முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதி: இரு சத்திர சிகிச்சை

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் மார்பு இடர்பாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சில தினங்களுக்கு முன்னர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் தங்கியுள்ள அவருக்கு மற்றொரு சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டியிருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்பிட்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, குடும்ப உறுப்பினர்கள் தவிர்ந்த மற்றையவர்கள் சந்திப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் சில தினங்கள் அவர் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலையில் உள்ளார்.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.