Latest Post

உடலுறவு என்பது அனைவரது வாழ்க்கைக்கும் அத்தியாவசியமான ஒன்றாக தான் உள்ளது. ஆனால் எதுவுமே அளவுக்கு மீறினால் ஆபத்து தான்.. அது குறிப்பாக இந்த விஷயத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. உடலுறவின் மீது அதீத ஆவல் வந்தால் பல தீமைகள் உண்டாகும்…

முக்கியமாக சமூகத்தில் நம் மீதான கண்ணோட்டம் மாறும்.. நம்மை நம்பி வந்திருக்கும் உறவுகளுக்கு துரோகம் செய்ய நேரிடும்.. குழந்தைகளை சரியாக வளர்க்க முடியாது.. சமூகத்தின் முன்னால் குற்றவாளியாக நிற்க வேண்டியது நிலை நிச்சயம் உருவாகும்.. இது போன்ற பல பிரச்சனைகள் உடலுறவு இச்சைகள் அதிகரிப்பின் காரணமாக உண்டாக கூடும்…

மது, புகைப்பழக்கம் என எதுவுமே அளவோடு இருந்தால், அதில் இருந்து எளிதாக மீண்டு வந்து விடலாம்.. அதுவே அதற்கு நாம் அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது மிக மிக கடினமான விஷயமாகும். அதுமட்டுமின்றி அதனால் நமக்கு உண்டாகும் விளைவுகளும் அதி பயங்கரமான விளைவுகளாக இருக்கும்..

அதே போன்று தான் உடலுறவும் கூட, குறிப்பிட்ட எல்லையை தாண்டும் போது நாம் உடலுறவுக்கு அடிமையாகிவிடுவோம்.. இதனால் பல பிரச்சனைகள் உண்டாகும்.. சிலருக்கு நாம் இது போன்று உடலுறவுக்கு அடிமையாகிவிட்டோமா என்று அறிவதற்கே பல காலம் எடுத்துக் கொள்ளும்.. ஆனால் இதனை முன் கூட்டியே அறிந்து விட்டால் இதில் இருந்து மீண்டு வருவது என்பது சுலபமான விஷயமாகிவிடும்..!

உடலுறவுக்கு அடிமையாகவது என்பது முதலில் உங்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இல்லாமல் இருந்தாலும் கூட, நாட்கள் செல்ல செல்ல இது உங்களுக்கு மட்டுமின்றி, உங்களை சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்க கூடியதாக அமைந்து விடும்..


காரணம் இந்த உடலுறவின் மீது உள்ள அதீத ஈடுபாடானது பிறருக்கு பாலியல் தொல்லை கொடுப்பது மற்றும் பாலியல் வன்புணர்வு போன்றவற்றிற்கு காரணமாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சுய இன்பம் காண்பது என்பது அனைவரும் செய்ய கூடிய ஒரு விஷயம் தான்.. ஆனாலும் இது அதிகமாக கூடாது.. இது அதிகரித்து காணப்பட்டால் அவர்கள் உடலுறவுக்கு அடிமையாகிவிட்டார்கள் என்று அர்த்தமாகும். எந்த நேரமும் சுய இன்பம் காண வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்பது, ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் சுய இன்பம் காண்பது போன்றவைகள் உடலுறவுக்கு ஒருவர் அடிமையாகிவிட்டார் என்பதை குறிக்கும்.

குழந்தைகள் பசிக்காக மட்டும் அழுவதில்லை! குழந்தைகள் அழ 16 காரணங்கள் இருக்கின்றன! குழந்தைகள் பசிக்காக மட்டும் அழுவதில்லை! குழந்தைகள் அழ 16 காரணங்கள் இருக்கின்றன!

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

கடலுக்கு அடியில் இருக்கிறது பாதி அமெரிக்கா. டைட்டானிக் கண்டுபிடிப்பாளர் – டைம் பாஸ் #004 கடலுக்கு அடியில் இருக்கிறது பாதி அமெரிக்கா. டைட்டானிக் கண்டுபிடிப்பாளர் – டைம் பாஸ்

இந்த உடறவுக்கு அடிமையாக உள்ளவர்கள் எப்போதும் செக்ஸ் பற்றியே தான் பேசிக் கொண்டிருப்பார்கள்.. அவர்களை பொருத்தவரையில் இந்த உலகில் அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் செக்ஸ் மட்டும் தான்.. அடுத்து எப்போது உடறவில் ஈடுபடலாம் என்ற எண்ணத்துடனேயே இருப்பார்கள்.. இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவர் உடலுறவுக்கு அடிமையாக இருக்கிறார் என்று அர்த்தமாகும்.

இந்த உடலுறவிற்கு அடிமையாக இருப்பவர்கள் அதிக நேரம் ஆன்லைனிலேயே கழிப்பார்கள்.. ஆன்லைனில் பார்ன் படங்களை பார்ப்பது, போன் மூலமான பாலியல் சேவைகளை பயன்படுத்துவது என்று உடலுறவு மட்டும் தான் வாழ்க்கை என்று இதிலேயே மூழ்கி கிடப்பார்கள்.. தொடந்து பாலியல் சார்ந்த விஷயங்கள், தொடர்புடைய படங்கள் போன்றவற்றை பார்ப்பார்கள்.

இது போன்று உடலுறவுக்கு அடிமையாக இருப்பவர்கள் அவர்களது துணையுடன் மட்டும் உடலுறவு வைத்துக் கொள்வது கிடையாது. இவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட துணைகளுடன் உடலுறவில் ஈடுபட கூடியவர்களாக இருப்பார்கள். இந்த நிலை சிறிது சிறிதாக மாறி விலை மாதுகளிடம் செல்ல கூடிய நிலையிலும் இருப்பார்கள்..

இவர்கள் தாங்கள் உடலுறவு வைத்துக் கொள்ளும் துணையுடன் உணர்ச்சி ரீதியாக தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுதல், கஷ்டங்களை தாங்குதல், அன்பை பரிமாறிக் கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபாடு இல்லாமல் தான் இருப்பார்கள்.. அவர்களது தேவை முடிந்ததும் தன் துணையை கண்டு கொள்ளாத நிலையில் இருப்பார்கள்.

இவர்கள் எப்போதும் பல எதிர் பாலினத்தவர்களிடம் செக்ஸ் சேட்டில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள்.. அதிகமாக உடலுறவு சார்ந்த படங்களை பார்க்க கூடிய நபர்களாக இருப்பார்கள்.

இவர்கள் நீண்ட நாட்களாக ஒருவரின் மீது அன்புள்ளவர்களை போலவே நடந்து கொள்வார்கள்.. அவர்களை அடைய வேண்டும் என்ற ஆசைகள் மட்டுமே மனதில் இருக்கும்.. ஏதேனும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் எதிர்பாலின நபர் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு விடுவார்கள் இது இரண்டு பேருக்குமே ஆபத்தில் தான் முடியும்.

உடலுறவுக்கு அடிமையாக இருப்பவர்கள் தங்களது பண்பாடுகள் மற்றும் மரபுகள் போன்றவற்றை மீறி நடந்து கொள்ள கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட துணைகளை வைத்துக் கொள்வது, விலை மாதுக்களிடம் செல்வது, முன் பின் தெரியாத நபர்களுடன் உறவில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்..

இது போன்ற செயல்களில் ஈடுபடுவது என்பது அவர்களது சமய மரபுகளுக்கு எதிரானது என்றாலும் கூட தங்களது சுய உடலுறவு தேவைக்காக மரபுகளை மீறி இது போன்ற தீய செயல்களில் ஈடுபடுவார்கள்.

உடலுறவு மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்து வரும் இவர்களுக்கு, தங்களின் உடலுறவு தேவை எவ்வளவு என்பதே தெரியாது. இது போன்று இருப்பது தான் இந்த செக்ஸ் தேவை அதிகமாக உள்ளது என்பதற்கான அறிகுறியாக உள்ளது..

ஒருவர் தொடந்து 6 மாத காலமாக இதே செயல்முறைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பவராக இருந்தால் இவர் உடலுறவுக்கு அடிமையாகிவிட்டார் எனப்படுகிறது..

புகைப்பழக்கம், மதுவிற்கு அடிமையாவது போல இதுவும் பாலியலுக்கு அடிமையாதல் தான்.. உங்களுக்கு இது போன்ற அறிகுறிகளுடன் ஒருவரை தெரிந்தால் அவரை மருத்துவரிடம் அழைத்து சென்று இதற்கான தீர்வு காண வேண்டியது அவசியமாகும். இது போன்ற நபருக்கும் உளவியல் ரீதியான சிகிச்சை தேவைப்படுகிறது.. இவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் இது அவருக்கும் அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் ஆபத்தை கொடுக்கும்.

இது போன்ற பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை என்பது அவசியமாகிறது. இவர்களுக்கான மருத்துவ சிகிச்சையான பல படிநிலைகளை கொண்டதாக அமைகிறது.. இதற்கான சிகிச்சையை மன ரீதியாக எடுத்துக் கொள்ளும் போது, ஒரு நபர் இதில் இருந்து விடுபடலாம்.

அது ஊட்டி மலையின் ஒரு பகுதி. இருளில் காடுகளுக்குள் ஒரு சாகச பயணம். குழுவாகச் சென்றதில் சிறு தூரத்திற்கு மேல் நடக்க முடியாததால் மூவர் மட்டும் அடிவாரம் திரும்பினோம். மணி இரவு 12:30. கடும் குளிர். ஒரு நபர் அழுக்கு வேஷ்டி, சட்டை, ஒரு போர்வை ஒன்றை மேலே சுற்றிக்கொண்டு கையில் ஒரு மரப்பெட்டி, ஒரு தகர டப்பா சகிதம் அப்பொழுது தான் வந்தார். உடனே அங்கிருந்த நான்கு, ஐந்து நபர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். நாங்களும் அங்கு என்ன நடக்கிறது காண விரைந்தோம். எந்த நம்பரில் பணம் வைத்தாலும் இரண்டு மடங்கு தருவதாக டப்பாவை உருட்டிக்கொண்டு இருந்தார். அந்த விளையாட்டுக்குப் பெயர் “லங்கர் கட்டை” என்று முடிந்து தான் தெரிந்தது. இரண்டு நபர்கள் ஆளுக்கு சில நூறுகளைக் கட்டி இரட்டிப்பாகப் பெற்று அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தனர். மூன்றாம் நபர் தொடர்ந்து தவறாகக் கூறி பணத்தை விட்டுக் கொண்டே இருந்தார். அப்பொழுது தான் எனக்குள் இருந்த ஞானி வெகுண்டெழுந்தார். என்னுடைய பர்ஸில் இருந்து பணம் வெளியே வந்ததும் மூன்றாம் நபர் விலகிவிட்டார். சாம்பிள்’க்கு ஒரு நான்கு முறை உருட்டினார். நான்கு முறையும் நான்கு என்று சொன்னால் அங்கு நான்கு. ஆறு என்றால் ஆறு. சரியென்று பணம் கட்டத் துவங்கினேன். ஒரு முறை கூட கரெக்ட்டான நம்பரை அனுமானிக்க முடியவில்லை. கொண்டு சென்ற ஐந்நூறும் காலி. என்னுடைய நண்பர் என்னைக் காப்பாற்ற களத்தில் குதித்தார். என்னுடைய தளபதி. அவருடைய பர்ஸும் சைபர். மற்றோறு நண்பர் வந்தார். இறுதியில் மூவர் கைகளிலும் காலி பர்ஸ் மட்டும் தான். சுற்றி இருந்த மூவரும் உருட்டும் ஆளுடன் வேறு இடம் நோக்கி நகர்ந்தனர். பின் தான் மரமண்டைக்கு தெரிந்தது. அவர்கள் நால்வரும் ஒரே அணியென்று. மூன்று பேரிடமும் தேநீர் அருந்தக் கூட பணம் இல்லாமல் மற்றவர்கள் வரும் வரை குரங்குகள் போல வண்டியின் முன் அமர்ந்துகொண்டு இருந்தோம்.

சூதாட்டம் என்பது மிகக் குறுகிய காலத்தில் நமது அனுமானத்தையும் அதிர்ஷ்டத்தையும் மட்டும் நம்பி நம் பணத்தை முதலீடு செய்யும் ஒரு விஷயம். பாகுபாடு இல்லாமல் அனைத்து வகுப்பு, அனைத்து தரப்பு மக்களையும் சூதாட்டத்தின் கவர்ச்சி சில தினங்கள் வந்து செல்லும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஒவ்வொரு மாநில சூழ்நிலை, கலாச்சாரம், பங்கேற்கும் சமூகம், வசதி வாய்ப்புகளைப் பொருத்து சூதாட்டக்களம் மாறுபடுகிறது.

நூற்றாண்டுகளாக தாயக்கரமும் பரமபதமும் இந்தியாவில் உள்ளன. மகாபாரத கதையே தாயக்கரத்தில் சூதாடுவதை மையமாக வைத்துத் தான் நகரும். பரமபதம் அச்சிடும் தொழில்நுட்பம் வருவதற்கு முன்பு வரைந்து விளையாடி இருக்கலாம். பின்பு அச்சிடும் தொழில்நுட்பம் வந்தவுடன் தங்களுக்கு விருப்பமான கதைகளுடன் அச்சிட்டு விளையாடி மகிழ்ந்தனர். ஆடுபுலியாட்டம் இன்றளவிலும் சுமை தூக்குவோர் அல்லது வாகன ஸ்டான்ட் போன்று தினசரி காத்திருக்கும் இடத்தில் விளையாடுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பொருட்செலவோ, உபகரணமோ இல்லாமல் வெறும் பென்சில், ஒரு சில கற்கள், தேவையென்றால் வரையப்பட்ட அட்டை இருந்தால் போதும் என்பதால் இவ்வகை விளையாட்டுகளில் தீவிரம் அதிகரித்து அதுவே பந்தயமாக மாறி இருக்கலாம்.

செஸ் என்கிற சதுரங்கம் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்து விளையாடப்பட்டு வருகிறது. சீனாவில் தொடங்கி இந்தியாவிற்குள் நுழைந்து இங்கிருந்து தான் பிற நாடுகளுக்குச் சென்றுள்ளது. குப்தர்கள் காலத்தில் “சதுரங்கா” என்று அழைக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அல்லது பெரிதும் சூதாட்ட களத்தில் செஸ் இல்லையென்றாலும் உள்ளூர் பந்தயங்களில் பரிசுத்தொகைக்காக விளையாடப்படுகிறது.

கேரம்போர்டு விளையாட்டு தெற்காசிய மக்களிடையே மிகப் பிரபலம். இந்த விளையாட்டு இந்தியா மகாராஜாக்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இன்றளவில் தமிழ்நாட்டின் வீதிக்கு வீதி கேரம்போர்டு சாம்பியன்களை நம்மால் பார்க்க முடியும். பெரும்பாலான சிறு மற்றும் பெரு நகரங்களில் சிறு அறைகள், கிளப்கள், என பல்வேறு தளத்தில் இதற்காக போர்டின் பிரத்யேக விளக்குகள் அமைக்கப்பட்டு தினசரி பந்தயங்கள் மறைமுகமாக நடக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை உண்மையான சூதாட்டம் என்று பரவலாக நம்பப்படுவதில் சீட்டு விளையாட்டு முதல் இடத்தைப் பிடிக்கிறது. பொது இடத்தில் விளையாடத் தடை செய்யப்பட்ட ஒன்று. இதற்கான அங்கீகரிக்கப்பட்ட க்ளப்கள், விடுதிகள் போன்ற ஒரு சிலவற்றில் மட்டுமே தொழில் முறை சூதாடிகளும், மற்றவர்களும் விளையாடுகின்றனர். புள்ளிகள் கணக்கில் ஒரு புள்ளிக்கு மிகக் குறைந்த பட்சம் ஒரு ரூபாய் முதல் ஒரு புள்ளிக்கு சில ஆயிரம் ரூபாய் வரை க்ளப்களில் ஆடப்படுகிறது. சாதாரண மக்களிடம் விடுமுறை தினம், பொது நிகழ்ச்சி, சுற்றுலா, திருமணம் போன்ற நிகழ்வுகளில் ஒன்று கூடும்பொழுது பணம் வைத்து விளையாடுவதை ஒரு சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கொங்கு மாவட்டங்களில் சேவல் சண்டைகள் மிக பிரபல்யம். வெளிப்படையாகப் பந்தயங்கள் விடுவதை அரசு அனுமதிக்கா விட்டாலும் வளர்ப்பவர்கள் இடத்தில் இவை நடப்பதுண்டு. சாதரனமாக ஒரு கட்டு சேவல் என்கின்ற பந்தய சேவல் ரூபாய் 50௦0 முதல் 5௦,0௦0 வரை விற்பனை செய்யப்படுகிறது. பல விதமாக வகை சேவல்கள் மற்றும் அதன் தன்மையும் கேட்டால் மலைப்பாக இருக்கும். ஒரு சில ஆர்வலர்கள் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவின் மங்களூர் வரை சென்று சேவல்களை வாங்கி பயிற்சி அளித்து வருகின்றனர். போட்டிகளில் வென்றவருக்குத் தோற்ற சேவலும், பந்தய பணமும் அளிப்பது வழக்கம். இவ்வகை கட்டு சேவலின் இறைச்சி சுவையில் உலகின் மற்ற எந்த விலங்கின் இறைச்சியும் போட்டி போட முடியாது என்றே சொல்லலாம்.

புறா பந்தயம் ஒரு குறிப்பிட்ட சாரரிடம் மட்டுமே நடக்கிறது. இது தமிழகம் முழுவதும் பரவலாக ஆங்காங்கே நடக்கும். குறிப்பிட்ட பந்தய தூரத்தை அடைவது, அல்லது அதிக நேரம் தரை இறங்காமல் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டே இருப்பது என்று வெவ்வேறு வகையான போட்டிகள் நடக்கின்றன.

முதலில் வார லாட்டரி / மாத குலுக்கல் என்று இருந்த பொழுது அது மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பரிசு இல்லையென்றால் அடுத்த குலுக்கல் தினத்திற்காகக் காத்திருந்தனர். காலப்போக்கில் பரிணாம மாற்றம் அடைந்து மூன்று நம்பர் / ஒரு நம்பர் குலுக்கல் போன்றவை உள் நுழைந்தன. ஒரு நாளைக்கு இரண்டு முறை குலுக்கல் / பல கம்பெனி லாட்டரிகளில் இது நடைபெறும். மக்கள் தங்கள் வேலை, பொருள், நிம்மதி அனைத்தையும் இழந்து தமிழகத்தின் தெருக்களில் லாட்டரி கடை வாசல் முன்பே காத்திருந்தனர். பின்பு முழுமையாக லாட்டரிகளுக்கு தடையைக் கொண்டு வந்தது தமிழக அரசு. இப்பொழுது கேரளா லாட்டரிகளை ஏஜென்ட்கள் மூலம் வாங்கி ஒரு கூட்டம் தங்கள் அதிர்ஷ்ட தாகத்தை தீர்த்துக் கொள்கின்றனர்.

ஆன்லைன் சூதாட்டங்களில் கணக்கிட முடியாத வகைகள் உண்டு. இதில் நாம் பந்தயம் கட்டிய பணத்தையும் வென்ற பணத்தையும் சரியாகத் தரும் இணையதளங்களைக் கண்டுபிடிப்பது மிகக்கடினம்.

இணையதளத்தில் சீட்டு விளையாட்டு, குதிரை பந்தயம், ஸ்போர்ட்ஸ் பெட்டிங் எனப்படும் புட்பால், கிரிக்கெட் போன்ற அனைத்து முக்கியமான போட்டிகள் நடக்கும்போதும் பிரத்யேக இணையக் கவுண்டர்கள் ஓபன் செய்வார்கள். பரிவர்த்தனை அனைத்தும் இணையத்தில் நடைபெறும். பெரும்பாலான இணையதளங்கள் இவ்வகை பெட்டிங்’கில் சரிவர பணத்தை திருப்பித் தருவதில்லை. புகார் செய்யவும் முடியாமல் ஏமாறுபவர்கள் ஏராளம்.

பெங்களூர், கோவா போன்ற பெரு நகரங்கள் மற்றும் சுற்றுலா நகரங்களில் மட்டுமே வெளிநாட்டு விளையாட்டான ராயல் கேசினோ விளையாடப்படுகிறது. மேலும் இவ்வகை விளையாட்டுகள் மேல்தட்டு மக்கள் மட்டுமே விளையாடும் மிக அதி செலவீனமான விடுதியாக இருக்கும்.

மக்கள் தொகை பெருக்கம், வேலை வாய்ப்பின்மை, சுய தொழிலில் ஏற்படுகின்ற சிரமங்கள், குடும்பச் சூழல் போன்றவற்றால் குறுகிய காலத்தில் அதிக பணத்தை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் பெரும்பாலான மக்கள் உழல்கின்றனர். சூதாட்டமும் அதற்கேற்றால் போல் புது வருகையாளர்களுக்கு சில நாட்கள் பணத்தை அள்ளித் தரும். அவர்களே வாடிக்கையாளர்களாக மாறிவிட்டால் கை குட்டையைக் கூட மிச்சம் விடாது. சூது என்பது ஒரு போதை. குறுகிய கால பணம் கொழிக்கும் வழி என்றாலும் அது ஒரு புதை குழி!!!!!!!!!!!!!

உலகையே நடுநடுங்க வைத்த ஒரு சர்வாதிகாரி என்றாலே நம் நினைவில் வந்து நிற்கும் பெயர் ஹிட்லர். இரண்டாம் உலக போரின் கதாநாயகனாகவும் வில்லனாகவும் அனைவருக்கும் காட்சி அளித்தவன். நாஜி கட்சியின் நிறுவனர்,  இவன் தான் இரண்டாம் உலகப் போரைத் தொடங்கி ஹோலோகாஸ்டின் இனப்படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டவன். யுத்தம் முடிவடைந்த நாட்களில் அவனைக் கொன்ற போதிலும், அவனது வரலாற்று மரபு இருபதொண்ணம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. இரண்டாம் உலக போர் முடிவதற்கு இவன் காரணமாக இருந்த கதாநாயகன் என்று குறிப்பிட்டாலும் இரண்டாம் உலக போரில் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு முக்கிய காரணமாக இருந்தே ஒரே வில்லன் ஹிட்லர் தான். உலக நாடுகளை வென்று ஜெர்மனியின் காலில் கிடக்க வேண்டும் என எண்ணியவர் உலகப்போருக்கு காரணமானவர் ஹிட்லர் தான். எந்த கொடுமையான செயலைச் செய்தவனை குறிப்பிடும் போதும் ஹிட்லர் மாதிரி என்று பரவலாகக் கூறப்படுவதைக் கேட்டிருக்கலாம். எல்லோருக்குமே ஹிட்லர் ஏறத்தாழ ஒரு கோடி யூதர்களைக் கொன்றது தெரிந்திருக்கும். சரித்திரத்தின் பக்கங்களில் சிகப்புப் பக்கங்களாய் என்றும் பயமுறுத்தும் செயல்.இதற்கு ஹிட்லர் காரணம் என்பது உண்மை தான்.
அடால்ப் இட்லர் காஸ்தாப் ஜூம் பொம்மர் என்னுமிடத்தில் 20 ஏப்ரல், 1889 இல் தாய் (அலய்ஸ இட்லரின் மூன்றாவது மனைவி) கிளாரா போல்ஸ் (1860–1907), தந்தை ஆலாய்ஸ் ஹிட்லருக்கும் (1837–1903) ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்த நால்வர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அடால்ப் ஹிட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா ஹிட்லர் மட்டும்தான்.

ஹிட்லரின் அப்பா தகாத உறவில் பிறந்ததால் தன்னுடைய தாய் பெயரை பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டார். ஹிட்லரின் அப்பாவுக்கு அடக்குமுறை குணம் கொஞ்சம் அதிகம். அதுவே சிறுவன் ஹிட்லர் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. சிறு வயதிலேயே அடால்ப் ஹிட்லரின் தந்தை, வீட்டில் உள்ள அனைவரையும் அடக்கி ஆளும் தன்மை உடையவராக இருந்தார். வீட்டில் பல கடுமையான விதிமுறைகள்,  தன் பிள்ளைகள் இதைதான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் என்று அடால்ப்பின் வீடே ஒரு சிறிய ராணுவம் போல இருந்தது. தன் தந்தை எவ்வாறு தன்னையும் தன் தாயையும் அடித்துத் துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய மெயின் கேம்ப் என்ற சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புறுவதைக் கண்டு அவர் மேல் அளவுகடந்த பாசம் கொண்டார் என்று தெரிகின்றது. அதே சமயம் அவர் தந்தைமேல் அளவு கடந்த வெறுப்பையும் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது என்றும் தெரிகின்றது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அடால்ப்பின் வாழ்விலும், அவரது தந்தையின் அடக்குமுறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த அடக்குமுறையின் வெளிப்பாடே பிற்காலத்தில் ஹிட்லரை சர்வாதிகாரியாக மாற்றியது. அடுத்ததாக ஹிட்லர் தனது இளமைகாலத்தைக் கழித்த வியென்னா நகரம் யூதர்களுக்கு எதிரான சிந்தனையைத் தூண்ட வழி வகுத்தது. அனைவரும் கூறும் குற்றச்சாட்டு ஹிட்லர் யூதர்களுக்கு எதிரானவர் என்பதே.
தான் மிகவும் விரும்பி சேரத் துடித்த கலைக் கல்லூரியில் இரு முறை அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. தாயின் மரணம், பொருளாதார சீர்குலைவு போன்றவை ஹிட்லரை வெறுப்பின் விளிம்பிற்குத் தள்ளியது. இந்த இன்னல்களுக்குக் காரணம் தேடி அலைந்த ஹிட்லரை,  அன்றைய வியென்னா யூதர்கள் பக்கம் திருப்பியது. தன் பூர்வீகக் குடிகள் மட்டுமே அனுபவிக்க உரிமையுள்ள நிலத்தைக், குடியேறிய மக்கள் பறிப்பதா என்று கேள்வி எழுந்தது. ஒரு கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் ஹிட்லரை பிகாசோ மாதிரி ஒரு ஓவியராகத் தான் உலகம் அறிந்து இருக்கும். ஆனால் அவரின் சில வெறுப்புகள் அவரை ஒரு சர்வாதிகாரியாக உலகம் பார்க்கும் படி செய்துள்ளது.

அடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள ஒநாய் என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த ஹிட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். 1920 களில் அவரை அப்படித்தான் அழைத்தனர். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி என அழைத்தனர். ஹிட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள்  காப்பாளர் என்றும் பொருள்படும்.

ஹிட்லருடைய தந்தைவழி சொத்துக்களின் கடைசி பங்கு கிடைத்தவுடன் ஜெர்மனியின் பாரம்பரிய நகரமான முனிக் நகருக்கு குடிபெயர்ந்தார். அவர் குடிபெயர மற்றுமொரு காரணம் இருந்தது. ஹிட்லர் இராணுவத்தில் சேர விருப்பம் இல்லாமல் அங்கு சென்றார் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவரை இராணுவத்தில் சேர வைத்தது.
ஹிட்லர் கடைசி வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அவருக்காக உயிர் விட துணிந்து உயிரையும் விட்ட  எவா பிரான் என்ற  காதலி  இருந்தாள். ஹிட்லரின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக ஹிட்லரை அவதார புருஷராக நம்பினார்கள், ஹிட்லர் பற்றிய உண்மைகளை, விமர்சனங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த உண்மை மிகவும் வியக்க வைக்க கூடிய ஒன்று ஐந்து முறை மகாத்மா காந்தி நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் ஒருமுறை கூட நோபல் பரிசை வென்றதில்லை. அதே சமயம் ஹிட்லர் நோபல் பரிசை வென்றுள்ளார். அகிம்சை என்று போராடியவரை விட சர்வாதிகாரியாக நின்ற ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. மிகவும் தைரியமான மற்றும் வீரமான மனிதரான ஹிட்லர் பூனை பயம் கொண்ட நோயான அலுரோஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்.

பிப் 27, 1933 அன்று இரவு, ஹிட்லர் ஜெர்மன் அதிபராக பதவி ஏற்று நான்கு வாரங்களுக்கு பிறகு, ஜெர்மன் பாராளுமன்றத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் தீ விபத்து ஏற்படுகின்றது. மாரினுஸ் என்ற மன நலம் குன்றிய, ஒரு கம்யூனிஸ்ட் கைது செய்யப்பட்டு, குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட்டு கொல்லப்படுகின்றார். இது ஒரு கம்யூனிச சதி என்று கூறி, ஹிட்லர் , அப்போதுள்ள 86 வயதுடைய ஜெர்மானிய அதிபர் பவுல் வான் ஹிந்தேன்புர்கிடம் ரீக்ஸ்டேக் சட்டத்தை அனுமதி அளிக்கச் சொல்கின்றார். இந்த சட்டத்தின் படி, ஹேபியஸ் கார்பஸ், கருத்துரிமை, ஊடக சுதந்திரம், மக்கள் ஒன்று கூடும் சுதந்திரம் அனைத்தும் தடுக்கப்படுகின்றது.
அரசு, மக்களின் கடிதங்களையும், தொலைபேசியையும் ஒட்டுக்கேட்க அனுமதி அளிக்கப்படுகின்றது. பின்னர் Enabling Act of 1933, எந்த ஒரு சட்டத்தையும், பார்லிமென்ட் அனுமதி இல்லாமல் அமுல் படுத்த, அவர் சொன்னது போல், “பொது/அரசியல் வாழ்க்கையில் தூய்மையை ஏற்படுத்த”, ஹிட்லருக்கு முழு அனுமதி அளிக்கப்படுகின்றது. இதற்குப் பின் தேசிய சோசலிச கோட்பாடை எதிர்க்கும் எந்த ஒரு மனிதனையும் கைது செய்யவும், நாடு கடத்தவும் மேலும் கொல்லபடுவதையும் வழக்கமாக்கி வந்தனர். யூதர்களைப் பொருத்தவரை, ஹிட்லரும் நாஜிகளும் அவர்களை எலி போன்ற மிருகங்களாக கருதினர். அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தொழில்கள் அபகரிக்கப்பட்டு, இறுதியில் சில முகாம்களில் அடைக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டனர்.

இவ்வளவு பயங்கரவாதமும் ஏன் ஜெர்மனியில் நடந்தது என்றால், அங்குள்ள மக்கள் அதை அனுமதித்ததால் தான். ஹிட்லரும், நாஜிகளும் மக்களின் அமைதியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தான் இவ்வளவு பெரிய பயங்கரவாதத்தை நடத்தினர். இவை எல்லாம். “வலிமை மிக்க தேசம்” என்ற பெயரில் நடந்ததால் மக்கள் கண்டுகொள்ளவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய விஞ்ஞானியும் கோட்பாடு இயற்பியலின் தந்தை என்றும் அழைக்கப்பட்டவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம். அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னமாகியது ஹிரோசிமா, மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாக கிழிந்தது நாகசாகி. ஆயிரம் ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியாகிய அந்த செய்திகேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு விம்மி, விம்மி அழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்துச்  சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு உற்பத்தியாவதற்கு அடிப்படையாக இருந்தது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அணுகுண்டின் அடிப்படையாக கருதும் சூத்திரம் E=mc2 நிறைக்கும் ஆற்றலுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் இந்த ஆற்றலைக்  கண்டுபிடித்தவர் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அறிவியல் கண்டுபிடிப்புகள் நன்மைக்காகவே பயன்பட வேண்டும் என்று நம்பிய இவர்தான் இருபதாம் நூற்றாண்டின் தனித்த அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ம் தேதி ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார் ஐன்ஸ்டீன். அவர் பிறந்தபோது அவர் ஒரு மேதை இல்லை. உண்மையில் மூன்று வயது வரை பேசாமல் இருந்ததால் கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர். வகுப்பிலும் சராசரி மாணவராகத்தான் இருந்தார். ஐன்ஸ்டீனுக்கு அறிவியல் மீது ஆர்வம் பிறந்தபோது வயது 4. ஒருமுறை அவருக்கு காம்பஸ் என்ற திசைகாட்டி கருவியைப்  பரிசாக தந்தார் அவரது தந்தை. அதனுள் இருந்த காந்தம் அவரை அறிவியல் உலகம் நோக்கி ஈர்த்தது. பள்ளியில் தானாகவே கால்க்ளஸ் என்ற கணிதக்  கூற்றைக்  கற்றுக்  கொண்டார். அதன் பின் ஏற்பட்ட சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டார் ஆனால் ஆசிரியருக்கும் அந்த கேள்விகளுக்கு பதில் தெரியாமல் திகைத்துப்போனார். தன் சிறுவயதிலேயே வார்த்தைகளாலும், சொற்களாலும் சிந்திப்பதைக்  காட்டிலும் படங்களாகவும், காட்சிகளாகவும் சிந்தித்தார் ஐன்ஸ்டீன்.

அவர் அறிவியலில் பல கண்டுபிடிப்புகளும், சாதனைகளும் புரிந்திருந்தாலும் வாழ்க்கையில் தன் குடும்பச்  சூழலில் அவர் அதிகம் நாட்டத்துடன் இல்லை என்பதே உண்மை. வால்டர் ஐசக்சன் என்ற நூல் ஆசிரியர் உலகிலேயே மிக மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Einstein: His Life and Universe) என்ற புத்தகத்தை வெளியிட்டார். உலகிலேயே மிகப்பெரிய விஞ்ஞானியாக பார்க்கும் ஒருவர் மேல் குற்றம் சாட்டப்படும் வண்ணம் அமைந்தது இந்த புத்தகம். தனது வாழ்க்கையில் பல்வேறு கண்டுபிடிப்பிற்கும், புகழுக்கும் உரிய இவர் தன் திருமண வாழ்க்கையைச் சரி வர வாழவில்லை. ஐன்ஸ்டின் மாணவராக இருந்த போதே, அவரது அறிவாற்றலால் கவரப்பட்டு காதலியாக மாறிய மிலவா என்ற பெண்ணை அவரும் காதலித்தார். மேலும் அவர் ஐன்ஸ்டீனுடன் பணியாற்றிய பெண் தான் விஞ்ஞானி மிலவா மாரிக்கை அவரையே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தினார் ஐன்ஸ்டீன்.
ஐன்ஸ்டீனின் முதல் மனைவி மிலவா
ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை  பதினோரு ஆண்டு காலமே நீடித்தது. தனது மனைவிக்கு இவர் விதித்த நிபந்தனைகள் கேட்டாலே வியப்புக்குள்ளாக்குகிறது. ஐன்ஸ்டீன் தனது மனைவியை ஒரு வேலைகாரியை போலத்தான் நடத்தியுள்ளார். ஆனால் அவரது மனைவியோ தனது அன்புக்குரிய கணவனுக்கு அனைத்து வேலைகளையும் செய்துக்கொடுத்துள்ளார். ஐன்ஸ்டீன் அறைக்குச் சென்றே அவருக்கு உணவளித்துள்ளார். இந்தப் பெண் மட்டும் சாதாரணப் பெண் அல்ல ஐரோப்பாவில் முதல் முறையாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தனைக்கும் ஐன்ஸ்டீனை விழுந்து, விழுந்து கவனித்தவர் அவரது மனைவி மாரிக் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மனைவி மிலவா மற்றும்
அவரது இரண்டு குழந்தைகள்
ஐன்ஸ்டீன் இடையில் 1912 ஆம் ஆண்டு தனது உறவினரான எல்சாவின் பக்கம் திரும்பினார். எல்சாவிடம் மாரிக் மனச்சோர்வு மற்றும் பொறாமைக்குணம் பிடித்தவள் என்று கூற ஆரம்பித்தார். மாரிக்கிடம்  விவகாரத்து கேட்டார் ஐன்ஸ்டீன். ஆனால் மாரிக் தர மறுத்து விட்டார். நீ என்னுடன் வாழ சில நிபந்தனை உண்டு என்று ஐன்ஸ்டீன் கூறினார். அந்த நிபந்தனைகள் அருகில் வந்து உட்காரக்கூடாது, வெளியில் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் தன்னுடன் பேசக் கூடாது, வெளியுலக தொடர்புகளை அதிகம் தெரிந்து வைத்துக் கொள்ளக்கூடாது என்று நீளுகிறது ஐன்ஸ்டீனின் நிபந்தனைப் பட்டியல். அதையும் விட மிக முக்கியமான ஒன்று தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவரது மனைவி எதிர்பார்க்கக்கூடாது என்று கூறினார் ஐன்ஸ்டீன். எந்த வகையிலும் தன்னைக் கவர முயற்சிக்கக் கூடாது. அனுமதி இல்லாமல் பேசக் கூடாது என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று. இந்த நிபந்தனைகளையும் தாண்டி அவள் இவரை நன்கு கவனித்தாள். அவருக்கு வேண்டியவற்றை செய்து கொடுத்தாள். அவரின் துணிகளையும் துவைத்து தேய்த்து அவருக்கு கொடுத்து பணிவிடை செய்தாள். அவளால் முடிந்தவரையில் எந்த எதிர்பார்ப்புமின்றி அவருக்கு பணிபுரிந்தாள். ஆனால் அவளுக்கு எந்த வித கைமாறும் செய்யவில்லை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இப்படிப்பட்ட 11 ஆண்டு கால வேதனை வாழ்க்கைக்கு பின் ஐன்ஸ்டீனை விட்டு தனது மனைவி பிரிந்து சென்றார். கூடவே தன் பிள்ளைகளையும் அழைத்துச் சென்று விட்டார். ஐன்ஸ்டீனின் குழந்தைகளில் ஒருவர் ஹான்ஸ் ஆல்பர்ட். இன்னொருவர் எட்வர்ட். 1902 ஆம் ஆண்டு லிசரல் என்ற மகள் பிறந்தார். பின்னர் அவரைத் தத்து கொடுத்துவிட்டனர். மாரிக் மற்றும் ஐன்ஸ்டீன் ஆகியோர் பிப்ரவரி 14, 1919 அன்று ஐந்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்தனர்.
அவரது இரண்டாவது மனைவி
எலிசாவுடன் இருக்கும் புகைப்படம்
ஐன்ஸ்டீன் ஜூன் 2, 1919 இல் எல்சாவை திருமணம் செய்தார். எனினும் அந்த இரண்டாவது திருமணமும் அவருக்கு மகிழ்ச்சி தருவதாக  அமையவில்லை. அவள் திடிரென்று மரணித்துவிட்டாள். இந்த வாழ்க்கையும் துயரில் சென்று முடிந்தது. பி்ன்னர் அவரது செயலாளர் பெட்டி நியூமன்னுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் வேறு பல பெண்ணுடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் அவர் ஒரே ஒரு செயலுக்கு விசுவாசமாக இருந்தார் அது தான் இயற்பியல். பல முறை தன் திருமண வாழ்வில் தான் சரியாகத் தான் நடந்துக்கொள்கிறோம் என்று எண்ணினார். சில சமயம் அது தவறென்றும் உணர்ந்தார். பிறகு இவையெல்லாம் தன் வெற்றிக்கு இடையூறு தரும் வண்ணமாக உள்ளது என்று எண்ணி இருபது ஆண்டுகள் மனைவி, துணைவியின்றி தனியாகவே வாழ்ந்து ஏப்ரல் மாதம் 18ஆம் நாள் 1955ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
இருபது ஆண்டுகள் மனைவி
துணைவியின்றி தனியாகவே வாழ்ந்தார்.
வாழ்க்கை என்பது இரண்டு நிலைகள்தான். ஏற்றமும், தாழ்வுமே அது. அதில், சரியாகப் பயணிப்பவர்கள் வெற்றிபெறுகிறார்கள். இந்த வெற்றியின் பயணத்தில் ஐன்ஸ்டீனின் வாழ்வும் அடையும். இன்பமும், துன்பமும் அவரை எதிர்கொண்டபோது எந்த சூழ்நிலையிலும் தனது வழியை மாற்றாமல் இருந்தார். அதனால்தான் அவருக்கு மிக உயர்ந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிரபல விஞ்ஞானி ஆன பிறகு அவர் கூறியிருக்கிறார் –  “நான் ஒரு இயற்பியல் விஞ்ஞானி ஆகவில்லை என்றால் ஒரு இசைகலைஞனாகி இருப்பேன். நான் அடிக்கடி இசையைப்பற்றி யோசித்துக்கொண்டு இருப்பேன். என் பகல் கனவு இசையிலேயே கழியும். நான் வாழ்வை இசையின் அடிப்படையிலேயே பார்க்கிறேன். என் வயலினில் இருந்து வெளிப்படும் இசையில் நான் என் வாழ்க்கையின் அதிகப்படியான மகிழ்ச்சியினை காண்கிறேன்” என்று கூறினார். அவரது மரணம் வரை விண்வெளி மற்றும் நேரம் ஆகியவற்றின் கோட்பாடுகளுக்கான கண்டுபிடிப்பிற்கான தேடல் இருந்தது. அவர் தன்னை தானே, உடலையும் ஆத்மாவையும் விஞ்ஞானத்திற்கு விற்றுவிட்டதாக ஒருமுறை சொன்னார். ஆனால் கண்டுபிடித்த இராட்சத விஞ்ஞானம் மனித இனத்தின் பல வழிகளில் பயன்பட்டிருந்ததாலும் அவர் சாதாரண மனித இனமானதால் அவர் மீதும் பல குற்றச்சாட்டுகளும் தவறுகளும் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு நாயகனாக இருந்த விருப்ப நாயகன்தான் புரூஸ் லீ. இன்று தற்காப்புக்  கலை இந்த அளவு பிரபலம் ஆனதற்கு ஒரே முக்கிய காரணம் புரூஸ் லீயாகத்தான் இருக்க முடியும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு உண்மையே. புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும், கால்களும் எதிரியைத்  தாக்கும் வேகத்திற்கு அன்றைய திரையுலக தொழில்நுட்பத்தால் கூட ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 கட்டங்கள் என்பதே கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுப்பதற்கு ஒரு வினாடிக்கு 34 கட்டங்களாக மாற்றியமைத்தனர்.
புரூஸ்லீ 1940ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ந்தேதி அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ மாகாணம் சைனா நகரப்  பகுதியில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் லீ ஹோய்-சுவென் மற்றும் கிரேஸ் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை ஒரு நடிகர். புரூஸ்லீக்கு அவரது பெற்றோர்கள் லீ ஜூன்பேன் என பெயர் வைத்தனர். அந்த பெயர் அமெரிக்க மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியரின் வாயில் நூழையவில்லை. எனவே அந்த செவிலியர் செல்லமாக புரூஸ் எனக் கூப்பிட அதுவே பிறகு அவரது பெயராக நிலைபெற்றது.
புரூஸ் லீக்கு மூன்று மாதங்கள் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12 வயதுவரை லா செல் கல்லூரியில் மேல்நிலைக் கல்வி பயின்றார் புரூஸ் லீ. பின்னர் புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் தனது படிப்பை தொடர்ந்தார். 1959 ஆம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் ஹாங்காங் கேங்கஸ்டர் ஒருவரின் மகனை தாக்கினார் புரூஸ் லீ. இந்த சம்பவத்தால் பயந்து போன அவரது தந்தை, புரூஸ் லீயை சான் பிரான்சிஸ்கோவிற்கு அனுப்பி வைத்தார். சீன வம்சாவளியைச்  சேர்ந்தவர் என்றாலும் அமெரிக்காவில் பிறந்தவர் புரூஸ் லீ. அதன்பிறகு பாரம்பரிய கல்வி பெற சீனாவிற்கு அனுப்பப்பட்டார். தற்காப்புக்  கலையை ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்த லீ,  சீனத்  தற்காப்பு கலையை உலகம் முழுவதும் பரப்புவதற்கு பள்ளி ஒன்று தொடங்கினார். அவரது பள்ளியில் குங்பூ, கராத்தே,  ஜுடோ, குத்துச்சண்டை போன்ற அனைத்து வடிவங்களும் ஒன்றுசேர்த்து புதிய கலையை கற்றுக்கொடுத்தார். கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களைச்  சேர்த்து புரூஸ் லீ உருவாக்கிய புதிய தற்காப்பு கலை அவரது பெயரிலேயே ‘புரூஸ்லீ குங்பூ’ என அழைக்கப்பட்டது. இதனைத்  தத்தவப் பாடத்துடன் சேர்த்து ‘ஜே கேடி’ எனும் புதிய பயிற்சியை அறிமுகப்படுத்தினார். இதனை பயிற்றுவிக்க பல பள்ளிகளையும் திறந்தார். தற்காப்பு கலையின் உச்சத்தைத்  தொட்ட புரூஸ்லீ தத்துவம் முதுகலை படித்தவர். மேலும் இவர் ஆழ்ந்த தத்துவ ஞானம் உடையவர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு நிகழ்வே. தற்காப்புக்  கலையை இன்று உலகம் முழுவதிலும் கொண்டு சென்ற இவர் குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

சண்டைக்கு புரூஸ் லீ அளித்த விளக்கம் ஒன்று. களத்தில் எதிரி இருக்கக்கூடாது. ஆனால் சண்டை நடக்கவேண்டும். ஒரு விறுவிறுப்பான நாடகம் போல சண்டை அமைய வேண்டும். போட்டிக் களத்தில் யார் வேண்டுமானாலும் எதிரியாக வரலாம், எப்படி வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் வேறு சிந்தனையோ, கனவோ இருக்கக்கூடாது. சண்டை குறித்து எந்த அச்சமும், பதட்டமும் இல்லாமல் சண்டைக்குத்  தயாராக இருக்க வேண்டும். எதிரி தடுக்கும்போது தாக்கவும், எதிரி தாக்கும்போது தடுக்கவும் வேண்டும். சண்டை இல்லாத சண்டைதான் என் கனவு என்று சொன்னார் புரூஸ் லீ.
புரூஸ்லீயின் தந்தை ஒரு நடிகர் என்பதால் புரூஸ்லீயின் நடிப்பு வாழ்க்கை சிறு வயதிலேயே ஆரம்பமானது. தனது  18 வயதிற்குள் 20 படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது பேட்மேன் பட தயாரிப்பாளர் வில்லியம் டோசியர் பார்வையில் இவர் பட்டது இவர் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. புரூஸ்லீ அமெரிக்காவில் இருந்தபோது ‘தி கிரீன் ஹார்னட்’, ‘அயர்ன் சைடு’, ‘ஹியர் கம் த பிரைடுசு’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.

அமெரிக்காவில் இருந்து ஹாங்காங் திரும்பிய இவருக்கு கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் சௌ ஒரு படத்தில் நடிக்குமாறு ஒப்பந்தம் செய்துக்கொண்டார். ரேமண்ட் தயாரிப்பில் இவரது முதல்படம் 1971ஆம் ஆண்டு  பிக்பாஸ் என்ற பெயரில்  வெளிவந்தது. வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும், ’Crawn Colony Cha Cha’ சாம்பியனாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது. இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. இவரது அதிவேக சண்டைகளும் கண்களில் அவர்காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூல் பெற்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த 1972ல் வெளிவந்த ‘பிஸ்ட் ஆப் பியூரி‘ திரைப்படம் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து மிகப்பெரிய வெற்றியை மீண்டும் பெற்று தந்தது. அதே ஆண்டில் புரூஸ்லி கதை எழுதி இயக்கிய ‘வே ஆப் தி  டிராகன்‘ திரைப்படம் புரூஸ்லீயின் புகழ் உலகளவில் கொண்டு சென்றதோடு அவருடன் சேர்ந்து குங்பு கலையையும் பிரபலமடைய வைத்தது. வே டூ த டிராகன் படத்தின் கிளைமாக்ஸில், தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த கராத்தே மாஸ்டர் சக்நாரிஸை புரூஸ் லீ பயன்படுத்தினார். ரோமில் எடுக்கப்பட்ட இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் புரூஸ் லீயும் சக்நாரிஸும் மோதுவதை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அத்தனை ஆக்ரோஷமான அற்புதமான சண்டைக்காட்சி இது.

தன்  இளம்வயதிலேயே எதிர்பாராதவிதமாக மரணத்தைத்  தழுவிய அவரால் சில படங்கள் மட்டுமே நடிக்க முடித்தது என்றாலும், அவரது மிகப்பெரிய வெற்றிப்படம் உலகோர் அனைவராலும் மறக்க முடியாத திரைப்படம் ‘என்டர் தி  டிராகன்‘. இந்த படத்திற்கு ஏராளமான சிறப்புகளும் உண்டு. ஒட்டுமொத்த படமாக பார்க்கும்போது வித்தியாசமான காட்சி அமைப்பு, திடுக்கிடும் திரைக்கதை உத்தி, கண்களில் ஒற்றிக்கொள்ளும் ஒளிப்பதிவு, செவியைக்  குளிர வைக்கும் இசை எதுவுமே இல்லையென்றாலும், நரம்புகள் முறுக்கேறச் செய்யும் சண்டை காட்சிகளால் ரசிகனைக்  கட்டிப்போடச்  செய்தது  ‘என்டர் த டிராகன்’. இந்தப்  படம் உலகெங்கும் உள்ள ஆக்சன்  ரசிகர்களை அதிரவைத்தது. புரூஸ் லீ என்று பெயர் மந்திரம் மாதிரி உச்சரிக்கப்பட்டது. இதனால் உலகைக்  குலுக்கிய படங்களின் பட்டியலை சேர்ந்தது  ‘என்டர்  த டிராகன்’. இதன் வசூல் சாதனை அமெரிக்காவில் மட்டும் 850,000 டாலர்கள். ஆனால் அந்த வெற்றியை அவரால் பார்க்க முடியாமல் போனது.

தலை வலி என்று படுக்கச்  சென்றவருக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழுந்திரிக்கவில்லை. பிறகு ஹாங்காங் குயீன் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமல் மரணத்தைத்  தழுவினார். இன்றளவும் அவர் மரணம் ஒரு புரியாத மர்மமாகவே உள்ளது.
முப்பது வயதிலேயே புகழின் எல்லா சிகரங்களையும் தொட்டுப் பார்த்தவர், முன் கோபத்துடன் நடந்து கொண்டது, ஏராளமான எதிரிகளை அவருக்குச்  சம்பாதித்து கொடுத்தது. படத்தில் இவருடன் சண்டையிடுகிறவர்கள் மூக்கை உடைத்துக் கொள்வதும், பற்கள் பறி கொடுப்பதும் சாதாரணம். திரையில் இவ்வளவு ஆக்ரோசமாக இவ்வளவு உண்மையாக நிகழ்த்திக்  காட்டியவர் புரூஸ்லீக்கு முன்பும் இல்லை, பின்பும் இல்லை என உறுதியாகக் கூறலாம். அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது முழு உருவ வெண்கலச்  சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை கடந்த நூற்றாண்டின் சமூகத்தைப் பாதித்த சிறந்த 100 மனிதர்களின் பட்டியலில் புரூஸ்லீயையும் சேர்த்துள்ளது. ஒரு கலையை எப்படி நேசிப்பது, அது எங்கனம்  உச்சத்துக்குக்  கொண்டு செல்வது என்பதைக்  கற்றுக் கொள்ளும் வண்ணம் அனைவருக்கும் அரிய ஆசானாகவே இன்னும் விளங்குகிறார்.

“ஞான நல்லறம்வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.. .
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்.. .
இலகு சீருடை நாற்றிசை நாடுகள் 
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்து 
இங்கே திலக வாணுதலார் 
தங்கள் பாரத தேசம் ஓங்க 
உழைத்திடல் வேண்டுமாம்”.

என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப இன்று தமிழ் பெண்கள் அனைத்து துறையிலும் தன் கால் தடங்களை பதித்துக் கொண்டிருப்பதை எண்ணினால் இதுதான் பாரதி கண்ட புதுமை பெண்களா என்ற மகிழ்ச்சியும் வியப்பும் ஆட்கொள்கிறது அடிமனதில். நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்பதே அனைவரது கருத்தாக இருந்தது. ஆனால் இன்றையக்காலத்தில் அந்த எண்ணம் மாறி விண்வெளி துறையில் கால் பதிக்கும் அளவு பெண்கள் வளர்ந்துள்ளனர் என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய தருணம்.

ரிசப்ஷனிஸ்ட் டூ பெப்சிகோ சி.இ.ஓ. இந்திரா நூயி:

‘இந்திரா நூயி‘…உலக வர்த்தக மற்றும் பொருளாதாரத்தில் வலிமைமிக்க குரலாக ஒலித்துக்கொண்டிருப்பவர். உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானமான நிறுவனமான ‘பெப்சிகோ’வின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், தலைவராகவும் பணியாற்றி வரும் இந்திரா நூயியின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணம். 1955-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி சென்னையில் பிறந்த இவரது முழுப்பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பி.எஸ்ஸி படிப்பும், கொல்கத்தா ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ படிப்பும் முடித்த கையோடு சிறிது காலம் ஏ.பி.பி என்னும் வர்த்தக நிறுவனத்திலும், பின் ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸ்’ நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராகவும் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து சென்னை பியர்ட்செல் ஆடை நிறுவனத்தில் பணி செய்தார். தன்னுடைய பணி வெற்றிகரமாக இருந்தாலும் கார்ப்பரேட் உலகில் நிலவும் போட்டியை எதிர்கொள்ள எம்.பி.ஏ படித்தது போதாது என்று தனக்கு நெருங்கிய பலரிடமும் தெரிவித்தார். அதனால் தனது வேலையை விட்டுவிட்டு, அமெரிக்காவின் ‘யேல்’ பல்கலைக்கழகத்தில் பப்ளிக் மற்றும் பிரைவேட் மேனேஜ்மென்ட் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்திலேயே படிப்பு செலவுக்காக ஒரு நிறுவனத்தில் பார்ட் டைம் ரிசப்ஷனிஸ்டாக பணியாற்றினார். முதுகலைப் பட்டம் பெற்றதும் மோட்டோரோலா, ஏசியா பிரவுன் பொவரி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு இறுதியாக 1994-ம் ஆண்டு பெப்சி குளிர்பான நிறுவனத்தில் Strategic Planning & Development பிரிவின் துணைத் தலைவராக சேர்ந்தார்.
பெப்சி நிறுவனத்தில் சேர்ந்த பிறகு இவரது வாழ்க்கையும், அந்நிறுவன வளர்ச்சியும் உலகம் முழுக்கவும் புகழ்பெற்றன. பெப்சி நிறுவனத்தில் சேர்ந்ததும், ‘தற்போதைய நம் வளர்ச்சியும், முன்னேற்றமும் போதாது. இன்னும் நம் தயாரிப்புகளை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கூட்டு முயற்சியுடன் பணியாற்ற வேண்டும்’ என அடிக்கடி சக ஊழியர்களிடம் சொல்வார். சொல்வதோடு மட்டுமில்லாமல் ஊழியர்களுடன் சேர்ந்து தயாரிப்பு, சேகரிப்பு, விற்பனை, கள ஆய்வு போன்ற பல பணிகளை தானே நேரடியாக களம் இறங்கினார். வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப பெப்சி மற்றும் இதர விற்பனைப் பொருட்களின் வடிவம், அளவு, தரம் ஆகியவற்றில் பல மாறுதல்களைப் புகுத்தினார். இவரது வருகைக்குப் பிறகு 45 ஆண்டுக்கும் மேலான அந்நிறுவன வளர்ச்சி பெரிய முன்னேற்றப் பாதைக்குச் சென்றது. இதனால் 2006-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

சாந்தி துரைசாமி:

சக்தி மசாலாவின் நிர்வாகி. இவரின் அயராத உழைப்பும் ஊனமுற்றவர்களுக்கு வேலை வாய்ப்பும் தந்த கருணை மிகு பெண்மணி. சாதாரண ஏழ்மை குடும்பத்தில் பிறந்த இவர் தன் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக தன் படிப்பை ஆறாம் வகுப்புடன் நிறுத்திக்கொண்டு தன் தம்பி படிப்பிற்காகவும் தன் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டும் தன்னால் இயன்ற அளவிற்கு குடும்பத்திற்கு உதவி புரிந்துள்ளார். தன்னால் முயன்ற அளவு சில வேலைகளை வீட்டிலிருந்தே செய்தும் வீட்டிற்கு வருவாய் ஈட்டியுள்ளார். இவரது உதவும் மனப்பான்மை இன்று பல ஊனமுற்றவர்களுக்கும் தன்னாலும் உழைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. இவர் உற்சாகத்தையும், இன்முகத்தையும் ஒருங்கே பெற்ற பண்பாளர்,  கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றிகளை தன் வசப்படுத்தி வருபவர். பல்வேறு சமூக நல அமைப்புகளில் பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்படுபவர் என்ற பாராட்டுக்குரியவர். இவரது சக்தி மசாலா நிறுவனம் ஈரோட்டில் உள்ள மாமாரத்துபாளையம் என்ற இடத்திலுள்ளது. இவர் பல விருதுகளையும் பெற்ற போற்றத்தக்க ஒரு பெண்மணியே.
40 ஆண்டு களுக்கு முன்பு சிறு முதலீட்டில் வணிகத்தை தொடங்கிய அவர், தனது கணவர் துரைசாமியின் பங்களிப்புடன் ‘சக்தி மசாலா’ நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். சக்திதேவி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி மருத்துவமனை, மறுவாழ்வு மையம், சிறப்புப் பள்ளி ஆகியவற்றோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மரம் நடும் பணி, அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது என்பது உட்பட பல சேவைகளை ஆற்றிவருகிறார். நாடும் நம் சந்ததியினரும் நலமுடன் வாழ பசுமை உலகம் படைப்பதில் தீவிரமாக கடந்த எட்டு ஆண்டுகளாக மரம் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேமிப்புத் திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். முதல் இரண்டு ஆண்டுகள் வரை மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர் கேட்கின்ற போதெல்லாம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். இதுவரை 1,00,000 மரக்கன்றுகளுக்கு மேல் வழங்கியுள்ளோம். மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு, வேலியிட்டு நீர்பாய்ச்சி பராமரித்தும் வருகிறார்கள்.

மல்லிகா ஸ்ரீனிவாசன்:

மல்லிகா சீனிவாசன் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபராவார். தொழில் நுட்ப அறிஞருக்கான அங்கீகாரம் பெற்ற ஒரு சிந்தனையாளர் ஆவார்.  இந்திய விவசாயத்துறை வணிகத்திற்கும் கல்வித்துறைக்கும் சிறந்த பங்களிப்பு மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர். தற்போது இவர் 1960 ஆம் ஆண்டில் சென்னையில் துவங்கப்பட்ட TAFE – டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார். உலகிலேயே மூன்றாவது பெரிய டிராக்டர் தயாரிப்பாளரும், இந்தியாவில் இரண்டாவது பெரிய நிறுவனமான TAFE 150,000 க்கும் மேற்பட்ட டிராக்டர்களை வருடாந்திர விற்பனையாக இந்தியா உட்பட ஐரோப்பா, அமெரிக்கா போன்ற 82 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது.
25 வருட இடைவெளியில், டிராக்டர் வணிகத்தின் சுழற்சியின் திறனைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய டிராக்டர்களின் தரம் வாய்ந்த தயாரிப்பாளராக TAFE ஐ, ஒரு வலுவான மற்றும் தரமான அமைப்பாக நிறுவியுள்ளது. தயாரிப்பு மற்றும் செயல்முறை மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், இந்நிறுவனத்தின் விரிவாக்கத்தை தொடர்ந்து உறுதிசெய்துள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த சக்தி வாய்ந்த பெண்மணிகளில் ஒன்றாகவும், இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர்களில்  ஒருவராகவும் அறியப்பட்ட மல்லிகா ஸ்ரீனிவாசன் “டிராக்டர் ராணி” என்று அழைக்கப்படுகிறார்.

“ஒரு வியாபாரத்தை நடத்த நீங்கள் பணத்தை நேசிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒரு நிறுவனத்தை உருவாக்க, ஒரு சிறந்த குழுவை உருவாக்க நீங்கள் ஒரு கனவைக் கொண்டிருக்க வேண்டும். அந்த கனவு கல்வி மற்றும் ஆரோக்கியமான சமூக சூழலை உடையதாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தனது நிறுவனத்தில் கூட பெண் தொழிலாளர்களை அதிகம் ஊக்குவிக்கிறார். தொழில் மற்றும் வணிகத் துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக டாஃபே குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.