குழந்தையை அடுப்பில் வறுத்துக் கொன்ற தாய் : வேலையை தக்க வைத்துக்கொள்ள செய்த கொடூரம்

தனக்கு குழந்தை பிறந்ததை வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து மறைத்த மூன்று குழந்தைகளின் தாயொருவருவர், புதிதாக பிறந்த குழந்தையை அடுப்பில் வறுத்து கொலை செய்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவின் கெமெரேவோ பிராந்தியத்திலுள்ள, பிலகோவெசாங்க பகுதியில் வசிக்கும் மூன்று குழந்தைகளின் தாயொருவர், நான்காவதாக ஈன்ற குழந்தையையே அடுப்பில் வறுத்துக் கொலை செய்துள்ளார்.

பெயர் குறிப்பிடப்படாத குறித்த தாய், தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு தெரியாமல் நான்காவது குழந்தையை ஈன்றுள்ளார். மீன்பிடித்தொழிலுக்காக சென்றிருந்த கணவன் வீடு திரும்பிய நிலையில், குழந்தை கொல்லப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதோடு,

கொடூர தாயை சரமாரியாக தாக்கி பொலிஸிடம் ஒப்படைத்துள்ளார். அத்தோடு குறித்த தாய் மேலதிக உளவியல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.