10 வினாடிகளில் சரிந்த 19 அடுக்குமாடி கட்டிடங்கள்! - வீடியோ இணைப்பு

சீனாவில் உள்ள ஹூபேமா காணம் ஹன்கூ நகரில் பழமையான அடுக்கு மாடி கட்டிடங்கள் இருந்தன. அவற்றை வெடி வைத்து இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

அதனால் 15 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து 19 கட்டிடங்களை தகர்க்க, 5 டன் வெடிபொருட்கள் 19 கட்டிடங்களிலும் நிரப்பப்பட்டன. அவை கட்டிடங்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களில் வைக்கப்பட்டன. பின்னர் நள்ளிரவில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் தகர்க்கப்பட்டது. அதையடுத்து 10 வினாடிகளில் 19 அடிக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. அந்த கட்டிடங்கள் முறையே 7 முதல் 12 மாடிகளை கொண்டவை.

அவற்றில் ஒன்று 707 மீட்டர் உயரம் கொண்டது. இது உலகிலேயே மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாக இருந்தது. ஹன்கூ வர்த்தக நகரமாகும். இங்கு இதுவரை 32 அடுக்குமாடி கட்டிடங்கள் இதே போன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் ஒரே நேரத்தில் இது போன்று அதிக கட்டிடங்கள் இடித்து தகர்க்கப்பட்டது.

 இதுவே முதல் முறையாகும். கட்டிடங்களை தகர்ப்பதற்கான பணிகள் சுமார் 4 மாதங்களாக நடைபெற்றதாக சீன என்ஜினீயரிங் அகாடமி நிபுணர் வாங்ஸுகுயாங் தெரிவித்தார். 19 கட்டிடங்களும் இடிக்கப்பட்டவுடன் ஏற்படும் புகையை கட்டுப்படுத்த தன்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது. இவ்வாறு செய்வதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனவும் கூறினார்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

சீனாவில் உள்ள ஹூபேமா காணம் ஹன்கூ நகரில் பழமையான அடுக்கு மாடி கட்டிடங்கள் இ

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.