Latest Post

கல்யாணில், 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை கொண்டார். இதில், 2 குழந்தைகள் இறந்தன. ஒரு குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

கணவன், மனைவி சண்டை
தானே மாவட்டம் கல்யாண் அம்பிவலியில் உள்ள மோஹனா, காத்கரிபாடாவில் வசித்து வருபவர் பிரதீப் வாக்(வயது40). மீனவர். இவரது மனைவி லட்சுமி(35). இந்த தம்பதிக்கு விஷால்(12), வன்ஸ்(7) என்ற இரு மகன்களும், நாஜூகா(10) என்ற மகளும் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு கணவர், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

அப்போது பிரதீப் வாக் மனைவியை திட்டியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல பிரதீப் வாக் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுவிட்டார்.

எலி மருந்து
இதற்கிடையே கணவர் திட்டியதால் மனமுடைந்த நிலையில் இருந்த லட்சுமி திடீரென வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து காலை உணவில் கலந்து தனது 3 குழந்தைகளுக்கும் சாப்பிட கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டார். தாய் விஷம் கலந்த உணவை கொடுத்ததை அறியாத குழந்தைகள் மூவரும் அதை சாப்பிட்டனர்.

சிறிது நேரத்தில் 3 குழந்தைகளும் வயிற்றுவலியால் அலறித்துடித்தனர். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, வீட்டுக்குள் லட்சுமி வாயில் நுரை தள்ளியபடி துடித்து கொண்டிருந்தார். மேலும் 3 குழந்தைகளும் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள கல்யாண் மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.

3 பேர் சாவு
அங்கு அவர்களது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக 4 பேரும் மும்பை சயான் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே லட்சுமி, சிறுமி நாஜூகா, சிறுவன் வன்ஸ் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவன் விஷால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கல்யாண் அம்பிவிலி போலீசார் மருத்துவமனைக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பிரதீப் வாக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்பிவலி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நைஜீரியாவின் பெனு மாநிலத்தின் உக்புகு பகுதியை சேர்ந்தவர் உரோகோ ஓனோஜா. தொழிலதிபரான இவருக்கு மொத்தம் 6 மனைவிகள். சம்பவத்தன்று இரவு உக்புகு நகரில் உள்ள மதுபான பார் ஒன்றில் இரவு முழுவதும் மூக்கு முட்ட குடித்து விட்டு அதிகாலையில் வீடு திரும்பினார்.

அப்போது கடைசி மனைவியுடன் உடலுறவு கொள்ளும் ஆசை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த இளம் மனைவியை மட்டும் படுக்கையறைக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். கடைசி மனைவியை மட்டும் தனி பெட்ரூமுக்கு உரோகோ அழைத்து செல்வதை மற்றொரு மனைவி பார்த்து விட்டார்.

அதன்பிறகு அவர் பிற மனைவிகளையும் தட்டி எழுப்பி உரோகோவும், கடைசி மனைவியும் இருந்த படுக்கை அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

பின்னர் தங்கள் கையில் இருந்த உருட்டு கட்டையால் உரோகோவை அடித்துள்ளனர். கடைசி மனைவிக்கு மட்டும் என்ன?.. அவளுடன் மட்டும் உல்லாசமாக இருப்பது ஏன்?… என்று அவரை திட்டியுள்ளனர்.

அவ்வாறு திட்டினதோடு நிறுத்திக்கொள்ளாமல் கத்தியைக் காட்டி மிரட்டியதால் அவர்களுடன் உல்லாசமாக இருப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து 5 மனைவிகளுடன் உல்லாசமாக இருந்த பின்பு கணவர் திடீரென சுருண்டு கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

அடுத்தடுத்து மனைவிகளுடன் உடலுறவு வைத்து கொண்டால் இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து மாரடைப்பு ஏற்பட்டு உரோகோ உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கணவன் இறந்ததும் கடைசி மனைவியை தவிர மற்ற 5 மனைவிகளும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பலாத்காரம், கொலை வழக்குகள் பதிந்த போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

பேஸ்புக் புகழ் கல்பனா அக்கா, தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைப் பாடலாகப் பாடி அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தீபாவளி ஸ்பெஷலாக தனது பேஸ்புக் பக்கத்தில், ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலைப் பாடி ரசிகர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் பேஸ்புக் புகழ் கல்பனா அக்கா.

தமிழ் சினிமாவின் பிரபல பாடல்களை தன் கான குரலில் பாடி பேஸ்புக் பக்கத்தில் அப்லோட் செய்வது தான் கல்பனா அக்காவின் தலையாய வேலை. கல்பனா பேல்ஸ் பிறந்தது யாழ்பாணத்தில். மேற்படிப்பை இந்தியாவில் பயின்ற இவர், தற்போது ஆஸ்திரேலியா சென்ற இவர் மெல்பேர்ன் பகுதியில் வசித்து வருகிறார்.

இவரது முழுப்பெயர் கல்பனா பாலேஸ்வரன். அவ்வப்போது தனது காந்தக் குரலால் பாடல்களைப் பாடி ரசிகர்களைக் குஷியாக்கும் கல்பனா, கபாலி ரிலீசான சமயத்தில் நெருப்புடா பாடி அனைவரையும் அதிர வைத்தார்.

இவரை ரசிகர்கள் செல்லமாக அக்கா என்றே குறிப்பிடுகின்றனர். இவருக்கென பேஸ்புக்கில் ரசிகர் பக்கம் எல்லாம் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படியாக சும்மாவே பாடல்களைப் பாடி அசத்தும் கல்பனா அக்கா, தீபாவளியும் அதுவுமாய் தன் ரசிகர்களை ஏமாற்றுவாரா? இதோ தனது தீபாவளி வாழ்த்துக்களைப் பாடலாகவே பாடி பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். என்ஜாய் மக்களே…!

இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீது அண்டை நாடான யெமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது.

யெமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவை குறிவைத்து இன்று யெமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், மக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் அந்த ஏவுகணையை சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்துநிறுத்தி, தாக்கி அழித்ததாகவும் சவுதி அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணையை சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்துநிறுத்தி, தாக்கி அழித்த காணொளி..

சித்தூர் கிராமத்தில் வசிக்கும் தமிழ் குடும்பம் அது. கணவனை இழந்த பெண் ரமணி. அரசாங்க விடுதி ஒன்றில் ஒப்பந்த சமையல் பணி.

மூத்த மகன் ராஜி. தவிர இரண்டு பெண் பிள்ளைகள். ராஜியை கஷ்டப் பட்டு படிக்க வைத்தாள் ரமணி. அவனுக்கு பத்தாவதுக்கு மேல் படிப்பு ஏறவில்லை.

மற்ற இரண்டு பெண்களும் பள்ளி ஒன்றில் பத்தாவது, ப்ளஸ் ஒன் படித்து வந்தனர். ராஜி ஒரு இடத்தில் வேலை பார்க்க மாட்டான். அப்படியே வேலை பார்த்தாலும் ஏதாவது சண்டை போட்டு விட்டு வீட்டில் படுத்துக் கொள்வான்.

அம்மா எவ்வளவோ போராடியும் அவன் திருந்தவில்லை. அடுத்த வாரம் ஒரு செல்போன் ரீ சார்ச் கடையில் வேலைக்குச் சேர்ந்தான்.அங்கு பாடல்கள் ஏற்றிதருவது படங்கள் டவுன்லோடு செய்து கொடுப்பது போன்ற வேலைகளை கற்றுக் கொண்டான்.

அதில் ஆபாச சிடிகளும் விற்றான். செல் போன்களில் ஏற்றியும் கொடுத்தான். செல்போன் புதிதாக வங்கிக் கொண்டான். கை நிறைய காசு புழங்கியது. குடித்துவிட்டு வீட்டிற்கு வர ஆரம்பித்தான்.

மொத்தமாக அவன் சீரழிய ஆரம்பித்தான். உச்ச கட்ட கொடுமையாக தன உடன் பிறந்த தங்கைகள் தூங்கும் பொது ஆபாச படம் எடுத்தான். அதையும் பள்ளி மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து கொடுத்தான். ஏகப் பட்ட காசு ..!

அந்த ஊரில் உள்ள பெண்கள் குளிப்பது அவர்களை சீண்டுவது என இறங்கிய மகன் பற்றி ரமணிக்கு நிறைய புகார்கள் போயின. துடித்து விட்டாள்.

பள்ளி மாணவி த்லமைஆஸிரியரிடம் ராஜியின் தங்கைகளின் ஆபாச வீடியோ நிறைய உலாவுகிறது என்று படத்தையும் போட்டுக் காட்ட, பள்ளி நிர்வாகம் அதிர்ந்தது.அந்த அப்பாவி மாணவிகளை பள்ளியில் இருந்து துரத்திவிட்டார்கள்.

அம்மா, அந்த இரண்டு பிள்ளைகள் நொறுங்கிப் போயினர்..! தற்கொலைக்கு முயன்ற பிள்ளைகளை அம்மா காப்பாற்றினாள். ராஜி வீட்டை விட்டு எஸ்கேப் ஆனான்.

போலீஸும் ராஜியை தேடியது.ஒருநாள் இரவு வீட்டிற்கு வந்தான் ராஜி.யாரும் ஒன்றுமே பேசவில்லை.தனது உடைகளை எடுத்துக் கொண்டான்.நன்றாக குடித்திருந்தான். அந்த அம்மா ஒரு முடிவெடுத்தாள்.

சாப்பிட்டு போடா என்றாள். சரி என்றான்.மீண்டும் குடித்தான். அவனுக்குப் பிடித்த காரக்குழம்பு வைத்துக் கொடுத்தாள். காலையில் போ. போலீஸ் தேடுகிறது என்று கூறினாள்.

பின் புறம் மாட்டுக் குடில் ஒன்றில் தூங்கினான். நடு இரவு எழுந்தாள் அந்த தாய். போதையில் தூங்கிக் கொண்டிருந்த மகனின் அருகே போய் அழுதாள்.

செத்துப் போ மகனே..!!!பெரிய பாறாங்கல்லை எடுத்து ஒரே போடாக அவன் தலையில் போட்டுக் கொன்றாள்.

காலையில் போலீசுக்கு போன, ரமணி மகனைக் கொன்று விட்டதாக கதறி அழ அந்த பரிதாப பெண் பிள்ளைகள் அண்ணன் தங்களை ஆபாசப்படம் எடுத்து நெட்டில் விட்டதையும் பள்ளி துரத்தி விட்டதையும் கதறியபடி கூற போலீஸ் கண்ணீர் விட்டது.

சரிம்மா உங்க அம்மாவைக் கூட்டிட்டு வீட்டுக்குப் போங்க என்று அனுப்பியது சித்தூர் போலீஸ். கொலை செய்த நபர்களை தேடுகிறோம் என்று அறிவித்தது ..!!

நான்கு வருடங்களாக போலீஸ் தேடிக்கொண்டே இருக்கிறது.

மூத்த பெண்ணின் படிப்புக்கு காவல் துறையினரே உதவி செய்து போலீஸ் பயிற்சிப் பள்ளியிலும் சேர்த்து விட்டனர்.

இளைய பெண் கல்லூரியில் ..! அந்த அம்மா மட்டும் குற்ற உணர்வோடு நடை பிணமாக…!!!

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.