Latest Post

14 வயது சிறுமியை ஏழு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி நிர்பயா கொடுமை நிகழ்ந்த பின்பும் கூட சட்டம் ஒழுங்கில் கெடுபிடியும் இல்லை, ஆண்கள் மனதில் ஈரமும் இல்லை. பீகார் மாநிலம் லகிசாராய் மாவட்டம் லகோசக் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு தூக்கத்தில் இருந்து எழுந்த சிறுமி சிறுநீர் கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். அப்போது பின்னால் இருந்து சிறுமியை கட்டிப்பிடித்த சிலர் அருகில் இருந்த மைதானத்திற்கு இழுத்துச்சென்றுள்ளனர்.ஆறு, ஏழு பேர் இருந்ததாகவும், அதில் இரண்டு பேர் தங்கள் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் என்றும் அந்த சிறுமி கூறியுள்ளார்.அப்போது சுயநினைவை இழந்த சிறுமி கண் விழித்து பார்த்த போது ரயிலில் இருப்பதை உணர்ந்துள்ளார்.

அவருக்கு அருகில் இருந்த இரண்டு பேர் ரயிலில் இருந்து சிறுமியை வெளியே தள்ளிவிட்டுள்ளனர்.குற்ற செயலில் ஈடுபட்ட ஒருவன், சிறுமி படிக்கும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிப்பவன் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமியின் தாத்தா விடியற்காலை 3 மணிக்கு எழுந்து பார்த்த போது சிறுமி காணவில்லை என்று கூறியதை அடுத்து வீட்டில் உள்ளவர்கள்தேட தொடங்கியுள்ளனர். 12 மணி நேரத்திற்கு பின்னர் கியுல் ரயில் நிலையத்திற்கு அருகே சிறுமியை கண்டறிந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.முதலில் லகிசராய் சதார் மருத்துவமனையில் சிறுமியை சேர்த்துள்ளனர்.

ஆனால் மருத்துவர்கள் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சொன்னதால் அங்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. மீடியாவிற்கு விஷயம் தெரிந்ததை அடுத்து மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்கினர் என்கிறார் சிறுமியின் சதோதரர்!சிறுமிக்கு ரத்தப்போக்கு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. மேலும் இடுப்பில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சிறுமியின் வாக்குமூலத்தின் படி வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ஆண்களின் கடந்த காலத்தை பெண்கள் சுமைதாங்கிகளாக தாங்கிக் கொள்கிறார்கள். அதன் சுவடு சிறிதும் தெரியாமல் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் மனப்பக்குவம் பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.

அந்த பக்குவம் ஆண்களிடம் உள்ளதா என்பது கேள்விக்குறியே.

ஆண் கடந்த காலத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைப்பது போல, பெண் தன்னுடைய கடந்த காலத்தை ஆணிடம் வெளிப்படுத்த தயங்குகிறாள்.

பெண்ணானவள் எப்போதுமே குடும்பத்தின் கவுரவமாக, எதிர்காலமாக கருதப்பட்டாள். இதுவும் ஒருவகை அடிமைத்தனம் தான். இன்று முன்னேறிய சமூகத்தில் திருமணம் பல மாற்றங்களுக்குஉட்பட்டிருக்கிறது.

பெண்கள் தயக்கமின்றி மறுமணம் செய்து கொள்கிறார்கள். இழந்த வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் கடந்த காலம் எனும் திரையை மட்டும் விலக்க தயங்கும் சூழ்நிலை இன்றும் இருந்து வருகிறது. காரணம் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயம்தான்.

பெண்கள் நம்மைப் போல உயிரும் உணர்வும் உள்ள ஜீவன்கள் என்பதை ஆண்கள் ஏற்றுக் கொள்ளவே பலகாலம் பிடித்தது.

ஆண்கள் தன்னைப் போலவே பெண்களும் உயிருள்ள பிரஜைகள் என்பதை கருத்தில் கொண்டாலே போதுமானது. அவர்கள் கடந்த காலத்தை பரந்த மனதுடன் உற்று நோக்கி அவர்களுடைய நேர்மையான மனதை அஸ்திவாரமாக கொண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்.

ஏனென்றால் கடந்த காலத்தை விட நிகழ்காலம் முக்கியமானது. அது ஒளிமயமாக மாற வேண்டுமானால் கடந்த கால அவலங்களை தூக்கிப் போட வேண்டும்.

அதற்கு உயர்ந்த உள்ளம் தேவை. இது ஒவ்வொரு ஆணிடமும் இருக்க வேண்டும். இருந்தால் அது அவர்களுடைய வாழ்க்கையை வளமாக்கும்.

இந்த உலகில் அப்பா அம்மா இறந்தால் கூட கண்ணீர் விடுவார்கள், ஆனால் காதலியோ காதலனோ இறந்தால் தான் உயிரையே விடுவார்கள் என்ற வசனங்கள் எல்லாம், கேட்பதற்கும் பேசுவதற்கும் வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்.

ஆனால், நிஜ வாழ்க்கையில் சற்றும் எடுபடாத ஒன்று, சிலர் காதல் தோல்வி அடைந்துவிட்டால், உலகமே இருண்டுவிட்டது போன்று எண்ணி ஒரு மூலையில் உட்கார்ந்து விடுவார்கள்.

ஆனால், எத்தனை பேருக்கு தெரியும் காதல் தோல்விக்குள்ளும் ஒளிமயமான வாழ்க்கை மறைந்து இருக்கிறது என்று.

வாழ்க்கை என்பது நிலையானது அல்ல, எல்லாமே கடந்து போவது தான் என்பதை அழுத்தமாக உணர்த்தும் செயல் காதல் தோல்வி.

எதற்காகவும் கண்ணீர் சிந்தி பயனில்லை, நமது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டியது மட்டுமே நமது பணி.

காதல் தோல்வி என்பது வாழ்க்கையின் வலிமையை தரவல்லது. மனதளவில் முதலில் பாதிப்படைந்தாலும், பின்னாளில் இதே வலிமையாக அமைகிறது.

மேலும் வாய்ப்புகள் இருக்கிறது என உணர்த்துவதும் காதலே. முதல் தோல்வி முற்றிலும் தோல்வி அல்ல. அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி பெறலாம் எனும் பாடத்தை கற்பிப்பது காதல் தோல்வி தான்.

வாழ்க்கையில் விளையாட்டாக இருக்கும் ஆண்களை முதிர்ச்சி அடைய வைப்பது சில காதல் தோல்விகள் தான். இவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன, வாழ்க்கையின் அடுத்தக் கட்டம் என்ன என்று உணர்த்துவதும் சில காதல் தோல்விகள் தான்.

நமது வாழ்க்கையில் தானாக நடக்கும் அனைத்துமே நன்மைக்கே என்பதை உணர்த்துவது காதல் தோல்வி தான்.

நூற்றில் பத்து பேர் தங்களுக்கான சிறந்த துணையை இழப்பது உண்டு. ஆனால், மற்ற 90 பேர் காதல் தோல்விக்கு பிறகு தான் தங்களுக்கு ஏற்ற உண்மையான துணை யாரென அறிகிறார்கள், இதுவே நிதர்சனமான உண்மை.

இத்தாலியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் முத்தமிடுகையில் ஒரு தெளிவற்ற வைரஸ் பரவுவதாக சொல்கிறார்கள்.

இது பெண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

மேற்படி HHV-6A வைரஸ் முத்தமிடப்படுவதால் தொற்றுவதாக இனங்காணப்பட்டது இதுவே முதல் தடவையல்ல.

ஆனாலும் அது மலட்டுத்தன்மையுடன் சம்பந்தப்பட்டிருப்பது அறியப்பட்டது இதுவே முதல் தடவை.

இவ் ஆய்வின் போது பரிசீலிக்கப்பட்ட 30 கருத்தரிப்பு பிரச்சனையுள்ள பெண்களில் 13 பேர் அதாவது 43 சதவீதத்தினரில் HHV-6A வைரஸ் இருப்பது இனங்காணப்பட்டது.

மீதி 36 ஆரோக்கியமான பெண்களில் மேற்படி வைரஸ் அவதானிக்கப்படவில்லை.

இவ் HHV-6A வைரஸ் மற்றும் அதன் குடும்பமான HHV-6B வைரஸ் ஆனவை எந்தவொரு அவதானிக்கக்கூடிய அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை.

இவ் ஆய்வில் HHV-6A வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்களிலும் Cytokines அளவு அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட்டது.

இவை கருக்கட்டப்பட்ட முட்டையின் வளர்ச்சியை தூண்டும் சமிக்ஞைப் புரதங்களாகும்.

அதேநேரம் Estradiol ஓமோனின் அளவும் கூடுதலாக காணப்பட்டமை, இவ் ஓமோன் HHV-6A வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியப்பாட்டை அதிகரிக்கலாம் என விஞ்ஞானிகளை சந்தேகப்பட வைத்தது.

ஆனாலும் HHV-6A அல்லது HHV-6B க்கு எதிரான சிகிச்சைகள் எதுவும் தற்போது நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்து கொள்வது சுலபம். திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக இருப்பது என்பது கணவன் மனைவி என இருவரும் சேர்ந்து விளையாடும் ஒரு விளையாட்டே. நீங்கள் புதிதாக திருமணம் ஆனவர் என்றால், தினமும்

உங்கள் துணையைப் பற்றி புதிதான விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் சாகசங்களை உங்கள் திருமண வாழ்க்கை உங்களுக்கு அளிக்கும்.

ஆனால்காலம் நகரும்போது , குழந்தைகள் மற்றும் பொறுப்புகள் என வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற் படும். அப்போது காதல் என்ற அந்த தீப்பொறி மெதுவாக மறையத் தொடங்கும். உங்கள் துணையுடன் ஒரே மாதிரி யான வாழ்க்கையை வாழ தொடங்கி விடுவீர்கள். ஒரே பாட்டுக்கு நடனம் ஆடி க்கொ ண்டிருப்பதால் அதன் அனைத்து நடன அசைவுகளும் உங்களுக்கு தெரிந்தவையாக தா ன் இருக்கக்கூடும்.

அப்படி ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்வதால், வாழ்க்கையின் மீது சலிப்பு தட்டி விட்டதா? அப்படியானால் உங்கள் உறவில் சில புதுமைகளையும், புத்துணர்ச்சியையும் புகுத்த வே ண்டும்.

உங்களையும் உங்கள்துணையையும் மீண்டும் ஒரு முறை கண்டுபிடியுங்கள். ஏ தாவது காபி ஷாப் செல்லுங் கள், ஒளிந்து விளையாடுங்கள், பப் போன்ற இடங்களுக்கு சேர்ந்து செல்லுங்கள். வீட்டிற்கு சென்றால் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களான குடும்பம், குழந்தைகள், பில்கள் போன்றவற் றை தவிர எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுங்கள். காதலி த்த நாட்களில் எப்படி இருந்தீர்கள் என்பதை நினைவு கூர்ந்து அந்த சொர்க்க நாட்களை மீண்டும் கொண்டு வாருங்கள்.

உங்கள் காதலை சைகள், முத்தங்கள், முக்கியமாக வார்த்தைகளால் அடிக்கடி வெளிப்படுத்துங்கள்.”ஐ லவ் யூ” என கூறுங்கள். அப்படிசெய்யும் போது அவரின் கண்ணை பார்த்து சொல்லுங்கள்.

வெளியிடங்களுக்கு செல்லும் போ து உங்களின் ஸ்பரிசம் அவர் மீது அதிகம் படுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கைக ளைப் பற்றிக் கொள்வது, கட்டிப் பிடிப்பது, முகத்தை, கூந்தலை, கழுத்தை தொடுவது போன்றவற்றை செய்யலாம். இப்படி உடலுறவை சம்பந்தப் படுத்தாமல் அரவணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்மீது நீங்கள் கொண்டிருக் கும் நெருக்கம் அவருக்கு தெரிய வரும். வெட்கப் பட்டு ஒதுங்கி விடாதீர்கள். எப்படி ஒருவர்மீது ஒருவர் காத ல், அன்பு மற்றும் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை உங்கள் குழந்தைகள் பார்க்க வும், உணரவும் செய்யுங்கள்.

உங்கள் துணையை எதற்காக வும் புறக்கணிக்காதீர்கள். வாரம் ஒரு முறையாவது ஆச் சரியங்களை அளியுங்கள். அது எதுவாக வேண்டுமா னாலும் இருக்கலாம் – அது காதல் கடிதம் அல்லது பூச் செண்டு அல்லது வார இறு தி சுற்றுலா என எதுவாக வேண்டுமானாலும் இருக்க லாம். திடீரெனதோன்றுவ தை செய்யுங்கள்! அது மழை யில் நடப்பதாக இருக்கட்டு ம் அல்லது வேலைக்கு விடுப்பு விடுவதாக இருக்கட்டு ம் அல்லது படத்திற்கு போவதாக இருக்கட்டும். உங்க ள் உறவில் மீண்டும் அந்த பைத்தியகாரத்த னங்களை கொண்டு வாரு ங்கள்.

எதற்கும் காலம் கடந்து போ கவில்லை. உங்களுக்கு எந் தவகை நடனம் வருகிற தோ அதனை ஆடுங்கள். அது சல்சா, பால்ரூம் நடன ம் அல்லது டாங்கோ என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது உங்கள் கூச் சங்கள் மற்றும் தடைகளை நீக்குவதோடு மட்டுமல்லாது, உடல் மற்றும் உணர்ச்சி ரீதியா னவேறுபாடுகளை கொண்டு ள் ள நீங்கள் இருவரும் ஒன் றாக இணைய வைக்க உதவும்.

உங்கள் தோற்றத்தின் மீது அக்கறை கொள்ளாமல் சோ ம்பேறியாக இருக்காதீர்கள். வெளியே படத்திற்கு செல்லு ம் போதோ அல்லது படத்தி ற்கு செல்லும் போதோ உங்கள் துணையுடன் செல்லும் போது நீங்களும் அழகாக தெரிய வேண்டும் என அவர் விரும்புவார் அல்லவா? சின்ன சின்ன விஷயங்க ள் கூட அந்த காதல் பொறியை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். நேரம்கிடைக்கவில்லை என்று ஏதாவது சாக்கு போக்குசொல்லாதீர்கள். இந்த சாக்குகளுக்கு ஒரு தீர்வை கண்டுபிடியுங்கள் . அதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி உங்கள் துணை மற்றும் திருமண வாழ்க்கைக்காக தானே!

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.