Latest Post

இந்தியாவுக்கு தெற்கே இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவு இன்று அரசியல் சுழலில் சிக்கி தவிக்கிறது.

மாலத்தீவு தனி நாடாக இருந்தாலும் இந்திய கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த பகுதி ஆகும். குறிப்பாக, தமிழ் மற்றும் மலையாள கலாச்சாரம் கொண்ட நாடாக மாலத்தீவு திகழ்கிறது. அங்கு மலையாளம் முக்கிய மொழியாகவும் இருக்கிறது.

மாலத்தீவு மொத்தம் 26 தீவு கூட்டத்தை கொண்டது. அதில், சுமார் 1192 குட்டி தீவுகள் இருக்கின்றன. இந்த தீவு கூட்டங்கள் மாலை போன்ற வடிவத்தில் அமைந்துள்ளன. எனவே, அது மாலை தீவு என அழைக்கப்பட்டு பின்னர் மாலத்தீவாக பெயர் மாறியது. இத்தனை தீவுகள் இருந்தாலும் 200 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள்.

மாலத்தீவின் மொத்த மக்கள் தொகை 4 லட்சத்து 27 ஆயிரத்து 756. இதன் தலைநகரமாக மாலி உள்ளது. இது, 5.8 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 412 பேர் வசிக்கிறார்கள். உலகிலேயே மக்கள் அடர்த்தியாக வாழும் நகரங்களில் ஒன்றாகவும் மாலி நகரம் உள்ளது.

மாலி தீவில் கி.மு. 200-ம் ஆண்டிலேயே மக்கள் வசித்ததற்கான தடயங்கள் உள்ளன. கி.மு. 2000-ம் ஆண்டுக்கு முன்பில் இருந்தே இங்கு மக்கள் வசித்து இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் கேரளா, தமிழகம் பகுதியை சேர்ந்த மக்கள் பெருமளவில் இந்த தீவுக்கு சென்று குடியேறி இருக்கிறார்கள்.

பின்னர், இலங்கை, மலேசியா மற்றும் அரபு நாடுகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து குடியேறி இருக்கிறர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து அதன் மூலம் கலப்பின சந்ததியினரும் உருவாகி உள்ளனர்.

ஆரம்பத்தில் கிராவரு என்ற தமிழர்கள் அங்கு ஆட்சி செலுத்தி இருக்கிறார்கள். பின்னர் சோழர் காலத்தில் அவர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலமாக மாலத்தீவு இருந்துள்ளது. இதன் பிறகு சிங்களவர்கள் மாலத்தீவை கைப்பற்றி ஆட்சி செய்துள்ளனர். சிங்கள இளவரசன் கொயிமலா நீண்ட காலமாக ஆட்சி செய்துள்ளான். அப்போதெல்லாம் அங்கு புத்த மதம் தழைத்தோங்கி இருந்துள்ளது.

இடையில் 1153-ம் ஆண்டு அங்குள்ள மக்கள் அனைவரும் முஸ்லிம்களாக மாறி விட்டனர். அதை தொடர்ந்து சுல்தான் ஆட்சி முறை வந்தது. 1558-ல் போர்சுக்கீசியர்கள் மாலத்தீவை கைப்பற்றி கொண்டனர். 1654-ல் டச்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள்.

1887-ல் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் மாலத்தீவு வந்தது. 1965-ல் மாலத்தீவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் சுல்தான் ஆட்சி முறை வந்து 1968-ம் ஆண்டுவரை நீடித்தது.

பின்னர், மாலத்தீவு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. முதல் அதிபராக இப்ராகிம் நசீர் தேர்வு செய்யப்பட்டார். 1978-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப்துல் கயூம் அதிபராக தேர்வு செய்யப்பட்டு 30 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருந்தார்.

அதன் பிறகு முகமது நசீத், முகமது வாகித் உசேன், அப்துல்லா யாமீன் ஆகியோர் அதிபராக பதவி ஏற்றனர். தற்போது அப்துல்லா யாமீன் அதிபராக இருக்கிறார். இந்த நாட்டின் முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. மீனை பதப்படுத்தி பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி சம்பாதித்து வருகின்றனர்.

மேலும், உலகின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகவும் மாலத்தீவு திகழ்கிறது. சுற்றுலாவின் மூலம் ஏராளமான வருமானம் கிடைக்கிறது. மாலத்தீவின் அதிகாரப்பூர்வ மொழியாக திவெயி மொழி உள்ளது. இது சிங்கள மொழியை ஒட்டியே அமைந்துள்ளது.

1988-ல் இலங்கை தமிழ் போராளி குழு ஒன்று மாலத்தீவை கைப்பற்றி கொண்டது. அப்போது, இந்திய பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இந்திய ராணுவத்தை அனுப்பி சில மணி நேரங்களில் மாலத்தீவை மீட்டு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது


ராண்டி லூயிஸ் என்பவர் அமெரிக்காவை சேர்ந்த கிராபிக் டிசைனர் மற்றும் கிரியேட்டிவ் டைரக்டர் ஆவார். இவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.


இவர் போட்டோஷாப் மூலமாக அளவிலாத கற்பனை திறனையை உலகில் அள்ளித்தெளித்து வருகிறார். SurReal ArtWorks என்ற பெயரில் ராண்டி லூயிஸ் பல கிரியேட்டிவ் கிராபிக் டிசைன்கள் செய்து வருகிறார்.

இவரது பல கலைகள், அட இப்படி கூட யோசிக்கலாமோ என சிந்திக்க வைக்கிறது. இவர் தேர்வு செய்யும் பொருள்களும், அதன் வெளிப்பாடும் வேறு வகையில் இருக்கிறது.

உதாரணமாக இவர் டிசைன் செய்திருந்த வாட்டர்மெலன், ஜெல்லி ஃபிஷ் மற்றும் பட்டர்ஃப்ளை போன்றவை எல்லாம் கற்பனையின் உச்சம் என கூறலாம்.

பேருக்கு எற்றப்படியும், உருவ தோற்றத்திற்கு எற்றப்படியும் கிராபிக் டிசைனில் புகுந்து விளையாடும் வல்லுநர் தான் ராண்டி லூயிஸ். இனி! ராண்டி லூயிஸின் சிலிர்ப்பூட்டும் டிசைன்கள் சிலவன....

பிகினி!
நான் ஈயில் நடித்த ஈக்கு ஜோடி இருந்தால் எப்படி இருக்கும்? இதோ ஒருவேளை இப்படி இருக்கலாம். உடன ராஜ மௌலிக்கு கால் செய்து இந்த படத்தை காண்பிக்கலாம். இதற்கும் ஒரு ஸ்கிர்ப்ட் எழுதி நான் ஈ 2 எடுத்து கோடிகளாக மாற்ற அவருக்கு ஒரு கதை கிடைக்கும்.


எதுக்கு?
அனைத்திலும் அழகை, மெருகேற்றி காண்பித்த ராண்டி லூயிஸ் இதில் தனது விஷமத்தனத்தை காட்டியுள்ளார். தவளையை பிடிக்கும் என கூறுவோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏனெனில், பெரும்பலம் யாருக்கும் தவளை என்றால் பிடிக்காது. அதன் மேல் சருமம் மட்டும் காண நன்றாக இருந்தாலும், அதன் உடலை தொட்டு பார்க்க முடியாது.

ஆனால், பெண்களின் இதழ்களை யாராலும் தொட்டுப் பாராமல் இருக்க முடியாது. இப்படி எல்லாமா கற்பனை திறனை காண்பிக்க வேண்டும் ராண்டி?


சிக்கன் பர்கர்
பர்கர் பிரியர்கள் அனைவரும் வகை வகையான சிக்கன் பர்கர் ருசித்திருப்பார்கள். ஆனால், இப்படி ஒரு சிக்கன் பர்கரை தங்கள் வாழ்வில் கண்டிருக்க மாட்டர்கள்.

இதை ருசிக்க முடியாது ஆனால் நன்கு ரசிக்க முடியும். முடிந்த வரை ரசித்துக் கொள்ளுங்கள்..


வவ்வால்
வவ்வாலும் Bat தான், பேஸ்பால் பேட்டும் Bat தான். பெரும்பாலான ராண்டியின் இந்த பெயர் சார்ந்த கிரியேட்டிவ் கிராபிக் டிசைன்கள் அனைத்தும் அடடே! போட வைக்கின்றன. அதில் இந்த வவ்வால் டிசைனும் இணைந்துள்ளது.


ஜெல்லி
பட்டாம்பூச்சிக்கு பிறகு அதிகமாக கவர்ந்த ராண்டியின் டிஸைன் இது. ஜெல்லி ஃபிஷ் நாம் அறிந்திருப்போம், [பார்த்திருப்போம். ஏன், நம்மில் பலர் வளர்த்திருப்போம். ஆனால், இப்படி ஒரு ஜெல்லி ஃபிஷ் நாம் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டோம்.


ஆமை
தர்பூசணி, பட்டாம்பூச்சியில் பெயரை வைத்து விளையாடிய ராண்டி லூயிஸ், இந்த பர்கரில் தோற்றத்தை வைத்து விளையாடியுள்ளார்.

பார்கரின் மேல் பகுதியின், ஆமையின் ஓடு பகுதியும் ஒரே வண்ணத்தில் இருந்தால் ஒருவேளை இப்படியாக தான் இருக்கும் என நாம் ஒருபோதும் யோசித்திருக்க மாட்டோம். ஆனால், ராண்டி அதை யோசித்து டிசைன் செய்து அசத்தியுள்ளார்


ஜீனியஸ்
மிக சிலரால் மட்டும் தான் ராண்டி போல யோசிக்க முடியும் Butterflyயில் இருக்கும் Butterஐ கொண்டு இந்த கிராபிக் டிசைன் செய்துள்ளார் ராண்டி லூயிஸ். ராண்டியின் கிரியேடிவ் வர்க்கில் இது மிகவும் சிறந்ததாக திகழ்கிறது.


நீங்க வெஜ்டேரியனா?
இது வெஜ்டேரியன்களுக்கான ஆடு. சாப்பிட முடியாது என்றாலும் படமாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை உங்கள் வீட்டில் இன்று அம்மா விரதம் இருந்தால் இந்த காலிபிளவர் வாங்கிக் கொடுத்து சமைத்து தர கூறுங்கள்.


உவேக்!
நத்தையை இதற்கு முன்னர் இவ்வளவு க்ளோஸ் அப்பில் நாம் கண்டிருக்க வாய்ப்பில்லை. மேக்ரோ கேமரா லென்சில் பார்த்தால் மட்டுமே நத்தையின் இந்த தோற்றம் தென்படும். நத்தையின் உடல் சருமமும் பேஸ்ட் போல தான் இருக்குமோ?

அது கொஞ்சம் வழவழ கொழகொழன்னு தான் இருக்கும். ஆனால், இத்துடன் சேர்த்து டிசைன் செய்ய ராண்டிக்கு எப்படி தோன்றியதோ?


சாப்பிட்டு தான் பாருங்களேன்...
பார்த்தும் கேண்டி என்பது தெரிகிறதா...? கொஞ்சம் உற்றுப் பாருங்கள் இது விஷமான கேண்டி என்பதும், இதை நீங்கள் கடித்தாலோ, அல்லது அது உங்களை கடித்தலோ மரணம் என்பது நமக்கு தான் என்பது புரியும். பச்சை, மஞ்சள் பாம்பை கேண்டியில் சேர்த்துள்ளது ராண்டியின் கலை.


இனி அள்ளி கொஞ்சலாம்...
முள்ளம்பன்றியை கண்டு நாம் அஞ்சுவதற்கு ஒரே காரணம் அதன் முள் போன்ற தோற்றம் தான். அப்படி முற்கள் இல்லை எனில், மனிதர்கள் எப்போதோ அதையும் உண்ணும் பட்டியலில் சேர்த்திருப்பார்கள். நம்மில் பெரும்பாலானோர் முள்ளம்பன்றியை படத்தில் மட்டும் தான் பார்த்திருப்போம்.

இப்படி ஒரு முள்ளம்பன்றி இருந்தால் முயல், பூனை, நாயை காட்டிலும் இது தான் பெருவாரியாக செல்லப் பிராணியாக இருக்கும்.


தர்பூசணி
தர்பூசணி என்பதை ஆங்கிலத்தில் Water Melon என்று கூறுகிறோம். வாட்டர் என்பதை தர்பூசணியில் நாம் பெயராக மட்டுமே கண்டிருப்போம்.

ஆனால், ராண்டி லூயிஸ் கண்முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார். நெசம்தானே... வாட்டர் மெலன்ல இதுக்கு முன்ன இப்படி வாட்டர் பாத்திருக்கீங்களா?

ஆணுக்குப் பெண்ணுடல் மீதும் பெண்ணுக்கு ஆணுடல் மீதும் ஈர்ப்பு உண்டாவது இயற்கை. பொதுவாக ஆண்களுக்குப் பெண்களின் அந்தரங்க உறுப்புகளின் மீதும் பெண்களுக்கு ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளின் மீதும் தான் அதிக அளவில் ஈர்ப்பு இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அந்த இடங்கள் மட்டுமல்லாது, இருவரது உடலிலும் இன்னும் என்னென்ன இடங்களின் மீது ஈர்ப்பும் கவனமும் அதிகமாக இருக்கிறது என ஆண்களிடமும் பெண்களிடமும் சர்வே எடுக்கப்பட்டது. அப்போது கிடைத்த முடிவுகள் கீழே தரப்படுகின்றன.

ஆணுடலில் கவர்ச்சியான இடங்கள் என பெண்கள் கூறுபவை

  • முகம் – 2 சதவீதம்
  • கால்கள் – 1 சதவீதம்
  • மார்புக்குக் கீழ் இடுப்புப்பகுதியின் v போன்ற அமைப்பு – 9 சதவீதம்
  • ABS – 13 சதவீதம்
  • மார்பு – 24 சதவீதம்
  • தலைமுடி – 22 சதவீதம்
  • புஜங்கள் (ஆர்ம்ஸ்) – 19 சதவீதம்
  • மற்றவை – 1 சதவீதம்

பெண்ணுடலில் கவர்ச்சியான இடங்கள் என ஆண்கள் கூறுபவை
  • இடுப்புப்பகுதி – 4 சதவீதம்
  • வயிறு மற்றும் இடுப்புப்பகுதி – 4 சதவீதம்
  • கண் – 1 சதவீதம்
  • முகம் – 46 சதவீதம்
  • மார்பு – 8 சதவீதம்
  • கால் – 9 சதவீதம்
  • தலைமுடி – 11 சதவீதம்
  • பிட்டம் – 18 சதவீதம்

எல்லோருக்குமே மச்சங்கள் இருக்கும். அது எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொருத்து தான் அதற்கான அதிர்ஷ்டத்தைத் தீர்மானிக்க முடியும்.

ரேகையைப் போலவே மச்சத்தை வைத்து பலன் சொல்லுவது ஆண்களுக்கும் பெண்களுக்கு சற்று வேறுபட்டு தான் இருக்கும்.

பிறக்கும்போதே மச்சம் இருக்கும். இடையில் தோன்றுவதும் உண்டு. ஆனால் அது அரிதாகவே நிகழும். புள்ளி, சிறு கோடு, பொட்டு வடிவம், மிளகளவு என பல விதங்களில் இருக்கும். மச்சங்கள் மறையாது என்பதால் தான், நாம் அவற்றை அடையாளமாகக் குறிப்பிடுகிறோம். ஆனால் மிக மெல்லியதாய் இருக்கும் சில மச்சங்கள் மறைந்து போவதும் உண்டு.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்ச பலன்கள் சற்று வேறுபட்டிருக்கும். இதில் ஆண்களுக்கான மச்ச பலன்களை மட்டும் இப்போது காண்போம்.

இரு புருவங்களுக்கு இடையே மிச்சமிருந்தால் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள்.

நெற்றியின் வலதுபுறம் இருந்தால் தனயோகமும் மனைவியால் யோகமும் கிட்டும் உண்டாகும்.

வலது நெற்றிப்பொட்டில் இருக்கும் மச்சத்தால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

வலது கண்ணில் மச்சம் உள்ளவர்களுக்கு, நண்பர்களால் உயர்வும் புகழும் உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும்.

இடதுபுருவத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வரும். அதிகம் செலவு செய்யக்கூடிய ஆளாக இருப்பீர்கள்.

மூக்கின் மேல் மச்சமிருந்தால் சுகபோக வாழ்க்கை வாழ்வீர்கள்.

மூக்கின் வலதுபுறம் இருக்கும் மச்சம் நீங்கள் நினைத்ததை அடையும் அம்சத்தை உங்களுக்குத் தரும்.

மூக்கின் இடதுபுறம் மச்சமிருந்தால் கூடா நட்பில் கூடித் திளைப்பீர்கள். பெண்களால் அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

மூக்கின் நுனியில் மச்சம் இருப்பவர்கள் ஆணவம் கொண்டவர்களாகவும் கர்வமும் பொறாமை குணமும் உடையவர்களாக இருப்பர்.

மேல் மற்றும் கீழ் உதடுகளில் மச்சம் இருந்தால் எளிதில் காதல் வயப்பட்டுவிடுவார்கள்.

கன்னங்களில், இடது கன்னம் – ஏற்றத்தாழ்வைத் தரும்.

வலது கழுத்து மச்சம் – சொத்து சேர்க்கை , ஆடம்பர வாழ்க்கை

தொண்டடையில் மச்சம் இருந்தால் திருமணத்துக்குப் பின் யோகம்

அடிவயிற்றில் இருக்கம் மச்சம் வாழ்க்கையின் உச்சத்துக்கே கூட்டிச் செல்லும். பெண்களால் யோகம் கிட்டும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

இடது மார்பில் மச்சம் இருப்பவர்கள் பெண்களை எளிதில் கவரும் ஆணழகர்களாக இருப்பார்கள்.

வலது மார்பில் மச்சம் இருந்தால் உங்கள் அன்பால் எல்லோரையும் சொக்க வைப்பீர்கள்.

பொதுவாக உடலுறவு என்றால் இரவிலோ அல்லது இருட்டு அறையிலோ தானட நடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, அந்த நேரங்களில் மட்டும் உறவில் ஈடுபடுவதுண்டு.

ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு அதிகாலையில் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதுண்டு. ஆனால் பெண்கள் அந்த நேரங்களில் அன்றைய நாளின் வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.

ஆனால் அதிகாலையில் உடலுறவு கொள்வதால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டு அதன்பின், நீங்கள் அதை முயற்சி செய்யுங்கள்.

அதிகாலையில் உடலுறவில் ஈடுபடும்போது நம்முடைய உடலில் ஆக்சிடோசின் என்னும் வேதிப்பொருள் சுரக்கிறது. இது அன்றைய நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

மன அமைதியும் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்கவும் இந்த அதிகாலை உடலுறவு துணைபுரிகிறது.

சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் நெருங்காது.

அதிகாலை உறவில் ஈடுபடுவதால் நகங்களும் தலைமுடியும் நன்றாக வளரும். சருமம் பளிச்சிடும்.

இரவில் நன்றாகத் தூங்குவதால் பகலில் உடல் புத்துணர்ச்சியோடு இருப்பதால் உடலில் உள்ள வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படட்டு உடல் வலுவுடன் இருப்பதால் அந்த நேரத்தில் சிறப்பாக செயல்படவும் முடியும்.

உலகில் அனைவரும் அனுபவிக்கும் ஒரு விஷயம் காதல். நிறம், மதம், பணம் என எதையும் பார்த்து காதல் வருவதில்லை. அதில் காதலர்கள் செய்யும் தவறு என்னவென்றால் காதலிப்பவர்களின் குணங்களையும் பார்க்காமல் போவதுதான்.

இதனால் ஆண்களும் சரி பெண்களும் சரி இப்போதெல்லாம் அடிக்கடி பிரேக் அப் செய்கிறார்கள். என்னதான் பசங்க விழுந்து விழுந்து லவ் பண்ணாலும், சில பொண்ணுங்க கடைசியில போகிற போக்கில் பிரேக்அப் அப்படினு சொல்லிட்டு போய்க்கிட்டு இருக்காங்க. பசங்களை இந்த பரிதாப நிலைக்கு ஆளாக்கும் பெண்களை இங்கு பட்டியலிடுகிறோம். இந்த குணங்கள் இருக்கும் பெண்களை தயவு செஞ்சி டேட்டிங் பண்ணிறாதீங்க. அப்படி பண்ணுன அப்புறம் ரொம்ப கஷ்டபடுவீங்க!

இவங்களுக்கு நீங்க எப்பயும் ஏதாவது கிப்ட் கொடுத்துக்கிட்டே இருக்கணும். உங்க பாக்கெட்ல காசு இருக்குற வரைக்கும் தான் நீங்க அவங்களுக்கு கிங், காசு காலியாச்சு அப்புறம் உங்களுக்கு சங்குதான்!

சில பொண்ணுங்க பார்க்க சினிமா ஹீரோயின் மாதிரி இருப்பாங்க, ஆனா மண்டையில களிமண்ண தவிர வேறு எதுவும் இருக்காது. என்னதான் லவ்வர் அழகா இருந்தாலும் அறிவுனு கொஞ்சம் இருக்கணும்ல?

இவங்கள் பத்தி சொல்ல தேவையில்லை போனும் கையுமா சுத்துவாங்க, இவங்ககூட சேர்ந்து போட்டோ வேணா எடுத்துக்கோங்க, டேட்டிங் போகணும் நினைச்சீங்க, அப்புறம் உங்க போன் மெமரி புல்லா அவங்க போட்டோ மட்டும் தான் இருக்கும். நைட்டு தூங்கும்போது செல்பி எடுக்குறது கனவுல வரும் பாத்துக்கோங்க!

செல்பி எடுக்கிறவங்கள கூட சமாளிச்சிடலாம். ஆனா இந்த ஒத்த செல்பி எடுக்க ஒன்றரை மணிநேரம் மேக்கப் போடுறவங்கள மட்டும் டேட்டிங் பண்ணீங்க அப்புறம் லைஃப் புல்லா நீங்க மேக்கப் மேனா மட்டும் தான் இருப்பீங்க!

நாய்க்குட்டி செத்ததுக்கு எல்லாம் ஓவர் ரியாக்ஷன் வரும். கண்டதுக்கெல்லாம் கண்ணீர் வடிப்பாங்க! அவுங்க எமோஷனலானவங்களா இல்ல லூசானு கண்டுபிடிக்கிறதுக்குள்ள நீங்க லூசாகிடுவீங்க!

பசங்கள எப்படி பிளேபாய்ஸ் இருக்காங்களோ, அதே மாதிரிதான் இந்த பிளேகேர்ள்ஸ், இருக்குற எல்லா பிட்சுலயும் மேட்ச் விளையாடும் ஆல்ரவுண்டர்தான் இவுங்க. கொஞ்சம் உஷார் பாய்ஸ்!

பொதுவாகவே சில பொண்ணுங்களுக்கு அடுத்தவங்கள பத்தி பேசுறது ரொம்ப பிடிக்கும். ஆனா, இவங்க ஒரு படி மேல, இருக்குற எல்லா பிரச்சனையைப் பத்தியும் உங்கக் கிட்ட வந்து கொட்டிக்கிட்டு இருப்பாங்க. கொஞ்ச நேரத்துல நீங்களே எப்படா வாய மூடுவானு யோசிக்க ஆரம்பிச்சிடுவீங்க.

இவங்க கிட்ட மாட்டுனீங்க நீங்க கடைசி வரைக்கும் அவுங்களுக்கு அடிமையாத்தான் இருக்கணும். எல்லாமே அவுங்க டிசிசன் படிதான் நடந்தாகணும். கொஞ்சம் மாத்தி எதனா பண்ணீங்க, அப்புறம் உங்க உசுருக்கு நாங்க பொறுப்பில்ல...

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.