடித்திருப்பதற்கும் உதவியாயிருக்கிறது. மிக மூத்த பெண் குரங்கும் மிக இளம் தாயான குரங்கும், ஒன்றின் குட்டிகளை மற்றது பராமரித்துப் பாதுகாப்பதும் பாலூட்டுவதும் சகஜமாகக் காணப்பட்டது.

பிற பெண் குரங்குகளுடன் ஒட்டிப் பழகுகிற பெண் குரங்குக்குப் பிறக்கும் குட்டிகளின் சராசரி ஆயுள், அவ்வாறு பழகாமல் ஒதுங்கிப் போகிற பெண் குரங்குக்குப் பிறக்கிற குட்டிகளின் சராசரி ஆயுளை விட ஒன்றரை மடங்கு அதிகமாயிருக்கிறது.

இவ்வகைக் குரங்குகளில் தாய்கள், மகள்கள், சகோதர சகோதரிகள், மாமன் மச்சான்கள், சித்தப்பா, பெரியப்பாக்கள், அத்தைமார்கள் எனப் பலவிதமான உறவினர்கள் உள்ளன(ர்). அவற்றில் தாய்க்கும் வயதுக்கு வந்த மகள்களுக்குமிடையிலான உறவு மிக வலுவானதாயும், அடுத்தபடியாகச் சகோதரிகளுக்கிடையிலான உறவு வலுவானதாயும் அமைகிறது. தாய்க் குரங்கு உயிருடனிருக்கும் வரை அதுதான் வலுவான கூட்டாளியாகவும் உறுதுணையாகவும் மதிக்கப்படும். உறவினர்களுடனும் தாயுடனும் வலுவான பாசப்பிணைப்பைக் கொண்ட பெண் குரங்குகளின் குட்டிகள் அதிக விகிதத்தில் தப்பிப் பிழைத்துப் பெரியவர்களாகும் வாய்ப்பைப் பெறுகின்றன.

சிநேகிதிகள்

அமெரிக்க ஆய்வாளர்கள் அண்மையில் கென்யா நாட்டின் அம்போசெலி ஆற்றின் கரைக்காடுகளில் வசிக்கும் பபூன்களை ஆராய்ந்த போது ஒரு பெண் குரங்கு, இன்னொரு பெண் குரங்குடன் விசேஷமான நட்பை உருவாக்கிக் கொள்வதையும், ஒரே கூட்டத்தில் இத்தகைய பெண் சிநேகிதிகள் ஜோடி ஜோடியாகச் சுற்றி வருவதையும் கண்டனர். அவை எப்போதும் ஒன்றாக நடமாடுவதும் விளையாடுவதும் இரை தேடுவதும், ஒருவருக்கொருவர் பேன் பார்ப்பதுமாகப் பொழுதைக் கழித்தன. இந்த நட்புறவு நீண்ட காலத்துக்குக் குறைவின்றி நீடிக்கிறது.

இவ்வாறான பரஸ்பரப் பேன் பார்த்தலும் விளையாடுதலும் ஓர் உடல்நலப் பராமரிப்பு உத்தியே என பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வர்கள் கூறுகின்றனர். அத்துடன் வாலில்லாக் குரங்குச் சிற்றினத்தில் (இதில் மனிதனும் அடக்கம்) இதயம் மற்றும் நுரையீரல் நோய்கள், மன இறுக்கத்தின் காரணமாக உண்டாகின்றன. விளையாடுவதும் பேன் பார்ப்பதும் மன இறுக்கத்தைத் தணிக்கின்றன. அவை உடலில் ‘கார்ட்டிசால்’ என்ற உணர்ச்சி ஹார்மோனின் சுரப்பைக் குறைக்கின்றன. இதயக் கோளாறுகள் வந்து அற்பாயுளில் மரணம் ஏற்படாமல் தடுப்பதால் இனவிருத்தி ஏற்பட்டுக் குரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகிறது.

பபூன்கள் பரிணாமப் படியில் மனிதர்களுக்கு நெருக்கமானவை. எனவே அந்த ஆய்வு முடிவுகள் மனிதர்களுக்கும் பெருமளவு பொருந்தக்கூடியவையே. பபூனின் டி.என்.ஏ. 92% அளவுக்கு மனித டி.என்.ஏ.வை ஒத்திருக்கிறது. 18 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பொதுவான மூதாதை இனத்திலிருந்து மனித இனமும் பபூன் இனமும் பிரிந்து வந்திருக்கின்றன. அதன் காரணமாகவே இந்த இரு இனங்களிலும் பல பொதுவான சமூக நடத்தை அம்சங்கள் தென்படுகின்றன. நம் ‘நெருங்கிய உறவினர்கள்’ காட்டும் நல்வழி நமக்கும் பயன்படும்தானே!...

ஹனுமானின் கண் அசையும் அதிர்ச்சி வீடியோ!!!!!! மெய்சிலிர்க்கும் அதிர்ச்சி வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க……..

ஹனுமனை வீடியோ எடுக்கும்போது கேமரா நகரும்போது, அவன் கண்கள் அதே திசையில் செல்வதை பார்க்க முடிகிறது. இந்த அற்புதமான வீடியோவை பார்க்க மெய் சிலிர்க்க வைக்கிறது.

மூடநம்பிக்கைகள் பலவிதம் உண்டு; அதில் ஒன்று இவ்வகை எண் மூடநம்பிக்கை, தன்னம்பிக்கை இல்லாத இடத்தில் மூடநம்பிக்கை நிறைந்து இருக்கும். சிலர் தன்பெயரில் கூட ஓர் எழுத்தைக் கூட்டியோ அல்லது குறைத்தோ மாற்றியமைப்பதுண்டு.

கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று அவர்கள் நம்புவது உண்மையானால், இந்த 13ஆம் எண்ணைப் படைத்தவரும் கடவுள் தானே?.

இன்னும் சில பேருக்கு எட்டாம் எண்ணும் பிடிக்காது; ஏன் வாகனப் பதிவில் பெருவாரியாக இது பின்பற்ற படுகிறது. கூட்டினால் 9 வருகின்ற எண்ணை வாங்க தனிக்கட்டணம்.

எந்த எண்ணாக இருந்தாலும் சரியாக ஓட்டவில்லை என்றால் விபத்து தானே நடக்கும், உயிரிழப்பு வரும்.

விஞ்ஞான மனப்பான்மையை மக்கள் மத்தியில் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது (51A).

நாட்டு மக்களுக்கு உணவைவிட உண்மையில் முக்கியமாகத் தேவைப்படுவது பகுத்தறிவே. அது சரியாக இருந்தால்தான் மற்றவைகளும் சரியாக இருக்கும்.

இன்­றைய இளம் தலை­மு­றை­யினர் தங்­களின் இலட்­சி­யத்தை தொட்­ட­பின்தான் திரு­மணம் செய்து கொள்­ளலாம் என்ற எண்­ணத்­திற்கு வரு­கின்­றனர். நிறைய கன­வு­க­ளுடன் திரு­மண பந்­தத்­திற்குள் நுழை­கின்­றனர்.

அவர்­களின் வாழ்க்கை பற்­றுக்­கோட்­டிற்­காக வாரிசு ஒன்றை ஈன்­றெ­டுக்­கவும் விரும்­பு­கின்­றனர். அதற்­காக ஓராண்டு வரை காத்­தி­ருக்­கவும் செய்­கின்­றனர்.

ஓராண்­டிற்கு பின்­னரும் அவர்­க­ளுக்கு குழந்தைப் பாக்­கியம் கிட்­ட­வில்லை என்றால், தங்­க­ளு­டைய இலட்­சி­யத்­திற்­காக ஆரோக்­கி­ய­மான மழலைச் செல்­வத்தைப் பெற்­றெ­டுப்­ப­தற்­கான இள­மையை தொலைத்து விட்டோம் என்ற உண்­மையை அப்­போது தான் மெல்ல மெல்ல உணரத் தொடங்­கு­கின்­றனர்.

இவர்­களின் இந்த நிலைக்கு மாற்று இல்­லையா? என தேடும் போது தான், நவீன மருத்­துவம் அரவணைத்துக் கொள்­கி­றது.

அத்­துடன், இவர்­களின் விருப்­பத்­தையும் நிறை­வேற்றி வைக்­கி­றது. இப்­படி குழந்­தை­யில்லா தம்­ப­தி­களின் ஏக்­க­க் க­னவை நிறைவேற்­று­வதில் அனு­பவம் வாய்ந்த தமிழகத்தைச் சேர்ந்த பிர­பல டாக்டர் மகா­லஷ்மி சர­வணன்  மகப்­பே­றின்­மைக்­கான பிரச்­சி­னைகள் குறித்து விளக்கு கிறார்.

“நம் சமூ­கத்தில், முன்­னொரு காலத்தில், ஒரு குடும்­பத்தில் பத்துக் குழந்­தைகள் சர்வ சாதா­ர­ண­மாக விளை­யா­டிக்­கொண்­டி­ருந்­தன. ஆனால், இன்றோ ஒரு குழந்­தையைப் பெற்றுக் கொள்­வதே மிகச் சிர­ம­மாக இருக்­கி­றது.

இதற்குக் காரணம் தற்­போ­தைய உணவும், வாழ்க்கை முறை­யும் தான் என்­பதைப் பலரும் அறிந்­தி­ருப்­பீர்கள்.

“ஒரு பெண்ணின் வயிற்­றுக்குள் ஒரு உயிரைத் தோன்றச் செய்­வது ஒன்றும் அவ்­வ­ளவு இல­கு­வான விட­ய­மல்ல. அவ­ரது குறை­பாட்­டுக்கு யாரிடம், (அதா­வது கண­வ­னி­டமா, மனை­வி­யி­டமா) எங்கே பிரச்­சினை இருக்­கி­றது என்­பதைக் கண்­ட­றி­வது மட்­டு­மல்­லாமல், அவர்­க­ளுடன் நீண்ட நேரத்தை நாம் செல­விட வேண்டும். அப்­படி செல­விட்­டால் தான் அவர்­க­ளது குறை­களை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய முடியும்.

“குழந்­தை­யின்மை என்­பது ஆண் - பெண் இரு­பா­லா­ருக்கும் பொது­வா­னதே. ஆண் - பெண் இரு­வ­ருமே இதற்குக் கார­ண­மாக இருக்­கலாம்.

நாம் நாக­ரி­கத்தின் உச்­சியை எட்­டி­விட்டோம் என்று சொன்­னால்­ கூட, பெண் மருத்­து­வர்­க­ளிடம் ஆண்­களும் ஆண் மருத்­து­வர்­க­ளிடம் பெண்­களும் தத்­த­மது குறை­களைச் சொல்ல மிகுந்த தயக்கம் காட்­டு­கி­றார்கள்.

ஆனால், எமது மருத்­து­வ­ம­னையில் நானும் என் கண­வரும் மருத்­து­வர்­க­ளாக இருப்­பதால் இந்தச் சிக்கல் இல்லை.

“முதலில் இரு­ பா­லா­ருக்கும் மகப்­பேற்றுக் குறை­பா­டுகள் இருக்­கின்­ற­னவா என் கண்­ட­றிய முழு­மை­யான உடற்­ப­ரி­சோ­த­னை­களைச் செய்­கிறோம். அவர்­க­ளிடம் இருக்கும் குறை­பா­டுகள் அடிப்­ப­டையில், ஐயுஐ, ஐவிஎஃப் அல்­லது இக்ஸி போன்ற சிகிச்­சை­களை வழங்­கு­கிறோம்.

“சில வேளை­களில் இரு­வ­ருக்கும் தாம்­பத்­திய உறவில் தான் பிரச்­சினை இருக்கும்.

இதைக் கண்­ட­றிய முடிந்தால் ‘செக்­ஸோ­டஜிஸ்ட்’ மூல­மாக அவர்
க­ளுக்­கான ஆலோ­ச­னை­களை வழங்­கு­கிறோம்.

உடற்­ப­ருமன் போன்­ற­வற்றால் மகப்­பேற்றுத் தடை ஏற்­பட்டால், உணவுக் கட்­டுப்­பாட்­டாளர் மற்றும் உடற்­ப­யிற்­சி­யாளர் மூல­மாக அவர்­களை மகப்­பேற்­றுக்குத் தயார் செய்­கிறோம். இதனால் அவர்கள் இயற்­கையான முறை­யி­லேயே குழந்­தையைப் பெற்­றெ­டுக்க முடி­கி­றது.

“இப்­ப­டி­யாக, இங்கு வரு­ப­வர்­க­ளிடம் என்ன குறை இருக்­கி­றது என்­பதைக் கண்­ட­றிந்து அதி­லேயே எம் கவ­னத்தைச் செலுத்தி சிகிச்­சை­களை வழங்­கு­வ­தால் தான், கடந்த பதி­னாறு ஆண்­டு­க­ளுக்குள் சுமார் 25, 000 தம்­ப­தி­யர்­க­ளுக்கு வெற்­றி­க­ர­மான சிகிச்சை செய்து குழந்­தைப்­பேற்றை கொடுக்க எம்மால் முடிந்­தி­ருக்­கி­றது.”

“நீர்க் ­கட்­டிகள் எனப்­படும் ‘பொலி­சிஸ்டிக் ஓவரி’ என்ற பிரச்­சி­னைக்குப் பல பெண்­களும் ஆளா­கி­றார்கள். இதற்கு லேப்ரோஸ்­கோப்பி மூலம் சிகிச்சை அளிப்­பது வழக்­க­மாக இருந்து வரு­கி­றது.

ஆனால், நவீன ஆய்­வு­க­ளின்­படி, லேப்ரோஸ்­கோப்பி மூலம் இந்தப் பிரச்­சி­னையை அணு­கினால், கருத்­த­ரிக்கும் வாய்ப்பு குறை­வ­துடன், பக்க விளை­வு­க­ளாக, கருக்­குழாய், கரு­முட்டைப் பை என்­பன பாதிப்படைகின்றமை உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது.

எனவே, இந்தப் பிரச்­சி­னைக்கு மருந்­துகள் மூலம் தீர்­வ­ளிப்­ப­துடன் குழ
ந்­தையும் பெற்றுக் கொள்ள முடியும்' என்றார்.

“மூன்று முறை ஐவிஎஃப் சிகிச்­சைகள் செய்தும் ‘இம்ப்­ளாண்­டேஷன் ஃபெய்­லியர்’ எனப்­படும், கருச்­சினை கருப்­பைக்குள் தங்­கி­நிற்­காத பிரச்­சி­னைக்கு, ERA (Endometrial Receptivity Array) என்ற பரி­சோ­த­னையைச் செய்­கிறோம்.

இதன்­போது, கருத்­த­ரிப்­புக்குச் செய்­வது போலவே நோயா­ளியின் கர்ப்­பப்­பையை மருந்­துகள் மூலம் தயார்­செய்வோம்.

கருச்­சி­னையை வைக்க வேண்­டிய நாளில் அதை வைக்­காமல், அதற்குத் தயா­ராக இருக்கும் கருப்பைச் சுவற்றின் திசுவின் ஒரு சிறு பகு­தியை எடுத்து அதன் செல்கள் மற்றும் மர­ப­ணுக்கள், கருச்
சி­னையைத் தாங்கிப் பிடிப்­பதில் என்ன பிரச்­சினை என்­பதைப் பரி­சோ­திப்போம்.

மேலும், கருச்­சி­னையை உள்­வாங்கும் கருப்பை வாசல்கள் சரி­வரத் திறந்­தி­ருக்­கின்­ற­னவா என்­ப­தையும் பரி­சோ­திப்போம். இதன்­மூலம், கருப்பை வாசல் திறந்­தி­ருக்கும் நேரத்தைத் துல்­லி­ய­மாக அறிய முடி­வதால், அடுத்த அமர்வில் கருச்­சி­னையைப் பொருத்­த­மான நேரத்தில் கருப்­பையில் செலுத்­துவோம்.

இதனால் கருச்­சினை தங்கி வளர்ந்து, குழந்­தை­யாக வெளி­வரும்” “ஐவி­எஃப்பின் வெற்­றி­வாய்ப்பைத் தீர்­மா­னிப்­பது மருத்­துவர் மட்­டுமோ அல்­லது தம்­ப­தி­யினர் மட்­டுமோ அல்ல.

அதற்கு முக்­கி­ய­மான நான்கு கார­ணிகள் உண்டு. ஆண் உயி­ர­ணுக்கள், பெண்ணின் கரு­முட்டை, இவை­யி­ரண்டும் இணைந்து உரு­வாகும் கருச்­சினை, இதைத் தக்­க­வைத்­துக்­கொள்ளும் கருப்­பையின் உட்­சுவர் என்­ப­வையே இந்த நான்கு கார­ணி­களும்.

இவை­ய­னைத்­தையும் மகப்­பேற்றை நோக்கி வழி­ந­டத்­து­வதே டாக்­டர்
க­ளா­கிய எமது பணி. எமது அறி­வு­ரையை முழு­மை­யா­கவும் முழு­வி­ருப்­பு­டனும் பின்­பற்றும் தம்­ப­தி­யி­ன­ருக்கு மட்­டுமே மகப்­பேற்­றுக்­கான வாய்ப்­புகள் அதி­க­ரிக்­கின்­றன.

இளம் தம்­ப­தி­யினர் குழந்­தைப்­பேற்றை தாம­தப்­ப­டுத்­து­வதால் பின்­னாளில் செயற்­கை­முறை கருத்­த­ரிப்பு, டெஸ்­டி­யூப்­பேபி போன்ற பல்­வேறு அதி­ந­வீன சிகிச்சை முறை­களை குழந்­தைப் ­பேற்­றிக்­காக மேற்­கொள்­ள­வேண்­டிய நிலை ஏற்படலாம்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா வைச் சேர்ந்த சிவானந்தா என்ற துறவி தனக்கு 120 வயதாகிறது எனத் தெரிவித்துள்ளார். யோகா, பிரம்மச்சரியம் ஆகியவைதான் தனது நீண்ட ஆயுளுக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்து துறவியான அவர் 1896 ஆகஸ்ட் 8-ம் தேதி பிறந்தவர் என அவரது பாஸ்போர்ட் தகவல் கள் தெரிவிக்கின்றன. இந்த பிறந்ததேதி, கோயில் பதிவேடு கள் மூலம் பாஸ்போர்ட் அலுவல கத்தால் சரிபார்க்கப்பட்டுள்ளன.

இதுவரை பூமியில் வாழ்ந்த வர்களில் அதிக காலம் வாழ்ந்தவராக ஜப்பானைச் சேர்ந்த ஜிரோமாந் கிமுரா கருதப்படுகிறார். கடந்த 2013 ஜூன் மாதம் உயிரிழந்த அவர் 116 ஆண்டுகள் 54 நாட்கள் உயிர்வாழ்ந்துள்ளார்.

சிவானந்தாவின் வயது 120 என உறுதி செய்யப்பட்டால், அவர்தான் இந்தியா மற்றும் உலகிலேயே மிக வயதானவர் என்ற பெருமையைப் பெறுவார். மேலும் மூன்று நூற்றாண்டுகளிலும் வாழ்ந்தவர் என்ற பெருமையும் கிடைக்கும்.

தனக்கு 120 வயதானதை சாதனை யாகப் பதிவு செய்ய சிவானந்தா கின்னஸ் சாதனைக்கு விண்ணப் பித்துள்ளார்.

“எனக்கு விளம்பரத்தில் பிரியம் இல்லை. எனவே இதுதொடர்பாக வெளியில் தெரிவிக்காமல் இருந் தேன். ஆனால் எனது அன்பர்கள் கேட்டுக்கொண்டதால் கின்னஸுக்கு விண்ணப்பித்துள்ளேன்” என சிவானந்தா தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஊடகங்கள் இவரைப் பற்றிய செய்தியை வெளியிட் டுள்ளன. 120 ஆண்டுகள் எனக் கூறி வரும் சிவானந்தா மிக நல்ல உடல் நலத்துடன் உள்ளார். தனியாகவே தனது பணிகளைச் செய்து கொள்கிறார். ரயிலிலும் தனியாகவே பயணிக்கிறார். ஐந்து அடி இரண்டு அங்குலம் உயரம் உடைய சிவானந்தா, தரையில் துணியை விரித்து, தலைக்கு மரக்கட்டை வைத்துப் படுக்கிறார். தினமும் யோகாசனம் செய்கிறார்.

“பால், பழங்களைத் தவிர்த்து விடுவேன். சிறு வயதில் நிறைய நாட்கள் பட்டினியாக தூங்கியிருக் கிறேன். யோகா, ஒழுக்கமான வாழ்வு, பிரம்மச்சரியம் இவைதான் என் நீண்ட ஆயுளுக்குக் காரணம். எளிமையான ஒழுக்க வாழ்வை வாழ்கிறேன்.

வேக வைத்த உணவு களை எடுத்துக்கொள்கிறேன். மசாலாப் பொருட்கள், எண்ணெய் வகைகளை சேர்த்துக் கொள்வ தில்லை. அரிசி, வேகவைத்த பருப்பு, ஒன்றிரண்டு பச்சை மிளகாய் இவைதான் என் உணவு” என சிவானந்தா தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ஆட்சிக்காலத்தில் மின்சாரம், கார்கள், தொலைபேசி இல்லாத காலகட்டத்தில் பிறந்த சிவானந்தா, தொழில்நுட்ப வசதி களால் பெரிதும் ஈர்க்கப்படவில்லை.

“முன்பு கொஞ்சம் பொருட்களை வைத்துக் கொண்டு மக்கள் மகிழ்ச்சி யாக இருந்தார்கள். தற்போது மகிழ்சியின்றியும், ஆரோக்கிய மின்றியும், நேர்மையற்றும் இருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக் கியமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என அவர் தெரிவித் துள்ளார்.

நீங்கள் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதற்கான பலன் கிடைப்பதில்லையா? வீட்டில் சந்தோஷமே இருப்பதில்லையா? அப்படியெனில், நீங்கள் உங்கள் வீட்டில் வைத்திருக்கக்கூடாத சிலவற்றை வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.

இங்கு வீட்டில் செல்வம் மற்றும் சந்தோஷம் நிலைத்திருக்க வைத்திருக்கக் கூடாதவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் வீட்டில் அவை இருந்தால், உடனே அவற்றை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள். சரி, இப்போது அவை என்னவென்று பார்ப்போம்.

துளசி செடி
துளசி ஓர் புனிதமான செடி. இது வீட்டில் அமைதியையும், செல்வத்தையும் ஈர்க்கும் செடி. ஆனால் அந்த துளசி செடி வீட்டின் தெற்கு மூலையில் இருந்தால், அதனால் மிகுந்த கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தெரியுமா? ஆகவே, வீட்டின் தெற்கு மூலையில் இருந்தால், உடனே அதை மாற்றுங்கள்.

காலணி அலமாரி
காலணி அலமாரியை வீட்டின் உள்ளே வைக்காதீர்கள். மாறாக, அதனை வீட்டின் வெளியே வையுங்கள். இல்லையெனில், அது வீட்டினுள் நல்ல சக்தியை நுழைய விடாமல் செய்யும்.

பாலை திறந்தே வைக்காதீர்கள்
வீட்டில் பாலை எப்போதும் திறந்தே வைத்திருக்காதீர்கள். பால் மட்டுமின்றி, பால் பொருட்களையும் திறந்து வைக்காமல், மூடி வைத்திருக்கவும்.

குப்பையை குவித்து வைக்காதீர்கள்
குப்பையை மற்றும் தேவையில்லாத பொருட்களை வீட்டில் ஒரு மூலையில் குவித்து வைத்திருக்காதீர்கள். அவ்வப்போது அதனை வெளியேற்றிவிடுங்கள்.

காய்ந்த பூக்கள்
வீட்டின் பூஜை அறையில் கடவுள்களுக்கு படைத்த பூக்களை தினந்தோறும் மாற்றுங்கள். காய்ந்த மலர்களை வீட்டில் வைத்திருந்தால், அதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் பரவும்.

முட்கள் நிறைந்த செடிகள்
வீட்டினுள் முட்கள் நிறைந்த செடிகளை அழகுக்காக என்று கூட வைக்கக்கூடாது. இல்லாவிட்டால், வறுமை அதிகரிப்பதோடு, வீட்டில் உள்ளோரின் உடல் நலமும் பாதிக்கப்படக்கூடும். ஆகவே அம்மாதிரியான செடிகளை உடனே அகற்றிவிடுங்கள்.

அரசமரம்
அரசமரத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதே சமயம் அந்த மரம் தான் தீய சக்திகளின் வீடும் கூட. வீட்டில் இந்த அரச மரத்தை வளர்த்து வந்தால், அதனால் வீட்டில் உள்ளோர் எப்போதும் அச்சத்துடனும், மிகுந்த டென்சனோடும் இருக்கக்கூடும்.

நன்கு உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென நெஞ்சின் மீது யாரோ அமர்ந்துக் கொண்டு அமுத்துவது போல ஓர் உணர்வு வரும். இதை தான் அமுக்குவான் பேய் என நம் ஆட்கள் கூறுகின்றனர்.

ஆனால், உண்மையில் இதன் பெயர் தூக்க பக்கவாதம். நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது உறக்கத்தில் பல நிலைகளை கடப்பது உண்டு. இந்த நிலை கடப்பதில் ஏற்படும் தொந்தரவு அல்லது அழுத்தம் / பிரச்சனைகளின் போது தான் தூக்க பக்கவாதம் ஏற்படுகிறது. இது பேய், ஏலியன் அது, இது என பல கட்டுக்கதைகள் இருக்கின்றன. ஆனால், உண்மையில் தூக்க பக்கவாதம் என்றால் என்ன என்பது பற்றி நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய உண்மைகளும் சிலவன இருக்கின்றன…

நாம் உறங்கும் போது பல நிலைகளை கடப்பது உண்டு. அதில் ஒன்று தான் ஆர்.ஈ.எம் (R.E.M) எனப்படும் ரேபிட் ஐ மூவ்மென்ட் (Rapid Eye Movement). இந்த நிலையில் தான் கனவுகள் தோன்றும். இந்த நிலைமாற்றதில் தொந்தரவு அல்லது பிரச்சனைகள் உண்டாகும் போது தூக்க பக்கவாதம் உண்டாகலாம்.

தூக்க பக்கவாதம் ஏற்படும் நபர்கள் அதை கெட்ட கனவாக உணர்வதும் உண்டு. கண்கள் திறந்த நிலையில், அசைய முடியாமல் இருப்பதால், சிலர் இதை பிரமை என்றும் எண்ணுகின்றனர். நமது ஊர்களில் இதனால் இதை சிலர் அமுக்குவான் பேய் எனவும் குறிப்பிடுவதுண்டு.

இந்த அசைய முடியாத நிலையில் இருந்து வெளிவர நீங்கள் காத்திருக்க தான் வேண்டும். ஒருசில நொடிகள் அல்லது ஒருசில நிமிடங்கள் வரை இந்த தூக்க பக்கவாதம் நீடிக்கலாம்.

தூக்க பக்கவாதம் என்பது ஓர் பெரிய உடல்நல குறைபாடு அல்ல. இது அனைவருக்கும் ஏற்படலாம். இது மிகவும் இயல்பான ஒன்று. சில சமயங்களில் நீங்கள் ஓயாது வேலை செய்து உறக்கமின்றி இருந்து, அயர்ந்து உறங்கும் போது உரக்க நிலைகளில் தொந்தரவு ஏற்பட்டு இந்த தூக்க பக்கவாதம் ஏற்படலாம்.

நீங்கள் போதியளவு தினமும் சரியாக உறங்காமல் இருந்தால் இந்த தூக்க பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

பெர்சியன் மருத்துவ நிபுணர்கள் 10-ம் நூற்றாண்டிலேயே இந்த தூக்க பக்கவாதத்தை பற்றி எழுதியுள்ளனர். ஆனால், அவர்கள் இதை தீய சக்தி, ஏலியன் செயல்பாடு, தூக்க வாதம் என பலவாறு குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தூக்க பக்கவாதம் என்பது உங்கள் நெஞ்சில் யாரோ அமர்ந்து அமுக்குவது போன்று இருக்கும். அதனால் தான் தூக்க பக்கவாதத்தை அமுக்குவான் பேய் என கூறுகிறார்கள்.

தூக்க பக்கவாதம் காரணமாக உங்களுக்கு அதிக அச்சம் ஏற்படலாமே தவிர, இதனால் யாரும் உயிரிழக்க வாய்ப்புகள் இல்லை.

தினமும் காலை “குட் மார்னிங்”, “இரவு குட் நைட்” இடையே இரண்டு முறை “ஐ லவ் யூ..” மட்டுமே கூறுவது, இரவில் ஒரு மணிநேரம் அலைபேசியில் பேசுவது, வார இறுதியில் வெளியே செல்வது மட்டுமல்ல காதல்.

உங்கள் காதலை “வேற லெவலுக்கு” கொண்டு செல்ல நீங்கள் “அதுக்கும் மேல” சில விஷயங்களை செய்ய வேண்டும்….

புதியதாக உணர வைக்க வேண்டும்

பெரும்பாலும் பார்க், பீச், திரையரங்கு, ஷாப்பிங் மால் என்று சென்றாலும் கூட, உங்களோடு இருக்கும் போது, உங்கள் துணை புதியதாக உணரும் வகையில் நீங்கள் ஏதேனும் செய்ய வேண்டும். நீங்கள் வெளியில் செல்லும் தருணங்கள் மனதை விட்டு அகலாத வண்ணம் இருக்க வேண்டும்.

பாதுகாப்பான மனநிலை

உங்களோடு இருக்கும் போது உங்கள் துணை பாதுகாப்பான மனநிலையை உணர வேண்டும். வெறும் காதலனாக மட்டுமில்லாமல் சிறந்த நண்பனாகவும் இருத்தல் வேண்டும். உங்களிடம் பயமின்றி அனைத்தையும் வெளிப்படையாக கூறும் வகையில் உறவினை அமைத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சுதல், மிஞ்சுதல், கெஞ்சுதல் என மூன்றும் கலந்த கலவையாய் காதல் இருத்தல் அவசியம்.

பயணங்கள்

உள்ளூராகவும் இருக்கலாம், வெளியூராகவும் இருக்கலாம். ஆனால், சரியான இடைவேளையில் எங்கேனும் இருவரும் பயணம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இது, உங்கள் இருவருக்கும் நிலையான, இன்பமான தருணங்களையும், மறையாக நினைவுகளையும் பரிசளிக்கும். இது காதலை வளர்க்க ஓர் கருவியாக பயன்படும்.

முதல் பார்வையில் வீழ்த்த வேண்டும்

பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, முதல் பார்வையிலேயே தங்களது துணையை ஈர்க்க வேண்டியது அவசியம். இல்லையேல் அவர்கள் பார்வை வேறு பக்கம் திரும்பிவிடும். இதற்கு, அழகான ஆடையோ, அலங்காரமோ தேவையில்லை. காதல் வயப்பட வைக்கும் ஒற்றை பார்வை போதுமானது (கவுண்டமணி அண்ணனின் அந்த ரொமாண்டிக் லுக், நினைவிருக்கிறதா…..)

அனைத்தையும் உளறிக்கொட்டிவிட வேண்டாம்

காதலில் இரகசியங்கள் மறைக்கக் கூடாதுதான். ஆனால், சில விஷயங்களை அப்பட்டமாக உளறிக் கொட்டிவிடவும் கூடாது. அப்படி சொல்லாமல் மறைத்த விஷயத்தை பாதுகாக்க வேண்டியதும் அவசியம். மறுநாளோ, சில நாட்களிலேயோ தெரிந்துவிட்டால், அதன் விளைவாக கண்மணி ஓரிரு வாரங்கள் பேசாமல் சண்டையிட்டுக் கொண்டே கூட இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒத்திகை பார்க்கக் வேண்டியது அவசியம்

நாடகத்தில் மட்டுமல்ல, உங்கள் காதலியிடம் சிலவற்றை கூறும் முன்பு ஒத்திகை பார்க்க வேண்டியது அவசியம். ஏனெனில், பெண்கள் கதையாக, வர்ணித்து அழகாக கூறும் காதல் விஷயங்களை, ஆண்கள் வெண்ணெய் திருடும் போது, பானை உடைப்படுவது போல சட்டென கூறிவிடுவார்கள். இதில், சுவாரஸ்யமே இருக்காது. எனவே, ஒவ்வவொரு நொடியும், ஒவ்வொரு நிமிடத்தையும் நீங்களாக செதுக்க வேண்டும். இப்படி எல்லாம் செய்தால் உங்கள் கண்மணிக்கு முன்னாள் நீங்கள் ஒரு ஹீரோ ரேஞ்சில் திகழ வாய்ப்புகள் இருக்கிறது.

நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும்

விட்டுக்கொடுத்து வாழ்வது காதல் மற்றும் இல்லற வாழ்க்கையில் மிகவும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயமாகும். ஆனால், அதற்காக உங்களது இயல்பான குணாதிசயங்களையும் இழந்துவிட கூடாது. பிறகு இதுவே உங்கள் காதலில் ஓர்நாள் விரிசல் ஏற்பட காரணமாகிவிடும். ஆதலால், நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டியது அவசியம்.

நேரத்தை வீணடிக்க வேண்டாம்

சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடக்க வேண்டியது அவசியம் எனிலும் கூட, சில தருணங்களில் சிலவற்றை இழந்துவிடவும் கூடாது. காதல் அருவியாக கொட்டிக்கொண்டிருக்கும் போது ஒரு சில முத்த பரிவர்த்தனை செய்வதில் தவறே இல்லை. தருணத்தை தவறவிட்ட பிறகு புலம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.